தில்லை என்னும் திருத்தலம்

தில்லை என்னும் திருத்தலம், சந்திரிகா சுப்ரமண்யன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 180, விலை 110ரூ. நடராஜரின் திருவுருவம் மிகப்பெரிய தத்துவத்தை உள்ளடக்கியது என்பார்கள். நடராஜ பெருமானுக்கு முக்கியத்தும் தரும் தில்லை திருக்கோயில் வெளிப்படுத்தும் தத்துவமே சிதம்பர ரகசியம். பஞ்சபூதங்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை, காற்றைக் குறிக்கும் காளஹஸ்தி, நிலத்தைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயங்கள், ஒரே நேர்கோட்டில் சரியாக,  79 பாகை, 41 கலை கிழக்கில் தீர்க்க ரேகையில் அமைந்திருப்பதை எடுத்துக்காட்டி, இது பொறியியல், புவியியல், வானவியலின் உச்சகட்ட அதிசயம் என்று எடுத்துக்காட்டுகிறார் ஆசிரியர். […]

Read more

சுந்தர காண்டம்

சுந்தர காண்டம், எஸ்.என். பி.ஜெயசிங், ஆனந்த நிலையம், சென்னை, விலை 60ரூ. ராமபிரானுக்காக சீதாதேவியிடம் அனுமன் தூது சென்ற காண்டத்தின் பெயர் இந்நூலின் தலைப்பாக இடம் பெற்றிருந்தாலும், ராமாயணத்தின் ஆறு காண்டங்களும் இந்த புத்தகத்தில் சுருக்கமாக தரப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 1/7/2015.   —- அமுதமொழிகளின் அற்புத வரிகள், குந்தவையார் பதிப்பகம், தஞ்சாவூர், விலை 90ரூ. பயனுள்ள பொன்மொழிகளின் தொகுப்பு நூல் இது. நாமறிந்த வழக்கமான பொன்மொழிகளுடன், நூலாசிரியர் தஞ்சை பா.திருநாவுக்கரசு, திரட்டிச் சேகரித்த ஏராளமான அற்புத வரிகள் நூலுக்கு பெருமை சேர்க்கின்றன. நன்றி: […]

Read more

திருக்குர்ஆன் விளக்கவுரை

திருக்குர்ஆன் விளக்கவுரை, இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம், சென்னை, விலை 130ரூ. திருக்குர்ஆனுக்கு மவுலானா சையத் அபுல் அக்லா மவுதூதி (ரஹ்) எழுதிய உரை மிகவும் பிரசித்தி பெற்றது. இதை இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம் மொழி பெயர்த்து வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே அல் பாத்திஹா, அல் கஹ்பு ஆகிய இரு அத்தியாயங்களையும், அதைத் தொடர்ந்து மர்யம், தாஹா ஆகிய அத்தியாயங்களையும், இதன் பின்னர் அல் அராப் என்ற அத்தியாயத்தையும் வெளியிட்டது. இப்போது இந்த நூல் அல்அன்பால், அத்தவ்பா ஆகிய அத்தியாயங்களுக்கான விளக்கவுரையை தமிழில் மவுலவி எம்.ஐ. […]

Read more

ஸ்ரீரங்கம் பற்றி வண்ணப்புத்தகம்

ஸ்ரீரங்கம் பற்றி வண்ணப்புத்தகம், வேத ப்ரகாசனம் வெளியீடு, சென்னை, விலை 250ரூ. பூலோக வைகுந்தம் என்று வர்ணிக்கப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். அதைப்பற்றிய அபூர்வ தகவல்களுடன் அரங்கமா நகருளானே என்ற தலைப்பில் அரிய புத்தகம் வெளிவந்துள்ளது. ஸ்ரீ ரங்கம் பற்றிய அனைத்து விவரங்களுடன், முழுவதும் ஆர்ட் பேப்பரில் புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது. பக்கத்துக்குப் பக்கம் வண்ணப்படங்கள் கண்ணைக் கவருகின்றன. புத்தகத்தை எழுதிய வேதா டி.ஸ்ரீதரனம் வெளியிட்ட பதிப்பகத்தாரும் பாராட்டுக்கு உரியவர்கள். நன்றி: தினத்தந்தி, 1/7/2015.   —-  ஆடும் மயில், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, […]

Read more

கலைமாமணி வி.சி. குகநாதன்

கலைமாமணி வி.சி. குகநாதன், ராணி மைந்தன், கலைஞன் பதிப்பகம், விலை 200ரூ. 250 படங்களுக்கு கதை, வசனம் எழுதிய வி.சி. குகநாதன். எம்.ஜி.ஆரால் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் வி.சி. குகநாதன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என்று பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். தமிழிலும் மற்றும் பல மொழிகளிலும் தயாரான 250 படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். 48 படங்களை இயக்கியவர். 51 படங்களைத் தயாரித்தவர். திருப்பங்கள் பல நிறைந்த இவருடைய வாழ்க்கை வரலாற்றை கலைமாமணி வி.சி. குகநாதன் என்ற தலைப்பில் புத்தகமாக […]

Read more

தியாகராயநகர் அன்றும் இன்றும்

தியாகராயநகர் அன்றும் இன்றும், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 100ரூ. சென்னையில் இதயம் போன்ற பகுதி தியாகராயநகர். நகைக்கடைகள், பெரிய பெரிய பட்டு ஜவுக்களிக்கடைகள் இங்கு அதிகம். அதுமட்டுமல்ல, சினிமா நட்சத்திரங்கள், வி.ஐ.பி.க்கள் நிறைய பேர் வகிக்கிறார்கள். தியாகராயநகர் முன்பு எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பதை, அதே பகுதியில் நீண்டகாலமாக வசித்து வரும் நல்லி குப்புசாமி செட்டியார் இப்புத்தகத்தில் சுவைபட எழுதியுள்ளார். இங்கு வசித்த திராவிட இயக்கத் தலைவர்கள் பற்றிய விவரங்களும், மற்றும் ராஜாஜி, காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சத்தியமூர்த்தி, […]

Read more

எம்.ஜி.ஆர். மதித்த முதலாளி

எம்.ஜி.ஆர். மதித்த முதலாளி, விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 100ரூ. திரைப்பட உலகில் மிகப்பெரும் சாதனை நிகழ்த்தியவர்களில் ஒருவர் நாகி ரெட்டி. அவரை முதலாளி என்றே எம்.ஜி.ஆர். அழைப்பார். எம்.ஜி. ஆரை வைத்து நாகிரெட்டி தயாரித்த மிகப்பெரிய வெற்றிப்படம் எங்கவீட்டுப் பிள்ளை. அதுமட்டுமல்ல, எம்ஜி.ஆரை வைத்து நம் நாடு படத்தை பத்தே நாட்களில் எடுத்து சாதனை படைத்தார். என்.டி.ராமாராவ் நடித்த பாதாள பைரவி ஜெமினிகணேசன் – சாவித்திரி நடித்த மிஸ்லியம்மா, மாயாபஜார் உள்பட ஏராளமான படங்களை நாகிரெட்டியின் விஜயா – வாகினி ஸ்டூடியோ தயாரித்தது. […]

Read more

நான் கண்ட மாமனிதர்கள்

நான் கண்ட மாமனிதர்கள், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, விலை 70ரூ. பத்திரிகை உலகின் முடிசூடா மன்னர் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார், கம்யூனிஸ்டடு தலைவர் ப. ஜீவானந்தம், எழுத்தாளர் நா. பார்த்தசாரதி உள்ளிட்ட 16 சான்றோர்கள் பற்றி எழுத்தாளரும், பேராசிரியருமான டாக்டர் மா. பா. குருசாமி எழுதிய கட்டுரைகள் கொண்ட புத்தகம். உள்ளத்து உணர்ச்சிகளை எல்லாம் ஒன்று திரட்டி, அழகிய நடையில் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் எழுதியிருக்கிறார், மா.பா. குருசாமி. மாமனிதர்கள் பற்றிய அரிய தகவல்கள் பலவற்றை அறிய முடிகிறது. […]

Read more

கம்பரும் வால்மீகியும்

கம்பரும் வால்மீகியும், அரிசோனா மகாதேவன், தாரிணி பதிப்பகம், பக். 128, விலை 120ரூ.   To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024576.html வெளிநாட்டு வாழ் தமிழரான இந்நூலாசிரியர், இரு பெரும் இதிகாசங்களான ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றின் மீது தனக்குள்ள ஈடுபாடு எத்தகையது என்பதை இந்நூலின் மூலம் உணர்த்தியுள்ளார். வடமொழியில் ராமாயணத்தை படைத்த வால்மீகிக்கும், அதை தமிழில் உருவாக்கிய கம்பருக்கும் ஆயிரக்கணக்கான வருட இடைவெளியுண்டு. ஆயினும், இவ்விருவரின் கவித் திறனும், கற்பனைத் திறனும் கற்றோரால் இன்றும் ஒப்பிட்டுப் புகழப்படுகிறது. இந்நூலாசிரியரும் அந்த ஒப்பீட்டு […]

Read more

நிஜமாகா நிழல்கள்

நிஜமாகா நிழல்கள், கோ. சந்திரசேகரன், தரணிஷ் பப்ளிகேஷன்ஸ், பக். 80, விலை 50ரூ. நூலாசிரியர் சந்தித்த மனிதர்கள், நண்பர்கள், உறவினர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டும் அவர்தம் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைக் கருவாகக் கொண்டும், எழுதிய பத்துக் கதைகளின் தொகுப்பே இந்நூல். இந்தப் பத்துக்கதைகளும் முத்து முத்தான வெவ்வேறு கதைக் கருக்களைக் கொண்டிருப்பது இனிமையான வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்துகிறது. அரசியல்வாதிகள் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, மக்களின் நலனில் மட்டுமே அக்கறை கொள்ள வேண்டும் என்ற சாமானிய மனிதனின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் நிஜமாகா நிழல்கள். எதிலுமே […]

Read more
1 5 6 7 8