குஷ்பு பக்கம்

குஷ்பு பக்கம், குஷ்பு, நக்கீரன் பதிப்பகம், விலை 120ரூ. தமிழகத்தில் நடிகையாக அறியப்பட்ட குஷ்பு, தற்போது அரசியல் களத்திலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தனது கருத்துக்களைத் துணிவுடன் வெளியிடும் அவர் பெண்ணியப் போராளியாகவும் கருதப்படுகிறார். அவர் எழுதிய 20 கட்டுரைகளின் தொகுப்பு இது. சமூகம், அரசியல், சினிமா தொடர்பான பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி அருமையாக அலசி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 13/1/2016.   —- I.A.S. தமிழ் முதல் தாள், பேரா.கு.வெ.பாலசுப்பிரமணியன், மீனாட்சி புத்தக நிலையம், விலை 150ரூ. இந்திய ஆட்சிப்பணித் தேர்வு எழுதுவோருக்காக […]

Read more

இந்த வானம் இந்த பூமி இந்த வாழ்வு இந்த மரணம்

இந்த வானம் இந்த பூமி இந்த வாழ்வு இந்த மரணம், ஏவியன், பத்திரிகையாளர் பதிப்பகம், விலை 200ரூ. மனிதனில் புதைந்திருக்கும் கெட்ட குணங்களை சுட்டிக்காட்டி அவனை திருத்த முயற்சிக்கும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார் ஏவியன். உலக மனித ஒட்டு மொத்த சமூகத்தின் சரியான விடியலைத் தேடும் முதல் தொடக்கமாக இதனைப் பிரகடனப்படுத்துகிறேன் என்கிறார் ஆசிரியர். பாராட்டுக்குரிய லட்சியம். நன்றி: தினத்தந்தி, 13/1/2016.   —- வங்கமொழி சிறுகதைகள் தொகுதி 3, சாகித்ய அகாடமி, விலை 400ரூ. வங்க மொழியில் எழுதப்பட்ட 27 சிறுகதைகளின் தொகுப்பு நூல். […]

Read more

தூக்குமர நிழலில்

தூக்குமர நிழலில், சி.ஐ. மலன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 120ரூ. மரண தண்டனைணை எதிர்கொண்ட நெஞ்சுரம் மிக்க போராளியின் மனநிலையை பதிவாக்கியிருக்கும் வரலாற்று ஆவணம். கொலைக்குற்றவாளியாக 12 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலே இருந்தபோதுதான் வாழ்வின் ஒளியமயமான பொன்மயமான வாழ்வின் வசந்த காலம் அனைத்தும் சி.ஏ. பாலனிடமிருந்து பிரிந்து சென்றது. வேதனை நிறைந்த உடலோடும், மனதில் குமுறியெழுந்த போராட்டங்களோடும் மரண தண்டனை அறிவிக்கப்பட்டதிலிருந்து தூக்குமேடைக்கு செல்வது வரையிலான அவஸ்தையை, பாலன் உருக்கம் பெருக சொல்லியிருக்கும் பக்கங்களை எந்தவொரு வாசகரும் எளிதில் கடந்து விட […]

Read more

பின்நவீனத்துவம்

பின்நவீனத்துவம், தொடக்கநிலையினருக்கு, ஜிம் பவல், தமிழில க. பூரணசந்திரன், அடையாளம், பக். 164, விலை 160ரூ. வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கான ஒரு புதிய சிந்தனை முறை பின்நவீனத்துவம். எனினும் இந்தப் பின்நவீனத்துவத்தைப் புரிந்து கொள்வதே பலருக்கு மிக மிகச் சிரமமான ஒன்று. பின்நவீனத்துவத்தை எளிய முறையில் புரிந்து கொள்வதற்கு உதவும் வகையில் கேள்வி – பதில் வடிவில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூல் முழுக்க ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. மார்க்சியம், கிறிஸ்தவம் அல்லது அறிவியல் என்பதன் உலகப் பொதுவான கொடியின் கீழ் எல்லா உலகமும் ஒரு […]

Read more

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம், தமிழில் கார்த்திகை பாண்டியன், எதிர் பதிப்பகம். ஒரு முகமூடிக்குப் பின்னால் ஜப்பான் மொழியில், ‘யுகுயோ மிசிமா’ எழுதி, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, பின் தமிழில், ‘ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்’ என வெளியான நாவலை, சமீபத்தில் படித்தேன். கார்த்திகை பாண்டியன் மொழியாக்கம் செய்த இந்த நாவலை, எதிர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சமூகத்தில் ஆண், பெண் என்ற இரு இனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் உள்ளது. மூன்றாம் பாலினத்துக்கு உரிய அங்கீகாரம் இல்லை. நாவல் ஆசிரியர் யுகுயோ மிசிமாவுக்கும் இதுபோன்ற பிரச்னை […]

Read more

தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்

தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள், பொன். வாசுதேவன், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 488, விலை 400ரூ. புலன் விசாரணையில் தெரியாத புதிர்கள் ‘இரண்டாம் வகுப்பிலேயே பாட்டியிடம் இலக்கணம் படித்தேன்’ என்ற பிரகாஷின் முகப்பு வரிகளுக்குப் பின், தொகுப்பின் கதைகள் துவங்குகின்றன. முப்பத்தியொரு கதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பைப் படிக்கும்போது, அதை நம்பித்தான் ஆகவேண்டும். கதையின் இரண்டாம் வாக்கியத்துக்குப் போகும்போதே, வாசகர்கள் எங்கே நின்று, கதை மாந்தர்களைத் தொடரவேண்டும் என, கடிவாளம் கட்டி விடுகிறார் பிரகாஷ். வாசகர்களுக்குத் தான் கடிவாளமே தவிர, கதை மாந்தர்களுக்கு இல்லை. […]

Read more

அரசர்கள் வளர்த்த ஆன்மிகம்

அரசர்கள் வளர்த்த ஆன்மிகம், கவுதம நீலாம்பரன், சூரியன் பதிப்பகம், பக். 256, விலை 175ரூ. கோபுரங்களின் வழியே வரலாறு ‘கவிதையின் உட்பொருளாகக் கவிஞரால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் விஷயத்தை கவனிக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆயிரம் காவியங்களைக் கற்பதால் என்ன பலன்’ என்று சொன்னார் மஹாகவி பாரதியார். ஒரே நாளில் ஒன்பது கோவில்கள், பத்துவிதமான பரிகார ஸ்தலங்கள், முக்கோண தரிசனம், நாற்கோணப் பயணம் என்கிற ரீதியில், இப்போது விளம்பரப்படுத்தப்படும் யாத்திரைகளுக்கும், பரபரப்போடு ஒவ்வொரு தலமாக ஏறி இறங்குவோருக்கும் பாரதியின் வரிகளைப் பொருத்திக் கொள்ளலாம். எந்தத் தலத்தையும் முழுமையாகப் […]

Read more

சீர்திருத்தச் செம்மல் இராமானுஜர்

சீர்திருத்தச் செம்மல் இராமானுஜர், கவிஞர் இளங்கண்ணன், ராமையா பதிப்பகம், பக். 320, விலை 160ரூ. ‘அந்தணரானாலும் அன்பால் அனைவரையும்/சாந்தமாய்க் கொண்டநல் ஆத்திர தாரியம்/சீரார் இராமானுசர்த் தொண்டைச் சிந்தை கொள்/ஓராயிரத் தாண்டாம் வாழ்த்து’ என்னும் வாழ்த்துடன் துவங்கும் நூலாசிரியர், 36 தலைப்புகளில், ராமானுஜரின் வரலாற்றை சிறுசிறு தலைப்புகளில், தக்க திருக்குறள் மேற்கோள்களுடன், வைணவச் சுவை குன்றாமல் திறம்படத் தந்துள்ளார். ‘அங்கத்தில் பஞ்ச சம்ஸ்காரம் தரித்தவரே அய்யங்கார். அது சாதியன்று (பக். 75). ஒருவன் தன் சமயத்தில் குற்றங்களைக் கண்டுபிடித்துத் தூற்றுவது மிகவும் கீழ்த்தரமான செயல் (பக். […]

Read more

புதுச்சேரி கோவில்கள்(பாகம் 1, பாகம் 2)

புதுச்சேரி கோவில்கள்(பாகம் 1, பாகம் 2),  டாக்டர் சி.எஸ். முருகேசன், சங்கர் பதிப்பகம், பக். 672, 440, விலை 550ரூ, 400ரூ. அந்நாளில், வணிகத்தின் பொருட்டு புதுச்சேரிக்கு வரும் கப்பல்கள், சரக்குகளை துறைமுகத்தில் இறக்கிவிட்டு, புதுச்சேரியிலிருந்து பல பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லும், துறைமுகப் பகுதியை ஒட்டி இருந்த மணற்குளங்களில், குடிநீரைச் சேமித்து வைத்திருப்பர். அந்த நீரை கப்பல்கள் சேகரித்து, தங்கள் பயணத்தை துவங்கும். இந்த மணற்குளங்களுள், விநாயகர் வீற்றிருந்த சிறிய கோவிலை ஒட்டிய மணற்குளமும் ஒன்று. மக்கள் அடையாளத்திற்காக, மணற்குளத்து விநாயகர் என்று அழைக்க […]

Read more

ரெகுராரத்தம்மா

ரெகுராரத்தம்மா, இரா. இராம் மோகன், இரா. இராம் மோகன் வெளியீடு, பக். 116, விலை 60ரூ. பதினோரு சிறுகதைகள் உள்ள இந்தத் தொகுதியில், பல கதைகள் சிறப்பாக அமைந்துள்ளன. ‘நீ யாதுமாகி நின்றாய் ரமணா’ என்ற கதை முதலிடம் பெறுகிறது. காதல் மனைவியின் கல்வி ஆர்வத்தை மதித்து, அவள் மேற்படிப்பு ஆசை நிறைவேற தாம்பத்ய சுகத்தையே தள்ளி வைக்கிறான், கதையின் நாயகன் ரமணன். பெண் சிசுக் கொலைக்கு எதிராகக் குரல் கொடுத்து, பெண் சிசுவின் பெருமையைப் பேசும் கதை, ‘அபாமிப் பாப்பாவும், அபிராமிப் பாட்டியும்’. […]

Read more
1 5 6 7 8 9