மனக்குகைச் சித்திரங்கள்

மனக்குகைச் சித்திரங்கள், ஆத்மார்த்தி, புதிய தலைமுறைப் பதிப்பகம், சென்னை. தமிழ் இதழ்களில் தற்போது தனிப்பட்ட அனுபவங்களைப் பதிவு செய்யும்போக்கு அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் புதிய தலைமுறை இதழில் ஆத்மார்த்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு மனக்குகை சித்திரங்கள் என்ற பெயரில் வெளியாகி உள்ளது. நூல்கள் விற்கும் ஆறுமுகம், சாலையில் ஓவியம் வரைபவன், மனநோய் பாதிப்புக்குள்ளான மல்லிகா அக்கா, உறவினர் யாரும் இல்லாதபோதும் வெளிநாட்டில் இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் பாலமூர்த்தி, நான்குவயதில் தொலைந்துபோன குட்டிமகள் இன்னும் தன்னுடன் இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் பெரியவர், மதுக்கூடத்தில் பாடும் ராமசாமி உள்ளிட்ட பல […]

Read more

ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்

ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும், தமயந்தி, கருப்புப் பிரதிகள், சென்னை. எனது எல்லா கதைகளிலும் நான் இருக்கிறேன் என்கிறார் ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பின் ஆரம்பத்திலேயே எழுத்தாளர் தமயந்தி. ஒரு பெண்ணின் பார்வையிலான குறிப்பிடத்தகுந்த கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. முன்னுரை எழுதி இருக்கும் பிரபஞ்சனின் சொற்களில் கூறுவதென்றால் இந்த சிறுகதைகள் ஆழ்ந்த வன்முறைகளைப் பற்றிப் பேசுகின்றன. ஒன்று குடும்பவன் முறை. அப்புறம் சட்டம் ஒழுங்கைக் காப்பதாக நம்பப்படும்நபர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த நிறுவனம் ஆற்றும் வன்முறைக் […]

Read more

வியப்பூட்டும் விடுகதைகள் 1000

வியப்பூட்டும் விடுகதைகள் 1000, சி. இலிங்கசாமி, சங்கர் பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 35ரூ. விடுகதைகளை, சிந்தனையைத் தூண்டும் அறிவுத்திறன் மேம்பாடுப் பயிற்சி எனலாம். இந்த நூல், அந்த பயிற்சிக்கு உதவும் சுவாரஸ்ய விருந்து. நூலின் இருந்து சில விடுகதைகள், நோய் நொடியில்லாமல் நாளெல்லாம் மெலிகிறாள். அவள் யார்? விடை = தினசரி நாட்காட்டி. கல்லிலே சாய்க்கும் பூ, தண்ணீரில் மலரும் பூ, அது என்ன? விடை = சுண்ணாம்பு. கண்ணுக்குத் தெரியாதவன், தொட்டவனை விடமாட்டான். அவன் யார்? விடை = மின்சாரம். […]

Read more

மோகினித் தீவு

மோகினித் தீவு, அமரர் கல்கி, தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, பக். 88, விலை 25ரூ. எழுத்துல பிதாமகர் அமரர் கல்கி எழுதிய குறுநாவல் மோகினித் தீவு. கல்கியின் தனித்துவமான நடையழகில், மனித வாழ்வின் ஆதார உணர்வுகளான நகைச்சுவை, வீரம், மர்மம், திகில், காதல் ஆகியவை கொண்டு மிளிரும் என்ற நமது அறியாமை கலந்த எண்ணத்தை அவரின் மோகினித் தீவு குறுநாவல் தகர்த்து எறிகிறது. ஒரு தியேட்டர் படம் பார்க்கப்போன இரண்டு பால்ய நண்பர்கள், நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்துக் கொள்கிறார்கள். ஒருவர் ஜப்பானிய போரின்போது […]

Read more

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம், முனைவர் ஸ்ரீ ஜெகநாத சுவாமி, ஸ்ரீ லலிதா பதிப்பகம், கோவை, பக். 194, விலை 200ரூ. கோவிலில் வைத்து வரன் பார்ப்பது, திருமண விசேஷங்களில் மாப்பிள்ளை பெண் தேடும் யுகம் மாறி பத்திரிக்கை, இணைய தளங்கள் வாயிலாக வரன் தேடல் எளிதாகிப்போனது. வந்து குவியும் தகவல்களை வரிசைப்படுத்தி, நமது மகள் (அ) மகளுக்கு ஏற்ற வரனை முடிவு செய்வது பெற்றோர்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவால். திருமண தடை, தாமதம் ஏன்? என்பதும், ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது ஏற்படும் குழப்பங்களும் குடும்பங்களை […]

Read more

ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம்

ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம், ஜேனஸ் கோச்சார்க், தமிழில் – தி.தனபால், பாரதி புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை, விலை 40ரூ. குழந்தைகளுக்கான போராளி என்று அழைக்கப்படும் ஜேனஸ் கோர்ச்சாக்கின் கருத்துகளின் தொகுப்பே ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம் என்னும் நூல். இந்நூலை தி. தனபால் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். குழந்தைகளைப் பற்றிய புத்தகம் என்றாலும் சுவாரசியமான விஷயங்களைத் தாண்டிக் குழந்தைகள் தொடர்பாகப் பெற்றோரின் அணுகுமுறையில் தேவைப்படும் மாற்றங்களை விரிவாகப் பேசுகிறது இது. இருபத்தியொரு தலைப்புகளின் கீழ், குழந்தைகள் பற்றிய ஒளிமிக்க புதிய பார்வையைத் தரும் விதத்திலான செய்திகளை […]

Read more

மிளிர் கல்

மிளிர் கல், இரா. முருகவேள், பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர், விலை 200ரூ. ரத்தினக் கற்கள் தேடும் நீலகண்டப் பறவை நாகரிகச் சமூகங்கள் நாதங்கள் வேரைத் தேடுகின்றன. அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்கின்றன. வரலாற்றில் புதையுண்ட தங்களின் பண்பாட்டு விழுமியங்கள் குறித்துக் கரிசனம் கெள்கின்றன. சிலம்பு தமிழின் தொன்மை அடையாளம், கண்ணகியும்தான். கண்ணகியின் காற்சிலம்பிலிருந்த மாணிக்கப் பரல்கள் பண்டைத் தமிழகத்தின் ஒப்பற்ற விளைச்சல், பெரு வணிகப் பண்டம். மாணிக்கம், மரகதம், கோமேதகம் என்றெல்லாம் ரத்தினக் கற்கள் சுட்டப்படுகின்றன. இவை புறநானூறு போன்ற செவ்விலக்கியங்களில் மிளிர மணிகள் எனப்படுகின்றன. […]

Read more

தனித்தலையும் செம்போத்து

தனித்தலையும் செம்போத்து, செந்தி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 65ரூ. வடிகாலற்ற காமத்தை உணர்த்தும் கவிதைகள் செந்தியின் தனித்தலையும் செம்போத்து தொகுப்பு நகரமயமாதல் என்னும் விஷயத்தைத் தவிர வேறெந்த அரசியலுக்கும் முக்கியத்துவமளிக்காமல் அதைக் கவனமாகத் தவிர்த்துவிட்டது. தொகுப்பிலுள்ள கவிதைகளில் சிலவற்றில் மட்டும் இவை வெளிப்படுவதைக் காணமுடிகிறது. உதாரணமாக செங்குளத்தை இரண்டாகப் பிரித்து வளர்ந்துகொண்டே போகும் தங்க நாற்கரச்சாலை குட்டைகள் அரிதான வெளியில் கான்கிரீட் பாத்திகள் அவைகளுக்குப் பெரும் களிப்பூட்டியிருக்கால் என்ற கான்கிரீட் பாத்தி நீர் குடிக்கவரும் காக்கைகள் கவிதையைச் சொல்லலாம். தொகுப்பில் ஆண்களின் வடிகாலற்ற […]

Read more

திருக்குறளை மெய்ப்பிக்கும் மறக்க முடியாத 100 வரலாற்று நிகழ்ச்சிகள்

திருக்குறளை மெய்ப்பிக்கும் மறக்க முடியாத 100 வரலாற்று நிகழ்ச்சிகள், முனைவர் எஸ். சந்திரா, நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 55ரூ. உள்நாடு, வெளிநாடு என்று பல கணித அறிவியல் மாநாடுகளில் கலந்துகொண்டு அறிவியல் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ள இந்நூலாசிரியர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு இவ்விரு துறைகளிலும் பல நூல்களை வெளியிட்டுள்ளார். நம் வாழ்க்கையில் நடக்கும் பல நிகழ்ச்சிகளை உற்று நோக்கினால், வள்ளுவன் கூறிய ஏதாவது ஒரு குறளுடன் ஒத்துப் போவதை அறியலாம். அந்த அளவிற்கு எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் திருக்குறளைப் படைத்திருக்கிறார் திருவள்ளுவர். அதை […]

Read more

மகாபாரதம்

மகாபாரதம், கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, சென்னை புக்ஸ், சென்னை, பக். 328, விலை 175ரூ. நமது பாரம்பரியப் பொக்கிஷமான மகாபாரதத்தில், எல்லா காலத்துக்கும் பொருந்தும் வழிகாட்டுதல்கள் நிறைந்துள்ளன. அதர்மமும், ஆவணமும் அழிவை ஏற்படுத்தும், நற்பண்புகளே நல்ல வாழ்க்கையை வழங்கும், தர்மத்தின் வாழ்வை சூது கவ்வினாலும் மறுபடியும் தர்மம் வெல்லும் ஆகியவை போன்ற ஒப்பற்ற அறிவுரைகளை கதைப்போக்கிலேயே வழங்கும் மகாபாரதம், படிப்பவர்களிடம் பொறுமை, சகிப்புத்தன்மை, ஆத்ம சக்தி ஆகியவற்றை அதிகரித்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும், இந்த இதிகாசத்தை, இனிமை நிறைந்த நடையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் கள்ளிப்பட்டி […]

Read more
1 173 174 175 176 177 336