தூது வந்த வீரர்

தூது வந்த வீரர், ஏம்பல் தளும் முல் முகம்மது, நியூலைட் புக் சென்டர், 1504ஏ, எம்.ஐ.ஜி., 3ம் முதன்மைச் சாலை, மாத்தூர், எம்.எம்.டி.ஏ., சென்னை 68, பக். 224, விலை 200ரூ. தாமஸ் கார்லைல், 1840ல் லண்டனில் ஆற்றிய சொற்பொழிவின் தமிழாக்கம் இந்நூல். இதில், இளவரசர் சார்லஸ் ஆற்றிய இஸ்லாமும் மேற்கு நாடுகளும் என்ற சொற்பொழிவின் தமிழாக்கமும் இணைந்துள்ளது. அண்ணல் நபிகள் நாயகம் பற்றி, அப்போது பரப்பப்பட்டு வந்த வதந்திகளையும், இஸ்லாம் மார்க்கம் பற்றிய உண்மை நிலைகளையும், ஒரு கிறிஸ்தவராக இருந்து கார்லைல் ஆற்றிய […]

Read more

ஜே.பி. சந்திரபாபு வாழ்க்கை வரலாறு

ஜே.பி. சந்திரபாபு வாழ்க்கை வரலாறு, விக்டோரியா பதிப்பகம், 5, நவுரோஜி அப்பார்ட்மெண்ட், 60, பச்சையப்பன் கல்லூரி விடுதி சாலை, சென்னை 31, விலை 300ரூ. நகைச்சுவை நடிகர்களில் சிறப்பிடம் பெற்றவர் சந்திரபாபு. மேல் நாட்டு பாணியில் நடனம் ஆடுவார். சொந்தக்குரலில் பாடுவார். சிவாஜிகணேசனுக்கு அடுத்த சிறந்த நடிகர் நான்தான் என்று தைரியமாகக் கூறியவர். குறைந்த படங்களில்தான் நடித்திருந்தாலும், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். 1958ல் ஷீலா என்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை மணந்த சந்திரபாபு, அவள் மனதில் ஏற்கனவே வேறு ஒருவர் இடம் […]

Read more

திராவிடத் தெய்வம் கண்ணகி

திராவிடத் தெய்வம் கண்ணகி, தொகுப்பாசிரியர் சு. சண்முகசுந்தரம், காவ்யா, சென்னை 24, பக். 926, விலை 700ரூ. ஒற்றைச் சிலம்பு கொண்டு மன்னனிடம் நீதி கேட்டு வாதாடி, மதுரையைப் பற்றி எரியச் செய்தாள் கண்ணகி. அவளது சிலம்பாலும், சினத்தாலும் உருவான சிலப்பதிகாரம் திராவிட இதிகாசமாகப் போற்றப்படுகிறது. கண்ணகி திராவிடத் தெய்வமாக வணங்கப்படுகிறாள். வீரபத்தினி, நடுகல், தாய்த் தெய்வம் போன்ற முன்னோர் வழிபாடுகள் திராவிட வழிபாடுகளாக விளங்கி வருகின்றன. கண்ணகி வழிபாடு திராவிட மக்களின் தாய்த் தெய்வ வழிபாட்டில் ஒன்றாகவும், ஆரம்பகாலம் தொட்டே வளர்ந்து வந்த […]

Read more

அருளிச்செயல் அமுதமும் தொல்புகழ் அமுதமும்

அருளிச்செயல் அமுதமும் தொல்புகழ் அமுதமும், என்.எஸ்.கிருஷ்ணன் ஸ்வாமி, வரமங்கை பதிப்பகம், சென்னை 5, பக். 398, விலை 200ரூ. கம்பராமாயணப் பாடல்களில் ஆழ்வார் பாசுரங்களின் தாக்கம் எவ்வளவு தூக்கலாக இருக்கிறது என்பதைத் தெளிவான விளக்கங்களுடனும் பொருத்தமான மேற்கோள்களுடனும் முன்வைக்கின்ற நூல். பி.ஸ்ரீ.ஆச்சாரியாவுக்குப் பிறகு ஆழ்வார்களையும் கம்பனையும் ஒப்பிட்டு இவ்வளவு ஆராய்ச்சிப்பூர்வமாக யாரும் எழுதியதில்லை. கம்பனின் ஆறு காண்டங்களிலுள்ள அனைத்துப் பாடல்களையும் ஆசிரியர் அலசிப் பார்த்திருப்பதை நூலைப் படிக்கும்போது உணரமுடிகிறது. குறிப்பாக ஓர் கருஞாயிறு அந்தமில்லாக் கதிர் பரப்பி என்கிற திருவாய்மொழிப் பாடலும் கரு ஞாயிறு […]

Read more

எனது சுதந்திரச் சிந்தனைகள்

எனது சுதந்திரச் சிந்தனைகள், டாக்டர் நா. மகாலிங்கம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை 14, பக். 136, விலை 75ரூ. கோவை மாவட்டத்தைச் சார்ந்த நா. மகாலிங்கம் பல்வேறு தொழில்களில் வெற்றிக் கொடி நாட்டியவர். பல்வேறு கல்வி நிறுவனங்களை நிறுவி பலரது உயர்வுக்கு வலிகோலியவர். வள்ளலாரின் திருத்தொண்டர். பல சமய, சமூக அமைப்புகளில் இடையறாது பணிபுரிந்தும் உதவியும் வருபவர். அவரது கண்ணோட்டங்களின் தொகுப்பாக எனது சுதந்திரச் சிந்தனைகள் வெளியாகி இருக்கிறது. தனது அனுபவங்களின் வெளிப்பாடாக ஓம்சக்தி மாத இதழில் இவர் எழுதிய சில கட்டுரைகளின் தொகுப்பே […]

Read more

மறைமலையடிகள் வரலாறு

மறைமலையடிகள் வரலாறு, மறை. திரு.நாவுக்கரசு, மறைமலையடிகள் பதிப்பகம், சென்னை 62, பக். 784, விலை 600ரூ. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் மறைமலையடிகளின் பிறப்பில் தொடங்கி (1876) அவரது பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள், பாஸ்கர சேதுபதி, பாண்டித்துரை தேவர், ரா. ராகவையங்கார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, யாழ்ப்பாணம் ந.சி. கந்தையா, மயிலை சீனி. வேங்கடசாமி முதலிய அறிஞர்களோடு அவருக்கிருந்த தொடர்பு. அவர் எழுதிய ஆய்வு நூல்கள் போன்ற பல தகவல்களோடு அவரது இறுதிக்காலம் வரை (1950) நிகழ்ந்த […]

Read more

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள், வேளுக்குடி கிருஷ்ணன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 216, விலை 115ரூ. சகல புண்ணியங்களும் பெற வேண்டுமென்றால் பகவானின் திவ்ய நாமங்களைச் சொன்னாலே போதும் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த வகையில் கண்ணன் நாமம் சொல்லும் க9தைகள் என்ற தலைப்பில் பல்வேறு அத்தியாயங்களை, மாருதியின் உயிரோட்டமான வண்ண ஓவியங்களுடன் தந்து விளக்கி இருக்கிறார் நூல் ஆசிரியர். கண்ணனைப் போற்றம் கதைகள் அனைத்தும் ஸ்ரீ கண்ணனக்கே உரிய குணங்களான சுறுசுறுப்பு, துறுதுறுப்பு, குதூகலம் ஆகியவற்றை எளிமையாக அனைத்துத் தரப்பு […]

Read more

அட்டவீரட்டத் தலங்கள்

அட்டவீரட்டத் தலங்கள், அ. அறிவொளி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108, பக். 152, விலை 45ரூ. சிவபெருமான் திருவிற்குடி, திருவதிகை, திருப்பறியலூர், திருக்கண்டியூர், திருக்குறுக்கை, திருவழுவூர், திக்கடவூர், திருக்கோவிலூர் ஆகிய எட்டுத் திருத்தலங்களில் நிகழ்த்திய வீரச் செயல்களை விளக்குவதால் இவ்வெட்டுத் தலங்களும் அட்டவீரட்டத் தலங்கள் எனப்படும். அட்டவீரட்ட திருத்தலங்களின் காரணங்களாக படைப்பு முழுவதற்கும் எட்டு ஆதாரங்கள் சொல்லப்பெற்றுள்ளன. அவை அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் ஒத்துவரும். இந்த எட்டிலும் இறைவனின் சக்திரகள் கலந்து நிறைந்துள்ளன. இவையே இந்தப் படைப்பைக் காத்து வருகின்றன. இப்படிப்படைப்பு முழுவதிலும் விரவிக்கிடக்கும் ஆதாரப் […]

Read more

இயற்கையுடன் இசைந்த பெரு வாழ்வு

இயற்கையுடன் இசைந்த பெரு வாழ்வு, பேரா. ஜான்சி ஜேக்கப், மொழிபெயர்ப்பு யூமா வாசுகி, புலம், சென்னை, விலை 60ரூ. பேரா. 1936ஆம் ஆண்டு கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் நாட்டகம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட குறிச்சி என்னும் ஊரில் பிறந்தவர். விலங்கியல் பேராசிரியராகப் பணியாற்றியவர். சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் உயர் கல்வி பயின்றவர். 1978ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் முதன்முறையாக இயற்கையுடன் இருத்தல் என்னும் முகாமை நடத்தினார். 1979ஆம் ஆண்டு SEEK (Society for Environmental Education in Kerala) என்னும் அமைப்பைத் தொடங்கினார். இயற்கையுடன் இசைந்த வாழ்க்கை […]

Read more

தமிழ் இலக்கியங்களில் மனமும் மருந்தும்

தமிழ் இலக்கியங்களில் மனமும் மருந்தும், ப. குப்புசாமி, மணி வாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 125ரூ. மனம் பற்றி தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு இலக்கியங்கள் கூறிய கருத்துக்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. இக்காலத்தில் அதிகமாக பேசப்படும் மன உளைச்சல் பற்றி தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு பேசப்பட்டுள்ளது என்பது விளக்கமாகவும், விரிவாகவும் கூறப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள மருத்துவ குறிப்புகளையும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, 8/1/2014.   —-   சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள், சு. […]

Read more
1 709 710 711 712 713 841