இந்திய தேசிய காங்கிரசின் தந்தை ஏ.ஓ.ஹ்யூம்

இந்திய தேசிய காங்கிரசின் தந்தை ஏ.ஓ.ஹ்யூம், பெ.சு.மணி, பூங்கொடி பதிப்பகம், பக். 176, விலை 80ரூ. வெள்ளைக்காரர் ஹ்யூம் யாருக்காக பாடுபட்டார்? தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும். மதுரையை நாயக்கர்கள்தான் ஆள வேண்டும். மாடவீதியை மன்னார்சாமிதான் ஆள வேண்டும் என்றெல்லாம் வசனம் பேசி, இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் ஆபத்து வலுத்து வரும் காலம் இது. இந்தச் சூழலில் பெ.சு.மணியின் இந்திய தேசிய காங்கிரசின் தந்தை ஏ.ஓ.ஹ்யூம் என்ற புத்தகம் அவசியப்படுகிறது. மாநில எல்லைகளை கடந்து, மொழி வேற்றுமையைப் புறந்தள்ளி, இந்தியப் பெருநாட்டின் மக்களுக்காக நடத்தப்பட்ட […]

Read more

Globalisation of World politics

Globalisation of World politics, ஜான் பேலிஸ், ஸ்டீவ் ஸ்மித், ஓவன்ஸ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம். உலகமயமாக்கல் உலகிற்கு வழங்கிய கொடை என்ன? ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சக வெளியீடான, Globalisation of World politics An introduction to international relations என்ற நூலைப் படித்தேன். ஜான் பேலிஸ், ஸ்டீவ் ஸ்மித், ஓவன்ஸ் ஆகியோர் இதன் ஆசிரியர்கள். இந்நூல் என்னுள் பல எதிர்வினைகளை ஏற்படுத்தியது. மாஸ்கோவில் மழை பெய்தால், மதுரையில் குடை பிடிக்கிறான் என கம்பூனிஸ்டுகளை கேலி பேசுவதுண்டு. அகிலம் என சொல்லிகொண்டாலும், இவ்விரு ஊர்களும் […]

Read more

ஐ.ஏ.எஸ். பொது அறிவு கேள்விகள் பதில்கள்

ஐ.ஏ.எஸ். பொது அறிவு கேள்விகள் பதில்கள், நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பது அனைவரது லட்சியம், கனவாகவே இருக்கும். அதற்கான சூழலும், வழிகாட்டுதலும் அமையப்பெற்றவர்கள் அந்த இலக்கை எட்டிப்பிடித்து விடுகிறார்கள். அத்தகைய வழிகாட்டுதலை செவ்வனே செய்துள்ளது இந்த நூல். சிவில் சர்வீசஸ் தேர்வின் கீழ் எத்தனை பணிகள் வருகின்றன. சிவில் சர்வீசஸ் தேர்வை யார், யார் எழுதலாம்? எத்தனை முறை எழுதலாம்? அதற்கான வயது வரம்பு என்ன? , அதற்கு நாம் தேர்வு செய்ய […]

Read more

மோகினித் தீவு

மோகினித் தீவு, அமரர் கல்கி, தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, பக். 88, விலை 25ரூ. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற நீண்ட நெடிய காவியங்களைப் படித்தவர்களுக்கு, அவரது மோகினித் துவு என்ற குறுநாவல் புதுவித அனுபவத்தைத் தரும். பர்மாவிலிருந்து தமிழகத்திற்குத் தப்பி வரும் ஒரு கப்பல் பயணியின் அனுபவத்திலிருந்து கதையை ஆரம்பிப்பதே புதுவிதமாக உள்ளது. கற்பனை நாவல் என்றாலும் கதை மாந்தர் பற்றிய வர்ணனைகள், நாவலில் வரும் திருப்பங்கள், கதையை சுவாரஸ்யப்படுத்த அவர் கையாளும் மன்னர்கள் […]

Read more

தமிழில் சிறுபத்திரிகைகள்

தமிழில் சிறுபத்திரிகைகள், அர்ஜித் பதிப்பகம், நாகர்கோவில், விலை 190ரூ. சிறுபத்திரிகைகள்தான் இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபடுகின்றன என்பது, இலக்கிய விமர்சகர்களின் பொதுவான கருத்து. புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், பி.எஸ்.ராமையா, பிச்சமூர்த்தி முதலான இலக்கிய முன்னோடிகள் மணிக்கொடி, கிராம ஊழியன், கலாமோகினி போன்றவை சிறுபத்திரிகைகளில் எழுதியவர்கள்தான். சிறு பத்திரிகைகளின் இலக்கியப்பணி குறித்து, முதுபெரும் எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணன் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. வல்லிக்கண்ணன் அந்தக் காலத்து சிறு பத்திரிகைகளுடனும், சிறு பத்திரிகைகளில் எழுதி வந்த பெரிய எழுத்தாளர்களுடனும் நேரடி தொடர்பு கொண்டிருந்தவர். எனவே, அவர் எழுதியுள்ள […]

Read more

உலகத் தகவல் களஞ்சியம் 100

உலகத் தகவல் களஞ்சியம் 100, பூங்கொடி பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. நமக்கு ஆச்சரியம் தரும் தகவல்கள், விசித்திரமான தகவல்கள், பயனுள்ள தகவல்கள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை சிரமப்பட்டுத் தொகுத்துத் தந்திருக்கிறார் மனோஸ். பூமிக்கு வரும் ஆபத்து, மிதக்கும் விமான நிலையம், தனியாகக் கடலைக் கடந்த பெண், நாளிதழ் இல்லாத நாடு, இந்தியாவின் ஒரே பெண் சுல்தான் இப்படி ஏராளமான தகவல்கள். உலகின் முதல் பெண் டாக்டர் பற்றிய தகவல் மிகவும் ஆச்சரியத்தைத் தருகிறது. ஆண்கள் மட்டுமே டாக்டர்களாக இருந்த கால கட்டத்தில் (1800ம் […]

Read more

துரோகம் வெட்கமறியாது

துரோகம் வெட்கமறியாது, தெ. சுந்தரமகாலிங்கம், வெண்ணிலா பதிப்பகம், விருதுநகர், பக். 176, விலை 140ரூ. சிற்றிதழ்கள், இலக்கிய மாத இதழ்கள், தினசரிகள் என்று ஒன்றுவிடாமல், கலை, இலக்கிய, சமூகம் சார்ந்த கட்டுரைகளுக்கு நூலாசிரியர் ஆற்றிய எதிர்வினைகளின் தொகுப்பே இந்நூல். குறிப்பாக தீராநதி, உயிர்மை, காலச்சுவடு இதழ்களில் இவரது எதிர்வினைகள் அதிக கவனம் பெற்றிருக்கின்றன. தமிழ் எழுத்துரு குறித்த ஜெயமோகனின் கட்டுரைக்கு எழுதப்பட்ட எதிர்வினை, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக என்.ராம் அளித்த பேட்டிக்கான எதிர்வினைகள், கலைஞர் கருணாநிதியின் அரசியல் துரோக நிகழ்வுகள், முல்லை பெரியாறு, […]

Read more

ராஜீவ் காந்தி சாலை

ராஜீவ் காந்தி சாலை, விநாயக முருகன், உயிர்மை பதிப்பகம், சென்னை, பக். 328, விலை 240ரூ. சென்னை மாநகர வெளியில் ராஜீவ் காந்தி சாலை சென்னை நகரைச் சுற்றிலும் இயற்கை எழிலுடமன் விளங்கிய கிராமங்கள் நகரமயமாதலின் காரணமாக இன்று சிதிலமாகிகொண்டிருக்கின்றன இயற்கை வளமான பிரதேசத்தின் ஊடே மாமல்லபுரத்தினை நோக்கிச் செல்லும் ராஜீவ் காந்தி சாலை வெறுமனே போக்குவரத்திற்கானது மட்டுமல்ல. பாரம்பரியமான கிராமங்கள், ஐ.டி. கம்பெனிகள் என இரு வேறு உலகங்களைப் பிரிக்கும் எல்லையாக ராஜீவ் காந்தி சாலை விளங்குகிறது. பன்னாட்டுத் தகவல்தொடர்புக் கம்பெனிகளின் வருகையினால் […]

Read more

காலம்

காலம், ராஜம் கிருஷ்ணன், சேகர் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. தமிழ் இலக்கிய உலகின் கௌரவத்துக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர் ராஜம் கிருஷ்ணன். 1925ல் முசிறியில் பிறந்த ராஜம் கிருஷ்ணன் 50 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய வேருக்கு நீர் என்னும் நாவலுக்கு 1973ல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. அவரது நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. கணவர் கிருஷ்ணன் மறைவுக்குப் பின்னர் தனியே வாழ்ந்து வந்த ராஜம் கிருஷ்ணன் உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த நான்கைந்து ஆண்டுகளாகச் சென்னையில் தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகிறார். […]

Read more

இணைவோம்

இணைவோம், மு. காலங்கரையன், எல்கேஎம் பப்ளிகேஷன், பக். 264, விலை 100ரூ. நூலாசிரியர் மாற்றுத் திறனாளிகளின் துயரங்களைக்கூட இருந்து அனுபவித்துள்ளதால், அவர்களின் முன்னேற்றத்திற்காக, இந்நூலை சுவை குன்றாமல் ஓர் நாவலாக எழுதியுள்ளார். இந்நூலில் காணும் மூதுரைகள், முன்னோரின் கவிதை வரிகள், சிந்தனைச் சிதறல்கள், நூலாசிரியரின் ஆழ்ந்து, அகன்ற அறிவின் திறத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும். சான்றாக, சேர்ந்து வாழுகிறது மட்டும்தான், காதலுக்கு வெற்றின்னு இல்லை. நம்மள நேசிச்சவங்க நமக்குக் கிடைக்காவிட்டாலும், அவங்க சந்தோஷமா இருக்கிறதப பார்த்து சந்தோஷப்படுகிறதும், உண்மையான காதல்தான் என்ற வைர வரிகளைக் கூறலாம். நூலின் […]

Read more
1 156 157 158 159 160 336