காகிதப் படகில் சாகசப் பயணம்

காகிதப் படகில் சாகசப் பயணம், பெ. கருணாகரன், குன்றம் பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 150ரூ. விகடன், குமுதம், நக்கீரன், தினமணி, புதிய தலைமுறை என்று பல முன்னணிப் பத்திரிகைகளில் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய இந்நூலாசிரியர், கதை, கட்டுரை, பேட்டி என்று தனது படைப்புகளாலும், வசீகரமான எழுத்தாறறலாலும் வாசகர்களைக் கவர்ந்தவர். தனது 27 வருட பத்திரிகை துறையின் சுவாரஸ்யமான அனுபவங்களை இந்நூலில் கட்டுரை வடிவில் சுவைபட கூறியுள்ளார். ஒரு பத்திரிகையாளன் ஜொலிக்கும் வைரமாக வெளியுலகிற்குத் தெரிந்தாலும், அதற்காக அவன் பட்டை தீட்டப்படும்போது எத்தகைய […]

Read more

இலங்கை இந்திய மானிடவியல்

இலங்கை இந்திய மானிடவியல், சமயம் சமூகம் பற்றிய ஆய்வுகள், பேரா. கலாநிதி என். சண்முகலிங்கன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 222, விலை 175ரூ. சமூக பழக்க வழக்கம், சமய வழிபாடு போன்றவற்றை உன்னிப்பாக கவனித்து, ஆராய்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல். இதில் 14 கட்டுரைகள் உள்ளன. சமயம் தொடர்பாக, எட்டுக் கட்டுரைகளும், சமூகம் தொடர்பாக ஆறு கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. இலங்கயில் தமிழர்களின் வழிபாட்டு இடங்கள், வழிபாடுகள் பற்றி சண்முகலிங்கனின் கட்டுரைகள் ஆழமாகவும் அழுத்தமாகவும் உள்ளன. கட்டுரைகள் ஒன்றுக்கு ஒன்று […]

Read more

உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம்,

உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம், டாக்டர் எஸ். கார்த்திகேயன், விகடன் பிரசுரம், பக். 272, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-358-8.html அத்தியாவசியத்தின் வேராக இருப்பது பணம். அதன் குணம் என்ன? நியாயமான முறையில், எந்தெந்த வகையில், அதை ஈட்டலாம் என, விவரிக்கிறது இப்புத்தகம். இப்புத்தகத்தின் ஆசிரியர், பங்கு சந்தை வியாபாரத்தில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். இந்த நூலில் மொத்தம் 46 கட்டுரைகள் உள்ளன. அனைத்தும், ஒன்றிலிருந்து ஒன்று என்ற சங்கிலி தொடராக செல்வது சிறப்பு. பணம் […]

Read more

வர்ச்சுவல் அண்ட் விக்டோரியஸ் ஆல்வேஸ்

வர்ச்சுவஸ் அண்ட் விக்டோரியஸ் ஆல்வேஸ், சேவலாயா அமைப்பு. சேவாலயாவின் அகல் விளக்கு வர்ச்சுவஸ் அண்ட் விக்டோரியஸ் ஆல்வேஸ் என்ற தலைப்பில் அழகான ஆங்கில நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது சேலாலயா அமைப்பு. இன்றை குழந்தைகளுக்கும் அவசியமாகத் தேவைப்படுவத ஆன்றோர்களின் வாழ்க்கை முறைகளையும் சாதனைகளையும் பற்றி அறிந்து கொள்வதுதான். அந்த வகையில், இந்தச் சிறு நூலில் மகாகவி பாரதி, சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தியின் சுருக்கமான வரலாற்றுக் கட்டுரைகளை வழங்கியிருக்கிறார்கள். இந்தப் பெயர்களை மட்டும் தெரிந்து வைத்திருக்கிற பலருக்கும் இந்தச் சிறு கட்டுரைகளால் பயனுண்டு. இன்றைக்குத் துப்புரவு […]

Read more

கொண்டாடத்தான் வாழ்க்கை

கொண்டாடத்தான் வாழ்க்கை,  அமுதா பாலகிருஷ்ணன், அமுதா பதிப்பகம், சென்னை, விலை 85ரூ. மனித பிறவி எவ்வளவு இனிமையானது. அதை எப்படி கொண்டாடினால் வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்பதற்கு சில கருத்துக்களையும், வழிமுறைகளையும் 34 அத்தியாயங்களில் தொகுத்து அளித்துள்ளார் எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன். ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் பளிச் பளிச் என்று சொல்லப்படும் குட்டிக் கதைகள் நூலை சுவாரஸ்யமாக ஆக்குகின்றன. நகைச்சுவையையும் ஒரு படிப்பினையையும் இணைத்தே சொல்லப்படும் அந்தக் கதைகள் தனி விறுவிறுப்பைத் தருகின்றன. படிக்கும் ஆவலைத் தூண்டிவிடும் ஜனரஞ்சக நடையில் எல்லோரது மனதைத் […]

Read more

திருக்குறளில் யான் அறிந்தவையும் அறியாதவையும் மாணவர்களுக்கு

திருக்குறளில் யான் அறிந்தவையும் அறியாதவையும் மாணவர்களுக்கு, வக்கீல் செ. வந்தகுமாரி செல்லையா, டாக்டர் ஏ.இ. செல்லையா கல்வி அறக்கட்டளை, சென்னை, விலை 250ரூ. திருக்குறளை ஆராய்ந்து அதில் பல அறிஞர்களால் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை தொகுத்து தனது கருத்துக்களையும் இணைத்து அரிய நூலாக எழுதியுள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வள்ளுவத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் எளியநடையில் தொகுத்துள்ளார். இந்த நூலைப் படிப்பதன் மூலம் திருக்குறள் பற்றி அறிந்த கருத்துக்களை ஆழப்படுத்திக் கொள்வதுடன், அறியாதவற்றை அறிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட பயனுள்ள நூலாகும். நன்றி: தினத்தந்தி, […]

Read more

மனோன்மணியம் சுந்தரனார் கலையும் கருத்தியலும்

மனோன்மணியம் சுந்தரனார் கலையும் கருத்தியலும், தொகுப்பும் பதிப்பும்- த. கருப்பையா, செம்மூதாய் பதிப்பகம், சென்னை, பக். 375, விலை 300ரூ. தமிழ் இலக்கிய வரலாற்றில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளைக்கென்று ஒரு தனித்த இடம் உண்டு. கடந்த மாதம் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரி தமிழ்த்துறை நடத்திய மனோன்மணியம் சுந்தரனார் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பேராசிரியர் சுந்தரனாரால் இயற்றப்பட்ட மனோன்மணியம் நாடகம், தமிழ் இலக்கிய வரலாற்றில் மட்டுமின்றி, தமிழ்ச் சமூக வரலாற்றிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. மனோன்மணியத் தமிழ்த்தாய் வணக்கமும் திராவிட […]

Read more

சாதியும் நானும்

சாதியும் நானும், பதிப்பாசிரியர்-பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 257, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-192-4.html இந்தியாவில் ஜாதியம் என்ற சமூக அவலம் இந்த நவீன காலத்திலும் ஆழ வேரூன்றியுள்ளது. இதனால் மனித சமூகம் சந்தித்து வரும் வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. இது தொடர்பான கட்டுரைகளைத் தொகுத்து வழங்கி, ஜாதியின் கொடூரத்தை இந்த உலகுக்கு மீண்டும் ஒரு முறை உணர்த்தியுள்ளார் பதிப்பாசிரியர். குக்கிராமம், கிராமம், நகரம், மாநகரம் என எந்த ஓர் இடத்தையும் ஜாதிக்கொடுமை விட்டு […]

Read more

கம்பன் தமிழும், கணினித் தமிழும்

கம்பன் தமிழும், கணினித் தமிழும், முத்துநிலவன், தஞ்சை அகரம் பதிப்பகம். திருக்குறளில் தமிழ், தமிழ்நாடு வார்த்தைகள் இல்லாதது ஏன்? தஞ்சை அகரம் பதிப்பகம் வெளியிட்டுள்ள, முத்துநிலவனின் கம்பன் தமிழும், கணினித் தமிழும் என்ற இலக்கிய விமர்சன நூலை அண்மையில் படித்தேன். பழங்கால இலக்கிய கணிப்பும், நவீன இலக்கிய கண்ணோட்டமும் உள்ள இந்நூல், அண்மைக் காலத்தில் வெளியான இலக்கிய விமர்சன நூல்களில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பான இந்நூலில் ஒரு கட்டுரையில் பாரதியின் செந்தமிழ் நாடெனும் போதினிலே பாட்டுக்கு இரண்டாம் பரிசும், ஆ. […]

Read more

அழுததும் சிரித்ததும்

அழுததும் சிரித்ததும், க. பஞ்சாங்கம், அன்னம் வெளியீடு, தஞ்சாவூர், விலை 140ரூ. கதைகளாக வேண்டிய கட்டுரைகள் யுகமாயினி இதழில் பேரா. க. பஞ்சாங்கம் எழுதிய பத்திக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். உண்மையில் பஞ்சாங்கம் பொறுமையைக் கைக்கொள்ளாமல் ரொம்பவும் அவசரப்பட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது. ஏனெனில் மிக மிக நல்ல சிறுகதைகளாகவோ நாவல்களாகவோ வந்திருக்க வேண்டிய பல கதைகள் வெறுமனே கட்டுரைகளாகக் கலைந்துவிட்டன. ஆசிரியர் கட்டுரையாகச் சொல்லும்போதே ஒரு பரபரப்பும் எதிர்பாராத திருப்பங்களுமாய் இருக்கின்றன. சிறுகதை உலகம் பல அரிய முத்துக்களை இழந்துவிட்டது என்பதில் ஐயமில்லை. […]

Read more
1 36 37 38 39 40 88