தெய்வத்தமிழ் மரபும் மாட்சியும்

தெய்வத்தமிழ் மரபும் மாட்சியும், கண்ணகி கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், தஞ்சாவூர், விலை 500ரூ. திருக்கோவில்கள் வளர்த்த தெய்வத் தமிழ் அனைத்துல 11வது ஆய்வு மாநாட்டில் தமிழ் அறிஞர்கள், பல்துறை பேராசிரியர்கள், புலவர்கள், சமய அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களால் வாசித்து அளிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். திருக்கோவில்களில் வளர்ந்த தெய்வத்தமிழ், தெய்வத்தமிழ் இலக்கியங்கள், திருக்கோவில்கள் வளர்த்த மரபுக் கலைகள், திருக்கோவில்களின் கலையும் மாட்சியும் ஆகிய தலைப்புகளின் கீழ் 91 கட்டுரைகள் கருத்துக் கருவூலமாக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 4/6/2014.   —-   […]

Read more

தியாகசீலர் கக்கன்

தியாகசீலர் கக்கன், முனைவர் இளசை சுந்தரம், மதுரா வெளியீடு, பக். 240, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-232-1.html காமராஜரைப் பற்றி அருமையான நூல் எழுதிய பெரும் பேச்சாளர் இளசை சுந்தரம், கக்கன்ஜி பற்றி எழுதியுள்ள அபூர்வ நூல் இது. யார் யாருக்கோ நூல்கள் உள்ள இந்த நாட்டில் தன்னலமற்ற தேசத் தொண்டர் கக்கனுக்கு அதிக நூல்கள் இல்லையே என்பது என் ஆதங்கம் என்ற முன்னுரையுடன் துவங்கியுள்ள நூலாசிரியர், நூறு கட்டுரைகளாக தந்துள்ளார். கக்கன் பற்றி அவ்வளவாக பதிவுகள் […]

Read more

வியப்பூட்டும் விடுகதைகள் 1000

வியப்பூட்டும் விடுகதைகள் 1000, சி. இலிங்கசாமி, சங்கர் பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 35ரூ. விடுகதைகளை, சிந்தனையைத் தூண்டும் அறிவுத்திறன் மேம்பாடுப் பயிற்சி எனலாம். இந்த நூல், அந்த பயிற்சிக்கு உதவும் சுவாரஸ்ய விருந்து. நூலின் இருந்து சில விடுகதைகள், நோய் நொடியில்லாமல் நாளெல்லாம் மெலிகிறாள். அவள் யார்? விடை = தினசரி நாட்காட்டி. கல்லிலே சாய்க்கும் பூ, தண்ணீரில் மலரும் பூ, அது என்ன? விடை = சுண்ணாம்பு. கண்ணுக்குத் தெரியாதவன், தொட்டவனை விடமாட்டான். அவன் யார்? விடை = மின்சாரம். […]

Read more

கவிதைகளின் கால்தடங்கள்

கவிதைகளின் கால்தடங்கள், அகநாழிகை பதிப்பகம், சென்னை. தமிழின் முக்கியமான 50 கவிஞர்களின் 400 கவிதைகளை ஒரே நூலில் காணும் வாய்ப்பை வழங்கி இருக்கிறார் கவிஞர் செல்வராஜ் ஜெகதீசன். அந்திமழை இணையதளத்தில் வாரந்தோறும் வெளியான தொடர் இப்போது அகநாழிகை பதிப்பகம் மூலமாக நூல் வடிவம் பெற்றுள்ளது. நீண்டகால கவிதை வாசகர் ஒருவரின் நோக்கில் இந்த கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் படித்த கவிதைகளைத் தாண்டி சுதந்திரமாக எழுதப்படும் நவீன புதுக்கவிதை உலகுக்கு ஓர் இளைஞன் வருவது தற்செயலாக நிகழ்வது என்பதைவிட ஒரு வழிகாட்டியின் மூலமாகவே […]

Read more

உச்சிமுகர்

உச்சிமுகர், குழந்தை வளர்ப்பின் மெல்லிய தருணங்கள், விழியன், புக்ஸ் பார் சில்ட்ரன் வெளியீடு, பாரதி புத்தகாலயம், சென்னை. குழந்தைகளுக்காக கதைகள் எழுதிவரும் விழியன் தன் குட்டி மகளுடன் நடந்த நிகழ்வுகளைத் தொகுத்து எழுதியிருப்பதே உச்சி முகர் என்ற இந்நூல். குழந்தை வளர்ப்பின் மெல்லிய தருணங்களை எழுத்தின் மூலம் அவர் வாழ்ந்து பார்க்கிறார். இதை வாசிக்கும் ஒவ்வொரு தகப்பனும் தாயும் தங்கள் குழந்தைகளுடனான மெல்லிய தருணங்களை நினைவுகூர்வார்கள் என்பதே இதன் வெற்றி. தந்தை விழியனுக்கும் குழந்தை குழலிக்கும் இடையிலான தருணங்கள்தான் எத்தனை அழகாக வெளிப்பட்டிருக்கின்றன. குழலி […]

Read more

காதல் பறவைகள்

காதல் பறவைகள், ரேவதி ரவீந்திரன், வடிவம், திருச்சி, பக். 466. எழுதுவதற்கு ஒரு விஷயம் தேவை என்று தேடிப்போகிறவர்கள் அதிகம். ஆனால் அந்த விஷயமே இந்த நூலாசிரியரைத் தேடிவந்து எழுதச் சொன்னதுபோல், எல்லாவற்றையும் எழுதித் தள்ளியுள்ளார். படிக்க சுவாரஸ்யமாய் எழுதியதால் அத்தனை விஷயங்களுக்கும் உயிர் இருக்கிறது. குற்றாலம் அருவியில் குளித்ததையும், வீட்டுக்குப் பின்புறம் உள்ள குருவிகளையும், கார்த்திகை விரதத்தையும் எழுதியவர். கமல், சிவசங்கரி என்று கனமான பேட்டிகளையும் தந்துள்ளார். ஸ்ரீப்ரியாவை சமையலில் ஆர்வம் உண்டா என்று கேட்பவர், சுஜாதாவிடம் கம்ப்யூட்டர் பற்றியும் கேட்கிறார். தயக்கமில்லாத […]

Read more

வைரமணிக் கதைகள்

வைரமணிக் கதைகள், வையவன், தாரிணி பதிப்பகம், சென்னை, விலை 450ரூ. அற்புதமான சிறுகதைகளைத் தருகிறவர் வையவன். பல்வேறு காலகட்டங்களில் எழுதியுள்ள எண்பது சிறுகதைகளை வைரமணிக் கதைகள் என்ற மகுடமிட்டு ஒரே தொகுதியாக வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொன்றிலும் இயல்பாக இழையோடுகிறது அப்பழுக்கற்ற மனிதம். இந்தக் கதைதான் சிறந்தது என்று குறிப்பிட்டு ஒன்றைச் சொல்லமுடியாத சங்கடத்தை நியாயமான விமர்சகனுக்கு ஏற்படுத்துகிற தொகுப்பு இது. பெரும்பாலான கதைகளில் கிராமப்புற அழகுகளை மிகைப்படுத்தலில்லாமல் சொல்லியிருக்கும் ஆற்றல் வையவன் போன்ற வெகு சிலருக்கே கைவரக்கூடிய ஒன்று. மார்க்ஸ் ஆகப் பெயர் மாற்றம் பெற்ற […]

Read more

மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், விடியல் பதிப்பகம், கோயமுத்தூர், தொகுதி – 9,  விலை 2000ரூ. தத்துவார்த்த விசாரணைகளை வளர்தெடுத்தவை அமைப்புகளோ, கட்சிகளோ, பெரிய பல்கலைக்கழகங்களோ அல்ல. சில தனி மனிதர்களே அதைச் சாதித்தார்கள். அந்தவகையில் உலகின் திசையை மாற்றிய மாவோவின் படைப்புகளை முழுமையாகத் தமிழில் கொண்டுவந்த மகத்தான சாதனையை செய்துவிட்டு மண்ணில் புதைந்துவிட்டார் விடியல் சிவா. அவரது நினைவுகளைச் சுமந்து இந்த ஒன்பது தொகுதிகள் வெளிவந்து இருக்கின்றன. ஓர் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி ஒரு தேசத்துக்கு விடியலை விதைத்து கோடிக்கணக்கான மக்களுக்கு வசந்தத்தின் […]

Read more

தீப்பறவையின் கூடு

தீப்பறவையின் கூடு (பிற மொழி நவீன சிறுகதைகள்), தமிழில் திலகவதி, அம்ருதா பதிப்பகம், சென்னை, பக். 186, விலை 120ரூ. ஷ்ர்லி, சல்மான் ருஷ்டி, ஜான்ஸ்டேன் ஜான்சன், ஆன்டன் செகாவ், ஃப்ரான்ஸ் காஃப்கா, ஐஸக் பாஷெவிஸ், சிங்கர், பிரதிபாரே, பென் ஓக்ரி, லூவிஸ் எட்ரிச் ஆகிய பிறமொழி எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டிருக்கும் நூல். அந்நிய நாட்டின் மோகத்தால் தாய் நாட்டை பழிப்பதில் எதிர்காலத் தலைமுறை அடையும் பிரச்னைகள், சகோதரத்துவத்தின் மேன்மை, குழந்தைத் திருமணத்தின் சோகம், காதலின் பிரிவு, இப்படிப் பல கருத்துகளை […]

Read more

வடலூர் வாய்மொழி

வடலூர் வாய்மொழி, சாமி சிதம்பரனார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. To buy this Tami book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-8.html பேரறிஞர் சாமி சிதம்பரனார், பல சிறந்த ஆய்வு நூல்களையும், இலக்கிய சமய நூல்களையும் ஏறத்தாழ 60 நூல்களுக்கு மேல் எழுதிக் குவித்துள்ள மூதறிஞர். இந்நூல் 1959ல் எழுதி வெளிவந்த  நூல். ராமலிங்கர் வரலாறு எனத் துவங்கி 41 அத்தியாயங்களில் உண்மைக்கு வெற்றி என்ற தலைப்போடு நூல் நிறைவடைகிறது. வடலூர் வள்ளற் பெருமான் பாடல் வரிகள் மேற்கோள்களோடு, ராமலிங்கரது கொள்கைகளையும், […]

Read more
1 44 45 46 47 48 63