பெண்ணியம் அகலமும் ஆழமும்

பெண்ணியம் அகலமும் ஆழமும், பேராசிரியர் இரா. பிரேமா, காவ்யா, விலை 1100ரூ. பெண்ணியம் என்றாலே ஆண்களை எதிர்ப்பது என்ற எண்ணம் சமுதாயத்தில் பரவலாக பரவி வருகிறது. பெண்களை அடிமைத் தளையில் இருந்து மீட்டு, அவர்களுக்கு கல்வியின் மூலம் விழிப்புணர்வூட்டி, சமூகத்தில் ஆண்களுக்கு இணையான மதிப்பைப் பெற்றுத் தருவதே பெண்ணியத்தின் நோக்கமாகும். அந்த வகையில் நீண்ட காலம் ஆய்வு செய்து இந்த நூலை பேராசிரியர் இரா. பிரேமா படைத்துள்ளார். எது பெண்ணியம்? வெளிநாட்டு மற்றும் இந்திய பெண்ணிய கோட்பாளர்கள் பற்றிய குறிப்புகள், இலக்கணம், இலக்கியம் மற்றும் […]

Read more

அரசர்கள் வளர்த்த ஆன்மிகம்

அரசர்கள் வளர்த்த ஆன்மிகம், கௌதம நீலாம்பரன், சூரியன் பதிப்பகம், விலை 175ரூ. சங்க காலம் தொடங்கி நமது அரசர்கள், மானுட வாழ்வை மேம்படுத்த நன்னெறி கொண்டு வாழ்வில் நாம் சிறந்தோங்க ஆன்மிகம் என்னும் அன்பு நெறியை வளர்த்துத் தந்த வரலாற்றுச் செய்திகளை, நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வுகளை அருமையான கதைகளாகத் தொகுத்து அளித்திருக்கிறார் எழுத்தாளர் கவுதம நீலாம்பரன். புராணத்தில் பேசப்பட்ட அரசர்களாகட்டும் அல்லது சமீபத்தில் வாழ்ந்த கட்டபொம்மன் போன்ற மன்னர்களாகட்டும் இவரது கைவண்ணத்தில் மெருகேறி, மிகச்சிறந்த பாத்திரங்களாக உருவெடுக்கிறார்கள். கதை சொல்லும்பொழுது ஒரு இடத்தின் அழகைச் சொல்லி, […]

Read more

யுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார்

யுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார், கி.வீரமணி, திராவிட கழக வெளியீடு, சென்னை, விலை 180ரூ. தந்தை பெரியாருக்கு ஐ.நா.வின் கிளை அமைப்பான யுனெஸ்கோ உலகில் எந்தத் தலைவருக்கும் அளிக்காத பெரியார் புது உலகின் தொல்லை நோக்காளர். தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ். சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்கவழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி என்ற ஒப்பற்ற வாசகங்களை பாராட்டுரையாகக் கொண்ட ஒரு விருதினை வழங்கி சிறப்பித்தது. இந்த விருது பற்றி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ஒரு […]

Read more

நல்லவங்க அரசியலுக்கு வாங்க

நல்லவங்க அரசியலுக்கு வாங்க, முனைவர் எஸ். வெங்கடராஜலு, சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 160, விலை 75ரூ. வரலாற்றுப் பேராசிரியரும், மாவீரன் நேதாஜி கல்வி நிறுவனங்களின் தலைவருமான இந்நூலாசிரியர், நல்லவர்கள் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற நோக்கில் இந்நூலை உருவாக்கியுள்ளார். இன்றைய அரசியலில் சுயநலம், சந்தர்ப்பவாதம், ஊழல், வன்முறை போன்றவை தலைவிரித்தாடும் நிலையில், நல்லவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கிவிட்டால் நாடு பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாவதோடு, சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகிவிடும் என்று கூறும் ஆசிரியர், நல்ல தலைமைக்கு எடுத்துக்காட்டாக நான்கு தலைவர்களைப் […]

Read more

எம்.ஜி.ஆர். எழுத்தும் பேச்சும்

எம்.ஜி.ஆர். எழுத்தும் பேச்சும், வே. குமரவேல், முல்லை பதிப்பகம், சென்னை. எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒரு பதிவாக எம்.ஜி.ஆரின் எழுத்தையும் பேச்சையும் ஒன்று திரட்டி ஒரு பெரிய ஆவணமாக தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். எம்.ஜி.ஆரின் கொள்கை என்ன என்பதைத் தெளிவாக ரசிகர்களுக்கு உணர்த்தும் நூல். பேரறிஞர் அண்ணா மேல் எம்.ஜி.ஆர். வைத்திருந்த பாசம், கலைவாணர் பற்றிய கருத்து, சினிமாத்துறையை வளர்க்க எம்.ஜி.ஆருக்கு இருந்த எண்ணங்கள், அவரது பொன்மொழிகள், அண்ணாவின் தொண்டனானது ஏன்? காமராஜர் மேல் மரியாதை, சிவாஜி மேல் கொண்டிருந்த அன்பு, சினிமாவில் […]

Read more

இந்தியா நமது இதயம்

இந்தியா நமது இதயம், கே.ஏ.எஸ். முகமது ரஃபி, எம். சாய்ரா வெளியீடு, பக். 84, விலை 30ரூ. உலக அமைதி, தேசிய ஒற்றுமை, இளைஞர் நலன், இவையே எண்ணமாய் மனிதன் வாழ வேண்டும் என்பதுதான். இந்தியா நமது இதயம் என்ற நூலின் அடிநாதம். தீவிரவாதம் என்ற வார்த்தையைக்கூட இனி நாம் வாசிக்கக்கூடாது என்கிற தேச நலன் கட்டுரைகளில் தெரிகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் எல்லா இந்தியர்களும் கட்டுப்பாட்டனும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேச நலன் கருதியே. தீண்டாமை ஒழிய சாதியின் மீதான […]

Read more

திடீர் இடியோசை

திடீர் இடியோசை, ஓஷோ, தமிழில் சுவாமி சியாமானந்த், கண்ணதாசன் பதிப்பகம், பக். 416, விலை 260ரூ. தூங்கிக் கொண்டிருப்பவர்களின் மனக் கதவுகளைத் திடீரென்று திறக்க, இந்த இடியோசை தேவைப்படுகிறது. உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது கிடையாது. நீங்கள் விழிப்புணர்வு அடைந்தவர்களாக ஆகிவிட்டாலே போதும். ஏனெனில் உண்மை என்பது இங்கே ஏற்கெனவே இருக்கிறது. ஓஷோவைப் பொறுத்தவரையில் எல்லா மாற்றங்களுமே தனி மனிதனிடம் ஏற்படுவதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஓஷோவின் இந்த நூல் வார்த்தைகளுக்கு அப்பால், உள்ளத்திற்கு அப்பால், எல்லா புரிதர்களுக்கும் அப்பால் […]

Read more

எந்நாளும் எங்கள் நெஞ்சில்

எந்நாளும் எங்கள் நெஞ்சில், மேதகு ஆ.ப.ஜெ. அப்துல்கலாம், பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம், பக். 192, விலை 225ரூ. மாணவர்களின் இதயமாக விளங்கிய அப்துல்கலாம் ஒரு சிறந்த கவிஞரும்கூட. அந்த வகையில் அவரது பிறந்த நாளை மாணவர் தினமாகக் கொண்டாடுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், மாணவர்களிடையே உள்ள படைப்புத் திறனை வெளிக்கொணரும் வகையில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் மாணவர்களின் கவிதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டு அப்துல்கலாமுக்கு பெருமை சேர்க்கும் முயற்சி இது. மாணவர்கள், ஆசிரியர்கள் அலுவலர்கள் என அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பெறப்பட்ட அப்துல்கலாம் பற்றிய கவிதைத் […]

Read more

கேன்டர்பரிக் கதைகள்

கேன்டர்பரிக் கதைகள், தமிழில் வான்முகில், மீனா கோபால் பதிப்பகம், பக். 175, விலை 200ரூ. ஆங்கிலக் கவிதையின் தந்தை என்று போற்றப்படுகிற சியாஃபிரே சாசர் என்பவரின் படைப்புகளுள் தலைசிறந்தது கேன்டர்பரிக் கதைகள். 14ம் நூற்றாண்டில் ஆங்கிலம் என்று ஒரு தனி மொழியே இல்லை. இங்கிலாந்தின் வட்டார வழக்குகளை ஒன்று திரட்டி அதனை ஒரு மொழியாக மாற்றி, இங்கிலாந்துக்கு ஒரு தேசிய மொழியை அளித்தவர் சாசர். கேன்டர்பரிக்குப் புனிதப் பயணமாகச் செல்லும் பயணிகள், வழியில் தபார்டு என்ற சத்திரத்தில் தங்கிச் செல்வது வழக்கம். பயணக் களைப்புத் […]

Read more

உலகில் ஒருவன்

உலகில் ஒருவன், குணா கந்தசாமி, தக்கை, பக். 144, விலை 120ரூ. ஐந்து வயது சிறுவனின் பார்வையில்… ‘மெமோய்ர்ஸ்’ என்ற இலக்கிய வகைப்பாடு, தமிழுக்குப் புதியதில்லை என்ற முன்னுரையோடு (தன்னுரை) கதைக் கூறத் துவங்குகிறார் குணா. ஐந்து வயது சிறுவன்தான், நாவலின் தலைவன். அவனுடைய பத்து வயது வரையிலான வாழ்க்கைச் சூழலை, அந்தச் சிறுவனின் உலகத்திலிருந்து, அவனுடைய பார்வையிலேயே சொல்வதுதான் இந்த நாவல். ஏற்கனவே இந்தப் பகுதியில், ரத்த உறவு, சூரிய வம்சம், கூளமாதாரி, வெலிங்டன் போன்ற நாவல்களை நூலாசிரியர், பட்டியலிடுகிறார். ஆனால், என்னைப் […]

Read more
1 3 4 5 6