கொலம்பசின் வரைபடங்கள்

கொலம்பசின் வரைபடங்கள், யோ. கர்ணன், வடலி வெளியீடு, சென்னை, விலை 55ரூ. மன்னன் இல்லை. தளபதிகள் இல்லை. போர் வீரர்களென்று யாரும் இல்லை. நம்பிக்கையின் சிறு துரும்பெதுவும் மிதக்காத கரைகளற்ற கடலின் திசையறியாத பயணிகள். கடலடிக்கும் எல்லை வரையாகவும் இருகரையும் விரிந்திருந்த ராஜ்யம் சுருங்கி ஒரு பொட்டல்வெளியில் எரிந்தழிந்தது. உயிராலும் ரத்தினத்தாலும் சதைகளினாலும் கட்டியெழுப்பப்பட்டு இருந்த கனவு சிதறிக்கிடந்தது. நந்திக்கடலில் கலந்த இன்னோர் ஆறாக ரத்த ஆறுமிருந்தது ஈழத்தின் இன்றைய நிலை குறித்த யோ. கர்ணனின் காட்சிப்படுத்துதல் இதுதான். இந்த நிலைக்கு முன்னதாக இறுதிகட்டத்தில் […]

Read more

வளர்ச்சிப் பாதையில் மோடியின் குஜராத்

வளர்ச்சிப் பாதையில் மோடியின் குஜராத், என்.எஸ். அப்துல் ஜலீல், சிராக் ஃபவுன்டேஷன் ட்ரஸ்ட், சென்னை, விலை 150ரூ. குஜராத்தில் நரேந்திர மோடியின் ஆட்சியில் மாநிலம் வளர்ச்சி அடைந்திருப்பதாகச் சொல்லப்படுவதை மறுத்து கல்வி, விவசாயம், கிராம முன்னேற்றம், ஒடுக்கப்பட்டோர் நிலையை ஆதாரங்களுடனும் புள்ளி விவரங்களுடனும் விளக்குகிறது இந்நூல். ஆனால் நூலின் தலைப்பு உள்ளடக்கத்திற்கு எதிரானதுபோல் உள்ளது. நன்றி: இந்தியா டுடே, 4/6/2014.   —- மழைக்காடுகளின் மரணம், நக்கீரன், பூவுலகின் நண்பர்கள், சென்னை, விலை 20ரூ. காடுகள் குறித்த ஒரு விரிவான பார்9வையை அளிக்கிறது இந்நூல். […]

Read more

கண்ணதாசன் பாடல்கள் காலத்தை வென்றவை

கண்ணதாசன் பாடல்கள் காலத்தை வென்றவை, வானதி பதிப்பகம், சென்னை, விலை 140ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-230-3.html கவியரசு கண்ணதாசனின் திரைப்படப் பாடல்கள் கவிதை இலக்கணத்துடன் அமைந்தவை. ஆழ்ந்த கருத்துகளுடன் கூடியவை. ஆயிரக்கணக்கான பாடல்களில் இருந்து, பக்தி, காதல், சோகம், தத்துவம், பல்சுவை என ஐந்து வகைப்பட்ட தலைப்பின் கீழ் வரும் பாடல்களைத் தேர்வு செய்து விளக்கி எழுதியிருக்கிறார் காவிரி மைந்தன். காலத்தை வென்று தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் கவியரசரின் பாடல்கள் பற்றி, விரிவான ஒரு பகுப்பாய்வை சுவைபட செய்திருக்கிறார் […]

Read more

தியாகசீலர் கக்கன்

தியாகசீலர் கக்கன், முனைவர் இளசை சுந்தரம், மதுரா வெளியீடு, பக். 240, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-232-1.html காமராஜரைப் பற்றி அருமையான நூல் எழுதிய பெரும் பேச்சாளர் இளசை சுந்தரம், கக்கன்ஜி பற்றி எழுதியுள்ள அபூர்வ நூல் இது. யார் யாருக்கோ நூல்கள் உள்ள இந்த நாட்டில் தன்னலமற்ற தேசத் தொண்டர் கக்கனுக்கு அதிக நூல்கள் இல்லையே என்பது என் ஆதங்கம் என்ற முன்னுரையுடன் துவங்கியுள்ள நூலாசிரியர், நூறு கட்டுரைகளாக தந்துள்ளார். கக்கன் பற்றி அவ்வளவாக பதிவுகள் […]

Read more

சினிமாவும் நானும்

சினிமாவும் நானும், இயக்குநர் மகேந்திரன், கற்பகம் புத்தகாலயம், சென்னை, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-220-9.html தமிழ் சினிமாவின் என்றுமே உதிராத பூ, இயக்குநர் மகேந்திரன். அவரது உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் ஆகிய இரண்டும் வருங்கால, நிகழ்கால இயக்குநர்களை வழிநடத்தும் கலைப் புத்தகங்கள். ஒரு கற்பனைக் கதையை யதார்த்த பாணியில் படம் ஆக்குவது என்ற மகேந்திரனின் விதைதான் இன்று பல்வேறு வெற்றிப் படங்களின் விருட்சமாக ஆகி இருக்கிறது. வசனத்தை மென்மையாக ஆக்கி காட்சிப்படுத்துதலை அதிகமாய் பயன்படுத்திய மகேந்திரனுள் எப்போதும் […]

Read more

தெய்வத்தமிழ் மரபும் மாட்சியும்

தெய்வத்தமிழ் மரபும் மாட்சியும், கண்ணகி கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், தஞ்சாவூர், விலை 500ரூ. திருக்கோவில்கள் வளர்த்த தெய்வத் தமிழ் அனைத்துல 11வது ஆய்வு மாநாட்டில் தமிழ் அறிஞர்கள், பல்துறை பேராசிரியர்கள், புலவர்கள், சமய அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களால் வாசித்து அளிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். திருக்கோவில்களில் வளர்ந்த தெய்வத்தமிழ், தெய்வத்தமிழ் இலக்கியங்கள், திருக்கோவில்கள் வளர்த்த மரபுக் கலைகள், திருக்கோவில்களின் கலையும் மாட்சியும் ஆகிய தலைப்புகளின் கீழ் 91 கட்டுரைகள் கருத்துக் கருவூலமாக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 4/6/2014.   —-   […]

Read more

நேர்மையாக சம்பாதிக்க இவ்வளவு வழிகள்

நேர்மையாக சம்பாதிக்க இவ்வளவு வழிகள், சோம. வள்ளியப்பன், ஆப்பிள் பப்ளிஷிங், சென்னை, விலை 115ரூ. சேலைக்குப் போய்த்தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதில்லை. சுயமாக தொழில், வியாபாரம் தொடங்கி, அதில் மிகப்பெரிய வெற்றி பெற முடியும். வியாபாரத்தை தொடங்கி வெற்றிபெற வாய்ப்புகளை கண்டுபிடிக்கிற பார்வையும், செய்து பார்க்கிற துணிவும், தளராத மனமும் போதும். நேர்மையாக சம்பாதிக்க முடியும் என்பதை நூலாசிரியர் வலியுறுத்தி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 4/6/2014.   —- Employment Education, அருண்குமார், ஹித்யா பப்ளிகேஷன், கோயம்புத்தூர், விலை 600ரூ. கல்வியைப் பொறுத்தவரை […]

Read more

முல்லை பெரியாறு அணை பிறந்த கதை

முல்லை பெரியாறு அணை பிறந்த கதை, விகடன் பிரசுரம், சென்னை, விலை 115ரூ. தமிழ்நாட்டுக்கும், கேரளத்துக்கும் பெரிய பிரச்சினையாக இருப்பது முல்லை பெரியாறு அணை. இந்த அணையைக் கட்டியவர் பென்னிகுயிக் என்ற வெள்ளைக்காரர். இந்த அணையைப் பற்றி ஒரு கதையே இருக்கிறது. அணை கட்டப்படும்போது, வெள்ளப்பெருக்கால் அணையின் ஒரு பகுதி அழிந்துபோயிற்று. இதற்கு பென்னி குயிக்தான் காரணம் என்று வெள்ளை அரசு பழிபோட்டதுடன், மேற்கொண்டு அணையைக் கட்டி முடிக்க பணம் தரவும் மறுத்துவிட்டது. இதனால் பென்னி குயிக் இங்கிலாந்து நாட்டுக்குத் திரும்பிச்சென்று தன் சொத்துக்களை […]

Read more

காஞ்சி மகானின் கருணை அலைகள்

காஞ்சி மகானின் கருணை அலைகள், டாக்டர் ஷ்யாமா சுவாமிநாதன், செங்கைப்பதிப்பகம், செங்கல்பட்டு, விலை 300ரூ. நடமாடும் தெய்வமாக போற்றப்பட்ட காஞ்சி முனிவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகளின் விரிவான வாழ்க்கை வரலாறு, அவர் ஆண்டுவாரியாக மேற்கொண்ட யாத்திரைகள் பற்றிய விவரங்கள், நாட்டின் பெரும் தலைவர்கள் அவரை சந்தித்தபோது நடைபெற்ற அதிசய-ருசிகர தகவல்கள் போன்றவை மிக அழகாக தொகுக்கப்பட்டுள்ளன. மகாத்மா காந்தியுடன் அவர் நடத்திய உரையாடல்கள் சிந்திக்கவைக்கின்றன. இவற்றுடன் காஞ்சி மடாதிபதியை சந்தித்த பலரின் அற்புத அனுபவங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. காஞ்சி மகானைப் பற்றி தெளிவாக அறிந்து […]

Read more

கடாரம்

கடாரம், மாயா, வானதி பதிப்பகம், சென்னை, பக். 704, விலை 350ரூ. பதினோராம் நூற்றாண்டில் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தை அரசாண்ட முகலாம் இராஜேந்திர சோழனின் காலத்தில் இக்கதை பயணிக்கிறது. இராஜேந்திர சோழன் படையெடுத்து கைப்பற்றிய கடாரம் எப்படி இருந்தது? அதை ஆண்ட அரச மரபினர் யார்? என்பவை நேர்த்தியாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் இராஜே3திர சோழன் கடாரம் நோக்கிப் படையெடுத்ததையும் அவனுடைய மெய்கீர்த்தியும் திருவாலங்காட்டுப் பட்டயம் மூலம் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. கடாரம், தற்போதைய மலேசிய தீபகற்பத்தில் இருக்கும் கெடா பகுதி என்பதை அறியும்போது அது தற்போது […]

Read more
1 675 676 677 678 679 841