மண்வாசம்

மண்வாசம், தமிழச்சி தங்கபாண்டியன், விகடன் பிரசுரம், விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-449-7.html தமிழச்சி, தான் வாழ்ந்த கிராமத்தின் இரண்டு இடுக்குகளை இன்னமும் மறக்காமல், தனக்கான நிழலாக, தான் தலை சாய்க்கும் மடியாக மல்லாங்கிணறை நினைத்திருப்பதும், அக்கம்பக்கத்தினரை அளவிட முடியாத பாசத்தோடு அவர் அணுகும் விதமும், மஞ்சணத்தி, குப்பைமேனி, வெந்தயக் கீரை என இயற்கையின் வரங்களை வைத்து வைத்தியம் பார்க்கும் கிராமத்து மக்களின் வாழ்வியலை, சொலவடையாக மருத்துவமாக, பேச்சுவழக்காக, உயிரார்ந்த நேசமாக கிராமத்தின் அத்தனைவிதமான ஆசாபாசங்களோடு அடையாளப்படுத்தி இருக்கிறார். […]

Read more

மஹாபாரதம் ஒரு கண்ணோட்டம்

மஹாபாரதம் ஒரு கண்ணோட்டம், டி.ஆர்.குப்புசாமி, ஆர்என்ஆர் பிரிண்டர்ஸ், 19, தாண்டவராயன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 350ரூ. இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் கூறப்பட்ட கருத்துக்களை திரட்டி எடுத்து எளிதாக தந்துள்ளார் ஆசிரியர். மிக எளிய நடையில் அமைந்திருப்பதால் அனைவரும் படித்து பயன்பெறலாம். பெரும்பாலானவர்கள் அறிந்திராத நுண்ணிய செய்திகள் பல நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.   —-   வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு, பேராசிரியர் அர. வெங்கடாசலம், ஏ19, வாஸ்வனி வெல்லா விஸ்டா, கிராபைட் இந்தியா ஜங்ஷன், பெங்களூரு-48, விலை 85ரூ. […]

Read more

காஞ்சி

காஞ்சி, ஐரோப்பிய அமெரிக்கத் தமிழியர் அறிஞர்கள், மு. நஜ்மா, மு. கஸ்தூரி, அ.மோகனா, மு. காமாட்சி, பரிசல் புத்தக நிலையம், 96, ஜெ.பிளாக், நல்வரவு தெரு, எம்.எம்.டி.ஏ.காலனி, அரும்பாக்கம், சென்னை 106, விலை 180ரூ. மதத்தைப் பரப்புவதற்காக வந்த கிறிஸ்தவப் பாதிரியார்கள் தமிழ் மொழியில் மயங்கிய வரலாறு இது. இங்குள்ள மக்களை மனமாற்றமோ, மதமாற்றமோ செய்ய வேண்டுமானால் அவர்களது மொழியில் அதைச் செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்து, தமிழுக்கான எழுத்துருக்களை உருவாக்குவது முதல் புத்தகங்கள் வெளியிடுவது வரை இந்தப் பாதிரியார்கள் இறங்கினர். ஏட்டுச்சுவடிகளாய் அழிந்து […]

Read more

தெருக்கூத்து கலைஞர்கள்

தெருக்கூத்து கலைஞர்கள், கோ. பழனி, சி. முத்துகந்தன், போதிவனம். To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-492-2.html தமிழ் மண்ணில் கூத்து, நாடகம், கதை சொல்லல், ஆட்டங்கள், இசை தொகுப்புகள் என, பல்வேறு நிகழ்த்து கலைகள் உள்ளன. கேரளத்து கதகளி, கர்நாடகத்து யட்சகானம், ஆந்திரத்து வீதிநாடகா ஆகியன போன்று தமிழகத்தில் தனித்தன்மை வாய்ந்த ஒரு முழுமையான அரங்காக தெருக்கூத்து விளங்குகிறது. இந்த கலைகள் அந்தந்த மாநிலத்தவர்களால், அங்கீகரிக்கப்பட்டது போல தெருக்கூத்து தமிழர்களால் அங்கீகரிக்கப்படவில்லை என்ற கசப்பான உண்மையை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். […]

Read more

தமிழ் மக்கள் வரலாறு நாயக்கர் காலம்

தமிழ் மக்கள் வரலாறு நாயக்கர் காலம், க.ப. அறவாணன், தமிழர் கோட்டம், பக். 304, விலை 200ரூ. விஜய நகர அரசர் அரிகரபுக்கரின் மகனான, கம்பள நாயக்கர் மதுரையை அப்போது ஆண்டு கொண்டிருந்த இஸ்லாமியர்களை வீழ்த்தி விட்டு அரியணை ஏறினார். கி.பி. 15, 16ம் நூற்றாண்டில் மதுரையைப் பிடித்த நாயக்கர் தஞ்சாவூர், செஞ்சி, வேலூர் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, தன் பேரரசை நிறுவினார். நாயக்கர்கள் ஏறத்தாழ 200 ஆண்டுகள் மிகக் சிறப்பாக ஆட்சி புரிந்திருக்கின்றனர். அக்காலத்தில், சமஸ்கிருதமும், தெலுங்கும் தமிழகத்தில் ஆட்சி பீடத்தில் இருந்திருக்கின்றன. […]

Read more

நாம் பிரிந்துவிட வேண்டாம்

நாம் பிரிந்துவிட வேண்டாம், டாக்டர் யூசுப் அல்கர்ளாவி, தமிழில்-பேராசிரியர் கே.எம். இல்யாஜ் ரியாஜி, வேர்கள் பதிப்பகம், 52/1, மண்ணடி தெரு, சென்னை 600001, பக். 292, விலை 175ரூ. ஒற்றுமை என்ற கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று வெற்றிக்கு வழி கூறும் மார்க்கம், இஸ்லாம். அது இன்று சில கருத்து வேறுபாடுகளால் பல பிரிவுகளாகப் பிரிந்து நின்று செயல்படுகிறது என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தும் இந்நூலாசிரியர், இம்மார்க்கத்தின் மீது உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள், பிரிவினையை உருவாக்கும் கருத்து மோதல்களைக் கைவிட்டு ஒருங்கிணைந்து செயல்பட […]

Read more

கோபிகிருஷ்ணன் படைப்புகள்

கோபிகிருஷ்ணன் படைப்புகள், கோபிகிருஷ்ணன், நற்றிணை பதிப்பகம், சென்னை 5, பக். 1022, விலை 800ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-6.html   மறைந்த கோபிகிருஷ்ணனின் எழுத்துகள் முழுமையாக இந்த தொகுப்பில் கொண்டுவரப்பட்டுள்ளன. கூடவே கோபிகிருஷ்ணனை யூமா. வாசுகி எடுத்த நேர்காணலும். கோபிகிருஷ்ணனின் படைப்புகளில் இருவிதத் தன்மைகளைக் காணலாம். ஒன்று, மொழியைக் கையாளும் விதம். அவருக்கே உண்டான திருகல் மொழித் தன்மை அதாவது மொழியை திருகித்திருகி பயன்படுத்தும் லாவகம் (உ-ம்) வார்த்தை உறவு போன்ற கதைகள். இரண்டு, உரித்துப்போட்டது போன்ற அப்பட்டமான […]

Read more

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம்

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம், தத்துவம் சாமி சிதம்பரனார், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை 14, பக். 142, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-807-4.html சித்தர்கள் என்றதும் சித்த வைத்தியம் பதினெண் சித்தர்கள், கூடு விட்டு கூடு பாய்தல் உள்ளிட்ட எண் வகைச் சித்தர்கள், அற்புதங்களைச் செய்யக் கூடியவர்கள் என்ற வகையில்தான் எண்ணங்கள் ஓடும். ஆனால் சாமி சிதம்பரனார் எழுதியுள்ள சித்தர்கள் கண்ட விஞ்ஞானம், தத்துவம் என்ற நூலைப் படிக்கும்போது சித்தர்களின் பல்வேறு குணாதிசயங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. மக்கள் […]

Read more

துணை வேந்தர் சொல்லும் செயலும்

துணை வேந்தர் சொல்லும் செயலும், மு. பொன்னவைக்கோ, தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர்.எம், பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் 603203. பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பணிபுரிந்துள்ள பொன்னவைக்கோ, தமிழறிஞர்களுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பைப் பெற்ற பொறியாளர். தமிழ் மொழியைக் கடந்து, பிறமொழிகள் மீது பற்றும் பாசமும் உள்ள ஒரு பரந்துப்பட்ட, விசாலமான பார்வையாளர். பெரியாரின் கொள்கைகளை வரவேற்கும் இவர், ஆன்மிகத்திலும் நாட்டம் உள்ளவராக இருக்கிறார். சொந்த வாழ்க்கை பற்றி சில தகவல்கள், பணிபுரிந்தபோது பெற்ற அனுபவங்கள், செய்து முடித்த சில சாதனைகள், சில சொற்பொழிவுகள் என […]

Read more

உயிரைத் தேடி

உயிரைத் தேடி, வ. தென்கோவன், அருள்மிகு சீதளாதேவி அம்ன் பதிப்பகம், 41, சீதள மகால், டாக்டர் ராதாகிருண்ணன் சாலை, அம்மையார் நகர், கீழகாசாக்குடி, காரைக்கால், பக். 168, விலை 125ரூ. சைவ சமயத்தின் சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கு. அவற்றுள் முதன்மையானது மெய் கண்டார் இயற்றிய சிவஞானபோதம். திருவியலூர் உய்ய வந்த தேவர் இயற்றிய திருவுந்தியாரும் திருக்கடவூர் உய்ய வந்த தேவர் இயற்றிய திருக்களிற்றுப்படியாரும் காலத்தால் சிவஞான போதத்திற்கு முற்பட்டவையாயினும் சித்தாந்த சாத்திர நூல்களில் சிவஞான போதமே முதல் நூலாக விளங்குகிறது. அத்தகைய சிவ […]

Read more
1 55 56 57 58 59 63