சென்னை மாநகர்

சென்னை மாநகர், மா.சு. சம்பந்தன், இந்திய பண்பாட்டு ஆய்வு மையம், மாங்காடு. சென்னையின் வரலாற்றை, பல்வேறு தகவல்களுடன் விளக்கும் நூல், 1911ம் ஆண்டுக்கும் முன், சென்னைத் தெருக்களில் விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் விளக்குகளே பயன்பாட்டில் இருந்தன. பிறகுதான் மண்ணெண்ணெய் விளக்குகள் வந்தன. 1911ல் நகரில் 6269 மண்ணெண்ணெய் விளக்குகள் இருந்தன. பவுர்ணமிக்கு முதல் நாளும், பவுர்ணமி அன்றும், விளக்கேற்றுவதற்காக விடுமறை விடப்பட்டது. 1942ல் சென்னை முழுக்க மின்விளக்கு மயமானது. பின்பு, தெரு சந்திப்புகளில், மின் கடிகாரங்கள் வைக்கப்பட்டன. ஆனால், பல கடிகாரங்கள் சரியான நேரத்தைக் […]

Read more

தங்கர் பச்சான் கதைகள்

தங்கர் பச்சான் கதைகள், உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 210ரூ. இருக்கிற கடவுள்களும், இனி வரப்போகும் கடவுள்களும் கைவிட்ட தங்கர்பச்சானின் மனிதர்கள். தங்கர்பச்சானின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெள்ளை மாடு வெளிவந்த போது முந்திரித் தோட்டத்து மனிதர்களின் வாழ்வியலை அவ்வளவு நகாசுத்தன்மையுள்ளதாக இல்லாமல் வெளிப்பட்டிருப்பதாக ஒரு விமர்சனம் வந்தது. பின் நவீனத்துவ எழுத்து தீவிரமாக இருந்த காலகட்டம் அது. பின் நவீனத்துவக் காலகட்டத்தில் கலை அம்சங்களும் நாகாசுத்தன்மையும் கூட அவலட்சணமே. காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் விவரிப்பில் இலக்கண நேர்த்தியோ நகாசோ எதிர்பார்ப்பது ஒரு […]

Read more

இந்தியப் புதையல் ஒரு தேடல்

இந்தியப் புதையல் ஒரு தேடல், பால் ப்ரன்டன், தமிழில் புவனா பாலு, கண்ணதாசன் பதிப்பகம், பக். 520, விலை 300ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-221-2.html கடந்த 1930களில் இந்தியாவில் நிலவி வந்த ஆன்மிக நம்பிக்கைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர் பால் ப்ரன்டன். முதலில் வட மாநிலங்களில் உள்ள யோகிகள், சாதுக்கள் ஆகியோரைச் சந்தித்து விட்டு, தென் இந்தியாவை நோக்கிப் பயணப்பட்டு, வழியில் கிடைத்த அனுபவங்கள், சந்தித்த மனிதர்களிடமிருந்து தெரிந்து கொண்டவை, ஆகியவற்றுடன் திருவண்ணாமலையில் பகவான் ரமண […]

Read more

அகிலம் வென்ற அட்டிலா

அகிலம் வென்ற அட்டிலா, ம.லெனின், சிக்ஸ்த் சென்ஸ், சென்னை, பக். 144, விலை 90ரூ. உலகை ஆட்டிப் படைத்த மாவீரர்களின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயர் அட்டிலா. கி.பி. 395இல் பிறந்த அட்டிலா உலடிகன் சகல வல்லமை பொருந்தியதாகக் கருதப்பட்ட ரோமானியப் பேரரசை தனது படை வல்லமையால் வென்றவன். சமகாலத்தில் உலகம் உணர்ந்த மேலாண்மைக் கொள்கைகளையும், ஆளுமை யுக்திகளையும் அந்தக் காலத்திலேயே தனது உள்ளங்கையில் வைத்திருந்தவன் அட்டிலா. நாடோடியாகத் திரிந்து கொண்டிருந்த தனது ஹுணர் இன மக்களை ஒன்று திரட்டி அவர்களுக்குள் இருந்த […]

Read more

ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்

ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும், தமயந்தி, கருப்புப் பிரதிகள், சென்னை. எனது எல்லா கதைகளிலும் நான் இருக்கிறேன் என்கிறார் ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பின் ஆரம்பத்திலேயே எழுத்தாளர் தமயந்தி. ஒரு பெண்ணின் பார்வையிலான குறிப்பிடத்தகுந்த கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. முன்னுரை எழுதி இருக்கும் பிரபஞ்சனின் சொற்களில் கூறுவதென்றால் இந்த சிறுகதைகள் ஆழ்ந்த வன்முறைகளைப் பற்றிப் பேசுகின்றன. ஒன்று குடும்பவன் முறை. அப்புறம் சட்டம் ஒழுங்கைக் காப்பதாக நம்பப்படும்நபர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த நிறுவனம் ஆற்றும் வன்முறைக் […]

Read more

மனக்குகைச் சித்திரங்கள்

மனக்குகைச் சித்திரங்கள், ஆத்மார்த்தி, புதிய தலைமுறைப் பதிப்பகம், சென்னை. தமிழ் இதழ்களில் தற்போது தனிப்பட்ட அனுபவங்களைப் பதிவு செய்யும்போக்கு அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் புதிய தலைமுறை இதழில் ஆத்மார்த்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு மனக்குகை சித்திரங்கள் என்ற பெயரில் வெளியாகி உள்ளது. நூல்கள் விற்கும் ஆறுமுகம், சாலையில் ஓவியம் வரைபவன், மனநோய் பாதிப்புக்குள்ளான மல்லிகா அக்கா, உறவினர் யாரும் இல்லாதபோதும் வெளிநாட்டில் இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் பாலமூர்த்தி, நான்குவயதில் தொலைந்துபோன குட்டிமகள் இன்னும் தன்னுடன் இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் பெரியவர், மதுக்கூடத்தில் பாடும் ராமசாமி உள்ளிட்ட பல […]

Read more

இரண்டு வரி காவியம்

இரண்டு வரி காவியம், திருக்குறள் தெளிவுரை, பட்டுக்கோட்டை பிரபாகர், ரம்யா பிரியா கிரியேஷன்ஸ் வெளியீடு, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-228-4.html நறுக்கென்று ஒரு திருக்குறள் உரை திருக்குறளுக்குப் பரிமேலழகர் போன்ற ஜாம்பவான்கள் முதல், சென்ற நூற்றாண்டின் டாக்டர் மு.வ. வழி ஆயிரக்கணக்கில் உரை எழுதியிருக்கிறார்கள். இப்போது கதாசிரியர், நாவலாசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர் நடைமுறைத் தமிழில் சரளமாக எழுதியுள்ள உரை விளக்கம் முற்றிலும் வித்தியாசமானது. ஒவ்வொரு அதிகாரத்தின் கடைசியிலும் நறுக்கென்று இரண்டே சொற்களில் மையக் கருத்தைச் சொல்லியுள்ள பாங்கு […]

Read more

ஹாரிபாட்டரும் ரசவாதக்கல்லும்

ஹாரிபாட்டரும் ரசவாதக்கல்லும், ஜே.கே. ரௌலிங், தமிழில் பி.எஸ்.வி. குமாரசாமி, மஞ்சுள் பப்ளிஷிங், நியூ டெல்லி, விலை 299ரூ. இங்கிலாந்தில் பிறந்த ஜே.கே. ரௌலிங்குக்கு அடுத்த ஆண்டுதான் ஐம்பது வயது நிறைவடைகிறது. அதற்குள் இவரது சொத்து மதிப்பு இங்கிலாந்து ராணியின் சொத்து மதிப்பைவிடவும் அதிகமாகிவிட்டது என்கிறார்கள். கணவன், மூன்று குழந்தைகளோடு எடின்பர்க் நகரில் வசிக்கும் ரௌலிங் சம்பாதித்த சொத்து அவ்வளவும் எழுதிச் சம்பாதித்தது என்பதை நம்மவர்கள் நம்புவது சிரமமோ சிரமம். 1997ஆம் ஆண்டில் வெளியான ஹாரி பாட்டர் அண்ட் பிலாஸபர்ஸ் ஸ்டோன் என்ற முதல் தொகுப்பு […]

Read more

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம், முனைவர் ஸ்ரீ ஜெகநாத சுவாமி, ஸ்ரீ லலிதா பதிப்பகம், கோவை, பக். 194, விலை 200ரூ. கோவிலில் வைத்து வரன் பார்ப்பது, திருமண விசேஷங்களில் மாப்பிள்ளை பெண் தேடும் யுகம் மாறி பத்திரிக்கை, இணைய தளங்கள் வாயிலாக வரன் தேடல் எளிதாகிப்போனது. வந்து குவியும் தகவல்களை வரிசைப்படுத்தி, நமது மகள் (அ) மகளுக்கு ஏற்ற வரனை முடிவு செய்வது பெற்றோர்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவால். திருமண தடை, தாமதம் ஏன்? என்பதும், ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது ஏற்படும் குழப்பங்களும் குடும்பங்களை […]

Read more

மோகினித் தீவு

மோகினித் தீவு, அமரர் கல்கி, தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, பக். 88, விலை 25ரூ. எழுத்துல பிதாமகர் அமரர் கல்கி எழுதிய குறுநாவல் மோகினித் தீவு. கல்கியின் தனித்துவமான நடையழகில், மனித வாழ்வின் ஆதார உணர்வுகளான நகைச்சுவை, வீரம், மர்மம், திகில், காதல் ஆகியவை கொண்டு மிளிரும் என்ற நமது அறியாமை கலந்த எண்ணத்தை அவரின் மோகினித் தீவு குறுநாவல் தகர்த்து எறிகிறது. ஒரு தியேட்டர் படம் பார்க்கப்போன இரண்டு பால்ய நண்பர்கள், நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்துக் கொள்கிறார்கள். ஒருவர் ஜப்பானிய போரின்போது […]

Read more
1 677 678 679 680 681 841