ஆண்டாள் கடவுளைத் தேடிய கவிஞரின் பயணம்

ஆண்டாள் கடவுளைத் தேடிய கவிஞரின் பயணம், இரா. நரேந்திர குமார், காவ்யா, விலை 250ரூ. ஆண்டாள் கவிதைக்கு ஓர் ஆய்வடங்கல் எமிலி டிக்கின்ஸனின் கவிதை வரிகள் இவை. தனது சமூகத்தைத் தானே தேர்ந்தெடுக்கிறது ஆன்மா பிறகு அடைத்துவிடுகிறது கதவை. இந்த வரிகளைப் பற்றிக்கொண்டு ஆண்டாளின் அக உலகத்திற்குள் ஒரு வாசகர் பயணிக்க முடியும். கண்ணன் என்னும் கருந்தெய்வத்துடன் தன்னை முழுமையாகப் பிணைத்துக் கொண்டு, மற்ற உறவுகளைத் துண்டித்துவிட்ட ஆண்டாளை ஒரு முழுமையான கவிதைப் பரப்பில் வைத்துப் பார்க்கிறது, இரா. நரேந்திரகுமாரின் ஆண்டாள் கடவுளைத் தேடிய […]

Read more

மனங்கொத்தி

மனங்கொத்தி, புலவர் மு. அருளப்பன், அனலகம் வெளியீடு, விலை 60ரூ. நல்லொழுக்கம், நன்னெறி போன்ற சமூக சிந்தனைகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட 21 சிறுகதைகளை கொண்ட தொகுப்பு நூல் இது. நம்மைச்சுற்றி அன்றாடம் அரங்கேறும் நிகழ்வுகளை கண்முன்னே காணும் வகையில், கதைகள் அனைத்தும் எழுதப்பட்டு உள்ளன. ‘விவாகரத்து’, ‘ஊனம்’, ‘சிறைக்குள் வரவேண்டியவன்’ என நூலில் இடம் பெற்றுள்ள கதைகள் அனைத்தும் கருத்தையும், கவனத்தையும் ஈர்க்கின்றன. படிப்போரின் சிந்தையை கவரும் நோக்கில் பேச்சுவழக்கில் கதைகள், எழுதப்பட்டிருப்பது சிறப்பு. இது ஒரு சிறுகதை தொகுப்பு என்பதை விட, […]

Read more

உண்மை

உண்மை, கே.எஸ். நாகராஜன் ராஜா, கிரி டிரேடிங் ஏஜென்சிஸ், விலை 120ரூ. ஷீரடி பாபாவின் ஜீவசமாதி இருக்கும் இடத்தையும், கர்ம வினையிலிருந்து யாரும் தப்ப முடியாது என்ற நிலையையும், பரமாத்மா அனைத்து விஷயங்களுக்கும் சாட்சியாக இருக்கிறார் என்ற தகவல்களுடன், பாதாள புவனேஷ்வர், காமாக்யா, கைலாஷ் – மானசரோவர் போன்ற பல ஆன்மிக தலங்களிலும் நூலாசிரியர் பெற்ற அனுபவங்களும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 9/12/2015.   —- சிந்திப்போமா?, ஆ. சூசைமாணிக்கம், வாசன் பிரதர்ஸ் வெளியீடு, விலை 50ரூ. ஒழுக்க நெறிகளை வலியுறுத்துவதுடன், அனைவரும் […]

Read more

கேன்டர்பரிக் கதைகள்

கேன்டர்பரிக் கதைகள், தமிழில் வான்முகில், மீனா கோபால் பதிப்பகம், பக். 175, விலை 200ரூ. ஆங்கிலக் கவிதையின் தந்தை என்று போற்றப்படுகிற சியாஃபிரே சாசர் என்பவரின் படைப்புகளுள் தலைசிறந்தது கேன்டர்பரிக் கதைகள். 14ம் நூற்றாண்டில் ஆங்கிலம் என்று ஒரு தனி மொழியே இல்லை. இங்கிலாந்தின் வட்டார வழக்குகளை ஒன்று திரட்டி அதனை ஒரு மொழியாக மாற்றி, இங்கிலாந்துக்கு ஒரு தேசிய மொழியை அளித்தவர் சாசர். கேன்டர்பரிக்குப் புனிதப் பயணமாகச் செல்லும் பயணிகள், வழியில் தபார்டு என்ற சத்திரத்தில் தங்கிச் செல்வது வழக்கம். பயணக் களைப்புத் […]

Read more

எந்நாளும் எங்கள் நெஞ்சில்

எந்நாளும் எங்கள் நெஞ்சில், மேதகு ஆ.ப.ஜெ. அப்துல்கலாம், பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம், பக். 192, விலை 225ரூ. மாணவர்களின் இதயமாக விளங்கிய அப்துல்கலாம் ஒரு சிறந்த கவிஞரும்கூட. அந்த வகையில் அவரது பிறந்த நாளை மாணவர் தினமாகக் கொண்டாடுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், மாணவர்களிடையே உள்ள படைப்புத் திறனை வெளிக்கொணரும் வகையில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் மாணவர்களின் கவிதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டு அப்துல்கலாமுக்கு பெருமை சேர்க்கும் முயற்சி இது. மாணவர்கள், ஆசிரியர்கள் அலுவலர்கள் என அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பெறப்பட்ட அப்துல்கலாம் பற்றிய கவிதைத் […]

Read more

கருமை செம்மை வெண்மையைக் கடந்து

கருமை செம்மை வெண்மையைக் கடந்து, வே.மு. பொதியவெற்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, விலை 280ரூ. செறிவான ஆய்வு நூல்! மூத்த எழுத்தாளர் வே.மு.பொதியவெற்பனின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுக்கப்ட்டு மிகவும் செறிவான ஒரு நூலாக இது இருக்கிறது. இலக்கியம், மெய்யியல், தெருக்கூத்து, கலைகள், சித்தர் மரபுகள், மணிமேகலை, இறையியல், தத்துவம் என்று பல்வேறு துறைகளில் ஆய்வுப்புலத்தில் இருப்பவர்களுக்குபேருதவி செய்யக்கூடிய கட்டுரைகள். ஒவ்வொரு தலைப்பிலும் இவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் கிட்டத்தட்ட 360 பாகைக் கோணத்தில் மையப்பொருளை ஆராய்கின்றன. ஒப்பியல் நோக்கில் சித்தர் […]

Read more

வெள்ளை நிழல் படியாத வீடு

வெள்ளை நிழல் படியாத வீடு, லாங்ஸ்ன் ஹியூஸ், மாயா ஏஞ்சலு, எதேல்பர்ட் மில்லர், தமிழில் ரவிக்குமார், மணற்கேணி வெளியீடு, பக். 64, விலை 40ரூ. தமிழ்ச் சூழலில் கருப்பு கவிதைகள் அமெரிக்காவில், கருப்பின மக்கள் எதிர்கொண்ட நிற, இனவெறி ஒடுக்குதல் குறித்த, ஆப்ரோ அமெரிக்க இலக்கியங்கள், கருப்பு இலக்கியம் என குறிப்பிடப்பட்டன. அவற்றுக்கும், இந்தியாவில் தலித்துகள் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்குதலுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாக, தமிழில் வெளிவந்த, நிறப்பிரிகை, கவிதாசரண் போன்ற இதழ்கள் கருதின. அதனால், கருப்பு இலக்கியங்களை அவை தமிழில் மொழிபெயர்த்து அறிமுகம் […]

Read more

பாசங்கள் பலவிதம்

பாசங்கள் பலவிதம், சூடாமணி சடகோபன், ருக்மணி பதிப்பகம், பக். 144, விலை 80ரூ. பாசத்தை மையக்கருவாகக்கொண்டு, பலவிதமான பாசங்களை சிறுகதைகளாக வரைந்துகாட்டியிருக்கிறார் நூலாசிரியர். ஒரு சராசரி மனிதனுக்குள் இருக்கும் ஆசாபாசங்களின் பின்னணியில் இக்கதைகள் புனையப்பட்டுள்ளன. அதனால் படிப்போருக்கு கதையின் நெருக்கதை உணரும்படி உள்ளது. மனதிற்குள் பல காலங்களாக காரணமின்றி புதைக்கப்பட்டு கிடக்கும் பாசத்தை, வெளியில் கொண்டு வராததால் அல்லது கொண்டுவரத் தெரியாததால், அவன் அடையும் மன உளைச்சலையும் பரிதவிப்பையும் யதார்த்த கண் கொண்டு பார்த்துள்ளார் ஆசிரியர். மகனிடம் அன்பு காட்டத்தவறிய சொக்கலிங்கம் முதல், நோய் […]

Read more

எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு

எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. இரா. நல்லகண்ணு விடுதலை போராட்ட வீரர். நெல்லை சதி வழக்கில் 8 ஆண்டுகளுக்குமேல் சிறையில் இருந்தவர். விவசாயிகள் சங்கத்தின் நெல்லை மாவட்டச் செயலாளராகவும், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராகவும் செயல்பட்டவர். இப்போதும் பல உயர் பொறுப்பு வகித்து செயல்படுபவர். 90 வயதாகும் இரா. நல்லகண்ணுவைப் பற்றி எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், சான்றோர்கள் பலரும் தெரிவித்த கருத்துக்களை அருமையாக தொகுத்தளித்திருக்கிறார் நூலாசிரியர் […]

Read more

வானம்பாடி

வானம்பாடி, த. கோவேந்தன், கலைஞன் பதிப்பகம், பக். 420, விலை 350ரூ. கோவையிலிருந்து வானம்பாடி புதுக்கவிதை இதழ் வெளிவருவதற்கு 13 ஆண்டுகளுக்கு முன்னரே வேலூரிலிருந்து புலவர் த.கோவேந்தன் வானம்பாடி என்ற பெயரில் கவிதை இதழை வெளியிட்டு, ஒரு பெரும் மரபுக்கவிதை பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளார். அந்த கவிதை இதழில் வந்த கவிதைகளின் தொகுப்பே இந்நூல். தமிழறிஞர்கள் மு.வ., அ.அப்பாதுரை, அண்ணா, வேங்கடபதி, அ.இ.பரந்தாமனார், புலவர் குழந்தை, டாக்டர் பூவண்ணன், பெருஞ்சித்திரனார், ம.இலெ. தங்கப்பா, சுப்பு ஆறுமுகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கவிஞர்களின் கவிதைக்கானத்தை இதில் பதிவு […]

Read more
1 26 27 28 29 30 57