மக்கள் சமூகத்தின் மனசாட்சி

மக்கள் சமூகத்தின் மனசாட்சி, பாரதி வசந்தன், பழனியப்பா பிரதர்ஸ், பக். 200, விலை 150ரூ. வீரமாமுனிவரின் ஒப்பற்ற தமிழ்தொண்டு அனைவரும் அறிந்தது. இத்தாலியில் இருந்து இந்திய மண்ணில், கிறிஸ்தவப் பணிபுரிய வந்த தொண்டரான அவரது இயற்பெயர், கான்ஸ்தன்ஸ் ஜோசப் எசோபியோ பெஸ்கி என்பதே. தமிழில் வீரவளன் என்றும், தைரியநாதர் என்றும், பின் வீரமாமுனிவர் என்றும் மாற்றம் கண்டது. தூயமுனிவர், இஸ்மத் சந்நியாசி, மலர்களின் தந்தை, புறநிலைக் காப்பியனார், குளுந்தமிழ்ச் சாத்தன், தெருட்குரு, வீர ஆரியவேதியன், திருமதுரைச் செந்தமிழ்த்தேசிகன், ராஜரிஷி, குருசாமியார் என்ற பெயர்களாலும் அவர் […]

Read more

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள்

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள், ச. சுப்பராவ், பாரதி புத்தகாலயம், பக். 95, விலை 70ரூ. ஆங்கில நாவல்கள் குறித்து, புத்தகம் பேசுது இதழில், நூலாசிரியர் எழுதிய கட்டுரைகள், தொகுப்பாக வெளிவந்துள்ளன. திரில்லர் நாவல்களில் தனக்கென்று தனி இடம் பிடித்த, அமெரிக்க எழுத்தாளரான, ராபின் குக் எழுதிய முதல் நாவலே, சிறுநீரகத் திருட்டைப் பற்றிய கோமா. அடுத்து, மருத்துவத் துறையின் மோசடி குறித்து எழுதிய, டெத் பெனிபிட் நாவல். கிரைட்டனின் கதைகளை விவரித்து, தமிழில் விஞ்ஞானக் கதைகள் ஏன் அதிகளவில் வரவில்லை என்ற தன் ஆதங்கத்தையும் […]

Read more

நினைவுகள் நிறைந்த வெற்றிடம்

நினைவுகள் நிறைந்த வெற்றிடம், ஜி. மீனாட்சி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 100ரூ. மனக்காயங்களுக்கு மருந்து 12 சிறுகதைகள் அடங்கிய இந்த நினைவுகள் நிறைந்த வெற்றிடம் நூலில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு பிரச்னையை அலசுகிறது. குறிப்பாக பதின் பருவத்து குழந்தைகளின் உளப்பூர்வமான சிக்கலை எடுத்துவைப்பதில் தம் கவனத்தைச் செலுத்தியிருக்கிறார் ஜி. மீனாட்சி. பிறவிப் பெரும்பயன் என்ற கதையில் ஒரு தம்பியின் தியாகத்தையும் அக்காவின் பாசத்தையும் அடி ஆழம்வரை சென்று படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். புதிய பாடம் என்ற கதையில் கிராமத்திலிருந்து கணவனை இழந்து […]

Read more

தித்திப்பான தொகுப்புமுனைகள்

தித்திப்பான தொகுப்புமுனைகள், தொகுப்பாசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், புத்தொளிப் பதிப்பகம், பக். 168,விலை 80ரூ. ஒருவர் ஒரு மத நம்பிக்கையில் ஆழமான பிடிப்பில் இருக்கையில், ஏதோ ஒரு திருப்பு முனையால் வேறொரு மதச் சித்தாந்தங்களால் ஈர்க்கப்படும்போது, அவருக்கு ஒரு சிந்தனை மாற்றம் நிகழ்ந்து, மதமாற்றம் ஏற்படுகிறது. இதுவே இயற்கையானது. நிலையானது. மற்றபடி உலக ஆதாயங்களைக் காட்டி, மூளைச்சலவை செய்து ஏற்படும் மதமாற்றம் செயற்கையானது. நிலையற்றது என்கிறார் இந்நூலாசிரியர். பேராசிரியர், சட்டமன்ற உறுப்பினர், ஆன்மிகம், அரசியல், பேச்சு, எழுத்து, சமூகநலன்… என்று பல தளங்களிலே பயணிக்கும் இந்நூலாசிரியர், மாற்று […]

Read more

பல நூற்றாண்டுகளாகப் புகழ் பெற்ற இசைபாடகர்கள்

பல நூற்றாண்டுகளாகப் புகழ் பெற்ற இசைபாடகர்கள், எஸ்.எஸ். பாரத்வாஜ், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 175ரூ. ஆச்சாரியார்கள், சித்தர்கள், ஆழ்வார்கள், சங்கீத மூர்த்திகள் போன்ற அருள் பெற்ற மகான்கள் தங்கள் அனுபவங்களைப் பாடல்களாக, பிரபந்தங்களாக, விருத்தங்களாக, கீர்த்தனைகளாக வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களில் புகழ்பெற்ற ஆதி சங்கரர், சமயக் குரவர்கள், ஆழ்வார்கள் தொடங்கி புரந்தரதாஸர் அருணாசலக் கவிராயர், வள்ளலார், திருமூலர், தாயுமானவர், அவ்வையார் போன்றோரின் வாழ்க்கை வரலாற்றையும், அதோடு அவர்கள் எழுதிய பாடல் வரிகளையும் சொல்லி கோவை எஸ்.எஸ். பாரத்வாஜ் நம்மை வியக்க வைக்கிறார். நன்றி: தினத்தந்தி, […]

Read more

சட்டமன்ற மேலவையில் ப. மாணிக்கம்

சட்டமன்ற மேலவையில் ப. மாணிக்கம், விலை 160ரூ. கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ப. மாணிக்கம் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தபோது, அவர் நிகழ்த்திய உரைகளை சேகரித்து தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/9/2015.   —- நம்மால் முடியாதா?, மணிகண்டன், நூலாசிரியர் காட்டுப்பையூர், விலை 50ரூ. அன்பு, பாசத்தை தாய், தந்தையிடம் செலுத்துவதை மையமாக வைத்து எழுதப்பட்ட நூலாகும். நன்றி: தினத்தந்தி, 9/9/2015.   —- கம்யூனிசத்தின் கோட்பாடுகள், பிரடெரிக் எங்கெல்ஸ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 20ரூ. கம்யூனிசத்தை […]

Read more

ஹெர்மான் ஹெஸ்ஸின் சித்தார்த்தா ஓர் ஆய்வு

ஹெர்மான் ஹெஸ்ஸின் சித்தார்த்தா ஓர் ஆய்வு, சுரானந்தா, சுரா பதிப்பகம், பக். 176, விலை 80ரூ. 128 பக்கங்கள் மட்டுமே கொண்ட சித்தார்த்தா என்ற ஜெர்மானிய நாவல், 1946ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றது. இந்நூலின் ஆசிரியர் ஹெர்மான் ஹெஸ், இந்தியாவில் கேரள மாநில சர்ச் ஒன்றில் பணியாற்றிய பாதிரியாரின் பேரன். இது புத்தரின் போதனைகளையும், இந்திய கலாசாரத்தையும் மையமாக வைத்து புனையப்பட்ட நாவல். இதில் வரும் முக்கிய கதாபாத்திரமான சித்தார்த்தன் பிராமண குடும்பத்தில் பிறந்து, பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட்டாலும், அவன் மனம் […]

Read more

பாசங்கள் பலவிதம்

பாசங்கள் பலவிதம், சூடாமணி சடகோபன், ருக்மணி பதிப்பகம், பக். 144, விலை 80ரூ. பாசத்தை மையக்கருவாகக்கொண்டு, பலவிதமான பாசங்களை சிறுகதைகளாக வரைந்துகாட்டியிருக்கிறார் நூலாசிரியர். ஒரு சராசரி மனிதனுக்குள் இருக்கும் ஆசாபாசங்களின் பின்னணியில் இக்கதைகள் புனையப்பட்டுள்ளன. அதனால் படிப்போருக்கு கதையின் நெருக்கதை உணரும்படி உள்ளது. மனதிற்குள் பல காலங்களாக காரணமின்றி புதைக்கப்பட்டு கிடக்கும் பாசத்தை, வெளியில் கொண்டு வராததால் அல்லது கொண்டுவரத் தெரியாததால், அவன் அடையும் மன உளைச்சலையும் பரிதவிப்பையும் யதார்த்த கண் கொண்டு பார்த்துள்ளார் ஆசிரியர். மகனிடம் அன்பு காட்டத்தவறிய சொக்கலிங்கம் முதல், நோய் […]

Read more

நாடாளுமன்றத்தின் கதை

நாடாளுமன்றத்தின் கதை, அருணகிரி, குமுதம் பு(து)த்தகம், பக். 408, விலை 240ரூ. உலகின் பல நாட்டு நாடாளுமன்றங்களுக்கும் சென்று அவற்றின் செயல்பாடுகளைக் கண்டறிந்த இந்நூலாசிரியர், நமது நாடாளுமன்றத்தை பற்றி ஏ டு இசட் வரையிலான அனைத்து தகவல்களையும் இந்நூலில் எளிய தமிழ் நடையில் பதிவு செய்துள்ளார். இவற்றில் பெரும்பாலானவை நாடாளுமன்றம் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களில் இருந்து திரட்டியவை. இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இந்தியர்கள் படிப்பறிவு அற்றவர்கள், அவர்களுக்கு தேர்தல், ஓட்டு, ஜனநாயகம் பற்றியெல்லாம் என்ன தெரியும்? என்று ஐரோப்பியர்களால் கேலி […]

Read more

எம்.எஸ்.சுவாமிநாதன் வளங்குன்றா வேளாண்மை இயக்கத்தின் தலைமகன்

எம்.எஸ்.சுவாமிநாதன் வளங்குன்றா வேளாண்மை இயக்கத்தின் தலைமகன், முனைவர் என். பரசுராமன், மதிநிலையம், விலை 200ரூ. இந்தியாவில் இன்றைய இளைஞர்களின் பார்வை வேளாண்மை பக்கம் திரும்பி இருக்கிறது என்றால் அதற்கு முழு முதல் காரணம் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்தான். உலகில் தலைசிறந்த வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ். சுவாமிநாதன் தன்னை தேடி வந்த ஐ.பி.எஸ். பணியை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டு, விவசாய வளர்ச்சியே தன் வாழ்க்கையின் குறிக்கோள் என்ற வகையில் அவர் விடும் ஒவ்வொரு மூச்சிலும் விவசாயம் விவசாயம் என்றே வாழ்ந்துகொண்டு இருக்கிறார். அவரது வாழ்க்கை […]

Read more
1 34 35 36 37 38 336