சகுனி

சகுனி, எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 410ரூ.‘ To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-292-3.html சகுனி எனும் மகாவீரன், மாபெரும் நம்பிக்கையாளன். தனது தங்கை கான்தாரியின் கணவர் திருதராட்டினன் அஸ்தினாபுரத்தை ஆண்டு வரும் நிலையில் அவருக்குப் பின் தனது சகோதரியின் மகன் துரியோதனன் நாட்டை ஆளவேண்டும் என்று கருதி அதற்காக சகுனி படும் பாடுகள், கஷ்டங்கள், துன்பங்கள், அதனால் ஏற்படும் பெரிய இழப்புகளையும் தாங்கி முடிவில் அவன் மாண்டு போவதை சித்தரிக்கிறார் நூலாசிரியர் எஸ். விஜயராஜ். மகாபாரத கதையில் […]

Read more

இணையத்தில் சம்பாதிப்பது எப்படி

இணையத்தில் சம்பாதிப்பது எப்படி, வெ. நீலகண்டன், சூரியன் பதிப்பகம், விலை 75ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-295-0.html வழிகாட்டும் சாதனையாளர்களின் வெற்றிக்கதைகள் பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் ஏராளமான இளைஞர்கள் வெற்று அரட்டைகளில் பொழுதுபோக்கிக் கொண்டிருக்க, சில இளைஞர்கள் இணையத்தையே ஆக்கபூர்வமான வணிகத்தலமாக மாற்றி சாதித்திருக்கிறார்கள். இவர்களது வெற்றியில் பலருக்கான வெளிச்சம் இருக்கிறது. என்னென்ன இடர்பாடுகள் குறுக்கே நின்றன? அவற்றை எப்படியெல்லாம் கடந்தார்கள்? முழுமையாக தங்கள் கள அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அனுபவங்கள் பலரது தயக்க முடிச்சுகளை அவிழ்க்கும். புதிய சிந்தனைகளை […]

Read more

பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை

பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை, ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, துபை ஐக்கிய அரபு அமீரகம், திருச்சி, விலை 500ரூ. லட்சத்திற்கும் மேற்பட்ட தூதர்களை இறைவன் இந்த பூமிக்கு அனுப்பி வைத்தான். அவர்களில் நபிகள் நாயம் (ஸல்) அவர்களே இறுதித் தூதர் ஆவார். அவரின் வரவே இந்தப் பிரபஞ்சத்திற்குக் கிடைத்த மாபெரும் அருட்கொடை. அத்தகைய பெருமை பெற்ற பெருமானாரின் வரலாறு மிகப் புனிதமானது. முன்மாதிரியானது. நற்குணங்களின் தாயகம், நபிகள் நாயகம் என்று போற்றப்படும் நபிகளாரின் உயர்ந்த பண்புகளை, போதனைகளை, வியத்தகு சாதனைகளை விளக்கி 41 தலைப்புகளில் சான்றோர்கள் எழுதிய […]

Read more

பாரதியின் பார்வையில்

பாரதியின் பார்வையில், மு. ஸ்ரீனிவாசன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-291-9.html மீண்டும் ஒரு நண்பரின் நூலைத்தான் சிபாரிசு செய்கிறேன். இந்த நூல் எளிதில் கிடைக்கக்கூடியது. பாரதி தான் வாழ்ந்த சொற்ப ஆண்டுகளில் சந்தித்த அல்லது மதித்தவர்கள் பற்றிக் கூறியதை அல்லது எழுதியதை பாரதியின் பார்வையில் என மு.ஸ்ரீனிவாசன் தொகுத்துத் தந்திருக்கிறார். இந்த நூலில் உள்ள சில படங்கள் அபூர்வமானவை. இன்று எல்லாம் விரல் நுனியில் இருக்கிறது எனலாம். ஆனால் எதுவும் சந்தர்ப்ப சூழ்நிலை […]

Read more

சின்ன தூண்டில் பெரிய மீன்

சின்ன தூண்டில் பெரிய மீன், ஆப்பிள் பதிப்பகம், சென்னை, விலை 85ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-245-6.html வாழ்க்கையில் வெற்றி பெற அளவான வளங்களை வைத்து பெரிய வெற்றிகளைப் பெறுவது எப்படி என்பதை மைய கருத்தாக வைத்து நூலாசிரியர் சோம. வள்ளியப்பன் எழுதி உள்ளார். வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு இந்த நூல் பயனுள்ள வகையில் இருக்கும். நன்றி: தினத்தந்தி.   —- தேனருவி, மதுரை பாபாராஜ், வெளியிட்டவர்-பா. வசந்தா, சென்னை, விலை 60ரூ. குழந்தைகளுக்காக எழுதப்பட்ட 30க்கும் மேற்பட்ட […]

Read more

கவிஞர் வாணிதாசனின் புலமை

கவிஞர் வாணிதாசனின் புலமை, தமிழ் ஐயா வெளியீட்டகம், தஞ்சாவூர் மாவட்டம், விலை 500ரூ. திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் சார்பில் கவிதைத் தமிழ் 12வது ஆய்வு மாநாடும், கவிஞர் வாணிதாசனின் நூற்றாண்டு விழாவும் மதுரையில் நடந்தது. இந்த மாநாட்டு கருத்தரங்கு கட்டுரைகளைத் தொகுத்து, கவிஞர் வாணிதாசன் புலமையும் தமிழ் கவிஞர்களின் தனித்தன்மையும் என்ற தலைப்பில் புத்தகம் வெளியாகியுள்ளது. இதில் கவிஞர் வாணிதாசனின் கவிதை நயம் பற்றி பல்வேறு தலைப்புளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் கவிஞர்கள் பாரதிதாசன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், சுரதா […]

Read more

உலகம் சுற்றும் தமிழன்

உலகம் சுற்றும் தமிழன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 70ரூ. இப்போது உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்வதும் அந்த அனுபவங்கள் பற்றி கட்டுரை எழுதுவதும் எளிது. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் கப்பலில் உலகம் சுற்றுவது எளிதல்ல. மகாத்மா காந்தியைப் பற்றி முழு நீள திரைப்படம் (டாக்குமெண்டரி) தயாரித்த ஏ.கே. செட்டியார் பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, இந்த புத்தகத்தை எழுதினார். அக்காலத்தில் வெளிநாடுகள் எவ்வாறு இருந்தன, அயல்நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள் எவ்வாறு இருந்தன என்பதை எல்லாம் சுவைபட எழுதியுள்ளார் […]

Read more

ஆழ்வார்கள் யாவர்

ஆழ்வார்கள் யாவர், வேங்கடகிருஷ்ணன், ஆர்.என்.ஆர்.அச்சகம், பக். 159, விலை 100ரூ. ஆழ்வார்களில் தமிழ் தலைவன் யார் மாயோன் மேய காடுறை உலகம் என்று தொல்காப்பியர் காலம் முதல் போற்றப்பட்ட வைணவ சமயம், ஆழ்வார்களின் பாசுரங்கள் வாயிலாக வளர்க்கப்பட்டு, ராமானுஜரால் பாரத நாட்டின் பல பகுதிகளிலும் புகழ் பரப்பி திகழ்கிறது. பக்திப் பயிர் வளர்க்க பன்னிரு ஆழ்வார்களின் சில பாசுர நயங்களையும், அவர்களின் பெருமைகளையும் விளக்குவதே இந்நூல். இந்நூலில் 16 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொன்றும் நல்ல முத்தாக இருப்பதால், நூலும் பதினாறும் பெற்ற முத்து மாலையாகத் […]

Read more

திருமால் தரிசனம்

திருமால் தரிசனம், வேணு சீனிவாசன், வையவி பதிப்பகம், பக். 176, விலை 100ரூ, நாலாயிர திவ்ய பிரபந்தம், அதன் உரையாசிரியர்களின் நயம் குறித்தும், உரையாசிரியர்களின் உயர்வு குறித்தும், 18 கட்டுரைகளில், இந்த நூல் பழகு தமிழில் விவரிக்கிறது. பாலும் கண்ட சர்க்கரையும் குடிக்கப் பித்தம் தன்னடையே போமாபோல, பகவதனு பவம் பண்ண நெருப்பில் இட்ட பஞ்சுக்குவியலைப் போல தீவினைகளுடன் உருமாய்ந்து போகும் என்ற ஈட்டின் விளக்கம் கூறுவது (பக். 39). இறை அறிவு தலைதுக்கி மலரும்போது, இந்த உலக அறிவு கூம்ப ஆரம்பித்துவிடும் என்று […]

Read more

நிகழ்காலம்

நிகழ்காலம், பொன். தனசேகரன், கார்த்திலியா புக்ஸ், சென்னை, பக். 126, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-276-3.html எதிர்காலத்திற்கான எச்சரிக்கை பருவநிலை மாற்றங்களால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள் அச்சமூட்டுகின்றன. உலகெங்கிலும் பருவநிலை மாற்றம் என்ற சொல்லாடல் கால் நூற்றாண்டு காலமாக விவாதிக்கப்பட்டு வரும் சூழலில் தமிழ்ச் சமூகத்தில் இது குறித்து குறைவாகவே அறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகச் சூழலில் பருவநிலை மாற்ற சிக்கல்கள் ஏற்படுத்துகிற விளைவுகளை முன்வைக்கிற பதிவாக பத்திரிகையாளர் பொன். தனசேகரனின் நிகழ்காலம் தமிழின் பசுமை இலக்கியத்திற்கு புதிய […]

Read more
1 40 41 42 43 44 88