ஏன் என்னைக் கொல்கிறீர்கள்

ஏன் என்னைக் கொல்கிறீர்கள், க. இராமசாமி, அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம், பக். 72, விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-197-9.html கவிஞர் க. இராமசாமி இணையத்தில் எழுதிய கவிதைகளின் தொகுப்பே ஏன் என்னை கொல்கிறீர்கள்?. நவீன வாழ்க்கை மனிதர்களை இடம் மாற்றிக்கொண்டே உள்ளது. குறிப்பாக கிராமங்களிலிருந்து பெரு நகரங்களுக்கு இப்படி நகரங்களின் இடுக்குகளில் வாழ நேர்ந்துவிட்ட மனிதர்களின் கனவுகள், ஆசைகள், தனிமையின் துயரங்கள், பால்ய கால நினைவுகள், பொய்யான சுகங்கள், காணாமல் போன முரட்டுத்தனமான அன்புகள், அன்பற்றவர்களின் துரோகங்கள், […]

Read more

கருநாவு

கருநாவு, ஆழியாள், மாற்று வெளியீடு, சென்னை, விலை 60ரூ. ‘எங்கள் நாள் வரும்’ ஈழத் தமிழப் பெண் கவிஞர் ஆழியாளின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு ‘கருநாவு’. இரண்டாம் தொகுப்பு வெளிவந்து ஆறு ஆண்டுகள் கழித்து வெளிவந்திருக்கிறது இந்தத் தொகுப்பு. கனவிலும் நனவிலும் சதா தன்னைப் பின்தொடர்ந்தவற்றுக்கு இந்தத் தொகுப்பின் வாயிலாக வரிவடிவம் கொடுத்திருப்பதாக ஆழியாள் குறிப்பிடுகிறார். ஆழியாள் மொழிபெயர்த்த ஆஸ்திரேலியக் கவிஞர்களின் கவிதைகளும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. வாழ்வு குறித்து இந்த உலகம் கட்டமைத்திருக்கும் பிம்பங்களைக் கேள்விக்குட்படுத்துகிறார் ஆழியாள். பிறப்பின் பொருள் என்ன? […]

Read more

கவி.கா.மு.ஷெரீப் கவிதைகள்

கவி.கா.மு.ஷெரீப் கவிதைகள், காவ்யா, சென்னை, விலை 600ரூ. கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், சினிமா பாடலாசிரியர், பேரூரையாளர் என பன்முகத் திறமை கொண்டவர் கவி.கா.மு.ஷெரீப். அவர் எழுதிய 208 கவிதைகள், ‘மச்சகந்தி’ என்ற குறுங்காவியம், ‘நபியே எங்கள் நாயகமே’ மற்றும் 77 திரைப்பாடல்கள் காண்ட அரும் தொகுப்பு இது. இந்த நூலை ‘காவ்யா’ சண்முக சுந்தரம் தொகுத்துள்ளார். தமிழுக்காவும், தமிழ்நாட்டுக்காகவும் உழைத்தவரும், அரசியல், பத்திரிகை, சினிமா, சீறாப்புராண உரை என பல்வேறு தளங்களில் வெற்றிக்கொடி நாட்டியவருமான கவிஞரின் நூற்றாண்டையொட்டி இந்த நூல் வருவது சிறப்புக்குரியது. நன்றி: […]

Read more

தேவதைகளின் வீடு

தேவதைகளின் வீடு, எம்.ஸ்டாலின் சரவணன், அகரம் வெளியீடு, தஞ்சாவூர், பக். 88, விலை 60ரூ. கவிஞருக்கு நிகழ்ந்த அனுபவங்களே இக்கவிதை ஊர்வலம் என்பதை கவிதைகளின் வரிகள் நமக்கு நினைவூட்டுகின்றன. அவருக்குள் எழும் கோபதாபங்களையும் மகிழ்ச்சிகளையும் சமூக அக்கறைகளையும் இறங்கி வைக்கும் சுமைதாங்கியாக இக்கவிதைகளை அவர் பயன்படுத்தியுள்ளார். “ஆறு கொலை தடயம் சிக்கியது மணல் லாரி தடம்” போன்ற கவிதைகள் அந்த ரகமே. தன் வாழ்வில், தன் நண்பர்களின் வாழ்ந்த நடந்த நிகழ்வுகளை சமுதாயம் உணரும் விதத்தில் அதன் போக்கிலேயே சென்று உண்மையாகப் பேசுவதால் இக்கவிதைகள் […]

Read more

வெள்ளி இரவொன்றில்

வெள்ளி இரவொன்றில், செல்மா மீரா, தமிழ் அலை, சென்னை, பக். 96, விலை 80ரூ. கவிஞர் மீராவின் மகள் செல்மா மீரா. தந்தையைப் போலவே தன்னை ஒரு கவிஞராக அடையாளப்படுத்தி வெளியிட்டிருக்கும் இரண்டாம் தொகுப்பு இந்நூல். பெரும்பாலும் காதலின் சாரத்தையே கவிதைகளாக்கி பூக்க வைத்திருக்கிறார். ‘நீ என் நிழலாக இருந்தால் இந்த பூமியின் பாரங்களை எளிதாக நான் சுமப்பேன்’ – காதலின் உன்னதமே இதுதான். மௌனத்திற்கும் ஒரு சப்தம் தருகிறார். காற்றின் கரங்களால் நம்மை தீண்டிப்பார்க்க வைக்கிறார். பல நூறு பௌர்ணமிகளை ஒன்று சேர்த்து […]

Read more

பாலச்சந்திரனின் இறுதியுணவு

பாலச்சந்திரனின் இறுதியுணவு, சுகுணாதிவாகர், பட்டாம்பூச்சி பதிப்பகம், சென்னை, வலை 50ரூ. நம் காலத்தின் கவிதைகள் சமகாலக் கவிதை அழகியல் மற்றும் கூர்ந்த அரசியல் உணர்வு இரண்டும் முயங்கும் கவிதைகளை எழுதிவருபவர் சுகுணாதிவாகர். பாலச்சந்திரனின் இறுதியுணவு என்னும் இந்த இரண்டாம் தொகுப்பில் இடையிடையே மிகவும் அந்தரங்கத் தொனியிலான கவிதைகளையும் எழுதியிருக்கிறார். சென்ற நூற்றாண்டில் எழுந்த தேசம், தேசியம், மொழி சார்ந்து உருவான அனைத்து லட்சியவாதங்களையும் கேள்வி கேட்கும் கவிதைகளாக இவரது கவிதைகள் இருக்கின்றன. எல்லாப் போர்களிலும், ஒவ்வொரு மண்ணும் கைப்பற்றப்படும்போதோ அழியும்போதோ அழிவது பெண் உடல்கள்தான் […]

Read more

மகாகவி பாரதியார் கவிதைகள்

மகாகவி பாரதியார் கவிதைகள், ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. மகாகவி பாரதியார் கவிதைகள், வசன கவிதைகள் அடங்கிய முழுத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. 664 பக்கங்கள் கொண்ட புத்தகத்தின் விலை 300ரூ. மகாகவி பாரதியார் எழுதிய கட்டுரைகள் கொண்ட நூலும் வெளிவந்துள்ளது. 440 பக்கங்கள் கொண்ட புத்தகம். விலை 275ரூ. பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் என்ற நூலும் வெளியிடப்பட்டுள்ளது. 480 பக்கங்கள். விலை 275ரூ. மேற்கண்ட புத்தகங்களின் பதிப்பாசிரியர் டி. சுப்புலட்சுமி. 3 நூல்களையும் வெளியிட்டோர் ஜீவா பதிப்பகம். நன்றி: தினத்தந்தி, 31/12/2014.   […]

Read more

பாரதியார் ஆய்வுக்கோவை

பாரதியார் ஆய்வுக்கோவை, கங்கை புத்தகநிலையம், சென்னை, விலை 250ரூ. நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் என்ற கொள்கையோடு உய்வகை காட்டும் உயர் தமிழுக்குப் புதுநெறி காட்டிய இருபதாம் நூற்றாண்டின் ஈடிணையற்ற தமிழ்க்கவிஞர் மகாகவி பாரதியார். அவரது 125வது பிறந்த நாள் விழாவையொட்டிச் சிறப்பு வெளியீடாக வந்தது இந்த நூல். இதில் 80 அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. பாரதியாருடைய படைப்புகளைப்பற்றி மதிப்பீடாகக் கட்டுரைகள் அமைந்துள்ளன. அவரது கவித்திறம், உரைத்திறம், உவமைநலம், கற்பனை வளம், அணிநயம், பாரதியாரின் வரலாறு, வாழ்வியல் அனுபவங்கள், அவரது அரசியல், ஆன்மிக, […]

Read more

கிளைக்குத் திரும்பும் இலைகள்

கிளைக்குத் திரும்பும் இலைகள், கவிஞர் பாரியன்பன், அகநி வெளியீடு, வந்தவாசி, பக். 64, விலை 30ரூ. பட்டுப்போயின மரங்கள்! பாட்டெடுக்கும் குயில்கள்! மரம் பட்டுப்போனதற்கு குயில் எழுப்பும் பாட்டு, நம்மையும் அந்த சோகவலிக்குள் இழுத்துப் போட்டுக்கொள்கிறது. இதுதான் கவிதை. இதுதான் கவிதையின் உயிர். பாரியன்பனின் ஹைக்கூ கவிதைகளுக்கு எளிதில் நம்மை ஆட்கொள்ளும் சக்தி உண்டு என்பதற்கு இஃதோர் உதாரணம். அவர் கையாளும் குறியீடுகள், படிமங்கள், காட்சிப் புனைவுகள் நம்மை கவிதைகளிடம் நெருக்கமாகக் கொண்டு செல்கின்றன. பாசங்கற்ற, போலிகளற்ற பரவசம் நிறைந்த கவிதைகளின் தொகுப்பு. நன்றி: […]

Read more

மனித குல ஆபத்துக்களைத் தவிர்ப்பது எப்படி

மனித குல ஆபத்துக்களைத் தவிர்ப்பது எப்படி, ச. அய்யாதுரை, தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 104, விலை 80ரூ. வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனின் மரணம் இயற்கையானதாக இருக்க வேண்டும். விபத்துகளாலோ, இயற்கைச் சீற்றங்களாலோ, பகையாலோ, தற்கொலையாலோ, மனிதன் மரணமடையக்வடாது. மரணத்தை ஏற்படுத்தும் மனிதன் ஆபத்துகளிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டுள்ள நூல். நீர், நெருப்பு, மின்சாரம் ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகள், இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள், பிற உயிரினங்களால் மனிதனுக்கு ஏற்படும் ஆபத்துகள், பிற மனிதர்களால் ஏற்படும் ஆபத்துகள், மனிதன் தனக்குத் தானே […]

Read more
1 32 33 34 35 36 57