சீன அதிசயங்கள் இந்தியத் தாக்கங்கள்

சீன அதிசயங்கள் இந்தியத் தாக்கங்கள், டி. ஞானையா, அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், சென்னை. சீனச் சுவடுகள் சீனாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் மீது இந்தியா ஏற்படுத்திய தாக்கங்களை விவரிக்கும் நூல் இது. சீனப் பெருமைவாதம், இந்திய தற்பெருமைவாதம், சீன அதிசயங்களில் இந்தியா உள்ளிட்ட ஏழு தலைப்புகளில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. சீனாவுக்கு பவுத்தத்தை அளித்த இந்தியாவுடன் அதற்கு இருக்கும் தொன்மையான உறவை இந்நூல் பல உதாரணங்கள் வழியாக விளக்குகிறது. சீனா மீது இந்தியர்களுக்கு இருக்கும் தவறான எண்ணங்கள் மீதும் இந்நூல் கவனம் குவிக்கிறது. சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் […]

Read more

டாவின்சி கோட்

டாவின்சி கோட், டான் பிரவுன், தமிழில் பெரு. முருகன், இரா. செந்தில், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, விலை 599ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023804.html அறிவின் புதிர்களைத் தேடி பாரிசில் உள்ள லூவ்ர் அருங்காட்சியகத்தில் அதன் மேற்பார்வையாளர் ஜாக்குவஸ் கொலை செய்யப்படுகிறார். அவர் இறக்கும் நேரத்தில் தனது வயிற்றில் ரத்தம் கொண்டு சில சின்னங்களையும் ரகசிய எண்களையும் எழுதிவைத்து இறக்கிறார். அவர் விடுத்திருந்த புதிரை அவிழ்க்க மத அடையாளங்கள் மற்றும் குறியீடுகளை ஆராயும் சரித்திரப் பேராசிரியர் ராபர்ட் லாங்டன் அழைக்கப்படுகிறார். […]

Read more

முக்கோணக் கிளிகள்

முக்கோணக் கிளிகள், சி.ஜெயபாரதன்(கனடா), தாரிணி பதிப்பகம், சென்னை, பக். 92, விலை 75ரூ. முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணலாக இருக்க முடியும் என்பதை நிரூபிக்கும் விதத்தில் இம்முக்கோணக் காதல் கதை படக் கதையாக நூல் வடிவம் பெற்றுள்ளது. கனடா எழுத்தாளர் சி. ஜெயபாரதன், சிவா-சித்ரா-அவள் தாய் புனிதா ஆகியோரின் முக்கோணக் காதலில் ஜெயிப்பது யார்? என்ன காரணம்? அது சரியா? என்பதை சுவைபட எழுதியுள்ளார். ஓவியர் தமிழின் ஓவியங்கள் கதைக்கு உயிரூட்டுகின்றன. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/6/2015.   —- மனஅலசல், க. செல்லப் […]

Read more

108 திருப்பதிகள் (பாகம் 5)

108 திருப்பதிகள் (பாகம் 5), ப்ரியா கல்யாணராமன், குமுதம் பு(து)த்தகம், பக். 192, விலை 200ரூ. மகாவிஷ்ணு எப்போதும் இருந்து அருள்பாலிக்கும் 108 திருப்பதிகள் ஒவ்வொன்றுக்கும் நேரில் சென்று தங்கி தரிசித்து அதன் விவரங்களை பக்தர்களுக்காக வழங்கியுள்ளார் ப்ரியா கல்யாணராமன். புண்ணிய ஸ்தலங்களை நேரில் தரிசிக்கும் அனுபவத்தை, இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்குவதாக உள்ளது. இதற்கு முன் வந்த நான்கு பாகங்களைப் போலவே இதுவும் குமுதம் பக்தி ஸ்பெஷலில் தொடராக வந்தபோது பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. காஞ்சிபுரத்தில் திரு நிலாத் திங்கள் தூண்டத் […]

Read more

தமிழ்நாடு (நூற்றாண்டுகளுக்கு முந்தைய) பயணக் கட்டுரைகள்

தமிழ்நாடு (நூற்றாண்டுகளுக்கு முந்தைய) பயணக் கட்டுரைகள், ஏ.கே. செட்டியார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 340, விலை 260ரூ. அனுபவங்களின் வழியே ஒரு பயணம் பயண அனுபவங்களைப் பதிவு செய்யும் பழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழில் தொடங்கிவிட்டது. வெளியுலகம் தொடர்பான செய்திகளைத் தனி மனிதர்களின் பயணங்கள்தான் உள்ளூர் மக்களிடம் கொண்டுசேர்த்தன. தமிழில் உரைநடை வளர்ந்துகொண்டிருந்த காலத்திலேயே பயணக் கட்டுரைகளும் எழுதப்பட்டத் தொடங்கிவிட்டன. அந்த வகையில் 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தொடங்கி 1960கள் வரை எழுதப்பட்ட பயணக் கட்டுரைகளின் […]

Read more

எட்டு கதைகள்

எட்டு கதைகள், இராஜேந்திர சோழன், வம்சி புக்ஸ், விலை 100ரூ. சிறந்த சிறுகதைகள் சிறுகதை என்னும் இலக்கிய வடிவத்தை, மேலை நாடுகளிலிருந்துதான் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழில் சுவீகரித்தோம். புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா. போன்ற சாதனையாளர்களின் பங்களிப்பால் தமிழ்ச் சிறுகதை தொடக்க நிலையிலேயே உயிர்ப்பையும் வளத்தையும் நுட்பங்ககளையும் பெற்றுவிட்டது. தமிழின் வளமான சிறுகதை மரபின் தொடர்ச்சியாக, இரோஜந்திர சோழன் எழுதி,  எண்பதுகளில் வெளியான எட்டு கதைகள் சிறுகதைத் தொகுப்பு பேசப்பட்டது. மனிதனின் கோணல்களையும் பிறழ்களையும் நுட்பமாகப் பேசிய அசலான சிறுகதைக்காரர் இராஜேந்திர சோழன். வடக்குத் […]

Read more

நான் கண்ட மாமனிதர்கள்

நான் கண்ட மாமனிதர்கள், டாக்டர் மா.பா. குருசாமி, சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, பக். 152, விலை 70ரூ. பேராசான் டாக்டர் மு. வரதராசனார், கிராமங்களுக்காக வாழ்ந்த கர்மயோகி ரா. குருசாமி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார், காந்தியப் பேராசான் மகரிஷி க. அருணாசலம், காந்தியடிகள் கனவுகண்ட கிராம சுயராஜ்யத்தை உருவாக்க வாழ்நாளெல்லாம் தொண்டு செய்த கோ. வேங்கடாஜலபதி, அன்னைதெரசா போல் தமிழகத்திற்கு சேவை செய்த பெல்ஜியத்தைச் சேர்ந்த அன்னை லியோபிரவோ, மக்கள் தலைவர் ப. ஜீவானந்தம், தனித்துவம்மிக்க சர்வோதயத் தலைவர் ச.ஜெகந்நாதன், காந்தி முதல்வர் […]

Read more

தித்திக்கும் தீந்தமிழ்

தித்திக்கும் தீந்தமிழ், கவிஞர் கா. வேழவேந்தன், மணிவாசகர் பதிப்பகம், பக். 175, விலை 100ரூ. கவிஞர் கா. வேழவேந்தன் சங்க இலக்கியம், சமகால இலக்கியம், தமிழகத் தமிழரின் படைப்புகள், புலம்பெயர் தமிழரின் ஆக்கங்கள் என்று ஒன்றுவிடாமல் தன் ஆய்வுப் பார்வையைச் செலுத்தி தீந்தமிழின் சுவையை அள்ளித்தரும் தொகுப்பு நூல் இது. அண்ணாவின் உயர் தனிப் பண்புகள், பெரியார், காந்தியடிகள், மு.வ.வின் பெருமைகள் என்று சான்றோர் பலரின் எளிமை, நேர்மை, ஒழுக்கத்தை, மன உறுதியை, கொள்கைப் பிடிப்பை மற்றவர் உணர்ந்து நடக்கும் வகையில் திறம்படத் தந்துள்ளார். […]

Read more

கம்பன் கவியமுதம்

கம்பன் கவியமுதம், பேராசிரியர்கள் இரா.மோகன், நிர்மலாமோகன், வானதி பதிப்பகம், பக். 152, விலை 80ரூ. கம்பன் காவியத்தை முழுமையாக கற்கும் பேறு எல்லாருக்கும் கிடைப்பது அரிது. அது படிக்க படிக்க விரிந்து கொண்டே இன்பம் சேர்க்கும் பாடற்கடல். அதில் நூலாசிரியர்கள் நீந்தி தாங்கள் பருகியதை, அதன் சுவையை இனிமை குன்றாது, நமக்கும் தரும் அரிய நூல் இது. தெய்வப் புலவர் கம்பருயை சொல்லழகையும் பொருளழகையும் நமக்கு விளக்கும் இடம் சவை. கம்பர் தரும் செஞ்சொற் கவியின்பத்தையும், நடைச்சித்திரத்தையும் இவர்கள் தரும் எடுத்துக்காட்டுடன் படிக்கப் படிக்க […]

Read more

ஒரு வீணையின் விசும்பல்

ஒரு வீணையின் விசும்பல், தாழை மதியவன், தாழையான் பதிப்பகம், பக். 176, விலை 100ரூ. பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே படித்த இந்நூலாசிரியரின் இச்சிறுகதைத் தொகுப்பு, அவருக்குப் பெரும் எழுத்தாளருக்குரிய அந்தஸ்தைப் பெற்றுத் தந்துள்ளது எனலாம். இந்நூலில் அவரது 21 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இஸ்லாமியக் குடும்பங்களின் கதைகளாக உள்ளதால், அவர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள், கலாசாரம், வழிபாட்டு முறைகள், இளைய தலைமுறையினரைப் பாதிக்கும் நவீனமயம்… என்று பல்வேறு கோணங்கள் இக்கதைகளில் படம்பிடித்துக் காட்டப்படுகிறது. இக்கதைகள் சில இஸ்லாமிய இதழ்களிலும், தூது வலைத் […]

Read more
1 4 5 6 7 8