நாடாளுமன்றத்தின் கதை

நாடாளுமன்றத்தின் கதை, அருணகிரி, குமுதம் பு(து)த்தகம், பக். 408, விலை 240ரூ. உலகின் பல நாட்டு நாடாளுமன்றங்களுக்கும் சென்று அவற்றின் செயல்பாடுகளைக் கண்டறிந்த இந்நூலாசிரியர், நமது நாடாளுமன்றத்தை பற்றி ஏ டு இசட் வரையிலான அனைத்து தகவல்களையும் இந்நூலில் எளிய தமிழ் நடையில் பதிவு செய்துள்ளார். இவற்றில் பெரும்பாலானவை நாடாளுமன்றம் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களில் இருந்து திரட்டியவை. இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இந்தியர்கள் படிப்பறிவு அற்றவர்கள், அவர்களுக்கு தேர்தல், ஓட்டு, ஜனநாயகம் பற்றியெல்லாம் என்ன தெரியும்? என்று ஐரோப்பியர்களால் கேலி […]

Read more

பாசங்கள் பலவிதம்

பாசங்கள் பலவிதம், சூடாமணி சடகோபன், ருக்மணி பதிப்பகம், பக். 144, விலை 80ரூ. பாசத்தை மையக்கருவாகக்கொண்டு, பலவிதமான பாசங்களை சிறுகதைகளாக வரைந்துகாட்டியிருக்கிறார் நூலாசிரியர். ஒரு சராசரி மனிதனுக்குள் இருக்கும் ஆசாபாசங்களின் பின்னணியில் இக்கதைகள் புனையப்பட்டுள்ளன. அதனால் படிப்போருக்கு கதையின் நெருக்கதை உணரும்படி உள்ளது. மனதிற்குள் பல காலங்களாக காரணமின்றி புதைக்கப்பட்டு கிடக்கும் பாசத்தை, வெளியில் கொண்டு வராததால் அல்லது கொண்டுவரத் தெரியாததால், அவன் அடையும் மன உளைச்சலையும் பரிதவிப்பையும் யதார்த்த கண் கொண்டு பார்த்துள்ளார் ஆசிரியர். மகனிடம் அன்பு காட்டத்தவறிய சொக்கலிங்கம் முதல், நோய் […]

Read more

ஹெர்மான் ஹெஸ்ஸின் சித்தார்த்தா ஓர் ஆய்வு

ஹெர்மான் ஹெஸ்ஸின் சித்தார்த்தா ஓர் ஆய்வு, சுரானந்தா, சுரா பதிப்பகம், பக். 176, விலை 80ரூ. 128 பக்கங்கள் மட்டுமே கொண்ட சித்தார்த்தா என்ற ஜெர்மானிய நாவல், 1946ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றது. இந்நூலின் ஆசிரியர் ஹெர்மான் ஹெஸ், இந்தியாவில் கேரள மாநில சர்ச் ஒன்றில் பணியாற்றிய பாதிரியாரின் பேரன். இது புத்தரின் போதனைகளையும், இந்திய கலாசாரத்தையும் மையமாக வைத்து புனையப்பட்ட நாவல். இதில் வரும் முக்கிய கதாபாத்திரமான சித்தார்த்தன் பிராமண குடும்பத்தில் பிறந்து, பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட்டாலும், அவன் மனம் […]

Read more

சட்டமன்ற மேலவையில் ப. மாணிக்கம்

சட்டமன்ற மேலவையில் ப. மாணிக்கம், விலை 160ரூ. கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ப. மாணிக்கம் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தபோது, அவர் நிகழ்த்திய உரைகளை சேகரித்து தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/9/2015.   —- நம்மால் முடியாதா?, மணிகண்டன், நூலாசிரியர் காட்டுப்பையூர், விலை 50ரூ. அன்பு, பாசத்தை தாய், தந்தையிடம் செலுத்துவதை மையமாக வைத்து எழுதப்பட்ட நூலாகும். நன்றி: தினத்தந்தி, 9/9/2015.   —- கம்யூனிசத்தின் கோட்பாடுகள், பிரடெரிக் எங்கெல்ஸ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 20ரூ. கம்யூனிசத்தை […]

Read more

பல நூற்றாண்டுகளாகப் புகழ் பெற்ற இசைபாடகர்கள்

பல நூற்றாண்டுகளாகப் புகழ் பெற்ற இசைபாடகர்கள், எஸ்.எஸ். பாரத்வாஜ், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 175ரூ. ஆச்சாரியார்கள், சித்தர்கள், ஆழ்வார்கள், சங்கீத மூர்த்திகள் போன்ற அருள் பெற்ற மகான்கள் தங்கள் அனுபவங்களைப் பாடல்களாக, பிரபந்தங்களாக, விருத்தங்களாக, கீர்த்தனைகளாக வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களில் புகழ்பெற்ற ஆதி சங்கரர், சமயக் குரவர்கள், ஆழ்வார்கள் தொடங்கி புரந்தரதாஸர் அருணாசலக் கவிராயர், வள்ளலார், திருமூலர், தாயுமானவர், அவ்வையார் போன்றோரின் வாழ்க்கை வரலாற்றையும், அதோடு அவர்கள் எழுதிய பாடல் வரிகளையும் சொல்லி கோவை எஸ்.எஸ். பாரத்வாஜ் நம்மை வியக்க வைக்கிறார். நன்றி: தினத்தந்தி, […]

Read more

தேடலில் தெளியும் திசைகள்

தேடலில் தெளியும் திசைகள், வைகறை (தொகுப்பும் பதிப்பும்), பவளவிழாக்குழு வெளியீடு, பக். 272, விலை 20ரூ. ஞானலயா கிருஷ்ணமூர்த்திக்கு எழுத்தாளர்களாகவும் நண்பர்களாகவும் இருந்த இலக்கிய ஆளுமைகள் எழுதிய 255 கடிதங்களின் தொகுப்பு இந்நூல். தஞ்சை பிரகாஷ் தொடங்கி கரிச்சான்குஞ்சு, கவி கா.மு.ஷெரீப், ஏ.கே.செட்டியார், அசோகமித்திரன், கி.அ. சச்சிதானந்தன், சிட்டி என்று பல்வேறு இலக்கிய பிரமுகர்கள் கிருஷ்ணமூர்த்தி – டோரதி தம்பதியர்களுக்கு எழுதிய கடிதங்கள் பெரும்பாலும் புத்தகங்களைப் பற்றிய தேடல்களாகவே உள்ளன. இலக்கிய ஆளுமைகளின் உள்ளுணர்வுகளை, சமகால இலக்கியப் போக்கை இக்கடிதங்கள் வெளிப்படுத்தி, இலக்கிய வரலாற்றுக்கான […]

Read more

ஆர்கொலோ சதுரர்?

ஆர்கொலோ சதுரர்?, பேரா. ஆதிமுருகவேள், ஆசிரியர் சங்கரதாண்டவம் அறக்கட்டளை, விலை 150ரூ. உலகத்து உயர்நெறியான சைவம் தழைத்து ஒங்க செய்வதற்காகவும், சிவலிங்க வழிபாட்டை உணர்த்துவதற்காகவும் சைவநெறிகளுடன் எழுதப்பட்ட 20 கட்டுரைகள் கொண்ட நூலாகும். நன்றி: தினத்தந்தி, 9/9/2015.   —- படித்துப்பழகு, மு.முருகேஷ், அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 25ரூ. கற்பனை வளத்துடன், சுவாராசியமாக எழுதப்பட்ட குறுங்கதைகளின் தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி, 9/9/2015.   —- 27 நட்சத்திரங்களுக்கு உரிய பைரவர் தலங்களும் பைரவர் வழிபாட்டின் பலன்களும், எஸ்.எல்.எஸ். பதிப்பகம், சிவகங்கை மாவட்டம், விலை […]

Read more

அலாரத்தை எழுப்புங்கள்

அலாரத்தை எழுப்புங்கள், முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், கோவை, விலை 150ரூ. செயல்களாலும், சிந்தனைகளாலும் ஒவ்வொரு நாளையும் சாதனை நாளாக மாற்றும் பொறுப்பும், சக்தியும் நம்மிடம்தான் உள்ளது என்பதை உணரும்போது வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பதை இந்த நூலின் ஆசிரியர் முனைவர் நா. சங்கரராமன் தெளிவாக கூறி உள்ளார். வெற்றி என்ற தாரக மந்திரத்தை மையமாக வைத்து வெற்றியாளர்களையும், அவர்கள் வெற்றி பெற்றதற்கான காரணங்களையும் இந்த நூலில் பட்டியலிட்டு காட்டி இருக்கிறார். அலாரத்தை எழுப்புங்கள், முதல் தூக்கமும் தியானம்தான் உள்பட 20 கட்டுரைகளும் […]

Read more

வ.உ.சி.யின் வாழ்க்கை ஒரு பார்வை

வ.உ.சி.யின் வாழ்க்கை ஒரு பார்வை, ப.செந்தில் நாயகம், பதிப்புத்துறை வெளியீடு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், விலை 70ரூ. சுதந்திரப் போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் வீரவரலாற்றைக் கூறும் நூல். வ.உ.சி.யின் நாட்டுப் பற்று, மொழிப் பற்று, ஆன்மிக வாழ்க்கை ஆகியவற்றை திரளான சான்றுகளுடன் முனைவர் ப.செந்தில் நாயகம் திரட்டித் தந்திருக்கிறார். வ.உ.சி.யின் விடுதலை வாழ்க்கை, தொழிற்சங்க வாழ்க்கை, சிறை வாழ்க்கை, விடுதலைக்குப் பிறகு அவரது சைவத் தொடர்புகள், சிறையிலும் வெளியிலுமான அவரது இலக்கிய பங்களிப்பு, இறுதி நாட்களில் அவர் வறுமையில் வாடியபோதிலும் தமிழ் […]

Read more

எம்.எஸ்.சுவாமிநாதன் வளங்குன்றா வேளாண்மை இயக்கத்தின் தலைமகன்

எம்.எஸ்.சுவாமிநாதன் வளங்குன்றா வேளாண்மை இயக்கத்தின் தலைமகன், முனைவர் என். பரசுராமன், மதிநிலையம், விலை 200ரூ. இந்தியாவில் இன்றைய இளைஞர்களின் பார்வை வேளாண்மை பக்கம் திரும்பி இருக்கிறது என்றால் அதற்கு முழு முதல் காரணம் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்தான். உலகில் தலைசிறந்த வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ். சுவாமிநாதன் தன்னை தேடி வந்த ஐ.பி.எஸ். பணியை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டு, விவசாய வளர்ச்சியே தன் வாழ்க்கையின் குறிக்கோள் என்ற வகையில் அவர் விடும் ஒவ்வொரு மூச்சிலும் விவசாயம் விவசாயம் என்றே வாழ்ந்துகொண்டு இருக்கிறார். அவரது வாழ்க்கை […]

Read more
1 539 540 541 542 543 841