மலரும் நினைவுகளில் மக்கள் தலைவர்

மலரும் நினைவுகளில் மக்கள் தலைவர், கே. இளந்தீபன், கவிதா வெளியீடு, 8/55, மேற்கு சாலைத் தெரு, சுந்தரப் பெருமாள் கோவில், கும்பகோணம் 614208, பக். 104, விலை 100ரூ. மக்கள் தலைவர் மூப்பனார் பற்றிய நினைவுகளின் தொகுப்பு நூல். மூப்பனார் மறைந்ததும் கலைஞர், ஜெயலலிதா, வைகோ உள்ளிட்ட தமிழக தலைவர்கள், ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், உள்ளிட்ட இந்தியத் தலைவர்கள், வாலி, வைரமுத்து உள்ளிட்ட கவிஞர்கள் இன்னும் கட்சி பேதமின்றி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி அன்பர்களிடமும் மூப்பனார் பற்றிய மேலான நினைவுகளை நூல் […]

Read more

எப்படி கதை எழுதுவது

எப்படி கதை எழுதுவது?, ரா.கி. ரங்கராஜன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 258, விலை 170ரூ. இந்தப் புத்தகத்தை முழுமையாக படித்து முடித்தால் போதும். உங்களால்கூட ஒரு நல்ல நாவல் எழுத முடியும். அவ்வளவுக்குப் பயிற்சி அளிக்கிறார் இந்நூல் மூலமாக ரா.கி. ரங்கராஜன். எப்படி கதை எழுத வேண்டும்? கதைக்கான அம்சங்கள் என்னென்ன இருக்க வேண்டும்? எப்படி ஆரம்பிப்பது. அதில் வரும் காட்சிகள், வர்ணனைகள், கதாபாத்திரங்கள், எப்படிப்பட்ட நடை இருக்க வேண்டும் என்றெல்லாம் விலாவாரியாக இந்நூலில் சொல்லித் தந்துள்ளார். […]

Read more

சாகசப் பறவைகள்

சாகசப் பறவைகள், எஸ்ஸாரெஸ், அம்ருதா பப்ளிகேஷன்ஸ், சென்னை 35, பக். 138, விலை 90ரூ. To buy this Tamil book online –  www.nhm.in/shop/100-00-0001-918-6.html தினமலர் சிறுவர் மலரில் வெளிவந்த இந்தக் கதை புத்தகம் உருப்பெற்றிருக்கிறது. சிறுவர்களுக்கான கதை என்றாலும், இதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள், பெரும்பாலும் பெரியவர்களுக்குத்தான். ஆவலுடன் சாப்பிடச் செல்பவர்கள், டிரஸ்கோடு என்ற பெயரில் அவமானப்படுத்தும் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், வலுக்கட்டாயமாக கிரெடிட் கார்டுகள், அப்பாவிகளிடம் திணித்து, அவர்களை பாடுபடுத்தும் வங்கிகள், போக்குவரத்து விதிகளை மதிக்காமல் பொது ஜனங்களுக்கு துன்பம் விளைவிக்கும் […]

Read more

தியானமும் பயிற்சியும்

தியானமும் பயிற்சியும், சுவாமி ராமா, தமிழில் புவனா பாலு, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக். 154, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-917-8.html மேலை நாடுகளில் யோகா, தியானம் மற்றும் கீழை நாடுகளில் சிந்தனைகளைக் குறித்த தற்கால எழுத்தாளர்கள், மேதைகளின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். தியான முறைகளின் குறிக்கோள் மற்றம் யோக ஞானத்தை அடையும் வழிமுறைகளைப் பற்றிய அனைத்தையும் உள்ளடக்கி, எளிமையான விரிவுரைகள் இந்நூலில் உள்ளன. மனிதன் தனது அகம் மற்றும் புறம் என்னும் இரு […]

Read more

தமிழ்வேள் கோ. சாரங்கபாணி

தமிழ்வேள் கோ. சாரங்கபாணி, இலக்கிய வீதி, 52/3, சவுந்தர்யா குடியிருப்பு, அண்ணாநகர் மேற்கு விரிவு, சென்னை 101, விலை 200ரூ. திருவாரூர் மாவட்டம் விஜயபுரத்தைச் சேர்ந்தவர் தமிழ்வேள் கோ. சாரங்கபாணி. சிறந்த பத்திரிகையாளர், எழுத்தாளராக அரை நூற்றாண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றியவர். தமிழ் இலக்கியத்திலிருந்து சமுதாயப் பிரச்சினைகள், அரசியல் கருத்துகள் வரை ஆழ்ந்த அறிவும், அவற்றைத் தெளிவாகப் பேச்சிலும், எழுத்திலும் எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர். இவருடைய வாழ்க்கை வரலாற்றை நூலாசிரியர் ஜே.எம். சாலி நூலாக தொகுத்துள்ளார். தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் மாமனார் வள்ளல் உ. […]

Read more

தமிழக பழங்குடி வழக்காற்றியல் கல்வராயன் மலைப் பழங்குடி மக்கள்

தமிழக பழங்குடி வழக்காற்றியல் கல்வராயன் மலைப் பழங்குடி மக்கள், முனைவர் சி. நல்லதம்பி, புலம். தமிழகத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெருவாரியான பழங்குடியின மக்கள் வாசித்து வருகின்றனர். தமிழகத்தின் எல்லைப் பகுதியில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களின் எண்ணிக்கை கணிசமானது. வரலாற்று ஆய்வாளர்களால், பழைய கற்காலம் துவங்கி, இந்த மலைப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்து வந்தது குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மக்களின் தொடர்ச்சியாக தான், கல்வராயன் மலைப் பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை, மனித இனத்தின் மறு உற்பத்தி […]

Read more

நாயகன் பாரதி

நாயகன் பாரதி, மலர் மன்னன், பழனியப்பா பிரதர்ஸ், பக். 320, விலை-240ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-014-5.html கடந்த 1960களிலே இருந்து 2013ம் ஆண்டின் நேற்றைய பொழுதுவரை, தமிழ் இதழ்களில் அடிக்கடி காணப்பட்ட பெயர் மலர்மன்னன். சிறந்த இதழ்களில் எல்லாம் அவரது சிறுகதையோ, கட்டுரையோ, தொடர் நாவல்களோ, விமர்சனங்களோ வந்த வண்ணம் இருக்க வைத்த எழுத்துத் தச்சர். பல்வேறு இதழ்களில், அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நூல்தான் இந்நூல். ஜாதியில்லை வர்ணமுண்டு என்ற தலைப்பில் துவங்கி சின்னராஜு என்ற தலைப்போடு […]

Read more

பிஞ்சுச் சாவு

பிஞ்சுச் சாவு, தொகுப்பு நூல்-நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை1 25ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-490-7.html தமிழகத்தையே உலுக்கி கொதி நிலைக்கு தள்ளியது பிரபாகரன் மகன் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பான புகைப்பட காட்சி. அந்த பாலகன் மரணத்திற்காக தமிழின் முன்னணி கவிஞர்கள் கவிதாஞ்சலியாக எழுதிய கவிதைகளின் தொகுப்பு. படிக்கும்போதே பதற வைக்கும் கவிதைப்பதிவுகள்.   —-   புத்தகம் பற்றிய புத்தகம், ஜெ. வீரநாதன், எஸென்ஷீயல் பப்ளிகேஷன்ஸ், கணேசபுரம், கோவை 642045, விலை […]

Read more

ஐந்திரன் படைப்புகள்

ஐந்திரன் படைப்புகள், லெனின், விஜி பதிப்பகம், டி5, 4சி, சிவ இளங்கோ சாலை, ஜவகர் நகர், சென்னை 82, விலை 100ரூ. கவிஞர் ஐந்திரன் (வெ. முத்துலிங்கம்) எழுதிய கவிதைகள், கட்டுரைகள், கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் கவிதைகள்தான் அதிகம். ரசிக்கத்தக்க விதத்தில் கவிதைகளை எழுதியுள்ளார் ஐந்திரன்.   —-   வாழ்வை வளமாக்கும் தன்னம்பிக்கை, பசுமைக்குமார், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-6.html […]

Read more

கம்யூனிஸத்திற்குபின் ரஷ்யா

கம்யூனிஸத்திற்குபின் ரஷ்யா, நடிகர் ராஜேஷ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-157-7.html நடிகர் ராஜேஷ் தனது ரஷிய பயணத்தின்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நூலாக தொகுத்துள்ளார். இந்த நூலை படிக்கும்போது ரஷியாவுக்கு சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது. சோவியத் ரஷியா 22 குட்டி நாடுகளாக பிரிந்ததும், அதனால் கம்யூனிசம் பலியான சம்பவங்களும் நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இன்றைய ரஷியாவின் பண்பாடு, கலாசாரம், விலைவாசி […]

Read more
1 54 55 56 57 58 63