ஜீவாவின் சமுதாயத் தொண்டு

ஜீவாவின் சமுதாயத் தொண்டு, த. காமாட்சி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 50ரூ. இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களில் குறிப்பிடத்தக்கவர் ப. ஜீவானந்தம். ஏழை, பாட்டாளி மக்களின் தலைவர் அவர். சிறந்த இலக்கியவாதி, பத்திரிகையாளர், பெண்ணடிமையை எதிர்த்துக் குரல் கொடுத்தவர். சாதிமுறையைச் சாடியவர். சிறந்த காந்தியவாதி. பொதுவுடைமைவாதி. தொழிலாளர்களின் உண்மைத்தலைவர். த. காமாட்சியின் ஆய்வு நிறைஞர் பட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட இந்நூல், சமுதாய சீர்த்திருத்தத்தில் ஜீவா ஆற்றிய தொண்டு, விடுதலைப் போராட்டத்தில் அவரின் பங்கு, கம்யூனிச கோட்பாட்டில் அவரது உறுதிப்பாடு ஆகிய கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. […]

Read more

ஈரம்

ஈரம், சிவசு, தென்றல் பதிப்பகம், புதுச்சேரி, பக். 91,விலை 100ரூ. எளிதில் புரியாத வரிகளைக் கொண்டு நவீனம் என்ற பெயரில் கவிதைகளாகப் படைக்கப்பட்டு வரும் தற்காலத்தில், எளிதில் புரியக்கூடிய தன்மை, ஆழமான சிந்தனை, உழைப்பின் வலியை, மேன்மையைச் சொல்லும் ரத்தினச் சுருக்கம் என்று கவிதைக்குரிய இலக்கணங்களைக் கொண்டு படைக்கப்பட்டிருப்பதால் ஈரம் நம் மனதில் ஒட்டிக்கொள்கிறது. எதிர்படும் வீடுகளை கட்டடங்களை/மரங்களை, தோட்டங்களை/ விழுங்கியபடியே ஊர்ந்து வருகிறது/ நெடுஞ்சாலைப் பாம்பு என்ற ஒரு கவிதை போதும் அவரது பாடுபொருள் எத்தகையது. அவரது பார்வையின் விலாசம் எவ்வளவு என்பதை […]

Read more

சப்பெ கொகாலு

சப்பெ கொகாலு, ஒடியன் லட்சுமணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,  விலை 225ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000022871.html திருமணத்திற்கு முன் 3 நாள் வன வாழ்க்கை பழங்குடி மக்களின் வாழ்வை சித்தரிக்கும், ‘சப்பெ கொகாலு’ என்றால், இருளர் பயன்படுத்தும் துளை இசை கருவியின் பெயர். இந்த தொகுப்பில், பழங்குடிகளான இருளர்களின் வாழ்வியலை ஆசிரியர் விவரிக்கிறார். இருளர் என்ற சொல்லுக்கு கறுப்பர் என பொருள். இவர்களில் பல்வேறு குலங்கள் உள்ளன. பிறப்பு, இறப்பு, திருமணம், பிரசவம், உணவு […]

Read more

காலச் சப்பரம்

காலச் சப்பரம், விழிகள் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. பாவல் கவிமுகில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. சிறுவயதில் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிகளின் மலரும் நினைவுகளாக கவிதை நடையில் உலா வருகின்றன. பேச்சு நடை வீச்சில் கவிதைகள் அமைந்துள்ளன. அமாவாசை கணக்கா ஒருத்தன் வெளுப்பா தேடுனாக்கா கைநகமும் கண்ணு முழியும்தான் ஆனா பேரு வெள்ளத்துரை என்பன போன்ற பாடல்கள். கிராமீய மணம் வீசுகின்றன. நன்றி: தினத்தந்தி, 15/7/2015.   —- நீ உன்னை அறிந்தால், ஜி. மீனாட்சி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 65ரூ. விண்வெளி, […]

Read more

ஓடாத குதிரைகள்

ஓடாத குதிரைகள், கற்பக வித்யா பதிப்பகம், சென்னை, விலை 70ரூ. நாடகங்கள் நம் கண்முன் நடப்பவை, ஆனால் வானொலி நாடகங்கள் நம் செவிகளின் வழியே பாய்ந்து, காட்சிகளை நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துபவை. ஆகவேதான் வானொலி நாடகம் என்பது, காற்றில் வரையப்படுகிற ஓவியம் என்று வர்ணிக்கப்படுகிறது. இதை எழுதுவதற்கு மிகுந்த ஆற்றல் வேண்டும். வானொலி அண்ணா என்று புகழ்பெற்ற என்.சி. ஞானப்பிரகாசம், வானொலி நாடகங்கள் எழுதுவதில் மிகுந்த ஆற்றலும், அனுபவமும் உள்ளவர். அதற்கு ஓடாத குதிரைகள் என்ற இந்த புத்தகத்தில் அடங்கியுள்ள […]

Read more

சங்கப்பாடல்களில் சாதி தீண்டாமை இன்ன பிற…,

சங்கப்பாடல்களில் சாதி தீண்டாமை இன்ன பிற…, வீ.எஸ். ராஜம்,மணற்கேணி பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 60ரூ. சாதி, தீண்டாமை என்ற கோட்பாடுகள் தமிழகத்தில் ஏன் தோன்றின, எப்போது தோன்றின? குறிப்பாக சங்க இலக்கியங்களில் அவை தென்படுகின்றனவா? என்ற தேடலின் முயற்சியே இந்நூல். சாதி, தீண்டாமை என்கிற கோட்பாடுகள் காலந்தோறும் எப்படி உருப்பெற்றன என்ற வகையிலும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நன்றி: குமுதம், 3/8/2015.   —- வல்லினம் நீ உச்சரித்தால், முகமது மதார், வாசகன் பதிப்பகம், சேலம், விலை 50ரூ. ஒவ்வொருவர் வாழ்க்கையின் ஏதாவது […]

Read more

ஏற்றுமதி இறக்குமதி வணிகம்

ஏற்றுமதி இறக்குமதி வணிகம், ஜஸ்டின் பால் ராஜீவ் அசேர்கர் , தமிழில் லயன் எம். சீனிவாசன், கற்பகம் புத்தகாலயம், சென்னை, விலை 250ரூ. ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் குறித்து ஜஸ்டின் பால் ராஜீவ் அசேர்கர் எழுதிய நூல். இதைத் தமிழில் லயன் எம்.சீனிவாசன் மொழிபெயர்த்துள்ளார். அயல்நாட்டு வர்த்தக நிறுவனங்களின் கட்டமைப்பு, இறக்குமதி ஏற்றுமதி ஆவணங்களை தயாரிக்கும் முறை, சுங்க இலாகாசெயல்பாடுகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து பற்றி விரிவாக விளக்கியுள்ளார். ஏற்றுமதி இறக்குமதி வணிகம் சவால்கள் நிறைந்த பணியாகும். அதில் ஈடுபடுவோர் கையாள வேண்டிய நெறிமுறைகள் […]

Read more

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான அடிப்படைகள்

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான அடிப்படைகள், டாக்டர் இரா. விருத்தகிரி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. குழந்தை வளர்ப்பு பற்றிய சிறந்த புத்தகம் இது. குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும், அவர்களுக்கு வரக்கூடிய நோய்கள் எவை, அதற்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும், அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய சத்துள்ள உணவுகள் எவை என்பதையெல்லாம் விவரமாகப் படங்களுடன் விளக்குகிறார், டாக்டர் இரா. விருத்தகிரி.  ஆண், பெண் குழந்தைகள் வாலிப வயதை அடையும்போது, அவர்கள் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், அக்காலக்கட்டத்தில் பெற்றோர்களின் கடமை ஆகியவை பற்றியும் ஆசிரியர் விளக்குகிறார். அளவிலும், […]

Read more

கவிப்பேரரசு

கவிப்பேரரசு, தொகுப்பாசிரியர் கவிஞர் சி. சித்ரா, காவ்யா, சென்னை, விலை 150ரூ. கவிப் பேரரசு வைரமுத்துவின் மணி விழாவையொட்டி, 60 கவிஞர்கள் தீட்டிய கவிதைகள் கொண்ட நூல். கவிஞர்கள் ஒவ்வொரு கோணத்தில் கவிஞருக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர். இந்தப் புத்தகத்தின் தொகுப்பாசிரியர் கவிஞர் சி.சித்ரா, தன் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். கவிதைகள் கவிஞரைப் பாராட்டுவதுடன் மட்டுமல்லாது, தமிழன் சிறப்பையும் எடுத்துக்காட்டுகின்றன. தமிழ் அன்னைக்கு சிறந்த பொன்னாபரணம் இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 5/8/2015.   —- தலைவர் தளபதி பிள்ளைத்தமிழ், வள்ளுவர் பதிப்பகம், சென்னை, விலை […]

Read more

தலைமறைவு காலம்

தலைமறைவு காலம், யவனிகா ஸ்ரீராம், நற்றிணை பதிப்பகம். விடுதலைக்கு பின் மிஞ்சியது என்ன? யவனிகா ஸ்ரீராம் எழுதிய தலைமறைவு காலம் என்ற கவிதை நூலை சமீபத்தில் படித்தேன். நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நவீனத்துவம், பின் நவீனத்துவம் பற்றிய கவிதைகள் இவை. நவீனத்துவம் மற்றும் பின் நவீனத்துவம் பற்றி புரியாத பலவற்றை, மக்கள் மத்தியில் கொண்டு செல்ல, இந்த கவிதை நூலாசிரியர் தலைமையில், இளம் கவிஞர்கள் செயல்படுகின்றனர். மக்கள் குவியும் பொது நிகழ்வுகள், புத்தக கண்காட்சிகளில் இவர்களின் கவியரங்க மேடை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விடுதலைக்கு […]

Read more
1 28 29 30 31 32 57