கம்பரும் வால்மீகியும்

கம்பரும் வால்மீகியும், அரிசோனா மகாதேவன், தாரிணி பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், தமிழை மறக்காத தமிழர் அரிசோனா மகாதேவன். கம்பனில் தோய்ந்தவர். அதேநேரம், வடமொழியிலேயே வால்மீகியையும் வாசித்தறிந்தவர். எனவே, வால்மீகியிலிருந்து எங்கெல்லாம் கம்பன் வித்தியாசப்படுகிறான், மூலக்கதையின் சம்பவங்களை தமிழ்ப்பண்பாடு கெடாமல் எப்படியெல்லாம் மாற்றி உருவகப்படுத்துகிறான் என்ற அருமையான ஒப்பீட்டு நோக்கில், தாம் ஆய்ந்து தெளிந்த விஷயங்களை, நான்கு கட்டுரைகளில் வடித்தெடுத்து வழங்கியுள்ளார். அகலிகை சாபவிமோசனம், ராமன் – சீதை முதல் சந்திப்பு, வனவாச காலத்தில் நிகழ்ந்த மாயமான் காணல், […]

Read more

ஆண்டாள் கடவுளைத் தேடிய கவிஞரின் பயணம்

ஆண்டாள் கடவுளைத் தேடிய கவிஞரின் பயணம், இரா. நரேந்திர குமார், காவ்யா, விலை 250ரூ. ஆண்டாள் கவிதைக்கு ஓர் ஆய்வடங்கல் எமிலி டிக்கின்ஸனின் கவிதை வரிகள் இவை. தனது சமூகத்தைத் தானே தேர்ந்தெடுக்கிறது ஆன்மா பிறகு அடைத்துவிடுகிறது கதவை. இந்த வரிகளைப் பற்றிக்கொண்டு ஆண்டாளின் அக உலகத்திற்குள் ஒரு வாசகர் பயணிக்க முடியும். கண்ணன் என்னும் கருந்தெய்வத்துடன் தன்னை முழுமையாகப் பிணைத்துக் கொண்டு, மற்ற உறவுகளைத் துண்டித்துவிட்ட ஆண்டாளை ஒரு முழுமையான கவிதைப் பரப்பில் வைத்துப் பார்க்கிறது, இரா. நரேந்திரகுமாரின் ஆண்டாள் கடவுளைத் தேடிய […]

Read more

தரங்கம்பாடி அகராதி என்கிற பெப்ரிசியஸ் அகராதி

தரங்கம்பாடி அகராதி என்கிற பெப்ரிசியஸ் அகராதி, சந்தியா பதிப்பகம், விலை 900ரூ. ஜோகன் பிலிப் பெப்ரிசியஸ் என்ற பெயர் தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், அகராதியியலாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று. ஏனெனில் பெப்ரிசியஸ்தான் தமிழின் முதல் ‘தமிழ் – ஆங்கிலம்’ அகராதியான ‘பெப்ரிசியஸின் தமிழ் – ஆங்கிலம் அகராதி’யை (Fabricius’s Tamil-English Dictionary) உருவாக்கினார். ஜெர்மனியில் பிறந்தவரும், லுத்தரன் சபையைச் சேர்ந்தவருமான பெப்ரிசியஸின் இந்த அகராதி, வீரமாமுனிவரின் சதுரகாதி வெளிவந்து 47 ஆண்டுகளுக்குப் பின் 1779-ல் வெளியானது. இந்த அகராதியின் முதல் பதிப்பில் 9000 […]

Read more

காஷ்மீர் அமைதியின் வன்முறை

காஷ்மீர் அமைதியின் வன்முறை, கவுதம் நவ்லாகா, தமிழில் வெண்மணி அரிதரன், விடியல் பதிப்பகம், விலை 25ரூ. காஷ்மீருக்குள் எட்டிப்பார்க்கும் ஜன்னல் குடும்பத்துக்குள்ளேயே ஜனநாயகத்தைப் பொறுத்தவரை எவ்வளவு பிரச்னைகள்! நாட்டு நிர்வாகமும் குடும்ப நிர்வாகம் போன்றுதான். காஷ்மீரில் மக்கள் ராணுவத்துக்கு எதிராகக் கல்லெறியும் போராட்டம் நடத்தினார்கள் என கேள்விப்படும்போது ராணுவத்துக்கும் மக்களுக்குமான பரஸ்பர நம்பிக்கையைப் பற்றிய சந்தேகம் நமக்கெல்லாம் ஏற்பட்டது. பத்திரிகையாளர் கவுதம் நவ்லாகா காஷ்மிரின் உள்ளே நடப்பவற்றை நமக்கு வெளிப்படுத்துகிறார். ஒரு குடும்ப ஜனநாயகத்தின் அம்சங்களாக அந்த நிகழ்வுகள் இல்லை. கட்டாயப்படுத்துவதன் மூலம் அன்பைப் […]

Read more

சோசலிசம் தான் எதிர்காலம்

சோசலிசம் தான் எதிர்காலம், டாக்டர். ரெக்ஸ் சற்குணம், சிந்தன் புக்ஸ், விலை 200ரூ. சமூகத்தின் வெவ்வேறு துறை சார்ந்தவர்கள் பெரும்பாலும் தங்கள் துறைக்கு வெளியே எட்டிப் பார்ப்பதும், சமூக நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொள்வதும் மிகவும் குறைவு. இவர்களிடமிருந்து டாக்டர் ரெக்ஸ் சற்குணம் மாறுபட்டவர். மருத்துவத் துறையிலும் மார்க்சியத்திலும் குறிப்பிடத் தகுந்த அளவில் இயங்கிக்கொண்டிருப்பவர். தான் கற்றுக்கொண்ட மார்க்சியத்தை மருத்துவத்துறையிலும் மக்கள் நல்வாழ்வைப் பேணும் நடவடிக்கைகளிலும் பயன்படுத்துபவர். முதலாளித்துவம் ஊதிப்பெருத்து ஏகாதிபத்தியமாகத் தலைவித்திதாடும் இந்தக் காலக்கட்டத்தில் ‘சோசலிசம்தான் எதிர்காலம்’ என்று இந்த நூலின் மூலம் டாக்டர் ரெக்ஸ் […]

Read more

யுகங்களின் தத்துவம்

யுகங்களின் தத்துவம், அருணன், வசந்தம் வெளியீட்டகம், விலை 170ரூ. மனிதகுல வரலாற்றை ஒரு தத்துவப் பார்வையில் அருணன் இந்த நூலில் வழங்கியுள்ளார். வரலாறு வட்டமடிக்கிறதா அல்லது மேல்நோக்கி வளர்ந்து செல்கிறதா? யுகங்கள் என்ற இந்திய மரபு எதைக் கூறியது? ஆதிமனிதன் யுகம், ஆண்டாள் யுகம், நிலப்பிரபு யுகம், முதலாளித்துவ யுகம் என்று செல்கிற மனிதச் சமூகத்தின் வரலாற்றில் இந்தியாவில் ஏன் முதலாளித்துவம் மற்ற நாடுகளில் வளர்ந்த பாணியில் வெளிவரவில்லை? இந்தியாவில் அடிமை முறை இருந்ததா, இல்லையா? என்ற தேடுதலில் எழுந்த கேள்விகள் என ஒரு […]

Read more

சொல்லில் அடங்காத உலகம்

சொல்லில் அடங்காத உலகம், பா. ராமமூர்த்தி, பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 90ரூ. கால தேச வர்த்தமானங்களைக் கடந்து எடுக்கப்பட்டிருக்கும் ஆவணப்படம் பராக்கா. அந்தப் படத்தின் காட்சிகள் வழியாகத் தான் அடைந்த அனுபவத்தை வார்த்தைகளில் கடத்துவதற்கு நூலாசிரியர் செய்திருக்கும் முயற்சியே இந்த நூல். பக்கத்துக்குப் பக்கம் விதவிதமான உணர்ச்சிகள், அறைகூவல்கள், போராட்டங்கள், பொழுதுபோக்குகள், விழிப்புணர்வுகள், பழிவாங்கல்கள், மனித நேயத்தின் அவசியம் இப்படிப் பல அம்சங்களும் இந்நூலில் உள்ளன. புத்தகத்தை முழுவைதுமாக வாசித்து முடிக்கும்போது, பங்கேற்பாளராக இல்லாவிட்டாலும், இந்தப் புத்தகச் சாளரத்தின் மூலமாக உலகின் பார்வையாளராக நாம் […]

Read more

கணினித்தமிழ்

கணினித்தமிழ், முனைவர் இல.சுந்தரம், விகடன் பிரசுரம், விலை 230ரூ. நம் அன்றாட வாழ்வில் அனைத்து செயல்பாடுகளும் கணினி இல்லாமல் நடைபெறாது என்ற நிலை உருவாகிவிட்டது. கணினியின் அடிப்படை முதற்கொண்டு அனைத்து நிலைகளிலும் தமிழைக் கையாள்வதற்கு இந்த நூல் வழிகாட்டுகிறது. வன்பொருள், மென்பொருள் தொழில் நுட்பம் பற்றி அறிமுக நிலையில் தெரிந்து கொள்ளவும், இணையத்தின் அடிப்படையையும் அதில் தமிழை எவற்றிலெல்லாம் பயன்படுத்தலாம் என்பதையும் எளிதில் புரியும் வகையில் முனைவர் இல.சுந்தரம் விரிவாக விளக்கிக் கூறுகிறார். நன்றி: தினத்தந்தி, 25/11/2015.   —- மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கதைகள், […]

Read more

திடீர் இடியோசை

திடீர் இடியோசை, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 260ரூ. இன்றைய சமுதாயம் எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழிமுறைகளைச் சொன்னவர். நமது விரைவு வாழ்க்கையை நெறிப்படுத்த தியான முறையைத் தந்தவர் ஓஷோ. முப்பது ஆண்டுகளாக அவர் ஆற்றிய சொற்பொழிவு, எண்ணற்ற புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அவற்றில் இந்த திடீர் இடியோசையும் ஒன்று. இதை சுவாமி சியாமானந்த் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். எதற்காகவும் உன் வாழ்க்கையை தியாகம் செய்யாதே. வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய். வாழ்க்கைதான் இறுதி இலக்கு. அது எந்த நாட்டை விடவும் […]

Read more

மன்மதன் வந்தானடி

மன்மதன் வந்தானடி, பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம், விலை 130ரூ. ஒவ்வொரு பெண்களும் தனக்கு வரப்போகிற கணவன் பற்றி இனிய கனவு காண்கிறார்கள். அது நனவாகும்போது பிரச்சினை எதுவும் இல்லை. நேர்மாறாக அமையும்போது ஏமாற்றம், விரக்தி, குழப்பம் எல்லாம் சூழ்ந்து கொள்கிறது. அப்படிப்பட்ட நிலையில் அதை எப்படி எதிர்கொள்வது என்பதை இந்தக் கதையின் நாயகி வைதேகி எடுக்கும் முடிவே கதையின் மையக்கருத்து. அதுவே தாம்பத்தியத்தில் உண்மையான வெற்றி என்பது கதை நாயகி, நவயுக பெண்களுக்கு விடுக்கும் செய்தியாகும். வசீகர நடையால் வாசகர்களின் உள்ளங்களைக் கொள்ளை […]

Read more
1 2 3 4 5 6