கொங்கு மணம் கமழும் படைப்புகள்

கொங்கு மணம் கமழும் படைப்புகள், டாக்டர் நல்ல பழனிசாமி, தமிழ்ப் பண்பாட்டு மையம், டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி வளாகம், காளப்பட்டி சாலை, கோவை 641048, பக். 328. தமிழுக்கு வளம் சேர்ப்பதில் கொங்க நாட்டின் பங்கு மிகவும் அதிகமாகும். கவிதை, நாவல், சிறுகதை, கலைத்துறைகளில் கொங்கு படைப்பாளர்கள் உச்சத்தில் நின்றுள்ளனர். நெல்லை வட்டார, மண் வாசனையைத் தன் வாசகர் படித்து நுகரும் வகையில் வழங்கியவர், சிறுகதைச் சிற்பி புதுமைப்பித்தன். இதுபோல நாஞ்சில்களில், தஞ்சை, மதுரை, சென்னை வட்டார வழக்குகளையும், அந்தந்த படைப்பாளிகளின் […]

Read more

ஊழிக்காலம்

ஊழிக்காலம், தமிழ்க் கவி, தமிழினி. இறுதிப் போரின் சாட்சி ஈழப்போரின் இறுதி நாட்களில் நடந்தவை குறித்து நாம் அறிந்த செய்திகள் சொற்பம். மரணத்தை தொட்டுவிடும் தூரத்தில் கண்ட மக்களிடையே இன்னமும் துயரின் நெருப்பு மனதுக்குள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இத்தீயை நெஞ்சில் சுமந்து, நடந்தவற்றுக்கு சாட்சியாய் இருந்த 66 வயதுப் பெண்ணாகிய தமிழ்க்கவி எழுதிய தன்வரலாற்று நாவல் இது. ஈழப்போரின் இறுதிக்கால அவலம், துயரம், கோரம், கொடூரம் என்று ஒவ்வொருவருக்குள்ளும் இறுகிக் கிடக்கும் துயர நினைவுகளை தன் நாவலில் கசியவிட்டிருக்கிறார் தமிழ்க்கவி. போர்க் குற்றங்களுக்கு […]

Read more

ஏற்றம் தரும் மாற்றம்

ஏற்றம் தரும் மாற்றம், வீ. அரிதாசன், புதிய தலைமுறை பதிப்பகம், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 32, பக். 160, விலை 170ரூ. மூலப் பொருட்களை அப்படியே வணிகம் செய்யாமல் யாரெல்லாம் மதிப்புக் கூட்டி வணிகம் செய்கிறார்களோ அவர்கள் எல்லாம் பொருளாதார ரீதியில் சிறப்பாக உயர்ந்து வருகிறார்கள். அதற்கு உதாரணம் ஜப்பான். ஆனால் அனைத்து மூலப்பொருட்களும் நிறைந்து விளங்கும் நமது நாட்டில் மதிப்புக் கூட்டி வணிகம் செய்வதின் மகத்துவத்தை உணராதவர்களாக நாம் இருந்து வருகிறோம். அந்தக் குறையைப் போக்க மதிப்புக் கூட்டுதல் என்றால் என்ன என்பதை எளிமையாக […]

Read more

கரைக்கு வராத மீனவத் துயரம்

கரைக்கு வராத மீனவத் துயரம், வறீதையா சான்ஸ்தத், உயிர் எழுத்து. துன்பக்கடல். இந்த நூல் விளிம்பு நிலை மக்களும் பழங்குடிகளை ஒத்தவர்களுமான மீனவர்களின் துயரங்களும் அவர்தம் பாடுகளும் குறித்து பதிவு செய்கிறது. சிறை, கைது, துப்பாக்கிக் குண்டுகள், படகு பறிமுதல், வலையறுப்பு, தொடர்த் தாக்குதல் என்று ஓயாமல் இலங்கை கடற்படையால் துன்பம் அனுபவிக்கும் மீனவ சமுதாயத்தின் வலிகளை பிரதிபலிக்கும் பல கட்டுரைகள் இந்நூலில் உள்ளது என இந்நூலை வெளியிட்டுள்ள உயிர் எழுத்து பதிப்பகத்தைச் சார்ந்தவர்கள் கூறுகின்றனர். நன்றி: இந்தியாடுடே, 29/1/2014.   —-   […]

Read more

ஒரு சாமானியனின் நினைவுகள்

ஒரு சாமானியனின் நினைவுகள், க. இராசாராம், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 250ரூ. தமிழ்நாட்டின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் க. இராசாராம். சட்டசபை சபாநாயகராகவும், அமைச்சராகவும் இருந்தவர். தி.மு.க.வில் இருந்தாலும், அ.தி.மு.க.வில் இருந்தாலும் காங்கிரஸ் உள்பட எல்லா கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு. தமது அனுபவங்கள் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள், ஒரு சாமானியனின் நினைவுகள் என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது இதில், பல முக்கியமான அரசியல் நிகழ்ச்சிகள் மூடி மறைக்கப்படாமல் பதிவு […]

Read more

சீனத்தின் குரல்

சீனத்தின் குரல், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 25ரூ. சீன நாட்டு வரலாற்றில் மகான் கம்பூஷியஸ் காலம் முதல் செஞ்சீனத்தலைவன் மா-சே-துங் காலம் வரையில் நடந்த நிகழ்வுகளின் சுருக்கத்தை சீனத்தின் குரல் என்ற தலைப்பில் நூலாசிரியர் சி.பி.சிற்றரசு தொகுத்துள்ளார். 20 மூல நூல்களிலிருந்து கடந்த 2500 ஆண்டுகளாக சீன நாடு எழுப்பிய குரல்களை, அனைவரும் படித்து தெரிந்து கொள்ளும்வகையில் எளிமையாக தொகுக்கப்பட்டுள்ளது. சீனாவில் நடந்த முக்கியமான பிரச்சினைகளை நுட்பமாகத் தெரிந்து கொள்ள உதவும் புத்தகமாகும்.   —- […]

Read more

நவீன வாழ்க்கையில் பிள்ளைகள் வளர்ப்பு

நவீன வாழ்க்கையில் பிள்ளைகள் வளர்ப்பு, Dr.C.S. ராஜு, டி.வி. சிவக்குமார், மணிமேகலைப் பிரசுரம், த.பெ.எண். 1447, 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, பக். 192, விலை 100ரூ. கூட்டுக்குடும்பங்கள் இருந்த காலத்தில் எளிதாக இருந்த பிள்ளைகள் வளர்ப்பு, தனிக்குடுத்தனங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் கஷ்டமாகிவிட்டது. தவிர, பிள்ளைகளை ஒழுக்கமானவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும், ஆராக்கியமானவர்களாகவும்கூட வளர்க்க முடியாத நிலை உருவாகிவிட்டது. குறிப்பாக, இன்றைய பெற்றோர்களுக்கு சம்பாதிப்பதிலும் மற்ற பிரச்னைகளை சமாளிப்பதிலும் இருக்கும் ஞானம், பிள்ளைகள் வளர்ப்பு விஷயத்தில் போதிய அளவு இல்லை. விளைவு, பிள்ளைகளின் […]

Read more

செவ்வியல் இலக்கிய மணி மாலை

செவ்வியல் இலக்கிய மணி மாலை, ம.சா. அறிவுடை நம்பி, கருமணி பதிப்பகம், புதுச்சேரி 8, பக். 320, விலை 160ரூ. தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நடைபெற்ற கருத்தரங்கம், பயிலரங்கம் ஆகியவற்றில் படிக்கப்பட்ட கட்டுரைகள். தினமணி, தமிழ் ஓசை ஆகிய நாளிதழ்களில் வெளியான கட்டுரைகள், அகில இந்திய வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான சொற்பொழிவு என மொத்தம் 15 கட்டுரைகளால் கோக்கப்பட்ட இலக்கிய மணிமாலை. இலக்கணம், இலக்கியம், அறநெறி, அரசியல், அறிவியல், மதுவிலக்கு, பழந்தமிழர் வாழ்வு, விருந்தோம்பல், கனவுகள், சிந்தனைகள், இசைக்குறிப்புகள் என்ற இவை அனைத்தையும் உள்ளடக்கிய […]

Read more

வெல்லும் சொல்(வைகோவின் இலக்கியச் சொற்பொழிவுகள்)

வைகோவின் இலக்கியச் சொற்பொழிவுகள் – வெல்லும் சொல், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 300ரூ. அரசியல் பற்றி மட்டுமல்ல, இலக்கியம் பற்றியும் மனதைக் கவரும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவர் வைகோ. அவருடைய இலக்கியச் சொற்பொழிவுகள் அடங்கிய நூல் வெல்லும் சொல். சிலப்பதிகாரம் பற்றிய அவருடைய விரிவான உரையில், கண்ணகி கோவலன் வரலாற்றை சிறந்த முறையில் எடுத்துக் கூறுவதுடன் சிலம்புக்கு நிகரான காப்பியம் வேறு எந்த மொழியிலும் கிடையாது என்று அடித்துக் கூறுகிறார். கல்கியின் அற்புத நாவல்களான பொன்னியின் செல்வன், […]

Read more

ஓவியமாய் ஒரு பெண்

ஓவியமாய் ஒரு பெண், யோகா, யோக சாவித் பப்ளிகேஷன்ஸ், 15/90, பாண்டி பஜார், தி.நகர், சென்னை 17, விலை 75ரூ. பிரபல புகைப்படக் கலைஞர் கலைமாமணி யோகா எழுதிய 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே ஓவியமாய் ஒரு பெண். 11 கதைகளில் முதல் கதையாக அமைந்து நூலின் தலைப்புக்கு பெருமை சேர்த்திருக்கிறது ஓவியமாய் ஒரு பெண் சிறுகதை. அவரவர் துறையில் பிரபலமாயிருக்கிற தம்பதிகளின் அன்பின் நேசத்தை ஆழமாகவே பதிவு செய்திருக்கிறது. கணவர் குடும்பத்தில் அவரது சகோதர வட்டம் எல்லாரும், 58 வயதுக்குள் இறைவனடி சேர்ந்துவிட, […]

Read more
1 57 58 59 60 61 88