மனங்கொத்தி

மனங்கொத்தி, புலவர் மு. அருளப்பன், அனலகம் வெளியீடு, விலை 60ரூ. நல்லொழுக்கம், நன்னெறி போன்ற சமூக சிந்தனைகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட 21 சிறுகதைகளை கொண்ட தொகுப்பு நூல் இது. நம்மைச்சுற்றி அன்றாடம் அரங்கேறும் நிகழ்வுகளை கண்முன்னே காணும் வகையில், கதைகள் அனைத்தும் எழுதப்பட்டு உள்ளன. ‘விவாகரத்து’, ‘ஊனம்’, ‘சிறைக்குள் வரவேண்டியவன்’ என நூலில் இடம் பெற்றுள்ள கதைகள் அனைத்தும் கருத்தையும், கவனத்தையும் ஈர்க்கின்றன. படிப்போரின் சிந்தையை கவரும் நோக்கில் பேச்சுவழக்கில் கதைகள், எழுதப்பட்டிருப்பது சிறப்பு. இது ஒரு சிறுகதை தொகுப்பு என்பதை விட, […]

Read more

மதுவிலக்கு அரசியலும் வரலாறு

மதுவிலக்கு அரசியலும் வரலாறு, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 150ரூ. தமிழ்நாட்டில், 1973ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி மதுவிலக்கை அமலுக்கு கொண்டு வந்தார். அன்றைய முதல் அமைச்சர் ராஜாஜி. முதல் கட்டமாக, தனது சொந்த மாவட்டமான சேலத்தில் மதுவிலக்கை அமல் நடத்தினார். பின்னர் 1948 அக்டோபர் 2ந்தேதியன்று, தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கை அமலுக்கு கொண்டு வந்தார், அன்றைய முதல் அமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். 1967 தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. அண்ணா முதல்-அமைச்சராக இருந்தபோது, மதுவிலக்கை தொடர்ந்து அமலாக்குவதில் உறுதியோடு இருந்தார். பின்னர் […]

Read more

தமிழர் நாடு

தமிழர் நாடு, கி.ஆ.பெ. விசுவநாதம், காவ்யா பதிப்பகம், விலை 1300ரூ. “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்று வாழ்நாள் முழுவதும் முழங்கி வந்தவர், “முத்தமிழ் காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம். நீதிக்கட்சியின் பெயரை 1944ல் “திராவிடர் கழகம்” என்று பெரியாரும், அண்ணாவும் மாற்றினார்கள். “தமிழ்நாடு என்பதை உயிர் மூச்சாகக்கொண்ட கி.ஆ.பெ. விசுவநாதம், “திராவிட நாடு” என்பதை ஏற்க மறுத்து, அரசியலில் இருந்து விலகினார். அதன்பின், 1947ம் ஆண்டில் “தமிழர் நாடு” மாத இதழை தொடங்கினார். அதிழ் தமிழ் உணர்ச்சியைத் தூண்டும் தலையங்கங்களையும், கட்டுரைகளையும் எழுதினார். அவற்றை […]

Read more

செல்வச் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும்

செல்வச் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும், நிஜவாழ்வின் பொருளியலுக்குள் ஒரு பயணம், சி.டி. குரியன், தமிழில் ச. சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், பக். 272, விலை 170ரூ. பொருளாதாரம் என்பது பொருட்கள், பணம் பற்றியதல்ல. அடிப்படையில் மனிதர்கள், அவர்களது சமூக உறவுகள் பற்றியது. யாருக்கு எது சொந்தம்? யார் என்ன செய்கிறார்? யார் எதைப் பெறுகிறார்? என்ற மூன்று முக்கியமான கேள்விகள்தான் எந்தவொரு பொருளாதாரத்தையும் ஆய்வு செய்ய உதவும் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல். இந்த அடிப்படையில் பொருளியலின் பல்வேறு தன்மைகளை விரிவாக விளக்குகிறது. […]

Read more

அகப்பொருள் விளக்கம்

நாற்கவிராசநம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம், பதிப்பாசிரியர் க.வெள்ளைவாரணன், பாரி நிலையம், பக். 360, விலை 200ரூ. தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியமே இன்றைக்கு முதன்மையான இலக்கண நூலாகவும் காலத்ததால் மிகவும் தொன்மையான நூலாகவும் திகழ்கிறது. தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய மூன்றுக்கும் இலக்கணம் வகுத்துள்ளார். பிற மொழி இலக்கண நூல்களில் இல்லாத தனிச்சிறப்பு வாய்ந்தது தொல்காப்பியத்தில் உள்ள பொருளிலக்கணம். இது தமிழுக்கே – தமிழருக்கே உரித்தான அக வாழ்க்கை பற்றி தமிழரின் காதல் வாழ்வின் மேன்மைகளைப் பற்றி விரித்துரைக்கிறது. தொல்காப்பியத்தின் இலக்கணக் கூறுகள் ஒவ்வொன்றையும் […]

Read more

காஷ்மீர் இந்தியாவுக்கே

காஷ்மீர் இந்தியாவுக்கே, கேப்டன் எஸ்.பி. குட்டி, கிழக்கு பதிப்பகம், பக். 304, விலை 250ரூ.   To buy this Tamil book online: http://www.nhm.in/shop/9789384149352.html ராணுவத்தில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நூலாசிரியரின் துறை சார்ந்த அனுபவமும், கதை சொல்லும் ஆற்றலும், சரித்திர ஆதாரங்களும் பின்னிப் பிணைந்ததாக உள்ள இந்நூல், காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என நிறுவுகிறது. பிரிக்கப்படாத பாரதம் இந்தியா, பாகிஸ்தான் என்று இரு நாடுகளாகப் பிளவுபட்டபோது காஷ்மீர் தனிநாடாக இருக்க விரும்பியது ஏன்? பிறகு காஷ்மீர் மன்னர் […]

Read more

உண்மை

உண்மை, கே.எஸ். நாகராஜன் ராஜா, கிரி டிரேடிங் ஏஜென்சிஸ், விலை 120ரூ. ஷீரடி பாபாவின் ஜீவசமாதி இருக்கும் இடத்தையும், கர்ம வினையிலிருந்து யாரும் தப்ப முடியாது என்ற நிலையையும், பரமாத்மா அனைத்து விஷயங்களுக்கும் சாட்சியாக இருக்கிறார் என்ற தகவல்களுடன், பாதாள புவனேஷ்வர், காமாக்யா, கைலாஷ் – மானசரோவர் போன்ற பல ஆன்மிக தலங்களிலும் நூலாசிரியர் பெற்ற அனுபவங்களும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 9/12/2015.   —- சிந்திப்போமா?, ஆ. சூசைமாணிக்கம், வாசன் பிரதர்ஸ் வெளியீடு, விலை 50ரூ. ஒழுக்க நெறிகளை வலியுறுத்துவதுடன், அனைவரும் […]

Read more

அன்னை தெரசா

அன்னை தெரசா, பா. தீனதயாளன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 125ரூ. ஏழைகள் நிலவில் இருந்தால், அங்கும் சென்று அவர்களுக்குச் சேவை செய்யத்தயார் என்று சொன்னவர் அன்னை தெரசா. அதற்காகவே வாழ்வின் வசந்தங்களை எல்லாம் துறந்துவிட்டு, வாடிய மக்களுக்காக உழைத்த தெரசாவின் வாழ்க்கை வரலாற்று நூல். தெரசா மேற்கொண்ட சேவைப் பயணம் என்பது, சுகமான ராஜபாட்டை அல்ல. கடுமையான முள்வழிப்பாதை. அந்தப் பாதையில் அவர் எதிர்கொண்ட சவால்கள் அநேகம். துயரங்கள் அதிகம். அவற்றை எல்லாம் தாண்டித்தான், பிரம்மாண்டமான மிஷனரியைக் கட்டமைத்தார். அதைவிட முக்கியமாக, ஏழை மக்களின் […]

Read more

ஆமுக்த மால்யத

சூடிக்கொடுத்தவள் (ஆமுக்த மால்யத), டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், விலை 200ரூ. தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் இருப்பதைப் போன்று தெலுங்கிலும் ஐம்பெரும் காப்பியங்கள் இருக்கின்றன. மனுசரித்ரம், வசுசரித்ரம், ஆமுக்த மால்யத, பாரிஜாதாபகர்ணம், ச்ருங்கார நைஷதம் ஆகிய ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று ‘ஆமுக்த மால்யத.’ இந்த நூல், ஆண்டாளின் அவதாரத்தை மட்டும் சொல்லவில்லை. இப்பெருமாட்டியை வளர்த்த விஷ்ணுசித்தர் எனப்படும் பெரியாழ்வாரின் சரித்திரத்தைத் தெளிவாகச் சொல்வதும் ஆகும். அதனால் விஷ்ணுசித்தீயம், ஆமுக்த மால்யத ஆகிய இரு காப்பியங்கள் இணைந்த பெருங்காப்பியம் என்று இதனைக் குறிப்பிடலாம். […]

Read more

வெற்றி தரும் மேலாண்மை

வெற்றி தரும் மேலாண்மை, நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், விலை 150ரூ. ஒரு நிறுவனத்தில் இயக்குநராக மேலாளராக இருப்பவர்களுக்கு மேலாண்மைத் திறன் அவசியம் தேவை. இதனால் இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் மேலாண்மை கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. மாறி வரும் சூழ்நிலைகளுக்கேற்ப மேலாண்மை யுக்திகளை சரியாக இனம் கண்டு கொள்வது தொழில் நிறுவனங்களின் கடமையாகும். அந்த வகையில் மேலாண்மைத் துறை தொடர்பான நுட்பமான செய்திகளை நெல்லை கவிநேசன் எளிமையாக எல்லோரும் புரிந்துகொள்ளும்வகையில் இந்த நூலில் தெளிவுபடுத்தியுள்ளார். தொழில் முனைவோருக்கும் மாணவர்களுக்கும் பெரிதும் […]

Read more
1 2 3 4 5 6