பாரதத்தின் பக்த கவிகள்

பாரதத்தின் பக்த கவிகள், மு. ஸ்ரீனிவாசன், அருள் பதிப்பகம், சென்னை, பக். 264, விலை 175ரூ. ஒரு காலத்தில், கன்னட அரசால் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு, இரண்டு ரூபாய் விலையில் மக்களுக்கு வழங்கப்பட்ட குமார வியாசகனின், கன்னட பாரதம்; தெலுங்கில் கவித்ரயம் என்று போற்றப்படும் நன்னயர், திக்கணர், எர்ரப்ரகடா என்ற இலக்கிய மூம்மூர்த்திகளால் உருவான, தெலுங்கு மகாபாரதம்; இதிகாசங்களின் மொழிபெயர்ப்புகளாய் மாதவ கண்டாவி இயற்றிய, காலத்தால் முற்பட்ட, அசாமிய ராமாயணம்; தெலுங்கில் பதகவிதா பிதாமகர் எனும் உயர்பட்டம் பெற்ற, அன்னமாச்சார்யா; பண்டரிநாதரை மீட்ட பானுதாசர், ஒரிய […]

Read more

இந்தியப் பயணக் கடிதங்கள்

இந்தியப் பயணக் கடிதங்கள், எலிஸா ஃபே, தமிழில் அக்களூர் இரவி, சந்தியா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. பல்வகை இடர்கள், துன்பங்களுக்குப் பின் களிப்பூட்டும் நல் ஓய்வு அளிக்கும் இடமாக இந்த நகர் அமைந்திருக்கிறது. வசீகரிக்கும் அழகுடன் இந்த நகர் மிளிர்கிறது. வீடுகளும் பொதுக் கட்டடங்களும் பெரிதாகவும் நேர்த்தியாகவும் காணப்படுகின்றன. இவை இத்தாலியில் இருக்கும் உணர்வை அளித்தன. தடையின்றி வழிந்தோடும் ஆடை அணிகலன்களின் விற்பனை. பகட்டையும் ஒய்யாரத்தையும் வெளிப்படுத்தும் பல்லக்குகள். அழகான கோச்சு வண்டிகள். எண்ணிக்கையற்ற வேலையாட்கள். பகட்டு நிறைந்த இலகுவான சொகுசான வாழ்க்கை. […]

Read more

வடகரை

வடகரை, ஒரு வம்சத்தின் வரலாறு, டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 400ரூ. ஒரு வம்சம், 600 ஆண்டு காலத்தில் எப்படியெல்லாம் துளிர்த்தும் துவம்சம் ஆகியும் உருமாறிக்கொண்டு இருந்தது என்பதைச் சொல்லும் வரலாறு இது. புனைவுகளில் மட்டும்தான் திடுக்கிடும் திருப்பங்களும் அலற வைக்கும் அழுகைகளும் நல்லது கூடிவரும்போது குலமே கெட்டுப்போகும் அளவுக்கு இழப்புகளும் இருக்க முடியுமா? இல்லை, உண்மை வரலாற்றிலும் இப்படி படிநிலை வளர்ச்சியைப் போல நடக்கும் அல்லவா? அப்படி ஒரு குடும்பத்துக்காரராக டாக்டர் மு. ராஜேந்திரன் இருக்கிறார். எங்கோ […]

Read more

நவீன இந்தியாவின் சிற்பிகள்

நவீன இந்தியாவின் சிற்பிகள், தொகுப்பாசிரியர் ராமசந்திர குஹா, கிழக்கு பதிப்பகம், சென்னை, பக். 525,விலை 400ரூ. இந்தியா நவீனமாக மாறியதற்கு யார் யார், எப்படி எல்லாம் காரணம் என்பதை, அந்தக் காரண கர்த்தாக்களே தங்கள் எழுத்து, பேச்சு, செயல் போன்றவற்றின் மூலம் வெளிப்படுத்தியவற்றின் தொகுப்பே இந்நூல். காந்திஜி, நேரு, அம்பேத்கர், மோகன்ராய், சையது அஹமது கான், கோகலே, ஜின்னா, ஜெ.பி., தாகூர், ராஜாஜி, கோல்வல்கர், ஈ.வெ.ரா. பெரியார் என்று பலர் குறித்தும், அவர்களது வெளிப்பாடுகள் குறித்தும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இவர்களெல்லாம் ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்துக்களைக் […]

Read more

அவ்வையார் நூல்கள்

அவ்வையார் நூல்கள், செ. நாராயணசாமி, சுரா பதிப்பகம், சென்னை, பிக். 336, விலை 150ரூ. சங்க காலம் தொடங்கி இன்று வரையிலான தமிழ்ப் பெண்பால் புலவர்களில் அவ்வைக்கு நிகர் யாரும் இல்லை என்று கூறலாம். ஆனாலும் அவ்வையார் ஒருவர் அல்ல, இப்பெயரில் வெவ்வேறு காலங்களில் நான்கு அவ்வையார்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஒருவர் சங்க காலத்து அவ்வையார். இவர் பாடியுள்ள 59 பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் உள்ளன. இரண்டாவது அவ்வையார் இறைப்பற்றாளர். விநாயகர் அகவல் போன்ற பக்திப் பாடல்களைப் பாடியவர். மூன்றாவது அவ்வையார் ஆத்திசூடி, […]

Read more

ஆயுஷ் குழந்தைகள்

ஆயுஷ் குழந்தைகள், டாக்டர் ஜெ. ஜெயவெங்கடேஷ், கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை, விலை 390ரூ. நவீன உலகின் மாற்றங்களுக்கு ஏற்ப மாறி வரும் வாழ்க்கை சூழல், பாரம்பரிய வாழ்வியலோடும், சித்த மருத்துவத்தோடும் தொடர்புடைய குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான மருத்துவம் குறித்து இந்த நூல் விளக்குகிறது. கரு உருவாவதில் இருந்து மகப்பேறு காலம், குழந்தை பிறப்பு, தாய்ப்பால், குழந்தை வளர்ப்பு முறைகள், குழந்தைகளுக்கான சித்த மருத்துவம், பாரம்பரிய நோய் தடுப்பு முறைகள், ஆகிய அனைத்தையும் டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ் விரிவாக விளக்கியுள்ளார். மருந்து […]

Read more

இடிந்தகரை சிந்தனைகள்

இடிந்தகரை சிந்தனைகள், சுப. உதயகுமார், இலக்கியச் சோலை, சென்னை, விலை 60ரூ. கூடங்குளம் அணு மின்நிலையம் அமைப்பதற்கு எதிராக இடிந்தகரை மக்கள் நடத்திய போராட்டம் பற்றி சுப. உதயகுமார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இதில் கடல் விவசாயம், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் போன்ற கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. சாதி, மதம் கடந்து, சச்சரவுகள் துறந்து, உண்மை, ஒழுக்கம், உறுதியோடு ஆயிரம் நாட்கள் நாங்கள் நடத்தியது வெறும் போராட்டமல்ல. அது ஒரு தவம், வேள்வி, யாகம் என்கிறார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 29/4/2015.   —- […]

Read more

திருக்குறள் பன்முக உரை

திருக்குறள் பன்முக உரை, சா. டேவிட் பிரதாப்சிங், திருவரசு புத்தக நிலையம், சென்னை, விலை 300ரூ. உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு உள்பொருளைத் தேடும் பணி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆளுக்கு ஓர் உரை, நாளுக்கு ஓர் உரை என்று விரிவடைந்து செல்கிறது. அந்த வகையில் ஆங்கிலப் பேராசிரியர் சா. டேவிட் பிரதாப்சிங், திருக்குறளுக்கு எழுதியுள்ள இந்த பன்முக உரை தமிழர்கள் இன்முகங்காட்டி வரவேற்கத்தக்க இனிய உரை. ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு, பொழிப்புரை, பதவுரை, அதோடு கவிதை நடையில் ஒரு வரி உரை. பின்னிணைப்பில் திருக்குறளோடு […]

Read more

தமிழகத்தின் ஈழ அகதிகள்

தமிழகத்தின் ஈழ அகதிகள்,  காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோவில், விலை 80ரூ. தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்கள் பற்றியும், அங்குள்ள தமிழ் ஈழ அகதிகளின் அவலங்களைப் பற்றியும் இந்த நூல் எடுத்துரைக்கிறது. இந்த நூலை 8 ஆண்டுகள் அகதிகள் முகாமில் வாழ்ந்த தொ. பத்தினாதன் எழுதியுள்ளார். முகாம்களில் அகதிகளின் வாழ்க்கை நிலை, அவர்களை அதிகாரிகள் நடத்தும் விதம், எப்போதும் கண்காணிப்பு என்னும் கொடுமை போன்ற பல்வேறு செய்திகளைத் தருகிறார். ‘எங்களுக்கு இலவசமோ, உதவித்தொகையோ தேவையில்லை. எங்களுக்குத் தேவை சுதந்திரமான வாழ்க்கை – இங்கு வாழும்வரை’ என்பதை […]

Read more

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், என்.சி. ஞானப்பிரகாசம், கற்பக வித்யா பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. வானொலி அண்ணா என்று புகழ்பெற்ற என்.சி. ஞானப்பிரகாசம், மருத்துவத்தை அடிப்படையாக வைத்து எழுதிய நாடகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இவை வெறும் பொழுதுபோன்னு நாடகங்கள் அல்ல. ஒவ்வொரு நோயும் எதனால் வருகின்றன, அதற்கு சிகிச்சை என்ன, நோய் வராமல் தடுப்பது எப்படி என்பதை உணர்த்துகின்றன. எனவே, இதை ஒரு நாடக நூல் என்று கூறுவதைவிட, மருத்துவக் களஞ்சியம் என்று கூறுவதே பொருந்தும். மிகப் பயனுள்ள நூல். நன்றி: […]

Read more
1 584 585 586 587 588 841