சி.பா. ஆதித்தனார்

சி.பா. ஆதித்தனார், முகிலை இராஜபாண்டியன், சாகித்ய அகாடமி, பக். 128, விலை 50ரூ. மக்கள் தமிழ் எனும் எளிமைத் தமிழ் உரைநடையை உருவாக்கி பாமரர்களையும் பத்திரிகை படிக்க வைத்தவர், சி.பா. ஆதித்தனார். லண்டனில் பார்ஸ்டர் பட்டம் பெற்று சிங்கப்பூரில் மிகப்பெரிய வழக்கறிஞராக விளங்கினார். இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்ததன் விளைவாக பல இன்னல்களுக்கிடையே தாயகம் திரும்பினார். வழக்கறிஞர் பட்டம் பெற்றிருந்தாலும் தமிழ் மீதும், இதழியல் மீதும் நாட்டம் கொண்ட ஆதித்தனார், தமிழன், மதுரை, முரசு, தந்தி போன்ற இதழ்களைத் தொடங்கி நடத்தினார். தமது இதழ்களில், […]

Read more

ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம்

ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம், முகில், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 448, விலை 300ரூ. படிக்க படிக்க தீராத அதிசய பிறவி! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000022658.html இந்த 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில், தன்னை கடவுளாக வழிபடும் ஒரு பெருங்கூட்டத்தையே உருவாக்கி, உலக வரலாற்றை மாற்றியமைத்த வல்லமை பொருந்திய ஒரு தனி நபரின் ஆளுமையையும், வன்மத்தையும் பற்றிய சுவாரசியமான நூல் இது. ஹிட்லர் பற்றி எத்தனை நூல்கள் வரலாற்றில் வந்தாலும் அத்தனையையும் படிக்கத் தோன்றும் அதிசயப் பிறவி அவர். எத்தனை சர்ச்சைகள், […]

Read more

முழு மதுவிலக்கு அதுவே நமது இலக்கு

முழு மதுவிலக்கு அதுவே நமது இலக்கு, இரா. ரவிக்குமார், கொங்குமண்டல ஆய்வு மையம், உடுமலைப்பேட்டை, பக். 368, விலை 250ரூ. பூரண மதுவிலக்கு என்ற கோரிக்கை தமிழகத்தின் பல்வேறு திசைகளில் இருந்தும் ஒலித்து வருகிறது. அதற்கு வலு சேர்க்கும் விதமான தக்க சமயத்தில் இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது. மதுப்பழக்கத்தினால் தனிமனிக்கும், அவனைச் சார்ந்துள்ளோருக்கும், சமுதாயத்துக்கும் ஏற்படும் பேராபத்துகள் பற்றி ஆசிரியர் இந்நூல் தெளிவாகக் கூறியுள்ளார். பழைய இலக்கியங்களில் சோமபானம், சுராபானம் என்று கூறப்பட்டிருந்தாலும், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில்தான் மதுவின் தாக்குதல் தமிழகத்தில் அதிகமாகியது. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் […]

Read more

இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள்

இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 700ரூ கி.பி. 1741- ஆம் ஆண்டுகளில் குளச்சலில் மார்த்தாண்ட வர்மா ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியதில் ஆரம்பித்து கி.பி. 1859ஆம் ஆண்டு வரையிலான இந்தியச் சுதந்திரப்போர் குறித்த பல்வேறு தகவல்களை நூலாசிரியர் தேதி வாரியாகத் தொகுத்தளித்துள்ளார். இந்திய சுதந்திரப் பெரும்போரில் பங்கேற்ற முஸ்லிம் மன்னர்கள், சிப்பாய்கள், தளபதிகள், இளவரசர்கள், மௌலவிகள், அரசிகள் உள்ளிட்டோர் குறித்த இருட்டடிப்புச் செய்யப்பட்ட சரித்திரச் சான்றுகளை ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது இந்நூல். கி.பி. 1831ஆம் ஆண்டு முதல் கி.பி. […]

Read more

கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும் உலகளாவிய தாக்கமும்

கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும் உலகளாவிய தாக்கமும், உமரி காசிவேலு, வர்ஷன் பிரசுரம், பக். 520, விலை 350ரூ. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகால உலக வரலாற்றில் கிறிஸ்தவ மதத்தின் தாக்கம் வலுவானது. உலக வரலாறே கிறிஸ்துவுக்கு முன் பின் என்றுதான் பகுக்கப்பட்டு விவரிக்கப்படுகிறது. தேவமைந்தன் ஏசுவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ மதம் சென்ற இடமெல்லாம் ஏக போதித்ததுபோல அன்பை மட்டும் விதைக்கவில்லை. உலக வரலாற்றைப் படிக்கும் எவரும் மதப்பரப்பலுக்காக சிந்தப்பட்ட ரத்தத்தால் திகிலடைவர். இந்தப் பின்னணியில் கிறிஸ்தவத்தை பைபிள் ஆதாரங்களுடன் கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கும் […]

Read more

பூமித்தாய்

பூமித்தாய், தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, விலை 70ரூ. சிறந்த கார்ட்டூனிஸ்ட், சிறந்த எழுத்தாளர் என்று புகழ் பெற்றுள்ள மதன் எழுதிய சிறந்த நூல் இது. பூமியைப் பற்றிய உண்மைகளை மனிதன் அறிந்துகொள்ளாமல் இருந்த காலக்கட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளை நகைச்சுவை ததும்ப எடுத்துக்கூறுகிறார். பூமியை சூரியன் சுற்றி வருகிறது என்று மக்கள் நம்பிக்கொண்டிருந்த காலத்தில், இல்லை இல்லை. பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று புரூனோ என்ற இத்தாலிய நாட்டு அறிஞர் சொன்னார். உண்மையைச் சொன்னதற்காக அவருக்கு விதிக்கப்பட்டது மரண தண்டனை. அவரை உயிரோடு தீயில் எரித்துக் […]

Read more

வரலாறு படைத்த மாமனிதர்கள்

வரலாறு படைத்த மாமனிதர்கள், நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 90ரூ. முன்னாள் ஜனாதிபதிகளான ஜாகீர் உசேன், அப்துல் கலாம், மவுலானா அபுல் கலாம் ஆஸாத், மகாகவி இக்பால் உள்பட 9 மாமனிதர்கள் பற்றிய வரலாறு. இவர்களின் வாழ்க்கை, இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய முன்மாதிரி வாழ்க்கை என்பதை ஆசிரியர் சி.எஸ். தேவநாதன் எளிய நடையில் எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 16/9/2015.   —- ஆன்மிக ஞானத்தின் ஏழாம் அறிவு, பிரபோதரன் சுகுமார், அயக் கிரிவா பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. யோக சாதனைகளின் முயற்சியில் இறங்குவதற்கு […]

Read more

வரலாற்றில் எம்.ஜி.ஆர்.

வரலாற்றில் எம்.ஜி.ஆர்., தொகுப்பு வெ. குமரவேல், முல்லை பதிப்பகம், சென்னை, விலை 500ரூ. திரை உலகிலும், அரசியல் வானிலும் அசைக்க முடியாத இடத்தை பெற்றவர். கட்சி தொடங்கிய ஐந்து ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவரது பெருமைகள், சிறப்புகள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், சினிமா இயக்குநர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளை வெ. குமரவேல் தொகுத்து வழங்கியுள்ளார். ஏழைகளிடம் எம்.ஜி.ஆர். காட்டிய பரிவு, வீடு தேடி வந்தவர்களுக்கு அவர் அளித்த விருந்தோம்பல் பண்பு, தமிழர்களுக்கும், தமிழ் நாட்டுக்கும் […]

Read more

நதி மூலம்

நதி மூலம் (நாவல்), விட்டல் ராவ், விஜயா பதிப்பகம், பக். 392, விலை 225ரூ. தேச விடுதலைக்கு முன்னும் பின்னுமான நாட்களை, இந்த நாவல் பதிவு செய்கிறது. நீலனோ, காலனோ என்று அந்நாள் ஜனங்கள் சொல்லி நடுங்குமாறு, இந்தியர்களைக் கொன்று குவித்த, லெப்டினென்ட் கர்னல் நீல் துரையின் சிலை அகற்றும் போராட்டம், சைமன் கமிஷன் எதிர்ப்பு மறியல், வாணிவிலாஸ் தியேட்டரில், வள்ளி பரிணயம் நாடகத்தில் மிஸ். ரத்னாபாய், பண்டித ஜவஹர்லால் நேருவைப் பற்றிப் பாடும்போது போலீஸ் தடுப்பது, போன்ற பல சரித்திர நிகழ்வுகளை நாவல் […]

Read more

எம்.எஸ்.சுவாமிநாதன் வளங்குன்றா வேளாண்மை இயக்கத்தின் தலைமகன்

எம்.எஸ்.சுவாமிநாதன் வளங்குன்றா வேளாண்மை இயக்கத்தின் தலைமகன், முனைவர் என். பரசுராமன், மதிநிலையம், விலை 200ரூ. இந்தியாவில் இன்றைய இளைஞர்களின் பார்வை வேளாண்மை பக்கம் திரும்பி இருக்கிறது என்றால் அதற்கு முழு முதல் காரணம் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்தான். உலகில் தலைசிறந்த வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ். சுவாமிநாதன் தன்னை தேடி வந்த ஐ.பி.எஸ். பணியை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டு, விவசாய வளர்ச்சியே தன் வாழ்க்கையின் குறிக்கோள் என்ற வகையில் அவர் விடும் ஒவ்வொரு மூச்சிலும் விவசாயம் விவசாயம் என்றே வாழ்ந்துகொண்டு இருக்கிறார். அவரது வாழ்க்கை […]

Read more
1 49 50 51 52 53 104