ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்

ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம், டாக்டர் ஆர். சிவசக்தி வேலன், நர்மதா பதிப்பகம், 10, நானாதெரு, தி.நகர், சென்னை 17, பக். 216, விலை 80ரூ. திருவருட் பிரகாச வள்ளல் ராமலிங்க அடிகளால், 1851ல் பதிப்பித்து வெளியிடப்பட்ட இந்நூலை இயற்றியவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீகண்ணுடைய வள்ளல் ஆவார். தமிழ்க் குரிசில் சீகாழிச் சம்பந்தனை (பக். 31) தெய்வமாக வழிபட்டு இயற்றப்பட்ட, ஒழிவில் ஒடுக்கம் விரித்த நூற்கெல்லாம் விதை (32) எனலாம். வடலூர் வள்ளலார் பதிப்பித்த பின், வேதாந்த அடிப்படையில் விளக்கவுரை […]

Read more

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள், தொகுப்பாசிரியர்-கோபிநாத் மொகந்தி, தமிழில்-ஆனைவாரி ஆனந்தன், சாகித்ய அகாதெமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 208, விலை 125ரூ. ஒரிய மொழியில் எழுதப்பட்ட இச்சிறுகதைத் தொகுப்பில், மலைகளில் ஒற்றையடிப் பாதைகளின் ஊடே சரிவுகளில் ஜீவ மரண போராட்டங்களும், அங்கு வாழும் பெண்களின் சுய கௌரவமும், சங்கடமான நிலைமைகளும், சுதந்திரத்துக்குப் பிறகான ஒரிய கிராமப்புற வாழ்வில் ஏற்பட்ட அரசியல் தாக்கங்களும் என்று பல கருப்பொருட்களைத் தாங்கி 13 அற்புதமான சிறுகதைகளாக மலர்ந்திருக்கின்றன. உதாரணமாக எறும்பு என்ற சிறுகதையில் ஓர் […]

Read more

நீங்களும் இராமனாகலாம்

நீங்களும் இராமனாகலாம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 136, விலை 65ரூ. மகாத்மா காந்திஜி ஒரு முறை, நாம் ஒவ்வொருவரும் முயன்றால் ராம பிரானாக ஆகலாம் என்று கூறியுள்ளார். அதையே தலைப்பாக்கி இந்த நூல் ராமபிரானின் உயரிய குணநலன்களை விவரித்து, வேத நெறிகளின்படி வாழும் ஒவ்வொரு மனிதனும், உயர் நலங்கள் அனைத்தையும் பெறுவான் என எடுத்துரைக்கிறது. ராமனைப் பற்றியும், ராமாயணச் சிறப்பு பற்றியும் கூறுவதோடு, கண்ணனின் தூது, சமாதானத்தின் வெளிப்பாடு என்று ஒரு நெடுங் […]

Read more

தமிழ் மக்கள் வரலாறு நாயக்கர் காலம்

தமிழ் மக்கள் வரலாறு நாயக்கர் காலம், க.ப. அறவாணன், தமிழர் கோட்டம், பக். 304, விலை 200ரூ. விஜய நகர அரசர் அரிகரபுக்கரின் மகனான, கம்பள நாயக்கர் மதுரையை அப்போது ஆண்டு கொண்டிருந்த இஸ்லாமியர்களை வீழ்த்தி விட்டு அரியணை ஏறினார். கி.பி. 15, 16ம் நூற்றாண்டில் மதுரையைப் பிடித்த நாயக்கர் தஞ்சாவூர், செஞ்சி, வேலூர் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, தன் பேரரசை நிறுவினார். நாயக்கர்கள் ஏறத்தாழ 200 ஆண்டுகள் மிகக் சிறப்பாக ஆட்சி புரிந்திருக்கின்றனர். அக்காலத்தில், சமஸ்கிருதமும், தெலுங்கும் தமிழகத்தில் ஆட்சி பீடத்தில் இருந்திருக்கின்றன. […]

Read more

புலித்தடம் தேடி

புலித்தடம் தேடி, மகா. தமிழ்ப்பிரபாகரன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-137-9.html மூன்று ஆண்டுகளுக்கு முன் மரண ஓலத்தில் இருந்த ஈழத்தில் இன்று மயான அமைதி. பயங்கரவாதிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் தமிழ் மக்களைக் கொன்று குவித்த கொடூரப் போர் அது. கொத்துக் குண்டுகளுக்கு பலியானோர் போக மிச்சம் இருப்பவர்களை, பட்டினி போட்டும் பணியவைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கவைக்கும் இனவெறித் தந்திரம் மட்டுமே அங்கு செய்யப்படுகிறது. ஐக்கிய நாடுகள் […]

Read more

அரசு பயங்கரவாதமும் மக்கள் போராட்டமும்,

அரசு பயங்கரவாதமும் மக்கள் போராட்டமும், கண்மணி, மானுட நம்பிக்கை, பக். 385, விலை 170ரூ. இணையத்தில் வெளிவந்த அறுபத்தெட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமகால அரசியல் நிகழ்வுகள் ஒவ்வொன்று குறித்தும், நூலாசிரியர் கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. அந்தக் கட்சி அரசியல், இந்தக் கட்சி அரசியல் என்றில்லாமல், எல்லாக் கட்சியினரையும் இன உணர்வுடன் விமர்சனம் செய்திருக்கிறார் ஆசிரியர். ஒரு காலத்தில் சாராயம் விற்பவர்களை, ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பர். இன்று, பட்டதாரிகள் அயல்நாடு மது விற்பவர்களாக இருக்கின்றனர் என்ற உண்மையைக் குடி குடியைக் கெடுக்கும் என்னும் கட்டுரை தெளிவாக்குகிறது. […]

Read more

சாலப்பரிந்து

சாலப்பரிந்து, நாஞ்சில் நாடன், காலச்சுவடு, பக். 240, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-3.html நாஞ்சில் நாடனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், சிலவற்றைத் தொகுத்துள்ளார். க. மோகன ரங்கன் 25 சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன. வடிவம், செறிவு, துல்லியம், முடிவை நோக்கிய விரைந்த நடை என்பது போன்ற, அளவீடுகளைத் தாண்டி, கதாபாத்திரங்களின் குண இயல்புகளைத் தாண்டி, கதாபாத்திரங்களின் குண இயல்புகளுக்கு ஏற்ற மொழி நடையில், பண்பாட்டின் சாரம் உள்பொதிய எழுதப் பெற்று உயரிய கதைகள். கதைகளின் ஊடே அவர் வெளிப்படுத்தும், […]

Read more

அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்

அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள், லதா ரஜினிகாந்த், பூம்புகார் பதிப்பகம், சென்னை 108, பக். 224, விலை 270ரூ. ஒரு மனிதனின் வாழ்வுக்கு அடித்தளமாக அமைவது அவனுடைய குழந்தைப் பருவமே. அத்தகைய குழந்தைப் பருவத்திலுள்ள சின்னஞ்சிறு மனிதர்களிடம் நாம் எப்படிப் பழக வேண்டும்? அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? அவர்களுக்கு சிறந்த கல்வியையும் ஒழுக்கத்தையும் பயிற்றுவிப்பது எப்படி? அவர்களின் வளர்ச்சிக்கு நாம் உறுதுணையாக இருப்பது எப்படி? என்பன போன்ற பல விஷயங்களை எளிமையாகவும் தெளிவாகவும் இந்நூலில் விளக்கியுள்ளார் ஆசிரியர். குழந்தைகளிடம் அதிகாரத்தைவிட அன்பையும், கண்டிப்பைவிட கவனிப்பையும், கடுமையைவிட […]

Read more

என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்

என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை 5, பக். 184, விலை 150ரூ. ஆண்டாள் அளித்த வாசகம் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என்பது. ஆன்மரீதியாக இறைவனுடன் கட்டுண்ட அடியார்களுக்கு நேரும் சிலிர்க்கும் அனுபவங்களை உணர்பவர்கள் இப்படியே கூறுவர். இநத் நூலில் அப்படிப்பட்ட சிலிர்க்கும் ஆன்ம அனுபவக்கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆன்மிக மாத இதழில் எழுதப்பட்ட 20 கட்டுரைகளின் தொகுப்பு நூலான இதில், ஆண்டாளைப் பற்றிய கட்டுரையுடன் துவங்குகிறது. குரு ராகவேந்திரர் வாழ்க்கை, திருக்கச்சி நம்பிகளும் வரதராஜப் பெருமாளும், ஸ்ரீகிருஷ்ணர், ஜாம்பவானின் […]

Read more

நாம் இந்தியர்கள் பெருமிதம் கொள்வோம்

நாம் இந்தியர்கள் பெருமிதம் கொள்வோம், பா. இலட்சுமணன், மாதவ் பப்ளிகேஷன்ஸ், டி3, வசந்தம் அபார்ட்மெண்ட், 1/338, சபரிசாலை, மடிப்பாக்கம், சென்னை 91, பக். 84, விலை 60ரூ. உலகில் தோன்றிய பழைமையான நாகரிகங்களில் இந்திய நாகரிகமும் ஒன்று. பல நாகரிகங்கள் மறைந்துபோன நிலையில் இந்திய நாகரிகம் மட்டுமே இன்றைக்கும் புதுமைத் தன்மையுடன் விளங்குகிறது. அதற்குக் காரணம் இந்து தர்மம். அதன் உண்மைத்தன்மையும் விஞ்ஞான மெய்ஞான அடித்தளமுமே அதற்குக் காரணம் என்று நிறுவுகிறார் நூலாசிரியர் இலட்சுமணன். புஷ்பவிமானம், பிரம்மாஸ்திரம், மழை நீர் சேகரிப்பு என்று நம் […]

Read more
1 72 73 74 75 76 88