விலை மதிக்க முடியாத உயிர்கள்

விலை மதிக்க முடியாத உயிர்கள், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 180ரூ. தி.மு.க.வின் இலக்கிய அணி புரவலரான முன்னாள் அமைச்சர் புலவர் இந்திரகுமாரி ஏற்கனவே 3 நூல்களை எழுதி இருந்தாலும், தற்போது ‘விலை மதிக்க முடியாத உயிர்கள்’ என்ற தலைப்பில் 19 சரித்திர பெண் மணிகளின் விலை மதிக்க முடியாத, வீரமிக்க, மனிதாபிமானமிக்க செயல்களை கவிதையாக படைத்து உள்ளார். இதில் பலர் தியாகங்களும், இதுவரையில் முழுமையாக வெளிவராத தியாகங்களும் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இலங்கையில் நடந்த விடுதலை போரில் இன்னுயிர் நீத்த பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் அங்கையற்கண்ணி, […]

Read more

கவிதை ஓர் ஆராதனை

கவிதை ஓர் ஆராதனை, கவிக்கோ அப்துல் ரகுமான், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 176, விலை 125ரூ. கவிதை மனிதனை ஒழுங்கானவனாக்குகிறது. அழகனாக்குகிறது. கவிதை அழகை ஆராதிக்கிறது. அதாவது ஆண்டவனை ஆராதிக்கிறது. இப்படி மனிதனுக்கும் கடவுளுக்கும் ஆராதனை செய்யும் கவிதைகளின் தொகுப்பு கவிக்கோ வரிகளில். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.   —- டாக்டர் போத்தியின் கவிதைகள், டாக்டர் பெ. போத்தி, மணிவாசகர் பதிப்பகம், பக். 128, விலை 60ரூ. கால்நடை மருத்தவரான போத்தி, பல்வேறு காலங்களில் தமிழரசு உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதிய […]

Read more

புதிய முகம்

புதிய முகம், இராம இளங்கோவன், சுலோசனா பதிப்பகம், பக். 204, விலை 130ரூ. இனம், மொழி, நாட்டுணர்வு, மாந்தர் நேயம், வீடு, மனைவி, மக்கள், காதல், பெண்மை போன்றவற்றை பாடுபொருளாய் யாத்த கவிதைகளின் அணிவகுப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.   —- விந்தன் எனும் ஓர் ஆளுமை, கோ. ஜனார்த்தனன்(தொகுப்பு), விந்தன் நினைவு அறக்கட்டளை, பக். 272, விலை 200ரூ. கோவிந்தன் என்னும் விந்தன் தமிழின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவர். விந்தனின் படைப்புகளை முன்வைத்து விந்தன் ஆக்கங்கள் எனும் கருத்தரங்கம் நடந்தது. […]

Read more

முப்பத்தி நாலாவது கதவு

முப்பத்தி நாலாவது கதவு, புல்வெளி காமராசன், அகநாழிகை பதிப்பகம், பக். 144, விலை 120ரூ. வாழ்க்கை தரும் நெருக்கடிக்கும் உறவுகள் தரும் ஏமாற்றத்திற்கும் இடையில் சிக்கி அல்லல்படும் பல பெண்களின், மனிதர்களின் கதைகளை தமிழில் தந்துள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.   —- மௌனப்போராட்டம், சீர்காழி உ. செல்வராஜு, வாசகன் பதிப்பகம், பக். 96, விலை 75ரூ. அறத்தையும் வாழ்வியல் தர்மத்தையும் எடுத்துரைக்கும் ஆக்கங்கள், பாக்கள் வடிவில். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.

Read more

பனித்துளிக்குள் ஒரு பயணம்

பனித்துளிக்குள் ஒரு பயணம், சந்தர் சுப்ரமணியன், வர்ஷன் பிரசுரம், பக். 128, விலை 80ரூ. உலகை பனித்துளியின் உள்ளிருந்து பார்க்கும் பார்வையாய் அமைந்த கவிதைகளின் தொகுப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.   —- ராம ராவண யுத்தம், வ. பாரத்வாஜர், காவ்யா பதிப்பகம், பக். 227, விலை200ரூ. நாம் நம் மனதில் தேக்கி வைத்திருக்கும் ராமாயணப் பாத்திரங்களை வேறுவகையான கோணத்தில் பார்த்து நவீன ராமாயணத்தைப் படைத்துள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.

Read more

பாரதியார் சரித்திரம்

பாரதியார் சரித்திரம், செல்லம்மாள் பாரதி, அழகு பதிப்பகம், விலை 100ரூ. மகாகவி பாரதியாரின் வரலாற்றை பலரும் எழுதியுள்ளனர். இது, பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பாரதி எழுதிய புத்தகம், எனவே தனிச்சிறப்பு வாய்ந்தது. “பாரதியாரின் பதினாலாம் வயதில் எங்களுக்கு மணவினdை முடிந்தது. அப்போது எனக்கு வயது ஏழு” என்று கூறும் செல்லம்மாள் பாதி, மதம் பிடித்த யானையால் பாரதியார் தாக்கப்பட்ட சம்பவத்தையும், அவர் மறைவையும் படிப்போர் கண்களில் நீர் வரும் விதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட புத்தகம். நீண்ட இடைவெளிக்குப் பின் […]

Read more

அப்துல்கலாம் பொன்மொழிகள்

அப்துல்கலாம் பொன்மொழிகள், தொகுப்பு ச.குமார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 75ரூ. தமிழகத்தில் பிறந்து இந்தியனாக வளர்ந்து உலக விஞ்ஞானிகளுள் ஒருவராகத் திகழ்ந்த நமது பாரத நாட்டின் ‘பாரத ரத்னா’ என்ற உயரிய விருது பெற்ற எளிமையான மாமனிதர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் வாழ்க்கைச் சுருக்கத்தையும், அவரின் பொன்மொழிகளையும் தொகுத்து அளித்திருக்கிறார் ச. குமார். அவருடைய பல நூல்களின் சாரத்தை இந்த ஒரே நூலில் அறிய முடிகிறது. மாணவ-மாணவிகள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 17/2/2016.   —- […]

Read more

பாரதிதாசன் காதல் ஓவியங்கள்

பாரதிதாசன் காதல் ஓவியங்கள், டாக்டர் எஸ். ஜெகத்ரட்சன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், விலை 100ரூ. உலகில் ஒவ்வோர் உயிரும் காதலின்றி வாழ்வதில்லை. காதலைப் பாடாத கவிஞன் இல்லை. காதலைப் பாடவில்லை என்றால் அவன் கவிஞனே இல்லை” என்பார்கள். ‘காதல் என்பது உயிர் இயற்கை’ என்று கூறும் பாவேந்தர் பாரதிதாசன், தனிப்பாடல்களிலும், கதைப்பாடல்களிலும், காப்பியங்களிலும் ஆண்-பெண்களிடையே இருந்து வரும் தூய அன்பை-காதலை பல கோணங்களில் வர்ணிக்கிறார். புரட்சிக் கவிஞர் என்ற பெயரை பெற்ற அவர், காதலிலும் புரட்சி செய்தவர். விதவையர் காதலுக்கும், சாதி மதம் கடந்த […]

Read more

பூர்ணிமா கவிதைகள்

பூர்ணிமா கவிதைகள், டாக்டர் கோ. இளங்கோவன், பூர்ணிமா பதிப்பகம், விலை 150ரூ. டாக்டர் கோ. இளங்கோவன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. ‘வானம் சிரித்தால் மழையாகும். ஆழ் கடல் சிரித்தால் அலையாகும். அலைகள் சிரித்தால் நுரையாகும்”  என்பன போன்ற மனம் விரும்பும் கவிதைகள் உள்ளன. பளபளப்பான காகிதத்தில், வண்ணப் படங்கள் கண்ணைக் கவர்கின்றன. நன்றி: தினத்தந்தி, 27/1/2016.   —- மலர்ந்த வாழ்வு சிறுகதைகள், மா.செ. மாயதேவன், மா. ராமையா, ராமநாதன் பதிப்பகம், விலை 60ரூ. மலர்ந்த வாழ்வு, ரத்த தானம், கூண்டுக்கிளி மற்றும் உடைந்த […]

Read more

அகச்சுவடுகள்

அகச்சுவடுகள், கவிதாயினி அமுதா பொற்கொடி, வானதி பதிப்பகம், விலை 200ரூ. கவிதாயினி அமுதா பொற்கொடி எழுதிய கவிதைகளின் தொகுப்பு. “வல்லினமின்றி மெல்லினமின்றி இடையினமாய் அவதரித்தவள் நான்” என்று திருநங்கைகளைப் பற்றி பாடும்போதும், ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ என்ற தலைப்பில் ‘கலாவதி ஆனது நல வாழ்வு, கண்ணீரில் மிதக்குது பலர் வாழ்வு’ என்று மதுக்கடை பார்’ குறித்து சொல்லும்போதும் இவரது சொல்லாடல் நம்மை ரசிக்க வைக்கிறது. இந்தக் கவிதைத் தொகுதியில், அவர் சமூகக் கேடுகளையும், கலாச்சார சீரழிவுகளையும் சாடுகிறார். அவரது ஆழ் மனதின் உள்ளே உள் […]

Read more
1 24 25 26 27 28 57