கர்ணன்

கர்ணன், எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, சென்னை 108, பக். 376, விலை 320ரூ. பாரதப் போரில் அர்ச்சுனன் தர்ம யுத்தம் செய்தானா? அல்லது யுத்த தர்மத்தை மீறி கர்ணனைக் கொலை செய்தானா? குந்திதேவி கர்ணனைத் தன் மகன் என்று அறிமுகப்படுத்தாதன் நோக்கம் என்ன? தர்மன் உண்மையில் சமாதானத்திற்கான வழியை நாடினானா அல்லது நாடு முழுவதையும் அபகரிக்கும் எண்ணத்தில் இருந்தானா? கர்ணன் துரியோதனனுக்கு நண்பனாக செயல்பட்டானா? துரோகம் செய்தானா? துரியோதனன் நட்புக்காக கர்ணனை ஆதரித்தானா? அல்லது தன் பாதுகாப்புக்காகவா? போன்ற […]

Read more

பொது அறிவுக்கு 1000 கேள்வி பதில்கள்

பொது அறிவுக்கு 1000 கேள்வி பதில்கள், டி.எஸ். ரோகிணி, நற்பவி பிரசுரம், 57பி, பசுல்லா சாலை, தி.நகர், சென்னை 17, பக். 368, விலை ரூ. 150. எவ்வளவுதான் உயர் கல்வி கற்றிருந்தாலும், ஒருவரிடமுள்ள பொது அறிவுத் திறன்தான் அவரது ஆற்றலை உயர்த்தி காட்டுகிறது. அதனால் அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகளில் பொது அறிவுத் தேர்வுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. தவிர, படிக்காதவர்களும் கூடத் தங்களது பொது அறிவை வளர்த்துக் கொள்வது சமுதாயத்தில் மதிப்பு பெற அவசியமாகிறது. இந்நூலின் அறிவியல், வரலாறு, ஆன்மிகம், […]

Read more

ஸ்ரீராமகிருஷ்ணப் பேரொளி

ஸ்ரீராமகிருஷ்ணப் பேரொளி, கல்யாணி வெங்கடராமன், திருமதி கல்யாணி வெங்கடராமன், 21ஈ, நியூடெக் ஐயப்பா என்க்ளேவ், ஸ்ரீ மாதவன் ரோடு, மகாலிங்கபுரம், சென்னை 34, பக். 480, விலை 280ரூ. இந்தியாவில் 19ஆம் நூற்றாண்டில் அவதரித்த மகா புருஷர்களில் தலைசிறந்தவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர். ஹிந்து முஸ்லிம் கிறிஸ்தவம் என்று எல்லா மதங்களும் அந்த ஒரே கடவுளைத்தான் அடைய வழிகாட்டுகின்றன. எனவே எந்த மதத்தையும், அதன் நெறிகளைஹயம் நிந்திக்கக்கூடாது. நேசிக்க வேண்டும் என்று சமய நல்லிணக்கத்திற்கு முதன் முதலாக வழிகாட்டியவர். காளிதேவியை நேருக்குநேர் தரிசனம் செய்தவர். இந்த […]

Read more

ஆயுதப் போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது

ஆயுதப் போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது, எஸ்.என். நாகராஜன், கயல்கவின் புக்ஸ், 16/25, 2வது கடல்போக்கு சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை 41, விலை 60ரூ. கம்யூனிஸத்தைத் தத்தவார்த்த நோக்கில் அணுகிப் படிப்பவர்கள் அனைவரும் அறிந்திருக்கக்கூடிய பெயர், எஸ்.என். நாகராஜன். தமிழகத்தில் வாழும் மார்க்சிய ஆய்வாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் எஸ்.என்.என். நடத்திய மார்கசியம் இன்று என்ற இதழ் மூலமாகத்தான் இன்றுள்ள பலரும் மார்க்சியத்தை உணர்ந்துகொண்டார்கள். மார்க்சியத்தையும் வைணவத்தையும் சேர்த்து சுண்டவைக்கும் காரியத்தை எஸ்.என்.என். செய்திருந்தாலும் மார்க்சிய மூலத்தை தமிழகத்தில் அவர் விதைத்ததை, […]

Read more

சிலம்பம் படம் பாடம்

சிலம்பம் படம் பாடம், பூ. திருமாறன், டிரஸ்ட் நிறுவனம், 91ஏ, மேற்குத் தெரு, வெங்கடாம்பட்டி, கடையம் வழி, ஆலங்குளம் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம், பக். 195, விலை 100ரூ. தமிழர்களின் தற்காப்புக் கலைகளுள் தலையாயது சிலம்பம். பாரம்பரியமும் பழைமையும் கொண்ட இக்கலையின் நுட்பங்களையும் சூட்சுமங்களையும் நெறிமுறையையும் அதன் ரகசியங்களையும் நூல்வழி கற்றுத் தரும் புதிய முயற்சி இந்நூல். சிலம்பாட்டத்தின் வரலாற்றோடு அதன் நேர்த்தியைச் சொல்லும்போதே அக்கலையை நாமும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது. எதிரியின் தாக்குதல்களை சமாளிக்க உதவும் கருங்குருவி நிலை முதல் […]

Read more

தோழமைக் குரல்

தோழமைக் குரல், ஆளூர் ஷானவாஸ், கரிசல் பதிப்பகம், வேளச்சேரி, சென்னை 42, விலை 250ரூ. தொல். திருமாவளவன் இஸ்லாமிய சமூகத்திற்காக ஆற்றியிருக்கும் களப்பணிகளை விவரிக்கிறது இந்நூல். 1990களிலிருந்து அவருடைய உரைகள், அறிக்கைகள், தலையங்கம், கட்டுரைகள் மூலம் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதை தொடர்ந்து எதிர்த்து வந்திருப்பது பதிவாகியிருக்கிறது.   —-   நமோ நாமம், கோவி. லெனின், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 50ரூ. குஜராத்தில் மோடியின் ஆட்சியில் வறுமை, பெண்களின் நிலை, மது விலக்கு, சட்டம் ஒழுங்கு போன்றவற்றை இந்நூல் ஆராய்கிறது. கார்ப்பரேட் ஊடகங்கள் […]

Read more

தத்துவவேசினி நூல் வரிசை

தத்துவவேசினி நூல் வரிசை, The thinker இதழ்களின் வழி பதிவுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். தமிழ்நாட்டின் நாத்திக வரலாறு திராவிடர் கழகத்துக்கும் நீதிக்கட்சிக்கும் முன்பே 1878-1888 வரை நாத்திக சங்கம் சென்னையில் செயல்பட்டு வந்ததை ஆவணங்களுடன் விளக்கும் பல தொகுப்பு நூல்கள் இவ்வரிசையில் உள்ளன. தத்துவம்-கடவுள்-நாத்திகம், சாதி-பெண்கள்-சமயம், காலனியம்-விஞ்ஞானம்-மூடநம்பிக்கைகள் ஆகியவை தமிழிலும், 2 வரிசை நூல்கள் ஆங்கிலத்திலும் பதிப்பிக்கப்பட்டுள்ளதாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கூறுகிறது.   —-   சேரன்மாதேவி, பழ. அதியமான், காலச்சுவடு. குருகுலப் போராட்டமும் திராவிட எழுச்சியும் சேரன்மாதேவி […]

Read more

அயோத்தி இருண்ட இரவு

அயோத்தி இருண்ட இரவு, கிருஷ்ஜா, தீரேந்திரஜா, விடியல். ராமன் மசூதிக்குள் நுழைந்த கதை அயோத்தி கடந்த இருபதாண்டுகளாக நீறுபூத்த நெருப்பாகவும், அவ்வப்போது கனன்று எழுந்தும் அரசியலில் மாற்றங்களைக் கொண்டு வரும் வாக்குவங்கி ஈர்க்கும் காந்தமாகவும் இருக்கிறது. இதற்காக எவ்வாறு திட்டமிடப்பட்டு பாபர் மசூதியில் ராமன் என்கிற கடவுளைக் கொண்டு வந்து மசூதியுடன் தொடர்புப்படுத்தினர் என்கிற வரலாற்றை விளக்கும் இந்நூல் இன்றைய காலகட்டத்தின் மிகத் தேவையான அரசியல் நூல் என்கின்றனர் விடியல் பதிப்பகத்தார்.   —-   அடிப்படைவாதத்தின் வேர்கள், தாரிக் அலி, பாரதி புத்தகாலயம் […]

Read more

ஊழிக்காலம்

ஊழிக்காலம், தமிழ்க் கவி, தமிழினி. இறுதிப் போரின் சாட்சி ஈழப்போரின் இறுதி நாட்களில் நடந்தவை குறித்து நாம் அறிந்த செய்திகள் சொற்பம். மரணத்தை தொட்டுவிடும் தூரத்தில் கண்ட மக்களிடையே இன்னமும் துயரின் நெருப்பு மனதுக்குள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இத்தீயை நெஞ்சில் சுமந்து, நடந்தவற்றுக்கு சாட்சியாய் இருந்த 66 வயதுப் பெண்ணாகிய தமிழ்க்கவி எழுதிய தன்வரலாற்று நாவல் இது. ஈழப்போரின் இறுதிக்கால அவலம், துயரம், கோரம், கொடூரம் என்று ஒவ்வொருவருக்குள்ளும் இறுகிக் கிடக்கும் துயர நினைவுகளை தன் நாவலில் கசியவிட்டிருக்கிறார் தமிழ்க்கவி. போர்க் குற்றங்களுக்கு […]

Read more

கொங்கு மணம் கமழும் படைப்புகள்

கொங்கு மணம் கமழும் படைப்புகள், டாக்டர் நல்ல பழனிசாமி, தமிழ்ப் பண்பாட்டு மையம், டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி வளாகம், காளப்பட்டி சாலை, கோவை 641048, பக். 328. தமிழுக்கு வளம் சேர்ப்பதில் கொங்க நாட்டின் பங்கு மிகவும் அதிகமாகும். கவிதை, நாவல், சிறுகதை, கலைத்துறைகளில் கொங்கு படைப்பாளர்கள் உச்சத்தில் நின்றுள்ளனர். நெல்லை வட்டார, மண் வாசனையைத் தன் வாசகர் படித்து நுகரும் வகையில் வழங்கியவர், சிறுகதைச் சிற்பி புதுமைப்பித்தன். இதுபோல நாஞ்சில்களில், தஞ்சை, மதுரை, சென்னை வட்டார வழக்குகளையும், அந்தந்த படைப்பாளிகளின் […]

Read more
1 711 712 713 714 715 841