நிழலற்ற பயணம்

நிழலற்ற பயணம், தலித்வாடாவிலிருந்து தலைநகர் வரை, பி.ஆர்.சுபாஷ்சந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட், பக். 476, விலை 300ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-000-7.html மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரும், மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்தவருமான, சுஷில்குமார் ஷிண்டேயின், வாழ்க்கை வரலாற்று நூல். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறப்பு, 5ம் வகுப்பு வரை கல்வி, தந்தை மறைவால் படிப்புக்கு முற்றுப்புள்ளி, தாய்க்கு உதவ, வீட்டு வேலையாளாக சேர்தல், இடையே இரவுப் பள்ளியில் […]

Read more

பிக்சல்

பிக்சல், டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல், சி.ஜெ.ராஜ்குமார், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, பக். 176, விலை 230ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-210-6.html சிறந்த பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ராஜ்குமாரின் நூல் இது. தமிழில் தொழில்நுட்ப நூல்கள் குறைவு. அதிலும் சினிமா தொழில்நுட்ப நூல்கள் அரிது. அந்த இடைவெளியை நிரப்ப வந்துள்ளது இந்நூல். ஃபிலிம் மேக்கிங்கில் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டதனால் பல புதிய இளைஞர்கள் பிரகாசிக்க முடிகிறது. இந்நூல் அப்படி வெளிவரும் புதிய கேமிராமேன்களுக்கும் விஸ்வபகாம் மாணவர்களுக்கும் […]

Read more

மங்கல இசை மன்னர்கள்

மங்கல இசை மன்னர்கள், டாக்டர் பி.எம். சுந்தரம், முத்துசுந்தரி பிரசுரம், பக். 416, விலை 270ரூ. கோவில்களில் அடைக்கலம் புகுந்து, திருமணங்களில் எட்டிப் பார்க்கும் நாகஸ்வரம் தவில் மங்கல இசை தமிழனின் தனி அடையாளம். கால மாற்றத்தால், மங்கல இசைக்கே மங்களம் பாடிக்கொண்டிருக்கும் இந்நாளில், இந்த அற்புதமான ஆராய்ச்சி நூல் மீண்டும் புத்துயிர் தந்துள்ளது அந்த கலைக்கு. ருக் வேதத்தில் உள்ளது என்றும் கோவில்கள் தோன்றியபோதே, நாகஸ்வரமும், தவிலும் தோன்றிவிட்டதென்று இசை மேதை பி.எம்.சுந்தரம் ஆய்வு முன்னுரையில் அழகாக எழுதியுள்ளார். வாசித்து சாதனை செய்த […]

Read more

கி.பி. 1800ல் கொங்குநாடு

கி.பி. 1800ல் கொங்குநாடு, புலவர் செ. இராசு அடைப்பாடி அமுதன், அனுராதா பதிப்பகம், பக். 344, விலை 190ரூ. திப்பு சுல்தான் ஆங்கிலேயருடன் போரிட்டுக் களப்பலியான பிறகு, கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கிடைத்த மைசூர் மற்றும் கொங்குநாட்டுப் பகுதிகள் பற்றி, ஒரு களஆய்வு செய்ய எண்ணினார் அன்றைய ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் மார்க்விஸ் வெல்லெஸ்லி பிரபு. இப்பொறுப்பு டாக்டர் பிரான்சிஸ் புக்கானன் என்பவரிடம் அளிக்கப்பட்டது. டாக்டர் புக்கானன் அதை ஏற்று, வழிகாட்டி, காவலர்கள், மொழி பெயர்ப்பாளர், படம் வரைபவர் ஆகிய குழுவினருடன் மதராசில் இருந்து புறப்பட்டுச் […]

Read more

தங்கர் பச்சான் கதைகள்

தங்கர் பச்சான் கதைகள், உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 210ரூ. இருக்கிற கடவுள்களும், இனி வரப்போகும் கடவுள்களும் கைவிட்ட தங்கர்பச்சானின் மனிதர்கள். தங்கர்பச்சானின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெள்ளை மாடு வெளிவந்த போது முந்திரித் தோட்டத்து மனிதர்களின் வாழ்வியலை அவ்வளவு நகாசுத்தன்மையுள்ளதாக இல்லாமல் வெளிப்பட்டிருப்பதாக ஒரு விமர்சனம் வந்தது. பின் நவீனத்துவ எழுத்து தீவிரமாக இருந்த காலகட்டம் அது. பின் நவீனத்துவக் காலகட்டத்தில் கலை அம்சங்களும் நாகாசுத்தன்மையும் கூட அவலட்சணமே. காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் விவரிப்பில் இலக்கண நேர்த்தியோ நகாசோ எதிர்பார்ப்பது ஒரு […]

Read more

சென்னை மாநகர்

சென்னை மாநகர், மா.சு. சம்பந்தன், இந்திய பண்பாட்டு ஆய்வு மையம், மாங்காடு. சென்னையின் வரலாற்றை, பல்வேறு தகவல்களுடன் விளக்கும் நூல், 1911ம் ஆண்டுக்கும் முன், சென்னைத் தெருக்களில் விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் விளக்குகளே பயன்பாட்டில் இருந்தன. பிறகுதான் மண்ணெண்ணெய் விளக்குகள் வந்தன. 1911ல் நகரில் 6269 மண்ணெண்ணெய் விளக்குகள் இருந்தன. பவுர்ணமிக்கு முதல் நாளும், பவுர்ணமி அன்றும், விளக்கேற்றுவதற்காக விடுமறை விடப்பட்டது. 1942ல் சென்னை முழுக்க மின்விளக்கு மயமானது. பின்பு, தெரு சந்திப்புகளில், மின் கடிகாரங்கள் வைக்கப்பட்டன. ஆனால், பல கடிகாரங்கள் சரியான நேரத்தைக் […]

Read more

இந்தியப் புதையல் ஒரு தேடல்

இந்தியப் புதையல் ஒரு தேடல், பால் ப்ரன்டன், தமிழில் புவனா பாலு, கண்ணதாசன் பதிப்பகம், பக். 520, விலை 300ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-221-2.html கடந்த 1930களில் இந்தியாவில் நிலவி வந்த ஆன்மிக நம்பிக்கைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர் பால் ப்ரன்டன். முதலில் வட மாநிலங்களில் உள்ள யோகிகள், சாதுக்கள் ஆகியோரைச் சந்தித்து விட்டு, தென் இந்தியாவை நோக்கிப் பயணப்பட்டு, வழியில் கிடைத்த அனுபவங்கள், சந்தித்த மனிதர்களிடமிருந்து தெரிந்து கொண்டவை, ஆகியவற்றுடன் திருவண்ணாமலையில் பகவான் ரமண […]

Read more

அகிலம் வென்ற அட்டிலா

அகிலம் வென்ற அட்டிலா, ம.லெனின், சிக்ஸ்த் சென்ஸ், சென்னை, பக். 144, விலை 90ரூ. உலகை ஆட்டிப் படைத்த மாவீரர்களின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயர் அட்டிலா. கி.பி. 395இல் பிறந்த அட்டிலா உலடிகன் சகல வல்லமை பொருந்தியதாகக் கருதப்பட்ட ரோமானியப் பேரரசை தனது படை வல்லமையால் வென்றவன். சமகாலத்தில் உலகம் உணர்ந்த மேலாண்மைக் கொள்கைகளையும், ஆளுமை யுக்திகளையும் அந்தக் காலத்திலேயே தனது உள்ளங்கையில் வைத்திருந்தவன் அட்டிலா. நாடோடியாகத் திரிந்து கொண்டிருந்த தனது ஹுணர் இன மக்களை ஒன்று திரட்டி அவர்களுக்குள் இருந்த […]

Read more

இரண்டு வரி காவியம்

இரண்டு வரி காவியம், திருக்குறள் தெளிவுரை, பட்டுக்கோட்டை பிரபாகர், ரம்யா பிரியா கிரியேஷன்ஸ் வெளியீடு, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-228-4.html நறுக்கென்று ஒரு திருக்குறள் உரை திருக்குறளுக்குப் பரிமேலழகர் போன்ற ஜாம்பவான்கள் முதல், சென்ற நூற்றாண்டின் டாக்டர் மு.வ. வழி ஆயிரக்கணக்கில் உரை எழுதியிருக்கிறார்கள். இப்போது கதாசிரியர், நாவலாசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர் நடைமுறைத் தமிழில் சரளமாக எழுதியுள்ள உரை விளக்கம் முற்றிலும் வித்தியாசமானது. ஒவ்வொரு அதிகாரத்தின் கடைசியிலும் நறுக்கென்று இரண்டே சொற்களில் மையக் கருத்தைச் சொல்லியுள்ள பாங்கு […]

Read more

மனக்குகைச் சித்திரங்கள்

மனக்குகைச் சித்திரங்கள், ஆத்மார்த்தி, புதிய தலைமுறைப் பதிப்பகம், சென்னை. தமிழ் இதழ்களில் தற்போது தனிப்பட்ட அனுபவங்களைப் பதிவு செய்யும்போக்கு அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் புதிய தலைமுறை இதழில் ஆத்மார்த்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு மனக்குகை சித்திரங்கள் என்ற பெயரில் வெளியாகி உள்ளது. நூல்கள் விற்கும் ஆறுமுகம், சாலையில் ஓவியம் வரைபவன், மனநோய் பாதிப்புக்குள்ளான மல்லிகா அக்கா, உறவினர் யாரும் இல்லாதபோதும் வெளிநாட்டில் இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் பாலமூர்த்தி, நான்குவயதில் தொலைந்துபோன குட்டிமகள் இன்னும் தன்னுடன் இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் பெரியவர், மதுக்கூடத்தில் பாடும் ராமசாமி உள்ளிட்ட பல […]

Read more
1 172 173 174 175 176 336