இந்தியாவில் ஓரினப்பால்

இந்தியாவில் ஓரினப்பால், முனைவர் கி. அய்யப்பன், விசாலாட்சி பதிப்பகம், பக். 128, விலை 100ரூ. ஓரினச் சேர்க்கையை பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் இந்நூலில் எழுதியிருக்கும் ஆசிரியரின் முயற்சி, மிகத் தெளிவானதுதான். நம்மில் பெரும்பாலானோர் ஓரினச் சேர்க்கை என்ற வார்த்தையை கேட்டாலே, முகம் சுளிப்பது உண்டு. ஓரினச் சேர்க்கையை பல மதங்களும் வன்மையாக கண்டிக்கவே செய்கின்றன. இந்தியாவில் 25 லட்சம் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. இந்தியன் பீனல் கோர்ட் 377ன்படி, ஓரினச் சேர்க்கை என்பது தண்டனைக் குரிய குற்றமாக இருந்தது. ஆனால் […]

Read more

தெருக்கூத்து கலைஞர்கள்

தெருக்கூத்து கலைஞர்கள், கோ. பழனி, சி. முத்துகந்தன், போதிவனம். To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-492-2.html தமிழ் மண்ணில் கூத்து, நாடகம், கதை சொல்லல், ஆட்டங்கள், இசை தொகுப்புகள் என, பல்வேறு நிகழ்த்து கலைகள் உள்ளன. கேரளத்து கதகளி, கர்நாடகத்து யட்சகானம், ஆந்திரத்து வீதிநாடகா ஆகியன போன்று தமிழகத்தில் தனித்தன்மை வாய்ந்த ஒரு முழுமையான அரங்காக தெருக்கூத்து விளங்குகிறது. இந்த கலைகள் அந்தந்த மாநிலத்தவர்களால், அங்கீகரிக்கப்பட்டது போல தெருக்கூத்து தமிழர்களால் அங்கீகரிக்கப்படவில்லை என்ற கசப்பான உண்மையை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். […]

Read more

தாய்மை

தாய்மை, டாக்டர் ஜெயம் கண்ணன், கர்ப்ப ரக்ஷாம்பிகை மகப்பேறு மையம், யுனைடெட் இந்தியா காலனி, 4, ஆறாவது குறுக்குத்தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 300ரூ. தாய்மை என்ற அற்புதமான அனுபவத்தை அடைந்த கணத்தில்தான் ஒரு பெண் முழுமை அடைகிறாள். அதனால்தான் தாய்மை அனுபவத்திற்கு நிகராகச் சொல்வதற்கு இந்த உலகின் வேறு எதுவுமே இல்லை என சொல்லப்படுகிறது. கருமுட்டை தயாராகும் முதல் வாரம் தொடங்கி 40 வாரங்களில் ஒரு சிசு படிப்படியாக அடையும் மாற்றங்களையும் நிகழ்வுகளையும் குழந்தைக்கு எப்போது இதயம் துடிக்கத் தொடங்குகிறது? எப்போது […]

Read more

கம்பன் அன்றும் இன்றும்

கம்பன் அன்றும் இன்றும், பேராசிரியர் கு. ராமமூர்த்தி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 304, விலை 230ரூ- நூலாசிரியர், பேராசிரியர் கு. ராமமூர்த்தி கம்ப ராமாயணத்தை நன்கு கற்றுணர்ந்து, அதில் ஆழ்ந்த புலமை பெற்றவர் என்பதை இந்நூல் வெளிப்படுத்துகிறது. இராவணனுடைய மகனான மேகநாதன் என்ற இந்திரஜித்தின் வீரத்தை, இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனியின் போர்த் தளபதியாகத் திகழ்ந்த ஜெனரல் ரோமலின், வீர வாழ்வோடு ஒப்பிட்டுக் காட்டியுள்ள முறை, வியக்க வைக்கிறது. ராமன் நல்ல தலைவன் என்ற பகுதியில், ராமனிடம் எல்லா வகை நற்பண்புகளும் குடி கொண்டுள்ளன […]

Read more

இசைத் தமிழும் நாடகத் தமிழும் தோற்றமும் வளர்ச்சியும்

இசைத் தமிழும் நாடகத் தமிழும் தோற்றமும் வளர்ச்சியும், மா.ந. திருஞானசம்பந்தன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 270, விலை 120ரூ. தமிழர்களின் ஐவகை நிலங்களுக்குரிய தெய்வம், உணவு, பறவை, மலர், பண், தொழில் போன்றவற்றை விரிவாகப் பட்டியலிடுவதில் தொடங்கி சங்க காலத்தில் இசைத்தமிழ், சோழர்கள் காலத்தில் தமிழிசை, தமிழிசை வளர பாடுபட்டவர்கள், கூத்துக்கலையின் வகைகள், நாடகக்கலையை வளர்த்தவர்கள், நாடகத்தால் வளர்ந்தவர்கள், நாடக சபாக்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் ஏராளமான தகவல்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. ஆப்ரகாம் பண்டிதர், அண்ணாமலை செட்டியார், பாரதியார், பாரதிதாசன், கண்மணி […]

Read more

பொது உடமைதான் என்ன

பொது உடமைதான் என்ன?, ராகுல்ஜி, தமிழ்ப் புத்தகாலயம், பு.எண்-34, ப.எண்-35, சாரங்கபாணி தெரு, தி.நகர், சென்னை 17, பக். 98, விலை 35ரூ. நூலாசிரியர் சரித்திர ஆராய்ச்சிக்கும், இணையற்ற தர்க்க அறிவிற்கும், உலகப் புகழ் பெற்றவர். முதலாளித்துவ கொள்கையின் தோற்றத்திற்கும், அதற்கு மாறாக பொதுஉடமைக் கொள்கை ஏன் தோன்றிற்று என்றும் விளக்குகிறார் இந்த நூலில். சிறிய நூல்தான் என்றாலும் கருத்தாழம் மிக்க நூல். நன்றி: தினமலர், 20/11/11   —-   பணம்…பணம்…பணம், வேங்கடம், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 600002, […]

Read more

யார் அந்த தமிழ்ச் சித்தர்கள்

யார் அந்த தமிழ்ச் சித்தர்கள், அகமுக சொக்கநாதர் குருஜி, கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராய நகர், சென்னை 17, பக். 128, விலை 45ரூ. சித்தர்கள் பலரும் படிப்போர் ஆராய்ந்து அறிந்து கொள்ளும் வகையில் கருத்துக்களை மறைமுகமாகவே கூறியுள்ளனர். அவ்வாறாகக் கூறப்பெற்றுள்ள கருத்துக்களை தம் ஆய்வுமுறை அறிவுடன் விளக்கியுள்ளார் இந்நூலாசிரியர் அகமுக சொக்கநாதர். அகமுகர் என்போர் சித்தர்களே, சித்தர்களின் கருத்துக்களோடு பிறமொழி அறிஞர்களின் கருத்துக்களை ஒப்பிட்டு இந்நூலில் விளக்கியுள்ளார். இந்தியாவின் சிறந்த பண்பாட்டையும், நாகரிகத்தையும் நிறுவியவர்கள் தமிழர்களே. இந்திய மொழிகளின் தாய்மொழி […]

Read more

இயற்கை அன்னையின் அன்புக் குழந்தைகள்

இயற்கை அன்னையின் அன்புக் குழந்தைகள், மலையமான், அன்பு பதிப்பகம், பக். 144, விலை 70ரூ. நாய்க்கு நன்றி சொல்லவும், பூனைக்கு கோபத்தை வெளிப்படுத்தவும், அதன் வால்கள் பயன்படுவதைப்போல, ஆடு, மாடு, அணில், நாய், பூனை, குதிரை, குரங்கு, கங்காரு உள்ளிட்டவை அதன் வால்களை என்னென்ன காரணங்களுக்காக எவ்வாறு பயன்படுத்துகின்றன? எந்தெந்த உயிரினங்கள் தனது உணவுத் தேடலையும் தண்ணீர்த் தாக்கத்தையும் எப்படி பூர்த்தி செய்து கொள்கின்றன? என நூலில் சொல்லப்பட்டிருக்கும் விதம் அற்புதம். சூரியப்பறவை தவிட்டுக்குருவி உள்பட 5 பறவை இனங்கள், கடல் குதிரை, கடல் […]

Read more

முற்பிறவி மறுபிறவி ஆதாரங்கள்

முற்பிறவி மறுபிறவி ஆதாரங்கள், விக்கிரவாண்டி வி. ரவிச்சந்திரன், மேகதூதன் பதிப்பகம், புதிய எண்-13, சின்னப் ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-163-7.html ஆன்மா அழிவற்றது என்பது அனைத்து மதங்களுமே ஏற்றுக் கொண்டுள்ள ஒரு தத்துவம். இதில் முக்தி அடையாமல் மரணிக்கும் மனித ஆன்மா, முக்தி அடையும் வரை, மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுக்கிறது என்பது ஹிந்து மதக் கொள்கை. புத்த மதமும் இதை ஏற்றுக்கொள்கிறது. இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற சில மதங்கள் […]

Read more

தமிழர் சமுதாயச் சிந்தனைகள்

தமிழர் சமுதாயச் சிந்தனைகள், க.ப. அறவாணன், தமிழ்க்கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை 29, விலை 100ரூ. உலகில் தலை நிமிர்ந்து வாழ்ந்த மனிதன், பின் தங்கிப் போனது ஏன் என்று ஆராய்ந்து, அதுபற்றி நூல்கள் எழுதி வருகிறார் தமிழறிஞர் க.ப. அறவாணன். தமிழர் சமுதாயச் சிந்தனைகள் என்று தலைப்பு கொண்ட இந்த நூலில் தமிழ் மன்னர்கள், தமிழைவிட வட மொழிக்கு அதிக முக்கியம் கொடுத்து, அம்மெழியை வளர்த்தனர் என்று சுட்டிக்காட்டுகிறார். காவிரி ஆறு உற்பத்தி ஆகும் தலைக்காவேரி, முன்பு […]

Read more
1 74 75 76 77 78 84