வெயிலில் நனைந்த மழை

வெயிலில் நனைந்த மழை, ச. மணி, இடையன் இடைச்சி நூலகம், கோவை, பக். 96, விலை 100ரூ. கவிதைகளை வெயிலில் நனையவிடலாம், மழையில் காயப் போடலாம், அது இலக்கணப் பிழையோ, சொற்பிழையோ ஆகாது. கவிதையின் கொண்டு கூட்டுப் பொருள்கோளில் பொருட்பிழை நிகழாது கவிஞன் நிகழ்த்திக் காட்டும் உத்தி அது. கவிஞர் ச. மணி வெயிலில் நனைந்த பிறகும் மழை மழையாகவே இருக்கிறது என்பதை நம்முன் காட்சிப்படுத்துவது அனுபவ வெளிப்பாடு. நூற்றாண்டினாலும் பக்தர்களின் பாதங்களை அலம்பி விடும் தெப்பக்குளத்து மழை கவிஞரின் படிமக் காட்சிக்கு சாட்சி. […]

Read more

விநாடி வினா விடை

விநாடி வினா விடை, தனலெட்சுமி பதிப்பகம், சென்னை, விலை 275ரூ. குழந்தைகள் பயனுள்ள முறையில் பொழுதைப் போக்கவும், அறிவை வளர்த்துக் கொள்ளவும் வாண்டு மாமா எழுதியுள்ள நூல். பல்வேறு ஓவியங்கள், அதில் மாறுப்டட ஓவியங்களை குழந்தைகள் அடையாளம் காண வேண்டும் என்பது ஒரு வகை. குறிப்பிட்ட இடத்தை அடைய வழிகாட்ட வேண்டும் என்பது இன்னொரு வகை. இப்படிப் பல போட்டிகளை வைத்து அதற்கான விடைகளையும் கூறுகிறார். மேலும் குழந்தைகள் மனதைக் கொள்ளை கொள்ளும் 84 புதிர் விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 22/7/2015. […]

Read more

வெயிலில் நனைந்த மழை

வெயிலில் நனைந்த மழை, ச. மணி, கோவை, விலை 100ரூ. மழையுடன் ஒரு பந்தம் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்று மழையின் கருணையைப் பாடிச் சென்றான் தமிழ் மறை தந்த வள்ளுவன். மழையைப் பாடாத கவிஞனே இல்லை. கவிஞர்களுக்கும் மழைக்குமான உதற முடியாத இந்த பந்தத்தை ச. மணியின் கவிதைகள் நமக்குப் பரிமாறுகின்றன. மழையையும் அது தந்துவிட்டுப்போன அனுபவங்களையும் மீட்டெடுக்கும் கவிதைகளால் நிறைந்த இத்தொகுப்பில், நனைந்தும் நனையாத நினைவுகளால் உறைந்து நிற்கும் காட்சிகள் கம்பீரமான எளிமையுடன் சடசடக்கின்றன. […]

Read more

கவிதையும் கத்தரிக்காயும்

கவிதையும் கத்தரிக்காயும், விக்ரமாதித்யன், நக்கீரன் வெளியீடு, சென்னை, விலை 90ரூ. கவியின் பெருமூச்சு கவிதையும் கத்தரிக்காயும் என்ற கவிஞர் விக்கிரமாதித்தனின் கவிதைத் தொகுப்பில் 1990-ல் இருந்து 2010 வரை பல்வேறு இலக்கிய சிற்றிதழ்கள், பேரிதழ்களில் வெளிவந்த கவிதைகள் இடம்பெற்றுள்ளன. எளிமையான நீரோடை போன்ற கவிதைகள். நம்பிக்கையும் அவநம்பிக்கையுமாக மாறிமாறி பிரதிபலித்துச் செல்கறி காலக்கண்ணாடி. சமகாலத்தின் முகங்களை விமர்சிக்கவும் வியக்கவும் செய்கிற மொழியின் ஜாலம். தென்னை வளர்த்தால் துட்டுமேல் துட்டு தமிழ்க்கவிதை வளர்த்தால் ததிங்கிணத்தோம் தாளம்தான் – என்று 1990-ல் எழுதும் கவிஞர், கத்தரிக்காய்க்குத் தரும் […]

Read more

புறநானூறு மூலமும் உரையும்

புறநானூறு மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சாமிநாதையர்., வெளியீடு டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை, விலை 400ரூ. முச்சங்கத்துள் கடைசி சங்க காலப் புலவர்கள் ஆக்கிய எட்டுத்தொகை நூல்கள் எட்டாவதாகப் போற்றப்படுவது புறநானூறு. காலத்தால் அழியும் நிலையில் இருந்த இதனை, தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் தேடிக் கண்டுபிடித்து புதுப்பித்து, பலவகை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் 1894-ம் ஆண்டு முதல் முறையாக வெளியிட்டார். தற்போது வெளியாகி இருக்கும் இந்த நூலில் புறநானூற்றுப் பாடல்கள் அனைத்தும் எளிமையான உரையுடன் இடம் பெற்று இருப்பது, படிக்க சுவையாகவும், மிக்க பயன் உள்ளதாகவும் […]

Read more

கருநாவு

கருநாவு, ஆழியாள், மாற்று வெளியீடு, சென்னை, விலை 60ரூ. புலம்பெயர் வாழ்வியல் வலிகள் புலம்பெயர் இலக்கியங்களுள் பெண் படைப்புகளுள் தன்னை முனைப்புடன் பதிவு செய்துகொள்ளும் கவிதைகள். எவ்வளவு தவிர்த்தும் சில கவிதைகள் இனம் புரியாத ஒரு உந்துதலை, ஆர்மூடுகல் மனநிலையை மீண்டும் மீண்டும் என்னுள் ஏற்படுத்துகின்றன. அதனாலே அவை ஏதோ ஒரு உத்வேகத்தோடு சடுதியாக எழுத்தில் பதியப்படுகின்றன. சில கவிதைகள் பள்ளிக் குழந்தைகள் போன்று தொடர்ந்து பேசிக்கொண்டே வருவதால் ஒரு சிட்டுக்குருவி போலே தொடர்ந்து கண்ணாடியைக் கொத்திக் கொண்டே இருப்பதால் அவை தரும் செல்லத் […]

Read more

சிறகை விரிக்கும் மங்கள்யான்

சிறகை விரிக்கும் மங்கள்யான், தந்தி பதிப்பகம், பக். 256, விலை 180ரூ. கையருகே செவ்வாய் 2013ம் ஆண்டு நவம்பர் 5-ந் தேதி பூமியில் இருந்து மங்கள்யான் செயற்கைக்கோள், செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. இந்த நிகழ்வுகளை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, அறிவியல் திறனோடு எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் வகையில் நேர்முக வர்ணனை செய்வதைப் போல தினத்தந்தியில் தொடர் கட்டுரையாக எழுதி வந்தார். செவ்வாய்ப் பயணம் ஏன்? செயற்கைக்கோள் பற்றிய தகவல்கள், செயற்கைக்கோளின் வடிவமைப்பு, பயண வழியைத் தேர்ந்தெடுப்பது எப்படி? செவ்வாய் கிரகத்தில் […]

Read more

தடித்த கண்ணாடி போட்ட பூனை

தடித்த கண்ணாடி போட்ட பூனை, போகன் சங்கர், உயிர்மை பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 130ரூ. அவர்களை மன்னியும் அவர்கள் தாம் செய்வது (எழுதுவது) இன்னதென்று அறியாமல் செய்கின்றனர். அவர்களை மன்னியும்! சிறுவயதுதொட்டு அவரை நான் பார்த்திருக்கிறேன். வயது ஐம்பதைத் தாண்டியிருக்கும். அவரிடம் ஒரு சைக்கிள் உண்டு. அந்த சைக்கிளை அவர் ஒட்டி நான் பார்த்ததே கிடையாது. ஏனெனில் அவருக்கு சைக்கிள் ஓட்டவே தெரியாது. வாழ்நாள் முழுக்க அவர் அந்த சைக்கிளை உருட்டிக் கொண்டே திரிந்தார். மற்றவர் ஓட்டினால், பின்னால் உட்கார்ந்திருப்பார். போதையான […]

Read more

உள்முகமாய் ஒரு பயணம்

உள்முகமாய் ஒரு பயணம், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. தியானக் கூடங்களில் தனது சீடர்கள் மற்றம் நண்பர்களுக்கு, ஓஷோ வழங்கிய உரைகளின் தொகுப்பு நூல். காலையும் மாலையும் மேற்கொள்ளும் தியான வழிமுறைகளை ஒஷோ வரையறுத்து தந்துள்ளார். மனக்கசடுகள் நீங்கும்போதுதான் மனத்தூய்மை தென்படும் என்பது அவரது போதனை. தூசி படிந்த கண்ணாடியாய் மனம் இருக்கக்கூடாது. அது, துடைக்கப்பட்ட பளபளப்பான கண்ணாடியாய் ஆக வேண்டும். அப்போதுதான் அதில் இறைமை பளபளவென்று பிரதிபலிக்கும் என்கிறார் ஓஷோ. பல குட்டிக் கதைகளை புத்தகமெங்கிலும் தூவி, ஆழ்நிலை வாழ்க்கை வாழத் […]

Read more

சாதேவி

சாதேவி, ஹரன்பிரசன்னா, மயிலை முத்துக்கள், சென்னை, பக். 360, விலை 300ரூ. வெற்று ஆரவாரங்கள், தேவையற்ற அலங்காரங்கள் இல்லாத சிறுகதைகளின் தொகுப்பு. கதைக்குக் கதை நம் அண்டைவீட்டு நிகழ்வுகளே கருக்கெண்டுள்ளது. மேல்வீடு முதல் தட்டான் வரையான 34 கதைகளும் நம் சக மனிதர்களின் அடையாளங்களைத் தாங்கி வந்துள்ள கதைகள். மேல் வீடு சங்கரியாகட்டும் கௌவியாகட்டும், மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பையனாகட்டும் அத்தனை பேரும் இந்த சமூகத்தின் ஏதோ ஒரு சிக்கலில் விடுபட முடியாத புதிர்களாகவே உள்ளனர். சிவபாஸ்கரன், லக்ஷ்மி அக்கா, அனு, விஜயலட்சுமி, சீனிவாசன் […]

Read more
1 29 30 31 32 33 57