சிறுவர் கதைக் களஞ்சியம் (தொகுதி 1, 2)

சிறுவர் கதைக் களஞ்சியம் (தொகுதி 1, 2), வானொலி அண்ணா என்.சி. ஞானப்பிரகாசம், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக்.112, விலை 85ரூ. கதை சொல்லிகள் காலந்தோறும் இருக்கிறார்கள். ஆனால் குழந்தைகளை நல்வழிப்படுத்தி, அவர்களை அறநெறியில் செல்ல வழி ஏற்படுத்தித்தரும் கதைகளைச் சொல்லத்தான் பாட்டிமார்கள் இல்லை. அந்தக் குறையை நீக்கியிருக்கிறார் என்.சி. ஞானப்பிரகாசம். நம்காலத்தில் வாழ்ந்து மறைந்த அறிவாளர்கள், அன்பாளர்கள், அருளாளர்கள், ஞானிகள், தலைவர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை கதைகளாக்கி, சிறுவர்களின் மனதில் பதியவைக்கும் உத்தி சிறப்பு. குழந்தைகளும் குழந்தைகளுக்குக் […]

Read more

அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு

அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு, பில் பிரைசன், தமிழில் ப்ரவாஹன், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 400ரூ. அறிவியல் அது கசப்பான பாடங்களில் ஒன்று. ஆனால் அறிவியல் சாதனைகள் கசப்பானவையா? இல்லையே. அப்புறம் எப்படி பாடங்கள் மட்டும் கசப்பானவையாக இருக்கிறது என்றால், அதனைக் கற்பிக்கும் முறைதான் அதற்குக் காரணம். அறிவியலை எளிமையாகச் சொன்னால், அதைவிட த்ரில் வேறு எதிலும் இல்லை. அப்படி எழுதப்பட்ட புத்தகங்களில் முதன்மையானது இது. அதனால்தான் பில்பிரைசனின் இந்தப் புத்தகம் உலகிலேயே அதிகமாக விற்பனை ஆன […]

Read more

நிச்சயம் வெல்லலாம் நேரான பாதையில்

நிச்சயம் வெல்லலாம் நேரான பாதையில், கோபாலஸ்மி ரமேஷ், சேவாலயா கசுவா கிராமம், திருநின்றவூர் அருகில், திருவள்ளூர் மாவட்டம் 602024, விலை  நன்கொடை மட்டுமே. பொதுவாக எல்லா பள்ளிகளுமே தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் இன்றைய நிலையில் சேவாலயா தொண்டு நிறுவனம், கல்வியுடன் மாணவர்களக்கு இறை நம்பிக்கை, தன்னம்பிக்கை, நேர்மை, ஒழுக்கம், பொதுநலன் சார்ந்த நற்பண்புகளைப் போதித்தும் நீதிபோதனை (Moral Science) வகுப்புகளையும் பிரத்யேகமாக நடத்துகிறது. குறிப்பாக, மகாகவி பாரதி, மகாத்மா காந்தி, விவேகானந்தர் போன்ற மகான்கள் கூறிய […]

Read more

ஹாரிபாட்டரும் பாதாள அறை ரகசியங்களும்

ஹாரிபாட்டரும் பாதாள அறை ரகசியங்களும், ஜே.கே.ரோலிங், பி.எஸ்.வி. குமாரசாமி, மஞ்சுள் பப்ளிஷங் ஹவுஸ், 42, மாளவியா நகர், போபால் 462 003, பக். 370, விலை 350ரூ. ஹாரிபாட்டர் புத்தக வரிசையில் இது இரண்டாவது. ஹாக்வாட்ஸ் மந்திர தந்திர மாயாஜாலப் பள்ளியில், முதல் ஆண்டு படிப்பை முடித்த ஹாரி உள்ளிட்ட மாணவர்கள், விடுமுறைக்காக தங்கள் வீடுகளுக்கு செல்கின்றனர். ஹாரி, தனது பெரியம்மா, பெட்டூனியாவின் வீட்டிற்கு செல்கிறான். விடுமுறை முடிந்து பள்ளிக்கு புறப்பட ஓரிரு நாட்கள் இருக்கும் நேரத்தில் டாபி என்ற வினோத பிராணி ஹாரியை […]

Read more

என் பிள்ளைகளுக்குப் பரீட்சை

என் பிள்ளைகளுக்குப் பரீட்சை, சுவாமி விமூர்த்தானந்தர், ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை 4, பக். 67, விலை 25ரூ. உள்ளுணர்வுக் கதைகள் என்று அழைக்கப்பெறும் 15 சிறுகதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன படிக்கப் படிக்கச் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் ஒவ்வொரு கதையும் அமைந்துள்ளது. சிறுவர்கள் விரும்பிப் படிக்கவும் நல்ல வழியில் சிந்தனையை வளர்க்கும் படியான கதைகளைக் கொண்டிருப்பது சிறப்பு. அஃறிணையிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியருக்கிறது என்பதை அந்தப் பூனைகளின் குடும்பம், கொசு தர்மம் போன்ற கதைகள் உணர்த்துகின்றன. அன்பு என்ற கதை, […]

Read more

திருமந்திரத்தின் சிறப்பம்சங்கள்

திருமந்திரத்தின் சிறப்பம்சங்கள், பேரா.பு.சி. இரத்தினம், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 65ரூ. திருமூலர் அருளிய திருமந்திரத்தின் பாடல்களில் 42 பாடல்களை தேர்ந்து எடுத்து விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 8/1/2014.   —-   சிலப்பதிகாரம் மூலம், மணிமேகலை மூலம், கலாஷேத்ரா பப்ளிகேஷன்ஸ், விலை ரூ120, ரூ120. ஒரு பக்கம் கணினி வரவால், இஷ்டப்படி பலரும் நூல் எழுதி சந்தையில் வெளியிடும் நேரத்தில், ஐம்பெரும் காப்பியங்களில் இரண்டை கோவிலூர் ஆதினகர்த்தர் வெளியிட்டிருக்கிறார். இவை மூல நூல்களின் செம்பதிப்பாகும். […]

Read more

அமுதம் பருகுவோம்

அமுதம் பருகுவோம், ப. முத்துக்குமார சுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, விலை 100ரூ. இந்து மதத்தின் வேதங்கள், உபநிஷத்துக்கள் ஆகியவற்றின் அருமை பெருமைகளை விளக்குவதோடு தனி மனித உயர்வுக்கும் நெறி சார்ந்த வாழ்க்கைக்கும் வேதங்களை மேற்கோள் காட்டி எழுதி இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 8/1/2014.   —-   தகவல்கள் 42, அமரர் கோ. தென்கச்சி சுவாமிநாதன், கீதம் பப்ளிகேஷன்ஸ், 3/3, பத்மாவதி அவென்யூ, திருமலைநகர், அனெக்ஸ் பெருங்குடி, சென்னை 96, பக். 160, விலை 90ரூ. […]

Read more

நெஞ்சின் அலைகள்

நெஞ்சின் அலைகள், கவிமாமணி புதுவயல் செல்லப்பன், நல்லழகம்மை, 46, 2வது தெரு, புவனேஸ்வரி நகர், ஆதம்பாக்கம், சென்னை 88, பக். 200, விலை 125ரூ. புதுக்கவிதை கோலோச்சும் காலத்தில் வாழ்கின்ற மரபுக் கவிஞர் இதனைப் படைத்திருக்கிறார். தெய்வ நம்பிக்கை, தேசப்பற்று, தமிழின் மீது அதிக ஆர்வம் கொண்ட ஆசிரியர் பல்வேறு தலைப்புகளில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். சமுதாயத்தின் குறைகளை கண்டு வேதனைப்பட்டாலும், இனி தீர்வு வரும் என்று கருதும் ஆசிரியரின் உணர்வு பாராட்டுதற்கு உரியது. அதற்கு அடையாளமாக, உழைப்பினால் கிடைக்கும் சோற்றை, உண்மையில் […]

Read more

ஜான் கென்னடி கொலையானது எப்படி?

ஜான் கென்னடி கொலையானது எப்படி?, சிவதர்ஷினி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 70ரூ. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடி, 1963ம் ஆண்டு டல்லாஸ் நகரில் காரில் ஊர்வலமாக சென்றபோது எவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டார்? அவரை சுட்டதாக கைது ஆன ஆஸ்வால்டு என்பவனை ஜேக் ரூபி என்பவன் சுட்டுக்கொன்ற மர்மம் என்ன? என்பது பற்றியும், மற்றும்  இது தொடர்பான அனைத்து தகவல்களும் துப்பறியும் நாவல்போல சுவைபட தொகுத்துத் தரப்பட்டுள்ளன. கென்னடி கொல்லப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவரை உண்மையில் சுட்டுக்கொன்றது […]

Read more

நாலடியார்

நாலடியார், புலியூர் கேசிகன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 208,விலை 120ரூ. திருக்குறளோடு ஒத்த சிறப்புடைய நூல் நாலடியார் என்பதை, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்ற பழந்தொடர் உணர்த்துகிறது. பதினென்கீழ்கணக்கு என்னும் பதினெட்டு நூல்களுள் ஒன்றான இந்த நூல் நல்லொழுக்கம், பொறுமை, முயற்சி நட்பு போன்ற வாழ்வியல் கருத்துக்களைக் கூறும் நீதி நூல். அறன் வலியுறுத்தல், ஈகை, கல்வி, பெருமை, மானம், சுற்றந்தழால், நட்பு ஆராய்தல் முதலிய பல அதிகாரங்கள் திருக்குறள் அதிகாரங்களின் தலைப்புகளாகவே அமைந்துள்ளன. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற முப்பிரிவுகள் […]

Read more
1 708 709 710 711 712 841