அறிவும் பகுத்தறிவும்

அறிவும் பகுத்தறிவும், பேராசிரியர் ஏ. சோதி, நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி, விலை 30ரூ. அறிவுத் தொடர்பான 6 கதைகளும், பகுத்தறிவுத் தொடர்பாக 6 கதைகள் அடங்கிய நூல். ஓவியங்களுடன் சிறுவர்களுக்கு பயனுள்ள வகையில் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி.   —- காலம் வெளி மற்றும் ஒரு பறவையின் துடுப்புகள், தேவரசிகன், தமிழாசை பதிப்பகம், திருபுவனம், விலை 80ரூ. வித்தியாசமான தலைப்பில், எளிமையான உணர்வுகளைப் பேசுகிற பாசாங்கற்ற பல நல்ல கவிதைகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி.

Read more

கிராம நிர்வாக அலுவலர் கடமைகள் மற்றும் பணிகள்

கிராம நிர்வாக அலுவலர் கடமைகள் மற்றும் பணிகள், ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 330ரூ. ஒரு கிராமத்தில் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருப்பவர் கிராம நிர்வாக அலுவலர். அந்தக் கிராமத்தில் நில நிர்வாகம், வரி வசூல், பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல், இதரத் துறை அலுவலர்களுக்கு உதவுதல் போன்ற எண்ணற்ற பணிகளை கிராம நிர்வாக அலுவலர் கவனித்து வருகிறார். அவர்களின் கடமைகள் மற்றும் பணிகள் குறித்து இந்த நூலில் வடகரை செல்வராஜ் விரிவாக விளக்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி.   —- கலைஞர் பரணி கவிதை மலர்கள், கவிஞர் […]

Read more

சொப்பன சுந்தரி

சொப்பன சுந்தரி, வானவில் புத்தகாலயம், சென்னை, விலை 299ரூ. பிரபல தெலுங் எழுத்தாளர் யத்தனபூடி சுலோச்சனா ராணி எழுதிய நாவல். தமிழில் கவுரிகிருபானந்தன் மொழிபெயர்த்துள்ளார். சேற்றில் பிறந்த செந்தாமரை மேனகா, தாயின் வாழ்க்கையில் நடந்த தடுமாற்றத்தால் சமுதாயம் அவர்களை மதிப்புக் குறைவாக நடத்துகிறது. மேனகா எதிர்பாராதவிதமாக நடிகையாகி விடுகிறாள். அவள் மனதார விரும்பிய ஹரி கிருஷ்ணாவுக்கும் ரேகாவுக்கும் திருமணம் நடக்கிறது. இந்த நிலையில் ரேகா இறந்து போகிறாள். ஹரி கிருஷ்ணன் மீது கொலை குற்றம் சாட்டப்படுகிறது. திகில்களும், திருப்பங்களும் நிறைந்த கதை. முடிவு என்னவாக […]

Read more

திசை கடக்கும் சிறகுகள்

திசை கடக்கும் சிறகுகள், ஈரோடு தமிழன்பன், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 275ரூ. கவிஞர் ஈரோடு தமிழன்பன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. மானுட விடுதலையைப் பிரதானமாகக் கொண்டு கவிதைகளை இயற்றும் கவிஞர், ‘தமிழ்த் தாயே, இப்போது உனக்கென ஒரு நாடு இல்லை, உனக்குத் தெரியுமா?’ என்ற கேள்விகளால் நெஞ்சில் வேள்வி வளர்க்கிறார். சிலர் இறுக்கப் பிடித்து கை குலுக்கினால் அச்சமாக இருக்கிறது. மோதிரங்கள் களவு போகின்றன. போகட்டும், ஆனால் சில நேரங்களில், விரல் ரேகைகளே காணாமற் போய்விடுகின்றன. மூன்றாம் உலக நாடுகளில் மரணங்கள் நேரடிப் […]

Read more

சாவித்திரி வாழ்க்கை வரலாறு

சாவித்திரி வாழ்க்கை வரலாறு, நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா, தோழமை வெளியீடு, விலை 250ரூ. நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று சாவித்திரி – கலைகளில் ஓவியம் என்ற தலைப்பில் நெஞ்சைத் தொடும் விதத்தில் எழுதியுள்ளார் நாஞ்சில் மு.ஞா. செ. இன்பா. 1955ல் வெளிவந்த மிஸ்ஸியம்மா படத்தில், ஜெமினிகணேசனும், சாவித்திரியும் இணைந்து நடித்தனர். அப்போது அரும்பிய காதல், பிறகு திருமணத்தில் முடிந்தது. இரு குழந்தைகள் பிறந்தன. 1968ம் ஆண்டில் சாவித்திரி டைரக்டர் ஆனார். அதனால் பல பிரச்சினைகளை சந்தித்தார். சொத்துக்களை இழந்தார். ஈருல் ஓருயிர் என்பதுபோல் வாழ்ந்த […]

Read more

ஒரு கடல் ஒரு கைவிளக்கு

ஒரு கடல் ஒரு கைவிளக்கு, கவிஞர் பிரபாகர பாபு, தமிழ்க்கவி பதிப்பகம், பக். 144, விலை 125ரூ. மனித மாண்புகளை மேம்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு. இந்தக் கைவிளக்கின் துணையுடன் சமுதாயத்தின் மூலை முடுக்குகளை எல்லாம் பார்க்க முடிகிறது. கவிஞர் பிரபாகர பாபு தன் கவியாளுமையை இந்த தொகுப்பில் ஆழமாக வழங்கியுள்ளார். தீயின் நாக்குகளைப் போல் தீண்டாமை குளிருக்கு இதமாக வருடும் தீயின் வெப்பக் கவிதைகள் இவை. வெளிச்சத்திற்கும், இருட்டிற்கும் இடைப்பட்ட கணத்தை வெளிச்சமாக்கும் வித்தை, இந்தக் கவிதை தொகுப்பு முழுவதும் காணப்படுகிறது. சுகத்தை விடவும் […]

Read more

அணிந்துரைகளும் வாழ்த்துரைகளும்

அணிந்துரைகளும் வாழ்த்துரைகளும், டாக்டர் ஆ. பத்மநாபன், ஐ.ஏ.எஸ்.(ஓய்வு), பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. தமிழ்நாட்டின் முன்னாள் தலைமை செயலாளரும், மிசோரம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான டாக்டர் ஆ. பத்மநாபன், ஐ.ஏ.எஸ். (ஓய்வு) தொகுத்துள்ள அணிந்துரைகளும், வாழ்த்துரைகளும் என்ற நூல் அனைவரையும் சாதிக்க தூண்டுவதுடன், சிந்திக்கவும் வைக்கிறது. இந்த நூலில் இடம் பெற்றுள்ள அனைத்து வாழ்த்துரைகள் மூலம் நூலாசிரியர் சமுதாயத்துக்கும், பொதுமக்களுக்கும் ஆற்றிய சேவைகளையும், அவருடைய நற்பண்புகளையும் அனைவரும் அறிந்து கொள்ள முடிகிறது. நூலில் இடம் பெற்றுள்ள வைரவரிகள் அனைத்தும் பாலைவனச் சோலையின் பூக்களாக […]

Read more

சொலவடைகளும் சொன்னவர்களும்

சொலவடைகளும் சொன்னவர்களும், சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. உணர்வுகளை வெளிப்படுத்த, யோசனை சொல்ல, ஆறுதல் தர, அறிவுரை தந்து நெறிப்படுத்த, விமர்சனம் செய்து எச்சரிக்க, பிரச்சினையான நேரத்தில் தீர்வுகள் தேடித்தர, சொலவடைகளைப் போலப் பயன் தருகிற எளிய இலக்கியம் எதுவும் இல்லை. கோபம், குமுறல், ஆற்றாமை, கழிவிரக்கம், வலி, சலிப்பு என அத்தனை மனச்சுமைகளையும் இந்தச் சொலவடைகளில் இறக்கி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அவர்களின் மனக்கண்ணாடி வழியே இந்த வாழ்க்கையை நாம் புரிந்து கொள்ள இந்த நூல் உதவும். நன்றி: தினத்தந்தி, 19/8/2015. […]

Read more

தேவனின் திருப்பாடல்கள்

தேவனின் திருப்பாடல்கள், நாஞ்சில் மு.ஞா.செ. இன்பா, அருவி வெளியீடு, விலை 400ரூ. விவிலியத்தில் தாவீது மன்னன் பாடியதாகச் சொல்லப்படும் சங்கீத பாகத்தை மூலமாகக் கொண்டு இக்கவிதைத் தொகுப்பு எழுதப்பட்டுள்ளது. விவிலியம் தோன்றிய காலத்தில் இருந்து இப்படியோர் கவிதைத் தொகுப்பு உருவாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணி, இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் போன்ற இசை அமைப்பதற்கு ஏற்றவாறு பாடல்களை இயற்றியிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 5/10/2015.   —- கம்பரும் வால்மீகியும், அரிசோனா மகாதேவன், தாரிணி பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. பாரதநாட்டின் […]

Read more

நூறு கோடி நிறங்களில் வண்ணத்துப்பூச்சிகள்

நூறு கோடி நிறங்களில் வண்ணத்துப்பூச்சிகள், சைதன்யா, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 60ரூ. சாத்தியமில்லாத ஒன்றை சாத்தியமாக்குவது கவிதை என்கிறார் சைதன்யா. உண்மைதான். கவிதைக்கு இறகு இல்லை என்று யார் சொன்னது என்று கேட்கிறார். நூறு கோடி நிறங்களில் பறந்து கொண்டிருப்பது வண்ணத்துப்பூச்சிகள் மட்டுமல்ல கவிதைகளும்தான். மனித நேயம் எங்கே இருக்கிறது? அது இல்லை என்பதைச் சொல்ல வரும் கோபத்தில் நியாயம் இருக்கிறது. ஆனால் நியதி இல்லை. வழிகாட்டல் இல்லை. பெரியாரின் குரல் இடுக்கில் இக்கவிதைகள் சிக்கிக் கொண்டதே ஒரு படிமம்தானே. நன்றி: குமுதம், […]

Read more
1 27 28 29 30 31 57