கடவுளைக் காட்டிய கவிகள்

கடவுளைக் காட்டிய கவிகள், மு. ஸ்ரீநிவாஸன், திருக்குறள் பதிப்பகம், சென்னை 78, பக். 240, விலை 150ரூ. கேரளத்தின் எழுத்தச்சன், ஸ்ரீநாராயண குரு, கர்நாடகத்தின் சர்வக்ஞர், கனகதாசர், புரந்தரதாசர், மகாராஷ்டிராவின் பக்த ஜனாபால், பஞ்சாபின் அர்ஜுன்தேவ், தமிழகத்தின் ஆளவந்தார் உள்பட 32 பக்திக் கவிஞர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கவிஞர்களின் முக்கியத்துவம், தனித்தன்மை, பக்தியினூடாக அவர்கள் பரப்பிய சமுதாயச் சிந்தனைகள் போன்ற அனைத்தையும் பற்றிய அற்புதமான செய்திகளைப் பரிமாறும் நூல். பல்வேறு மொழிக் கவிஞர்களின் குறிப்பிடத்தக்க கவிதைகளை மேற்கோளாக இனிய தமிழில் தந்திருக்கிறார் […]

Read more

வட்டி ஓர் உயிர்க்கொல்லி

வட்டி ஓர் உயிர்க்கொல்லி, நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 40ரூ. வட்டியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த உண்மை சம்பவங்களை எடுத்துக் கூறும் புத்தகம் இது. தொடக்கத்தில் வணிகர்களை மட்டுமே வட்டமிட்டுக் கொண்டிருந்த வட்டி தற்போது ஏழை மக்களை உயிர் கொல்லி நோய்போல் தொற்றிக் கொண்டுவிட்டது. வட்டிக்கான வாசல்களை அடையாளங்காட்டும் இஸ்லாம் மானுடவர்க்கத்தை வாழ்வாங்கு வாழ பல அறவுரைகளை கூறியுள்ளது. இதை பின்பற்றி ஆசிரியர் தாழை மதியவன் வட்டியால் ஏற்படும் தீங்கு குறித்து விளக்கி கூறி இருப்பது […]

Read more

திரைப்படத் தகவல்களின் வினாடி-வினா விடை

திரைப்படத் தகவல்களின் வினாடி-வினா விடை, டி.என். இமாஜான், சங்கர் பதிப்பகம், சென்னை 49, பக். 160, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-577-5.html வினாடி வினா வடிவத்தில் திரைப்படத்துறை சார்ந்த தகவல்களைச் சொல்லும் புத்தகம். இந்தப் புத்தகத்தில் உலக சினிமாவில் இருந்து உள்ளூர் சினிமா வரை அனைத்து முக்கியமான திரைப்படங்களைப் பற்றிய தகவல்கள் திறம்படத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. நடிகர்கள் நடிக்க வந்த வருடம், அவர்கள் பெற்ற விருதுகள், மிக முக்கியமான படங்கள், அதனை இயக்கிய இயக்குநர்கள், உலக அளவில் […]

Read more

வெள்ளை மொழி

வெள்ளை மொழி, அரவாணியின் தன் வரலாறு, ரேவதி, அடையாளம், புத்தாநத்தம் 621310, பக். 271, விலை 200ரூ. நாமக்கல்லில் துரை சாமியாகப் பிறந்தவர், ரேவதி என்னும் திருநங்கையாக தன்னை மாற்றிக் கொண்டதற்கு முன்பும் பின்பும் அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும், தன் வரலாறாகச் சொல்லிச் செல்லும் நூல். பெண் உணர்வோடு ஆணாக வளைய வரும் ஒருவருக்கு, ஆதரவாக இருக்க வேண்டிய குடும்பத்தினர், அவரை வெறுப்பதாலேயே அவர், தன்னுடைய சுயத்தை மீட்டெடுக்க குடும்பத்தை விட்டு வெளியேறி, சமூகத்தின் பொதுவெளியில் பல துயரங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதை […]

Read more

மாவீரன் நெப்போலியன்

மாவீரன் நெப்போலியன், கண்ணப்பன் பதிப்பகம், 16, கம்பர் தெரு, ஆலந்தூர், சென்னை 16, விலை 30ரூ. மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் புத்தகம். சாதாரண நடுத்தர வர்க்கத்தில் பிறந்து பிரேஞ்சு நாட்டின் சக்ரவர்த்தியாக உயர்ந்தவர் மாவீரன் நெப்போலியன். பல போர்களில் வெற்றி பெற்ற நெப்போலியன், ஐரோப்பிய நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். மேலும், நெப்போலியனின் காதல் குறித்தும், அவர் பெற்ற வெற்றிகள் மற்றும் சீர்ததிருத்தங்கள் குறித்து விவரிக்கிறார் ஆசிரியர் சித்தார்த்தன். நன்றி; தினத்தந்தி, 4/4/2012.   —-   வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, […]

Read more

விதுர நீதி

விதுர நீதி, குறிஞ்சி, 15-21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-471-2.html மகாபாரதத்தில், திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோரின் தம்பி விதூரர். அவர் ஒரு வேலைக்காரிக்கு பிறந்தவர். ஆதலால், அறிவிலும், ஆற்றலிலும், நீதியிலும் சிறந்த அவரை தாழ்ந்த நிலையிலேயே கவுரவர்கள் வைத்திருந்தனர். பணிப்பெண் ஒருத்தியைத் தான் திருமணம் செய்து வைத்தனர். கவுரவர்கள் தவறு செய்யும்போதெல்லாம் அவர்களை திருத்த முயன்றார் விதுரர். அதனால் துரியோதனன் […]

Read more

அதிகம் பயணிக்காத பாதை

அதிகம் பயணிக்காத பாதை, பிரதீப் சக்ரவர்த்தி, பழனியப்பாபிரதர்ஸ், 5, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 210ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-154-1.html தமிழ்நாட்டில் பெரிய கோவில்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அதுபோல சிறிய கோவில்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அதிகம் பிரபலம் ஆகாத ஆனால் சிறப்புகள் உள்ள கோவில்கள் பற்றி இந்த புத்தகம் விவரிக்கிறது. நன்றி; தினத்தந்தி, 4/4/2012.   —- 63 எளிய யோகாசனங்கள், வரதராஜன், பிரியா நிலையம், 53 கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை […]

Read more

மெய்யும் பொய்யும்

மெய்யும் பொய்யும், மேலாளர், ஸ்ரீ காசிமடம், திருப்பனந்தாள் 612504, விலை 25ரூ. திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்தின் 21வது அதிபர் முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள், கயிலை மாமுனிவர் என்று அழைக்கப்படுகிறார். அவருடைய அருளுரைகள், கருத்துரைகள், அறிவுரைகள் கொண்ட நூல். ஆன்மிகம், ஆலயவழிபாடு, தமிழ், வடமொழி, திருக்குறள், வெளிநாடுகளில் தமிழர்கள்… இவவ்று பல்வேறு பொருள் பற்றி, பயனுள்ள கருத்துக்கள் இந்நூலில் நிறைந்துள்ளன. ஆன்மிகம் பற்றியும், இலக்கியம் பற்றியும் பலருடைய மனதில் இருக்கக்கூடிய ஐயங்களுக்கு இந்த நூலில் விடை இருக்காது. எல்லோரையும் ஈர்க்கக்கூடிய நடையில் நூல் எழுதப்பட்டுள்ளது. வாசிக்கும்போதும் […]

Read more

அம்மாக்கள் வாழ்ந்த தெரு

அம்மாக்கள் வாழந்த தெரு, ஆசு, இருவாட்சி, சென்னை 11, பக். 120, விலை 70ரூ. கிராமத்தின் வாழ்க்கையை மிகத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கும் சிறுகதைகளின் தொகுப்பு. அதிலும் குறிப்பாக கிராமத்துப் பெண்களின் வேதனைகள், துயரங்கள் பல கதைகளில் வெளிப்படுகின்றன. மழையில்லாமல் எங்கெங்கும் தீய்ந்து போன நிலங்கள். கிராமத்து மனிதர்களுக்கு உணவுக்கும் வழியின்றிப் போகிறது. பூமிக்கடியில் உள்ள கிழங்குகள், தானே முளைத்து வளர்ந்திருக்கும் பண்ணை கீரைகள், சோற்றுக்கற்றாழை எனக் கிடைப்பதையெல்லாம் அவர்கள் தேடிக் கண்டுபிடித்து உண்டு, உயிர் வாழ வேண்டிய நிலையை, ஒரு சிறுகதை துயரத்துடன் […]

Read more

இன்று ஒரு தகவல்

இன்று ஒரு தகவல், முத்துநாடு பப்ளிகேஷன், 48/31, புதூர், அக்ரகாரம், தேவகோட்டை 630302, விலை – முதல் தொகுதி ரூ.600, இரண்டாம் தொகுதி ரூ 750. வானொலியில் தினமும் ஒரு தகவலைச் சொல்லி, மக்களை சிந்திக்கச் செய்தவர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். தகவலுடன் சேர்த்து அவர் சொன்ன குட்டிக்கதைகள் அழகானவை. அற்புதமானவை. அவர் சொன்ன நூற்றுக்கணக்கான குட்டிக்கதைகள், இரண்டு பெரும் நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இக்கதைகளை படிப்பு, அறிவு, பந்தபாசம், மனித இயல்புகள் இவ்வாறு பொருள் வாரியாகத் தொகுத்திருப்பது பாராட்டுக்குரியது. எல்லா நூல் நிலையங்களிலும் இடம் […]

Read more
1 749 750 751 752 753 841