தேவதையைத் தொலைத்தவன்

தேவதையைத் தொலைத்தவன், பஞ்சவர்ணம் பதிப்பகம், புதுக்கோட்டை மாவட்டம், விலை 100ரூ. காதல் கவிதைகள் கொண்ட புத்தகம். கவிஞர் ஏம்பல்ராஜா, தேவதாசாகவே மாறி காதல் கீதங்களை இசைக்கிறார். மாதிரிக்கு சில- நீ அலை! வந்ததும் போய்விட்டாய்! நான் கரை! எங்கே போவது? என் கண்ணீர் வற்றிவிட்டது! உன் கண்களைக் கொஞ்சம் தா! அழுதுவிட்டுத் தருகிறேன். புத்தகம் முழுவதும் ஆர்ட் காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது. பக்கத்துக்குப் பக்கம் படங்கள். விலை 100ரூ. ஏம்பல்ராஜா ஒரு கல்லூரிப் பேருந்தும் சில காதல் தேவதைகளும் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இதுவும் காதல் […]

Read more

டாவின்சி கோட்

டாவின்சி கோட், டான் பிரவுன், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, விலை 599ரூ. புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. பாரிஸ் நகர அருங்காட்சியகத்தில் பணிபுரியும் ஜாக்குவஸ் மர்மமான முறையில் தாக்கப்படுகிறார். அவர் இறக்கும் முன், தனது வயிற்றில் சில சின்னங்களையும் ரகசிய எண்ணங்களையும் ரத்தம் கொண்டு எழுதிவைத்து இறக்கிறார். இதனைத் தொடர்ந்து வரும் பரபரப்பான சம்பவங்கள், புதிர்கள், மர்மங்கள் ஆகியவற்றோடு சில வரலாற்று சான்றுகளாலும் சுவாரசியமாக பின்னப்பட்டுள்ள இந்த நாவல், உலகம் முழுவதும் பாராட்டுக்களையும் பலத்த எதிர்ப்புகளையும் ஒரு சேரக் குவித்து சாதனை படைத்தது. […]

Read more

மன்மதக் கொலைகள்

மன்மதக் கொலைகள், தெக்கூர் அனிதா, குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, சென்னை, பக். 144, விலை 99ரூ. துப்பறியும் நாவல்களைப் படிப்பதற்கு என்றே ஒரு வாசகர் வட்டம் உள்ளது. கதையில் வரும் சம்பவங்கள், அதில் இடம் பெறும் மாந்தர்கள், திருப்புமுனைகள், கிளைமாக்ஸ் அத்தனையும் அன்றாட வாழ்வில் நடந்தவை போலவே தோன்றுவதால் கூடுதல் ஈர்ப்பு எழுகிறது. படிப்போர் ஒன்று நினைக்க அதன் திருப்புமுனைகளும் கிளைமாக்ஸும் அமைந்துள்ளன. மூன்று கொலைகளைச் செய்துவிட்டு தப்பிக்க முயலும் தயாளனை, காவல்துறையினர் பொறிவைத்துப் பிடிக்கும் ஒவ்வொரு கட்டமும் ஒரு திருப்புமுனைதான். 2007ல் சென்னையில் […]

Read more

ஃபேஸ்புக் பக்கங்கள்

ஃபேஸ்புக் பக்கங்கள் (தொகுதி 1), தொகுப்பு சுப்ரஜா, கலைஞன் பதிப்பகம், பக். 416, விலை 312ரூ. முக நூலில் இருப்பவர்களுக்குத்தான் அந்த சுதந்திர தாகம் புரியும். இது வெட்டி வேலை என்று ஸ்டேட்டஸ் போடுவதில்கூட ஒரு கருத்து இருக்கும். அல்லது உண்மை இருக்கும். நிறையப் பேர் துணிச்சல் மிக்கவர்களானதே ஃபேஸ்புக் வருகைக்குப் பிறகுதான். பிரபலமாக இருந்தால்தான் எழுத முடியும் என்ற பெர்லின் கோட்டையை உடைத்தெறிந்தது ஃபேஸ்புக்தான். கவிதை, சிறுகதை, நாவல், அரசியல், நாடகம், பாட்டு, காமெடி, விமர்சனங்கள், சர்ச்சைகள், சண்டைகள், சமையல்கள், சோதிடம், பக்தி […]

Read more

எரியத் துவங்கும் கடல்

எரியத் துவங்கும் கடல், அ. வெண்ணிலா, அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 275ரூ. எளிமையான வார்த்தைகள் ஆனால் அவற்றில் ஏராளமான எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் கருத்துகள் என்று இந்த புத்தகம் முழுவதும் உள்ள அனைதுது கவிதைகளும் படித்து சுவைக்கும் வண்ணம் ஆக்கப்பட்டுள்ளன. இந்த கவிதைகள் நான் வாழ்வதின் சாட்சியங்கள் என்று அதன் ஆசிரியர் அ. வெண்ணிலா கூறுவதை மெய்ப்பிக்கும் வகையில் ஒவ்வொரு கவிதையிலும் உள்ளத்து உணர்ச்சிகள் பிரவாகம் எடுத்து ஓடுகின்றன. கவிதைகள் என்றவுடன் சற்று தயங்குபவர்களைக்கூட கட்டிப்போடும் வகையில் சிறிய வரிகளில் சிறந்த கருத்துக்களையும் […]

Read more

வர்மக் கலையின் கர்ப்பிணி அடங்கல்

வர்மக் கலையின் கர்ப்பிணி அடங்கல், டிராகன் டி. ஜெய்ரா4, ஸ்ரீகாளீஸ்வரி பப்ளிகேஷன்ஸ், கோவை, விலை 150ரூ. பெண்களின் உடலில் அமைந்துள்ள அற்புதமான வர்மங்கள் கர்ப்பபையுடன் சம்பந்தப்பட்டு உள்ளன. அந்த வர்மங்களை இயக்குவதன் மூலம் மாதவிடாய் கோளாறு பிரச்சினை நீங்குகிறது. கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை சுகப்பிரசவமாக பிறக்கிறது. இப்படி பெண்களுக்கு நன்மை பயக்கும் பல தகவல்களை எளிமையான முறையில் இந்த நூல் விளக்குகிறது. பெண்களுக்கு பெரிதும் பயன்தரக்கூடிய புத்தகம் இது. நன்றி: தினத்தந்தி, 20/5/2015.   —- துளிர் விடும் விதைகள், வி. கிரேஸ் பிரதிபா, […]

Read more

தமிழ்ச் சுரபி

தமிழ்ச் சுரபி, இலக்கியப்பீடம், சென்னை, விலை 450ரூ. அமுத சுரபியின் ஆசிரியராக இருந்த விக்கிரமன் 1948ம் ஆண்டு முதல் 1958ம் ஆண்டு வரை, 10 ஆண்டுகளில் பிரசுரித்த சிறந்த கதை, கட்டுரை, கவிதைகளைத் தொகுத்து தந்துள்ளார். தமிழ்த்தென்றல், திரு.வி.க., ரா.பி.சேதுப்பிள்ளை, கி.ஆ. பெ. விசுவநாதம், யோசி சுத்தானந்த பாரதியார், எஸ். வையாபுரிப்பிள்ளை, க.நா. சுப்பிரமணியம், தி.க.அவிநாசிலிங்கம் செட்டியார், கி.வா. ஜெகந்நாதன் உள்பட 44 பேர்களின் கட்டுரைகளும், உமாசந்திரன், குசுப்பிரியை, எம்.எஸ். கமலா, சரோஜா ராமமூர்த்தி, கரிச்சான் குஞ்சு, பெ. தூரன், பி.எஸ். ராமையா, லா.ச. […]

Read more

லண்டாய்

லண்டாய், ச. விஜயலட்சுமி, தடாகம் வெளியீடு, சென்னை, விலை 120ரூ. லண்டாய் எனும் போர்வாள் மாறுபட்ட, வீரிய மிக்க ஒரு கொள்கை மேலோங்கும்போது ஆதிக்க வெறி, ஆக்கிரமிப்புகளெல்லாம் தூளாகி, சுயசார்புள்ள ஒரு நாடாக ஒருநாள் ஆப்கன் மாறலாம். ஆனால் அந்நாட்டுப் பெண்கள் மீதான ஆணாதிக்க ஆக்கிரமிப்பு? விடை தெரியாத கேள்வி இது. ஆப்கன் பெண்களின் துயர வாழ்வு வாய்மொழிப் பாடல்களாகவும், கவிதைகளாகவும் பதிவாகிக் கிடக்கிறது. அதுதான் லண்டாய். மிகத் தொன்மையான இலக்கியம். உரிமைகைள நிலைநாட்டப் போராடும் ஆப்கன் பெண்களுக்கான கைவாள். திட்டமிட்டுப் பெண்களைச் சமயலறைக்குள் […]

Read more

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், என்.சி. ஞானப்பிரகாசம், கற்பக வித்யா பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. வானொலி அண்ணா என்று புகழ்பெற்ற என்.சி. ஞானப்பிரகாசம், மருத்துவத்தை அடிப்படையாக வைத்து எழுதிய நாடகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இவை வெறும் பொழுதுபோன்னு நாடகங்கள் அல்ல. ஒவ்வொரு நோயும் எதனால் வருகின்றன, அதற்கு சிகிச்சை என்ன, நோய் வராமல் தடுப்பது எப்படி என்பதை உணர்த்துகின்றன. எனவே, இதை ஒரு நாடக நூல் என்று கூறுவதைவிட, மருத்துவக் களஞ்சியம் என்று கூறுவதே பொருந்தும். மிகப் பயனுள்ள நூல். நன்றி: […]

Read more

இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?

இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?, கவி காமு.ஷெரீப், கலாம் பதிப்பகம், சென்னை, விலை 35ரூ. இஸ்லாம் இந்து மதத்திற்கு மட்டுமின்றி வேறெந்த மதத்திற்கும் விரோதி அல்ல என்பதையும், வாள் கொண்டு இஸ்லாம் பரப்பப்படவில்லை என்பதையும் கவி காமு.ஷெரீப் ஆதாரங்களுடன் விளக்குகிறார். இந்து – முஸ்லிம் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நூல். நன்றி: தினத்தந்தி, 6/5/2015.   —- ஆங்கிலத்தில் கு. அழகிரிசாமியின் சிறுகதைகள், சாகித்ய அகாடமி, சென்னை, விலை 130ரூ. மறைந்த தமிழ் எழுத்தாளர் கு. அழகிரிசாமி, சிறுகதைகள் எழுதுவதில் புகழ் பெற்றவர். அவர் எழுதிய […]

Read more
1 30 31 32 33 34 57