நரேந்திரமோடி

நரேந்திரமோடி, எஸ்பி. சொக்கலிங்கம், சிக்ஸ்த் சென்ஸ், சென்னை 17, பக். 200, விலை 125ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-200-6.html நாட்டின் பிரதமராக கூடியவர் என்று எதிர்பார்க்கப்படும் நரேந்திர மோடியின் நம்பகத்தன்மை குறித்து பாஜகவின் எதிர்க்கட்சிகளும் சில ஊடகங்களும் பலத்த சர்ச்சையைக் கிளப்பிவரும் நிலையில், மோடியின் நற்குணங்களையும், நல்லாட்சித் திறனையும் விளக்கும் நோக்கில் இந்த நூலை ஆசிரியர் படைத்துள்ளார். அரசியல் வித்தகராகவும், பேச்சாளராகவும் அறியப்பட்ட மோடி, கவிஞர், எழுத்தாளர் (அதிலும் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சாந்தினி குஜராத்தி பத்திரிக்கைக்கு அதிக […]

Read more

தமிழக ஊரும் பெயரும்

தமிழக ஊரும் பெயரும், தா.குருசாமி தேசிகர், தருமபுர ஆதீனம், குருஞான சம்பத் மடம், பக். 130, விலை 60ரூ. மற்ற மாநிலங்களில் எப்படியோ தமிழ் நாட்டைப் பொருத்தவரை எந்த ஒரு ஊரின் பெயரைக் குறிப்பிட்டாலும் அப்பெயரோடு ஒரு வரலாறு இணைந்தே இருக்கும். ஆனால், காலப்போக்கில், பல வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்களின் பெயர்கள் மக்களின் பேச்சு வழக்கில் மாறுபாடடைந்து அவற்றின் உண்மையான பொருளை இழந்து விட்டிருக்கின்றன. இந்நூலில் இருபதுக்கும் மேற்பட்ட ஊர்களின் பெயர்களைப் பல கோணங்களில் ஆய்வு செய்திருக்கிறார் நூலாசிரியர். ஆசிரியரின் பெரும்பாலான முடிவுகள் […]

Read more

வெற்றி வெளிச்சம்

வெற்றி வெளிச்சம், இயகோகா சுப்பிரமணியம், விகடன் பிரசுரம், சென்னை, பக். 176,விலை 95ரூ. இந்நூலாசிரியர் இயகோகோ சுப்பிரமணியம், கோவையில் பிரபலமான தொழிலதிபர். கோவையிலிருந்து வெளிவரும் நமது நம்பிக்கை மாத இதழில் இவர் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். வெற்றிக்கு ஒரு குறிப்பிட்ட சூத்திரம் கிடையாது. மேற்கத்திய நிர்வாக முறையும் உயர்கல்வியும் மட்டுமே தொழில்துறை வளர்ச்சிக்குப் போதுமானதல்ல. நமது பண்பாட்டின் அடிப்படையில் தனித்துவடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றியை நிரந்தரமாக்க முடியும் என்பன போன்ற கருத்துகளைத் தனது அனுபவங்களூடாக விளக்குகிறார். உயர் குணங்களே வெற்றியை அருகில் […]

Read more

கலியின் கதை

கலியின் கதை, வயா பைபாஸ், சாகித்திய அகாதெமி, சென்னை, விலை 195ரூ. சாமானிய மனிதன் கிஷோர் பாபுவைப் பற்றிய கதை. பைபாஸ் ஆபரேஷனுக்குப் பிறகு அவர் உள்மன உலகிற்குச் சென்று சிக்கல்களில் சிக்கிப் போராடியவாறு கல்கத்தா நகரின் வீதிகளில் சுற்றி வருகையில் மூன்று விதமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். அவை இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பைபாஸ் (இணை வழிப்பாதை) என்று சொல் இந்நாவலின் கரு. இன்றைய காலக்கட்டத்தில் யுக தர்மம் புறக்கணிக்கப்பட்டு, அதன் அருகாமையிலேயே வசதியான கிளை வழிகள் போடப்படுகின்றன. அடிப்படையாயுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. எந்தந்த […]

Read more

தமிழ்நாட்டின் நீர்வளம் ஒரு பார்வை

தமிழ்நாட்டின் நீர்வளம் ஒரு பார்வை, ஆர். நல்லகண்ணு, வாலண்டினா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 100ரூ. நாட்டின் குறிப்பாக தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினையாகிய தண்ணீர் பிரச்னையை மையமாக வைத்து எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல். வறட்சியைப் போக்கும் வழிகள், கங்கை-காவிரி இணைப்பு, காவிரி நீர்ப் பிரச்சினைகள் போன்ற தலைப்புகளில் இந்திய கம்யூனிஸ்டு முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு நதிநீர் இணைப்பை வலியுறுத்துகிறார். கங்கை காவிரி இணைப்பால் ஒரு கோடி ஏக்கர் நிலத்துக்கு பாசன வசதி பிறக்கும். நாட்டின் ஒற்றுமையைம் ஒருமைப்பாடும் சிறக்கும் என்பதை ஆதாரத்துடன் […]

Read more

இளவேனில் கட்டுரைகள்

இளவேனில் கட்டுரைகள், கார்க்கி பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. எழுத்தாளர் இளவேனில் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு, இளவேனில் எழுத்தில் என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. இளவேனில் எழுத்தில் ஆர்ப்பரிக்கும் அருவியையும், அமைதியான நதியையும் காணலாம். பாட்டாளிகளுக்காக பரிந்து பேசுவதையும், ஏழைகளுக்காக வரிந்து கட்டுவதையும் பார்க்கலாம். சமூகக் கொடுமைகளைச் சாடுகிறார். பொதுவுடைமை கருத்துகளுக்குப் பொலிவு தேடுகிறார். நன்றி: தினத்தந்தி, 20/7/2014.   —-   பெண்கள் திலகம் பாத்திமா, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 35ரூ. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் […]

Read more

அறிவுரைகள் ஜாக்கிரதை

அறிவுரைகள் ஜாக்கிரதை, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக். 80, விலை 45ரூ. வருடம் தவறாமல் நமது வேடந்தாங்கலுக்கு, கண்டங்களையும் கடல்களையும் தாண்டி வரும் பறவைகளைப் பாருங்கள். எத்தனை பெரிய நம்பிக்கையோடு அவை வருகின்றன. வாயிலே ஒரு மரக்குச்சியை கவ்விக்கொண்டு மனம் நிறைய நம்பிக்கையோடு பறந்து வரும் பறவையின் நம்பிக்கை, நம்மில் எத்தனை மனிதர்களுக்கு இருக்கிறது? தயவுசெய்து சீக்குப்பிடித்த சிந்தனைகளையும் அழுக்குப்பிடித்த மூளைகளையும் அப்புறப்படுத்தி விடுங்கள். குப்பைகளைக் கொட்டிவைக்கும் குப்பைத் தொட்டியல்ல மனம் என்பதை உணருங்கள். நல்ல எண்ணங்களால் மனதினை நிரப்புங்கள். நம்பிக்கையுடையவர்களையே […]

Read more

உன் மீதமர்ந்த பறவை

உன் மீதமர்ந்த பறவை, பழனிபாரதி, குமரன் பதிப்பகம், பக். 80, விலை 60ரூ. யாருக்கு பிடிக்காது மழை? மழைக்கு பிடிக்காதவர்கள் யார்? காதல் மழை, காதல் கவிதைகள் படிப்பது சுவாரசியமானது. மாலை நேர மெல்லிய மழையில் நனைவதற்கு இணையானது. பழனிபாரதியின் இந்த கவிதை தொகுப்பும் அதுபோன்றதே. தொகுப்பு முழுக்க காதல் கவிதைகள் மட்டுமே இருந்தாலும் உள்ளங்கையில் பொத்தி வைத்திருந்த மின்மினிப் பூச்சி, நம்மை அறியாமல் விரல் இடுக்குகளில் இருந்து நழுவுவதைப்போல், படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது. குறிப்பாக அபூர்வா, உயிர்த்துளை, உன்னதம், உச்சிப்பூக்கள், இரவு, அதன்பிறகு, […]

Read more

மோடி

மோடி, வெளிச்சங்களின் நிழலில், கதிரவன், சிற்றுளி வெளியிடு, சென்னை, விலை 25ரூ. மோடி முகமூடி அணிந்து வரும் இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது இந்நூல். தமிழகக் கட்சிகள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருப்பதை விமர்சித்திருக்கும் இந்நூல், நாட்டில் இந்துத்துவக் கொள்கைகள் நிகழ்த்துப்போகும் அபாயங்கள் பற்றி எச்சரிக்கிறது. நன்றி: இந்தியா டுடே, 6/4/2014.   —- க்ரோஷம், ஜுடித் பெல், வானமாமலை, கண்ணதாசன் பதிப்பகம், பக். 280, விலை 160ரூ. உலகின் வளர்ந்த நாடுகள் எல்லாம் டபிள்யூ.டி.ஓ., எப்.டி.ஏ., என்.ஏ.எப்.டி.ஏ., போன்ற பல […]

Read more

இந்திய தேசிய காங்கிரசின் தந்தை ஏ.ஓ.ஹ்யூம்

இந்திய தேசிய காங்கிரசின் தந்தை ஏ.ஓ.ஹ்யூம், பெ.சு.மணி, பூங்கொடி பதிப்பகம், பக். 176, விலை 80ரூ. வெள்ளைக்காரர் ஹ்யூம் யாருக்காக பாடுபட்டார்? தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும். மதுரையை நாயக்கர்கள்தான் ஆள வேண்டும். மாடவீதியை மன்னார்சாமிதான் ஆள வேண்டும் என்றெல்லாம் வசனம் பேசி, இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் ஆபத்து வலுத்து வரும் காலம் இது. இந்தச் சூழலில் பெ.சு.மணியின் இந்திய தேசிய காங்கிரசின் தந்தை ஏ.ஓ.ஹ்யூம் என்ற புத்தகம் அவசியப்படுகிறது. மாநில எல்லைகளை கடந்து, மொழி வேற்றுமையைப் புறந்தள்ளி, இந்தியப் பெருநாட்டின் மக்களுக்காக நடத்தப்பட்ட […]

Read more
1 155 156 157 158 159 336