நிகழ்வுகள் நினைவாக

நிகழ்வுகள் நினைவாக, ஆ. செந்தில்வேலு, காந்தகளம், சென்னை, விலை 75ரூ. வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளையும், கண்ணில் பார்த்த சம்பவங்களையும் அடிப்படையாக வைத்து கதை எழுதும் எழுத்தாளர்கள், சிறந்த படைப்பாளிகளாக விளங்குகிறார்கள். “நிகழ்வுகள் நினைவாக” என்ற இந்த சிறுகதைத் தொகுதியை எழுதியுள்ள ஆ. செந்திவேலு, அத்தகைய எழுத்தாளர்களில் ஒருவர். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஆசிரியர் எழுதியுள்ள 11 கதைகள், இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ளன. நல்ல நடையில், விறுவிறுப்பாக எழுதுவதில் ஆ. செந்தில்வேலுவுக்கு உள்ள ஆற்றலை இக்கதைகள் புலப்படுத்துகின்றன. நன்றி: தினத்தந்தி, 23/12/2015.   —- […]

Read more

கவிக்கோ கருவூலம்

கவிக்கோ கருவூலம், கவிக்கோ அறக்கட்டளை, சென்னை, விலை 1000ரூ. கவிக்கோ என்று அனைவராலும் அன்புடனும், பெருமிதத்துடனும் அழைக்கப்பட்டவர் கவிஞர் அப்துல் ரகுமான். வெற்றி பல கண்டு நான் விருது பெற வரும்போது வெகுமானம் என்ன வேஷடும் என்று கேட்டால், அப்துல் ரகுமானைத் தருக என்பேன் என்று கலைஞர் கருணாநிதியால் புகழாரம் சூட்டப்பட்டவர் அவர். அவரது பவள விழாவையொட்டி அரசியல் தலைவர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் வழங்கிய கட்டுரை மற்றும் கவிதைகளின் தொகுப்பு. தமிழ் கவிதைகளின் உச்சம் தொட்ட கவிக்கோவை தமிழ் ஆர்வலர்கள் வியந்தும், புகழ்ந்தம் […]

Read more

தமிழக விழிப்பின் முன்னோடி ஜி. சுப்பிரமணிய ஐயர்

தமிழக விழிப்பின் முன்னோடி ஜி. சுப்பிரமணிய ஐயர், பெ.சு. மணி, பூங்கொடி பதிப்பகம், பக். 184, விலை 80ரூ. விதவை திருமணத்தை நடத்தியவர் ஐயர்! இந்தியாவின் அரசியல், சமுதாய விடுதலைக்கு அரும்பாடுபட்டவர்களில் ஜி. சுப்பிரமணிய ஐயரின் பணி குறித்து இந்த நூல் விளக்குகிறது. திருவையாற்றில் 1855ம் ஆண்டு பிறந்தார் ஐயர். 1878ல் ‘இந்து’ நாளிதழ், 1882ல் ‘சுதேசமித்ரன்’ நாளிதழ்களை அவர் தோற்றுவித்தார். பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த தமிழ்ப் பேரறிஞர் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களுக்கு, அந்த பணியில், ஐயர் உதவி உள்ளார். தென் ஆப்ரிக்காவில் […]

Read more

வண்ண மலர்த் தோட்டம்

வண்ண மலர்த் தோட்டம், மா.பா. குருசாமி, காந்திய இலக்கிய சங்கம், பக். 116, விலை 50ரூ. சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தவை கதைகள். அதனால் கதை புத்தகங்கள் அதிகம் வெளிவருகின்றன. கதை சொல்வோரும், எழுதுவோரும் அதிகம் இருக்கும் நிலையில், சிறுவர்களுக்கான கவிதைகளை எழுதி, ‘வண்ண மலர்த்தோட்டம்’ தலைப்பில் புத்தகமாக்கியுள்ளார், முனைவர் மா.பா. குருசாமி. குழந்தைகளுக்கான கவிதைகள் எழுதுவது என்பது காற்றில் பறக்கும் பஞ்சுப் பொதிகளை கையில் பிடிப்பது போலத்தான். சுதந்திரமாய் சோலையில் சுற்றித்திரியும் வண்ணத்துப் பூச்சிகள்போல் வலம் வரும் குழந்தைகளுக்காக எழுத நினைப்போருக்கு எளிமையும், மனத்தூய்மையும், […]

Read more

அமுதும் தேனும்

அமுதும் தேனும், பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், பக். 242, விலை 150ரூ. முப்பது கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். ‘மூத்தோர் சொல்’ என்ற அத்தியாயத்தில், விவேகானந்தர், ரமண முனிவர், ராஜாஜி, நாமக்கல் கவிஞர், தமிழறிஞர் வ.அய். சுப்பிரமணியன், ஏர்வாடியார் ஆகியோர் பற்றிய கட்டுரைகள் அத்தனையும் அற்புதம். ‘இலக்கிய அமுது’ என்ற தலைப்பில் அகநானூறு, புறநானூறு பற்றிய ஆய்வுக் கட்டுரைகள், ஆசிரியரின் ஆழ்ந்த தமிழ் அறிவுக்கு சான்றாய் அலங்கரிக்கின்றன. இக்கால கவிஞர்களின் படைப்புகள் பற்றி தனி ஒரு அத்தியாயம். அதில் புதுக்கவிதை, மரபுக்கவிதை, […]

Read more

மறக்க முடியாத மாமனிதர் அன்புக்குரிய ஐ.மா.பா.

மறக்க முடியாத மாமனிதர் அன்புக்குரிய ஐ.மா.பா., எஸ். கணேசன், சண்முகம் பதிப்பகம், பக். 152, விலை 100ரூ. புராதன, வரலாற்றுச் சிறப்பு மிக்க பழமை வாய்ந்த, மதுரை மாநகரம் எண்ணற்ற தியாக சீலர்களை தந்துள்ளது. அவர்களில் ஒருவர், ‘ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில்’எனபவம், தோழர் ஐ.மா.பா., எனவும் அழைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் ஐ.மாயாண்டி பாரதி. சுதந்திர போராட்ட வீரர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர் என, பன்முகத் திறமை கொண்ட அவரை பற்றி, அனைத்து தகவல்களும் ஒருங்கே இடம் பெற்றிருக்கின்றன இந்த நூலில். அவரது […]

Read more

எருது உலக சிறுகதைகள்

எருது உலக சிறுகதைகள், தமிழில் கார்த்திகைப் பாண்டியன், எதிர் வெளியீடு, பக். 150, விலை 120ரூ. தமிழுக்கு புதியதொரு கதை சொல்லல் முறை மொழிபெயர்ப்பு என்பது, வானத்தை பிழிந்து வட்டியில் இறக்கும் வேலை என்பர். அதில், ஒரு துளி அளவேனும் சந்தேகம் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக வெளிவந்துள்ளது, ‘எருது’ உலக சிறுகதைகளின் தொகுப்பு. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, சீனா உள்ளிட்ட 10 நாட்டு எழுத்தாளர்களின் சிறுகதைகள், இதில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதவாறும், புதுப்புது களங்களும் உள்ள சிறுகதைகள், தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்டுள்ளன. எட்மண்டோ பாஸ் […]

Read more

ஜெகாதா குறுநாவல்கள்

ஜெகாதா குறுநாவல்கள், ஜெகாதா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 608, விலை 380ரூ. ஜெயகாந்தனை துரோணராக வரித்துக்கொண்ட ஜெகாதா (ஜெயகாந்தன்தாசன்) என்ற ஏகலைவன், வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறி உச்சியைத் தொட்டிருக்கிறார். ஜெகாதாவின், 18 நீள் கதைகளைக் கொண்ட தொகுதி இது. ‘அவ்வளவு பெய்த மழையிலும் நிலவு நனையாமல் பளீரிடுவதைப் பார்த்தாள். ஒளியேற்றிய கற்கண்டுக் கட்டிகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன’ என்பது போன்ற வர்ணனைகள் நம்மை, உற்சாகப்படுத்துகின்றன. ராமேஸ்வரம் சங்கு குளித் தொழிலாளர் பிரச்னைகளைச் சித்தரிக்கும், ‘சமுத்திர குமாரர்கள்’, கந்து வட்டிக்குக் கடன் […]

Read more

காடுகளுக்காக ஒரு போராட்டம்

காடுகளுக்காக ஒரு போராட்டம், சிக்கோ மென்டிஸ், தமிழில் ச. வின்சென்ட், எதிர்வெளியீடு, விலை 120ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023826.html இறுதி சடங்கிற்கு பூக்கள் வேண்டாம். பிரேசிலை சேர்ந்த, சிக்கோ மென்டிஸ் ஆங்கிலத்தில் எழுதி, பேராசிரியர் ச.வின்சென்ட், ‘காடுகளுக்காக ஒரு போராட்டம்’ என, தமிழில் மொழிபெயர்த்த நூலை சமீபத்தில் படித்தேன். எதிர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இயற்கையை அழிப்போருக்கு, அரசு நிர்வாகம் துணை நிற்பதும், எதிர்ப்பவர்களை கொல்வதும் என்ற உண்மை சம்பவத்தை நூல் விவரிக்கிறது. இயற்கையை காப்பாற்ற போராடி கொல்லப்படும், சிக்கோ […]

Read more

குரு விஜயேந்திரா

குரு விஜயேந்திரா – தி இன்வின்சிபிள் செயின்ட், அருள்மிகு அம்மன் பதிப்பகம், பக். 320, விலை 300ரூ. கயிற்றின் மீது நடந்த விஜயேந்திரர்! மாத்வ பரம்பரையில் ராகவேந்திரரைப் பற்றி அம்மன் சத்தியநாதன் எழுதிய நூல் மிக அற்புதமானது. அந்த வரிசையில், வெல்ல இயலாத குரு விஜயேந்திரர் பற்றிய விரிவான வரலாற்றையும், தமிழில் எழுதியுள்ளார். மூல பிருந்தாவனம் அமைந்துள்ள கும்பகோணம் பற்றியும், அங்கு அவர் செய்த அற்புதங்கள் பற்றியும், இந்த இரண்டாம் பாகத்தில் மிக விரிவாகவும், பக்தியோடும் எழுதியுள்ளார். அதை யாவரும் புரிந்துகொள்ளும் எளிய ஆங்கிலத்தில் […]

Read more
1 2 3 4 9