கல்வியே மகாசக்தி

கல்வியே மகாசக்தி, நரேந்திர மோடி, சப்னா புக் ஹவுஸ், பக். 100, விலை 150ரூ. கடந்த சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி பேசிய பல விஷயங்கள் இப்போதும் பேசப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கல்வி குறித்து அவர் சொன்ன விஷயங்கள் கல்வியாளர்களாலும் கருத்தாளர்களாலும் பாராட்டப்படுகின்றன. அவர் அன்று பேசிய பேச்சு, அவரது ஆழ்மனதில் பல வருடங்களாக உறங்கிக்கிடந்த எண்ணங்களின் எழுச்சியே. கல்வி குறித்து அவர் கொண்டிருந்த எண்ணங்களை அவ்வப்போது குறித்து வைத்திருப்பது வழக்கம். அந்த குறிப்புகள்தான் இந்த நூல். குஜராத்தி மொழியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் […]

Read more

மஹா பெரியவாளும் ஏகாம்பரம் ஆகிய நானும்

மஹா பெரியவாளும் ஏகாம்பரம் ஆகிய நானும், எஸ். ஏகாம்பரநாதன், சைதன்ய மஹா பிரபு நாமபிக்ஷா கேந்திரா, சென்னை, பக். 456, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-305-8.html குழந்தை பருவத்திலிருந்தே ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவருடன் பேசிப் பழகி அவரது அன்பைப் பெற்றவரான இந்நூலாசிரியர், 1978லிருந்து 1983 வரை சுமார் 5 வருடங்கள் மஹா பெரியவருடன் சுமார் 5000 கி.மீ. தூரத்திற்கு நடைபெற்ற யாத்திரையில் பங்கேற்றவர். காஞ்சிபுரத்திலிருந்து பூனாவிற்கு அருகிலுள்ள சதாராவுக்கு கால்நடையாகவே இந்தக் கடும் பயணம் மேற்கொள்ளப்பட்டது. […]

Read more

நமது தமிழ்நாடு

நமது தமிழ்நாடு, செங்கற்பட்டு மாவட்டம் (1963 வரை) கோவை மாவட்டம் (1961வரை) வடஆர்க்காடு மாவட்டம் (1961 வரை), சோமலெ, பாரிநிலையம், சென்னை, பக். 208/272/224, விலை ரூ.75/100/85 தமிழில் பயண நூல்களை படைத்த ஏ.கே.செட்டியாரின் அடியொற்றி, சோமலெ, பல்வேறு நூல்களை எழுதி உள்ளார். காரைக்குடி அருகே உள்ள நெற்குப்பை கிராமத்தில் பிறந்த சோம.லெட்சுமணன், தன் தொழில் நிமித்தமாக, இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் சுற்றி வந்தவர். தமிழகத்தில், 1960களில் பிரதான 10 மாவட்டங்களைப் பற்றி, அவர் நேரில் சென்று பார்த்த விஷயங்களை தொகுத்து எழுதியவை […]

Read more

நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு

நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு, தமிழில் ச. சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், சென்னை, விலை 150ரூ. தேவை ஒரு சுயமதிப்பீடு அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இடதுசாரி மாத இதழான மன்த்லி ரெவ்யூ தனது முதல் ஐம்பதாண்டு காலத்தில் வெளியிட்ட கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுத்த சிலவற்றை தொகுப்பாக வெளியிட்டிருந்தது. ஆல்பர்ட் ஐன்ஸ்டின், சே. குவேரா, நோம் சாம்ஸ்கி என்று நன்கறியப்பட்ட ஆளுமைகளும் அமெரிக்காவின் முன்னணி இடதுசாரி அறிஞர்களும் எழுதிய கட்டுரைகளைக் கொண்ட இத்தொகுப்பை ச. சுப்பாராவ் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். சோஷலிசம் எதற்கு என்ற தலைப்பில் ஐன்ஸ்டின் எழுதிய கட்டுரை, கட்டற்ற […]

Read more

பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம்

பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம், ஆர்.பி.வி.எஸ்.மணியன், வர்ஷன் பிரசுரம், பக். 264, விலை 140ரூ. விசுவ இந்து பரிஷத் நடத்தி வந்த, இந்து மித்திரன் இதழில், நூலாசிரியர் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். பேசுவது பழங்கதை அல்ல என்பது முதல் போதி தர்மர் வரை, 31 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. உலகத்தின் இயக்கத்திற்கு ஆதாரமாய் இருக்கும் அணு இயக்கத்தை, டாக்டர் பிர்டஜாப் காப்ரா என்ற விஞ்ஞானி புகைப்படமாக எடுத்திருக்கிறார். இதையே நம் முன்னோர்கள், சிவனின் ஆனந்த தாண்டவமாக வர்ணித்திருக்கின்றனர் என விளக்கி உள்ளார். […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள், ஆபிரகாம் பண்டிதர், நா. மம்மது, சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 112, விலை 50ரூ. திருநெல்வேலி மாவட்டத்தில் வறுமையான குடும்பத்தில் 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்து 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையில் வாழ்ந்து இசைத் தமிழுக்கு தன்னிகரில்லா தொண்டாற்றி மறைந்த ஆபிரகாம் பண்டிதரைப் பற்றி எடுத்துரைக்கிறது இந்த நூல். இசை, வேளாண்மை, ஜோதிடம், சித்த மருத்துவம், அச்சுத் தொழில் பல துறை வித்தகராக விளங்கிய ஆபிரகாம் எதிர்கால இளைஞர்களுக்கு ஓர் உதாரண புருஷன் என்பதை நூலின் ஆசிரியர் விளக்கியுள்ளார். இசை […]

Read more

சிந்தனைக் களஞ்சியம்

சிந்தனைக் களஞ்சியம், உ. நீலன், அருள் பதிப்பகம், சென்னை, விலை 130ரூ. பல நூல்களைப் படித்த திருப்தியை தரக்கூடிய அளவுக்கு பல்வேறு செய்திகள் மற்றும் கருத்துக்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. குறிப்பாக, பிரபலமானவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும்போது, அவற்றிலுள்ள பலம், பலவீனங்களையும் ஆரோக்கியமான விமர்சனத்துடன் குறிப்பிடுவது இந்நூலாசிரியரின் தனிப் பணியாகும். இந்நூலின் முதல் கட்டுரையான காந்தியடிகளுக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை? என்ற காரணங்களை படிக்கும்போது, தேர்வு கமிட்டியினர் இப்படியெல்லாமா யோசிப்பார்கள் என்று தோன்றுகிறது. எத்தனையோ இக்கட்டான நேரங்களில் மிகச் சரியான […]

Read more

காலத்தின் குரல்

காலத்தின் குரல், மாலன், புதிய தலைமுறை பதிப்பகம், பக். 258, விலை 210ரூ. பத்திரிகைகள், சமூகத்தின் மனசாட்சியை எதிரொலிக்கும் குரலாக இருக்க வேண்டும் என்ற நல்ல கொள்கையை கொண்டுள்ள மாலன், புதிய தலைமுறை வார இதழில் தாம் எழுதிய தலையங்கக் கட்டுரைகளை இந்த நூலில் தொகுத்துள்ளார். கடந்த 2011-2013 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பெற்ற இந்த 121 கட்டுரைகள், தடகள வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டமை, பாகிஸ்தானின்  பயங்கரவாதச் செயல்கள், பெண் சிசுக்கள் கொலை, மது விற்பனை உயர்வு, அரசுப் பள்ளிகளின் நிலைமை, தேர்தல்களும் இடைத்தேர்தல்களும், […]

Read more

விடுதலை இயக்கத்தில் தமிழகம்

விடுதலை இயக்கத்தில் தமிழகம், டாக்டர் ஜி.பாலன், வானதி பதிப்பகம், பக். 624, விலை 300ரூ. விடுதலை இயக்கத்தில் பங்குபெற்ற வேலு நாச்சியார், கட்டபொம்மன், வ.உ.சி., திரு.வி.க., ம.பொ.சி., ஜீவானந்தம், கக்கன் போன்ற தமிழகத் தியாகச் செம்மல்களின் வரலாறுகளை தெளிவாகத் தொகுத்து, எழுதப்பெற்றுள்ள நூல். அண்ணல் காந்தியடிகள், தமிழகத்தில் பயணம் செய்தபோது நிகழ்ந்த நிகழ்வுகள், அழகாகப் பதிவு செய்யப்பெற்றுள்ளன. தேசியக்கொடி பற்றிய கட்டுரையில், தேசியக்கொடியின் தோற்றம், அமைப்பு, அளவு, வரையறை, வண்ணங்கள், சக்கரச்சின்னம் முதலியவற்றை விளக்கி, சுதந்திரக்கொடியான மூவர்ணக்கொடியின் வரலாறு விளக்கப் பெற்றுள்ளது. தேசியக் கொடியைப் […]

Read more

தமிழ்ச் சமூக மரபுமும் மாற்றமும்

தமிழ்ச் சமூக மரபுமும் மாற்றமும், செம்மூதாய் பதிப்பகம், சென்னை, விலை 500ரூ. தமிழ்ச் சமூகம் எத்தனையோ மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கிறது. சங்க காலத் தமிழர்களுக்கும், இன்றைய தமிழர்களுக்கும் நடை, உடை, பாவனை அனைத்திலும் எத்தனையோ மாறுதல்கள். இதுகுறித்து நடந்த பன்னாட்டு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன. அதாவது சங்க காலக் கல்வி முறை, தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல், தொல்காப்பியம் காட்டும் வாழ்வியல் இலக்கணம், கண்ணதாசன் பாடல்களில் சங்க இலக்கியத்தின் தாக்கம் உள்பட 142 தலைப்புகளில் தமிழறிஞர்களும், பேராசிரியர்களும் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் இடம் […]

Read more
1 43 44 45 46 47 88