பாரதமே உயிர்த்தெழு

பாரதமே உயிர்த்தெழு, சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை 4, பக். 205, விலை 55ரூ. சுவாமி விவேகானந்தரின் பேச்சும், எழுத்தும் இளைஞர்களின் மனதில் ஆழப்பதிந்தால், இந்திய தேசம் வலிமையும், பெருமையும் பெரும் என்பதில் ஐயமில்லை. விவேகானந்தரின் சொற்பொழிவுகளையும், எழுத்துக்களையும் சுருக்கி ஆறு தலைப்புகளில் இந்நூல் விளக்குகிறது. கல்வியானது ஞானத்தை வெளிப்படுத்தி, மனிதனாக உருவாக்கி, தன்னம்பிக்கை, நற்பண்புகள், அறிவு, பண்பாடு மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை வளர்ப்பதாக இருக்க வேண்டும் என்ற விவேகானந்தரின் கூற்றை இன்றைய கல்வியாளர்கள் சிந்தித்து பார்க்க, இந்நூல் பெரிதும் பயன்படும். […]

Read more

முத்திரைச் சிறுகதைகள்

முத்திரைச் சிறுகதைகள், ஆர்னிகா நாசர், மேகதூதன் பதிப்பகம், 7, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, பக். 208, விலை 130ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-718-0.html ஆர்னிகா நாசர் நிறைய இதழ்களில் அடிக்கடி எழுதுபவர். பிரபலமான எழுத்தாளர். இவருக்கென்று ஒரு பெரிய வாசகர் கூட்டம் இருக்கின்றது. இவர் எழுதும் பாணியில், புதுமை இருக்கும். எழுத எடுத்துக் கொள்ளும் கதை கருக்களில் புதுமையும், வித்தியாசமும் இருக்கும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாவல்களும் எழுதியுள்ள ஆர்னிகா நாசர், தாம் எழுதியவற்றுள் சிறந்த […]

Read more

சட்டச் சொல் அகராதி

சட்டச் சொல் அகராதி, வீ. சந்திரன், புத்தகப் பூங்கா, 17/9, சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 250ரூ. நீதிமன்றங்களில் வழக்காடும் தமது வக்கீல்கள் என்ன சொல்லி வாதாடுகிறார்கள் என்பது குறித்து அந்த வழக்குக்கு உரியவர்கள் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருக்கிறது. தற்போது சட்டத்துறையில் ஏற்பட்டுள்ள தமிழ் வளர்ச்சியின் காரணமாக, சட்ட நுணுக்கங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. எதிர்காலத்தில், நீதிமன்றங்களில் தமிழில் வாதாடும் வழக்கறிஞர்களுக்கு தேவைப்படும் சட்டக்கலை சொற்களை அனைவருக்கும் பயன்படும் வகையில் தமிழில் வடிவமைத்துள்ளார் ஆசிரியர் […]

Read more

தமிழ்நேயம்

தமிழ்நேயம், கோவை ஞானி, புதுப்புனல், பாத்திமா டவர், 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை 5, பக். 256, விலை 200ரூ. கோவை ஞானி தாம் நடத்தி வந்த தமிழ்நேயம் இதழில் தமிழர் தொடர்பான அனைத்துநிகழ்வுகளையும் புதிய கண்ணோட்டத்தில் கண்டித்தும், பாராட்டியும் பதிவு  செய்துவந்தார். அரசியல் லாபத்துக்காக நிகழ்ந்த துரோகங்கள், அணுமின் திட்டத்தின் மீது அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்புகள், கும்பகோணம் பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த உலக வாழ்க்கை மறுக்கப்பட்டது, நாடாளுமன்றத்தை முடக்கி மக்கள் பணத்தை வீணாக்கும் அரசியல்வாதிகளின் துடிப்பு என்று உலக நடப்புகள் அனைத்தையும் பதிவு செய்துள்ளார். அதன் தொகுப்பே இந்த நூல். […]

Read more

பாரதி திருநாள்

பாரதி திருநாள், டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி.நகர், சென்னை 35, விலை 100ரூ. மகாகவி பாரதிபாரதி பற்றிய அபூர்வ நூல். மகாகவி பாரதியார் மறைந்தபோது, 13/9/1921 தேதியிட்ட சுதேசமித்ரனில் வெளியான செய்தி,அப்போது தலைவர்கள் வெளியிட்ட அனுதாபச் செய்திகள், நடைபெற்ற அனுதாப கூட்ட விவரங்கள் முதலியவற்றை சிரமப்பட்டு சேகரித்து வழங்கியுள்ளார் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்.   —-   சித்தர்களின் ஞான வழி, சி.எஸ்.தேவநாதன், குறிஞ்சி, 15/21. டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது […]

Read more

வட்டியும் முதலும்

வட்டியும் முதலும், ராஜுமுருகன், விகடன் பதிப்பகம், சென்னை, பக். 504, விலை 215ரூ. விகடனில் தொடராக வந்தது. அதில் 70 வாரத் தொடர்கள் மட்டும் புத்தக வடிவம் பெற்றுள்ளது. ஒரு திரைப்பட இயக்குநரின் நட்பும், வாழ்க்கையை அவதானிப்பதுதான். அதை எழுத்திலும் காட்டுகிறார் ராஜுமுருகன். வண்ணதாசன் எப்படி அவரது ரத்த உறவுகளுடன் நம்மையும் சேர்த்துக் கொண்டு நடத்திச் செல்வாரோ, அத்தகைய ஈரத் தமிழ்நடை ராஜுமுருகன் எழுதில் எல்லாப் பக்கங்களிலும். புத்தகத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். வாழ்க்கையை அவரது ஜன்னலில் அவரோடு நாமும் பார்த்துக் கொண்டிருப்போம். கட்டித் […]

Read more

கொட்டாரம்

கொட்டாரம்,  நீல பத்ம நாபன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 50ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0001-009-6.html என்னைப் போல் இருவர், ரவுத்திரம், பகை, நொண்டிப்புறா, பூஜை அறை, கொட்டாரம் என்ற 6 சிறுகதைகளின் தொகுப்பு நூல். வாசகனின் வாசிப்புக்கேற்ப ஊக நிலையைப் படரவிடுவது நூலாசிரியரின் பண்பாகத் திகழ்கிறது. அது வாசக மகிழ்வைப் பெருக்கிடும் சூழலுக்கு வலுவூட்டுகிறது. நீல பத்ம நாபனின் மொழி நடை, சுகமான சிறுகதை தொகுப்பை சுவைக்கலாம்.   —– […]

Read more

திரை வளர்த்த நான், நான் வளர்க்கும் திரை

திரை வளர்த்த நான், நான் வளர்க்கும் திரை, மு. இராமசுவாமி, செப்பிபடைப்பகம், 20, இருளாண்டிக் காலனி, விராட்டி பத்து, மதுரை 10, பக்க.448, விலை 400ரூ. தமிழித் திரைப்படப் பயணத்தில் இது ஒரு புதிய பாதை. நூலாசிரியர் மு. இராமசுவாமி, 1972 முதல் 2012 வரையிலான 40 ஆண்டுகால தமிழ் சினிமாவின் போக்கை, வளர்ச்சியை, மாற்றத்தை, அதன் வீழ்ச்சியை, உயர்வை அவரது பார்வையில் பல்வேறு இதழ்களில் பல்வேறு தருணங்களில் பதிவு செய்திருக்கிறார். அவற்றின் ஒரு தொகுப்பு இந்நூல். தமிழ் சினிமாவைப் பற்றிய அதன் ஊடாக […]

Read more

பிரேம்சந்த் கதைகள்

பிரேம்சந்த் கதைகள், லதா ராமகிருஷ்ணன், நியூ செஞ்சுவரி புக் ஹவுஸ், 41பி சிட்கோ இண்டஸ்ட்ரீஸ் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 190ரூ. To buy this book online – https://www.nhm.in/shop/100-00-0001-009-7.html பள்ளிக்கூட ஆசிரியராக இருந்த பிரேம்சந்த் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பதற்காக பதவியை துறந்தவர். இலக்கிய பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இவர் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர். அவருடைய படைப்புகளில் வறுமையும், துயரமும் அதிகமாக காணப்படுகிறது. இந்த புத்தகத்தில் 12 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் அழகாக தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். […]

Read more

தென்னாட்டுச் செல்வங்கள்

தென்னாட்டுச் செல்வங்கள் (இரண்டு தொகுதிகள்), இறையருள் ஓவியம் சில்பி, விகடன் பிரசுரம், ரூ 650. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-806-3.html இறை அருள் பெற்ற ஓவிய மேதை சில்பி ஆனந்தவிகடன் வார இதழில் தென்னாட்டுச் செல்வங்கள் என்னும் தலைப்பில் எழுதிய ஓவியக் கட்டுரைகள் இரண்டு தொகுதிகளாக நூல் வடிவம் பெற்றுள்ளன. நீ நிறைய ஸ்தலங்களை வரையப் போகிறாய். அவை நீ வரைந்ததாலேயே ஆழ்வார், நாயன்மார், பாசுரங்கள் புகழ்பெற்றதுபோல், சில்பி வரைந்த ஸ்தலங்கள் என்று புகழ் பெறும் என்று காஞ்சி மகாஸ்வாமிகள் […]

Read more
1 57 58 59 60 61 63