காந்தியின் பொம்மை

காந்தியின் பொம்மை, குறிஞ்சி ஞான.வைத்தியநாதன், நிவேதிதா பதிப்பகம், விலைரூ.150. சிறுவர்கள் உள்ளத்தில் நல்ல பண்புகளை வளர்த்து, தீயவற்றை விலக்கி, எதிர்த்து போராட துாண்டும் நாவல். பள்ளி நண்பர்கள் கோடை விடுமுறை முடிந்து பள்ளி செல்லும்போது, வழியில் ஒரு கிளியை பாம்பு சாப்பிட முயல்வதை பார்க்கின்றனர். பாம்பிடம் இருந்து கிளியை காப்பாற்றி, பள்ளி நோக்கி புறப்பட்டால் நேரம் கடந்து விடுகிறது. தலைமையாசிரியரின் அன்பை பெறுகின்றனர். ஒரு கொலையை பார்த்தால் சிறுவர்களுக்கும் ஏற்படும் அச்சம், விசாரணை, போராட்ட குணம் என பரபரப்பாக செல்கிறது. – ராயன் நன்றி: […]

Read more

அபிதா

அபிதா, லா.ச. ராமாமிருதம், அர்ஜித் பதிப்பகம், விலைரூ.60. காட்சிகளையும், மன உருக்கத்தையும் முன்னிலைப் படுத்தி எழுதப்பட்டுள்ள நாவல். அம்பிகையை பல நாமங்களில் வியந்து, அடைந்துவிடத் துடிக்கும் வர்ணனையுடன் கூடியது. சம்பவங்களை அல்ல, காட்சிகளையே நாவல் கண்முன் விரிக்கிறது. வழக்கமான கதை படிப்பது போல் அல்லாமல், நுட்மான ஆன்மிக அனுபவத்தை தரவல்லது. இயற்கையோடான பயணத்தை வண்ணமயமாக காட்சிப்படுத்துகிறது. நெகிழ்வுகளுடன் வாசித்து உருக ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ள வித்தியாசமான நுால். – மலர் நன்றி: தினமலர், 30/1/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

நீராட்டும் ஆறாட்டும்

நீராட்டும் ஆறாட்டும், தொ.பரமசிவன், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.75. புறவயமாகத் தமிழ்ப் பண்பாட்டைப் பேசும் வரலாற்று நூல்கள் தமிழில் அதிகளவில் எழுதப்பட்டுள்ளன. அகவயமாகத் தமிழரின் தொல் பண்பாட்டை ஆராயும் நூல்கள் மிக மிகக் குறைவாகவே எழுதப்படுகின்றன. அதில் ஒன்றுதான் தொ.பரமசிவனின் ‘நீராட்டும் ஆறாட்டும்.’ தமிழரின் புழங்குபொருள் சார்ந்தும் சடங்குகள் சார்ந்தும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். தொல் தமிழரின் பண்பாட்டு எச்சங்கள் இன்றும் நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றப்படுகின்றன. சில சிதைந்தும் மருவியும் தொடர்கின்றன. நாம் செய்யும் ஒவ்வொரு சடங்குக்குப் பின்னாலும் ஒரு […]

Read more

திகம்பர நினைவுகள்

திகம்பர நினைவுகள், தேவகாந்தன், ஆதி பதிப்பகம், விலை: ரூ.120. புலம்பெயர்ந்து, தற்சமயம் கனடாவில் வசித்துவரும் எழுத்தாளரும் இதழாளருமான தேவகாந்தனின் ஈழத்து நினைவுகளின் சில பக்கங்கள் நூலாகியிருக்கின்றன. பெரிதும், பிள்ளைப் பிராயத்து நினைவுகள். புழுதியைக் கிளப்பியபடி நாளைக்கு மூன்று முறை கிராமத்துக்கு வந்து செல்லும் பேருந்து, பலிக்காமல் போன ஆரூடங்கள், நெஞ்சின் ஆழத்தில் பதிந்துவிட்ட நம்பிக்கைகள், யூரியாவின் வருகைக்கு முன்பிருந்த எரு பயன்பாடு, மிக அரிதாய் ஒரு வீட்டில் மட்டும் ஒலித்துக்கொண்டிருந்த இலங்கை வானொலியின் வர்த்தக சேவை, ‘ஓ… ரசிக்கும்சீ.. மானேவா…’ என்று சொல் பிரிந்து […]

Read more

அறிவு

அறிவு, ஞானத்தின் ஆய்வியல் நாராயண குரு, ஆங்கில மொழியாக்கமும் உரையும்: நித்ய சைதன்ய யதி, தமிழில்: எம்.கோபாலகிருஷ்ணன், தன்னறம் வெளியீடு, விலை: ரூ.80. நவீன இந்தியாவின் முக்கியமான சீர்திருத்தவாதியும் துறவியும் கல்வியாளருமான நாராயண குரு, கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லும் விதமாக சம்வாத வடிவில் 15 பாடல்களாக எழுதிய நூல் ‘அறிவு’. மேற்கில் அறிவின் தோற்றம் குறித்து அறியும் ஆய்வுப்புலம் ‘அறிவுத்தோற்றப்பாட்டியல்’ (epistomology) என்ற பெயரில் உள்ளது. இந்தியாவில் வேதாந்த மரபின் ஒரு பகுதியாக அறிவு மற்றும் பிரக்ஞையின் தோற்றமும் அவற்றின் செயல்பாடுகளும் பிரச்சினைகளும் […]

Read more

மணிமேகலை

மணிமேகலை, (முதல் பாகம்), உரை: கரு.முத்தய்யா, விலை: ரூ.300. தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியில் 31 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரான முனைவர் கரு.முத்தய்யா தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலைக்கு எழுதிய உரைநூல். நன்றி: தமிழ் இந்து, 22/1/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஜே.வி.நாதன் சிறுகதைகள்-2

ஜே.வி.நாதன் சிறுகதைகள்-2, ஜே.வி.நாதன், அந்தரி பதிப்பகம், விலை: ரூ.300 மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஜே.வி.நாதன் இதுவரை 400-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர். இவருடைய 70 சிறுகதைகள் கன்னடம், தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. சிறந்த சிறுகதைக்கான ‘இலக்கியச் சிந்தனை’ விருதை ஜே.வி.நாதன் மூன்று முறை பெற்றிருக்கிறார். தமிழ்ச் சிறுகதை உலகின் முன்னோடிகளில் ஒருவரான மௌனியைப் பற்றி ‘மௌனியின் மறுபக்கம்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். இவரது தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் இரண்டாவது தொகுப்பு இப்போது வெளியாகியிருக்கிறது. ஆனந்த விகடன், குமுதம், மாலைமதி, சிநேகிதி, குமுதம் பக்தி […]

Read more

இலக்கிய முத்துக்கள் 20

இலக்கிய முத்துக்கள் 20 (என் வாசிப்பின் வாசம்),  ஜெ.பாஸ்கரன், அர்ஜுன் ராம் பப்ளிகேஷன்ஸ்,  பக்.184, விலை ரூ.200. தமிழின் புகழ்பெற்ற இருபது படைப்பாளிகளின் படைப்புகள் குறித்த விரிவான அறிமுகமாக மலர்ந்திருக்கிறது இந்நூல். அசோகமித்திரன், கி.ரா., ந.பிச்சமூர்த்தி, ஆ.மாதவன், தி.ஜானகிராமன், லா.ச.ரா., சுந்தரராமசாமி, இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன், எம்.வி.வெங்கட்ராம் உள்ளிட்ட தமிழின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளைப் பற்றிய அருமையான பதிவாக மலர்ந்திருக்கிறது இந்நூல். இவர்களிலிருந்து சற்றே வேறுபடும் சுஜாதா, பாக்கிய ராமசாமி, ரா.கி.ரங்கராஜன், பரணிதரன், தேவன் ஆகியோரின் படைப்புகளைப் பற்றியும் பேசுகிறது. ஒரு படைப்பாளி, அவர் எழுதிய […]

Read more

எனது வாய்மொழி பதிவுகள்

எனது வாய்மொழி பதிவுகள், கி. ராஜநாராயணன், அன்னம், பக்.316, விலை  ரூ. 300. எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் மறைவுக்குப் பிறகு அவருடைய பெயரில், முதல் பதிப்பாக வெளிவரும் கி.ரா.வின் புத்தம் புதிய நூல் என்ற அறிமுகத்துடன், வெளிவந்துள்ள புத்தகம் இது. எனது வாய்மொழி பதிவுகள் என்பதாகத் தலைப்பிடப்பட்டாலும் வெவ்வேறு காலகட்டங்களில் கி.ரா. அளித்த நேர்காணல்களின் தொகுப்புதான் இந்த நூல், எழுத்தாளர் கழனியூரன் தொகுத்தவை (கழனியூரனும் காலமாகிவிட்டார்). விலாவாரியாகச் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் கேட்கப்படுகிற கேள்விகளுக்குக் கூட மிகக் கூராக, ஒற்றை வரியில் பதிலளிப்பதில் […]

Read more

சமுதாயவியல் நோக்கில் சிற்றிலக்கியங்கள்

சமுதாயவியல் நோக்கில் சிற்றிலக்கியங்கள்,  நா.கவிதா,  ஏ.எம்.புக் ஹவுஸ்,  பக்.290,   விலைரூ.270. “மக்கள் இலக்கியம்’ என்று கூறப்படும் சிற்றிலக்கியங்கள் தோன்றி வளர்ந்த சமுதாயச் சூழலை நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். மொத்தம் 96 சிற்றிலக்கியங்கள் உள்ளன என பலரும் குறிப்பிடப்பட்டு வரும் சூழலில், அவற்றின் எண்ணிக்கை 300-க்கும் மேற்பட்டதாக உள்ளது என தனது கருத்தை முன்வைக்கும் நூலாசிரியர், அவற்றில் சமுதாயவியல் நோக்கத்துக்கு துணை புரியும் பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம், சதகம் ஆகிய நான்கு சிற்றிலக்கிய வடிவங்களை மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். “குறைந்த எண்ணிக்கையுடைய பாடல்களைக் கொண்டும், […]

Read more
1 24 25 26 27 28 505