சாந்திவனத்து வேர்கள்

சாந்திவனத்து வேர்கள், ஆ. திருநாவுக்கரசு, பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 182, விலை 100ரூ. கிராமத்துக்கு அடிமைச் சேவகமும், சுடுகாட்டுப் பணிகளும் செய்து வாழ்கிற வெட்டியான் சங்கிலியின் குடும்பம், சாதீய ஒடுக்கு முறையால் சிதைக்கப்படுகிற அவலத்தை, மிக யதார்த்தமாக சித்தரிக்கிறார் ஆசிரியர். அவர்களோடு தங்கியிருந்து, தொழிலில், அவர்கள் அனுபவிக்கும் சிரமங்களை நேரடியாகக் கண்டு, கேட்டு, இந்த நூலை உருவாக்கியிருக்கிறார். உள்ளத்தை உருக்கும் நாவலைப் படிக்கும்போது, படிப்பவர் இதயம் கணக்கவே செய்யும். -சிவா. நன்றி; தினமலர், 23/6/2013.   —-   அகம் பொதிந்தவர்கள், கர்ணன், மெய்யப்பன் […]

Read more

அர்த்தமுள்ள வாழ்வுக்கு அறுபது வழிகள்

அர்த்தமுள்ள வாழ்வுக்கு அறுபது வழிகள், யு எஸ் எஸ் ஆர் நடராசன், பத்மா பதிப்பகம், 21/10, லோகநாதன் நகர், இரண்டாம் தெரு, சூளைமேடு, சென்னை 94, விலை 160ரூ. 60 அறிஞர்களின் பொன்மொழிகளை தேர்வு செய்து, அவற்றை அடிப்படையாக வைத்து கருத்தாழம் உள்ள 60 கட்டுரைகளை எழுதியுள்ளார் யு எஸ் எஸ் ஆர் நடராசன். கடந்த 60 ஆண்டு கால வாழ்க்கைப் பாதையில் நான் சந்தித்த நிகழ்வுகள், தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், பயின்ற நூல்கள், வெளிநாட்டுப் பயண அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தனது ஆழ்ந்த […]

Read more

ராஜாஜி எழுதிய மதுவிலக்கு

ராஜாஜி எழுதிய மதுவிலக்கு, முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை 40, விலை 30ரூ. சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்து கொண்ட ரா44, மதுவிலக்கை அமல் நடத்த வேண்டும் என்பதற்காகவும், போராடி வந்தார். அதில் வெற்றியும் பெற்றார். தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. ஆனால் பிறகு தி.மு.க. ஆட்சியின்போது மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் மதுவிலக்கை வலியுறுத்தி ராஜாஜி எழுதிய கட்டுரைகள், மறு பதிப்பு செய்யப்பட்டு உள்ளன. மதுவிலக்கு பற்றியும் அக்காலத்தில் ராஜாஜி நடத்திய […]

Read more

க.நா. சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

க.நா. சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், தொகுப்பு-சா. கந்தசாமி, சாகித்ய அகடமி, 443, அண்ணாசாலை, சென்னை 18, பக். 240, விலை 125ரூ. பரவலான வாசிப்பு அனுபவம் உள்ள, க.நா.சு.வுக்கு விமர்சகர் என்ற கவுரவம் உண்டு. சர்மாவின் உயில், பொய்த்தேவு போன்ற சிறந்த நாவல்கள் படைத்த பெருமை உண்டு. அவருடைய சிறுகதைப் படைப்புக்கு பெரிய வரவேற்பு இருந்ததாகச் சொல்ல முடியாது. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில், தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள, சாகித்ய அகடமி பரிசு பெற்ற சா. கந்தசாமி, க.நா.சு.வின் 24 சறுகதைகளைத் […]

Read more

நர பட்சணி

நர பட்சணி, நானக் சிங், தமிழில்-முத்து மீனாட்சி, சாகித்திய அகாதெமி, 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18. இந்திய விடுலையின்போது வாழ்ந்த பொதுவுடமை சிந்தனை கொண்ட இரு இளைஞர்களின் போராட்ட வாழ்க்கையே இந்தப் புதினம். பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர் ஆலை முதலாளி டாகூர் சிங். இவரது மனைவி அமர்கௌர், மகன் பிரீத்பால். இவர்களது பக்கத்துவீட்டைச் சேர்ந்த ஊனமுற்ற சராசரி இளைஞன் சிங்காரா சிங். அவனது இளம் மனைவி சுலோச்சனா என விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய கதாபாத்திரங்களுடன் தொடங்கும் கதை, பொதுவுடமை சித்தாந்தம் பேசும் […]

Read more

காரியக் காமராசர் காரணப் பெரியார்

காரியக் காமராசர் காரணப் பெரியார், மே.கா. கிட்டு, தோழமை வெளியீடு, 10, 6வது செக்டர், கே.கே. நகர், சென்னை 78, விலை 125ரூ. காமராசர், பெரியார் என்னும் இரு பெரும் தலைவர்கள் ஒரே இயக்கத்தில் வளர்ந்து வெவ்வேறு திசையில் அரசியலில் பயணித்தாலும், ஒருவர் மீது மற்றவர் கொண்ட மரியாதை அரசியல் நாகரிகத்தை இந்த நூல் பறை சாற்றுகிறது. காங்கிரஸ் கட்சியை வெறுத்துக் கொண்டே, காமராசர் என்ற அந்த பெருந்தலைவரை, அவரது ஆட்சியை பெரியார் ஆதரித்து வந்திருக்கிறார் என்பது வியப்பு அளிக்கிறது. மக்கள் தொண்டாற்றிய அந்த […]

Read more

முற்பிறவி மறுபிறவி ஆதாரங்கள்

முற்பிறவி மறுபிறவி ஆதாரங்கள், விக்கிரவாண்டி வி. ரவிச்சந்திரன், மேகதூதன் பதிப்பகம், 13, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 150ரூ. முற்பிறவியில் காதல் நிறைவேறாமல் இறந்து போனவர்கள், மறுபிறவியில் ஒன்று சேருவதாக சில திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். முற்பிறவி நினைவுகள் சிலருக்கு அபூர்வமாக வருவதுண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் பல்வேறு நாடுகளில் முன்ஜென்ம நினைவுகள் வரப்பெற்ற சிலருடைய வாழ்க்கையை இந்நூலில் கூறுகிறார். விக்கிரவாண்டி வி. ரவிச்சந்திரன். அந்த சம்பவங்கள் விறுவிறுப்பான துப்பறியும் கதைகளைப் படிக்கும் உணர்வை ஏற்படுத்துகின்றன. மறுபிறவியில் நம்பிக்கை இல்லாதவர்களும் ரசித்துப் […]

Read more

நிஜங்களின் பதிவுகள்

நிஜங்களின் பதிவுகள், கே.ஜி.மகாதேவா, மித்ர ஆர்ட்ஸ் அண்டு கிரியேஷன்ஸ், 20/2, ஜக்கரியா காலனி முதல் தெரு, சூளைமேடு, சென்னை 94, விலை 90ரூ. இலங்கையின் புகழ் பெற்ற எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கே.ஜி.மகாதேவா எழுதிய கட்டுரைகளும், நேர்காணல்களும் கொண்ட நூல். கோவையில் நடந்த தமிழ் செம்மொழி மாநாடு, சென்னையில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆயிரம் வயது கண்ட தஞ்சை பெரிய கோவில் உள்பட மொத்தம் 20 தலைப்புகள். இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து, இந்திய பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் சுருக்கமும் இடம் பெற்றுள்ளது கட்டுரைகள் […]

Read more

கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும்

கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும், ஷங்கர் ராமசுப்ரமணியன், நற்றிணைப் பதிப்பகம், எண், 123 ஏ, திருவல்லிக்கேணி, நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 110ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-806-6.html எதையும் அழுத்திப் பேசும்போது அது அருவெறுப்பாகி விடுகிறது. எதையும் உரத்துப் பேசும்போது பொய் நுழைந்துவிடுகிறது. எழுத்தாளன் இதற்கு நடுவில் சிக்கலான பாதையில் பயணிப்பவன் எனும் ஷங்கர் ராமசுப்ரமணியனின் முதல் கட்டுரைத் தொகுப்பு இது. விதைகள் மலமாக அறிமுகமானவர், கட்டுரைகள் மூலமாகவும் கவனிக்கப்பட வேண்டியவராகிறார். இலக்கியத்தில் கிடைக்கும் பிரபலயத்தின் மூலமாக உலகத்தின் […]

Read more

மாலன் சிறுகதைகள்

மாலன் சிறுகதைகள், மாலன், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 416, விலை 200ரூ. TO buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8368-047-9.html ஆசிரியர் மாலன் பல்வேறு பத்திரிகைகளில் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய, 55 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப் பெற்றுள்ளன. இலக்கியத் தரம் வாய்ந்த இச்சிறுகதைகள் பற்றி, தமிழன் தமிழ் இளைஞர்களின் இன்றைய நிலை குறித்து மாலன் மிக அக்கறையோடு தாயுள்ளத்தோடு யோசித்துள்ளார் என, கூறியுள்ளார் பிரபஞ்சன். ஆரோக்கியமான விவாதங்களை நம்முன் வைக்கும் சிறுகதை தொகுதி நூல். -கவுதம நீலாம்பரன்.   —- […]

Read more
1 73 74 75 76 77 88