வரப்பெற்றோம்

வரப்பெற்றோம் கொங்குநாட்டு வரலாறு, மயிலை சீனி வேங்கடசாமி, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை 14, பக்கங்கள் 198, விலை 120ரூ. இந்திய விஞ்ஞானிகள், சிவன், கற்பகம் புத்தகாலயம், பக்கங்கள் 208, விலை 65ரூ. குழந்தை பாக்கியம், குழந்தை வளர்ப்புக்கு எளிய சித்தவைத்தியம், மீ. பழனியப்பா, செந்தமிழ் பதிப்பகம், சென்னை 49, பக்கங்கள் 136, விலை 55ரூ. பொது நூலகத்தின் தோற்றமும் வளர்ச்சியும், ப. பாலசுப்பிரமணியன், புத்தகப்பூங்கா, சென்னை 14, பக்கங்கள் 168, விலை 100ரூ விதைகள், நெடுஞ்செழியன், புருஷோத்தமன், குமாரசாமி, செந்தில்குமரன், பூலகின் நண்பர்கள், சென்னை10, […]

Read more

தஞ்சை மண்ணின் தமிழ்ச் சான்றோர்கள்

தஞ்சை மண்ணின் தமிழ்ச் சான்றோர்கள், கே. இளந்தீபன், குடந்தைத் தமிழ்ச்சங்கம், கும்பகோணம் 612001, விலை 100ரூ. தஞ்சை மண்ணில் தோன்றி தமிழ்நாட்டுக்கு அரும்பணியாற்றிய சான்றோர்கள் பலர். அவர்களில் தமிழ்த்தாத்தா உ.வே.ரா. கிருஷ்ணமூர்த்தி, கு.பா.ராஜகோபாலன், தி. ஜானகிராமன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், குன்றக்குடி அடிகளார், சுரதா, சீர்காழி கோவிந்தராஜன் உள்பட 24பேர்களின் வாழ்க்கை வரலாறுகள் கொண்ட புத்தகம் இது. சரளமான நடையில் நூலை எழுதியுள்ளார் கே. இளந்தீபன்.   —–   சுக்கிரநீதி, பாரி புத்தகப் பண்ணை, 184-88, பிராட்வே, சென்னை 108, விலை 200ரூ. சுக்கிரரால் […]

Read more

பொதுதமிழ் (மாதிரி வினா விடைகள்)

பொதுதமிழ் (மாதிரி வினா விடைகள்), சி.கலை சின்னத்துரை, விகடன் பிரசுரம், சென்னை 2, பக்கங்கள் 248, விலை 150ரூ உங்கள் தமிழ் அறிவை பட்டை தீட்டும் களம், என்றும் பாடத்திட்ட அடிப்படையில் தொகுக்கப்பட்ட துல்லியப் பதிவு என்றும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2,4, யு.பி.எஸ்,சி.டி.இ.டி., வி.எ.ஓ, போட்டித் தேர்வுகளுக்கான அடிப்படைக் கருவூலம் என்றும் நூலின் அட்டையில் குறிப்பு உள்ளதால் உள்ளே இருக்கும் விவரங்கள் எவையென்பது சொல்லமலேயே விளங்கும். இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் இளைஞர்களுக்கு சவாலாக இருப்பது போட்டித் தேர்வுகள்தாம். என்னதான் பொது அறிவை வளர்த்துக் கொள்ள […]

Read more

அரவாணியம்

அரவாணியம், விசாலட்சுமி பதிப்பகம், கிழக்குத்தெரு, கடையம், நல்லாப்பாளையம் அஞ்சல் 605701, விழுப்புரம் மாவட்டம், விலை 180ரூ. அலி என்றும் அரவாணி என்றும் திருநங்கை என்றும் அழைக்கப்படுகிறவர்கள் மகாபாரத காலத்திலேயே இருக்கிறார்கள். இதுபற்றி முனைவர் கி. அய்யப்பன், அரவாணியம் ஏன் ஏற்படுகிறது என்று பல ஆண்டுகள் ஆராய்ந்து இந்த நூலை எழுதியுள்ளார்.   —- சித்தர்களின் சொர்க்கபுரி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 130ரூ. பொதிகை மலை பக்தி யாத்திரையை அற்புதமாக புத்தகமாக தொகுத்து கொடுத்துள்ளார் முத்தாலங்குறிச்சி காமராசு. தூத்துக்குடி மாவட்டத்தைச் […]

Read more

குமரகுருபரரின் தமிழ் உள்ளம்

குமரகுருபரரின் தமிழ் உள்ளம், ந. முருகேசன், ஓலைச்சுவடித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 613010, பக்கங்கள் 94, விலை 80ரூ குமரகுருபரரின் தமிழ்ப்பற்று அளவிடற்கரியது. அருந்தமிழ், செழுந்ததமிழ்த் தெள்ளமுது, சொற்களை பழுத்த தொகைத்தமிழ், புத்தமுதம் வழிந்தொழுகும் தீந்தமிழ், இசை முத்தமிழ் என்றெல்லாம் அகங்குளிரப்பாடி 17ஆம் நூற்றாண்டில் தமிழை உச்சாணிக் கொம்புக்கு ஏற்றியவர். பக்தி மணமும் பைந்தமிழ் மணமும் கமழும் நூலாக இது திகழ்கிறது. இவ்வாறு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ம. திருமலை வழங்கியுள்ள அணிந்துரை இந்நூலுக்கு அணி சேர்த்துள்ளதை வழிமொழிந்தே ஆகவேண்டும். குமரகுருபரரின் தமிழ் […]

Read more

உயிரே உயிரே

உயிரே உயிரே, மாலன், புதிய தலைமுறை வெளியீடு, விலை 160ரூ,‘ ஒன்றுமட்டும் சொல்வேன், ஜென்னி உன்னைத் திருமணம் செய்துகொள்வதன் மூலம் மகத்தான தியாகத்தைச் செய்கிறாள். இதை நீ மறந்து விடுவாயானால் வாழ்வில் உனக்குப் பல சங்கடங்கள் உண்டாகும். உன் மனதை நீயே சோதனை செய்து பார்- இப்படி மகன் காரல் மார்க்சுக்கு ஒரு கடிதம் எழுதினார். அவருடை யதந்தை, அப்பாவிடம் பெரிதும் மரியாதையும் மதிப்பும் வைத்திருந்த மார்க்ஸ், அறுபத்தைந்து வயதில் மரணமடையும்வரை தம் சட்டைப்பையில் எப்போதும் வைத்திருந்தது அவருடைய படத்தைத்தான். கஸ்தூரிபாவின் கடைசி நிமிடங்கள் […]

Read more

மருத்துவக் கையேடு

மருத்துவக் கையேடு, மணிமேகலை பிரசுரம், 7 தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17. விலை 100ரூ. சர்க்கரை நோய், காசநோய், பெண்களின் கர்ப்பகாலம், ஜீரணகோளாறுகள், நரம்புக்கோளாறு, இப்படி பலதரப்பட்ட நோய்கள் பற்றியும், சிகிச்சை முறைகள் பற்றியும் கேள்வி பதில் வடிவத்தில் எழுதியுள்ளார் டாக்டர் எஸ். ஜீவராஜன். மொத்தம் 503 கேள்வி பதில்கள். அனைவருக்கும் பயன்தரக்கூடிய மருத்துவ நூல் விலை 100ரூ. இதே நூலாசிரியர் எய்ட்ஸ் இல்லா இனிமையான உலகம் என்ற நூலையும் எழுதியுள்ளார். விலை 75ரூ. —-   வின்ஸ்டன் சர்ச்சில் 100, ராம்பிரசாந்த், […]

Read more

சிவாஜியின் வரலாற்றுச் சுவடுகள்

சுடர்மணிகள், முத்துப் பதிப்பகம், 27, வில்லியம் லே அவுட், இரண்டாவது தெரு, கே.கே, சாலை, விழுப்புரம் 605 602, விலை 70ரூ- தலைவர்கள், பிரமுகர்கள் பற்றிய சுவையான தகவல்களை குட்டிக்கதைகள்போல தொகுத்துத் தந்திருக்கிறார் கோ. பாரதி (புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பேரன்), படித்து ரசிக்கவும், சிந்திக்கவும் பயனுள்ள புத்தகம். —   சிவாஜியின் வரலாற்றுச் சுவடுகள், கா. வந்தியத்தேவன், இதயவேந்தன் வாசகர் வட்டம், 257 பவுடர் மில்ஸ் ரோடு, காந்திஜி நகர், புளியந்தோப்பு, சென்னை 12, விலை 165ரூ. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிறந்த […]

Read more

பாலபாடம்

பாலபாடம், அப்துல் ரஹிமான், ராயல் கம்யூனிகேசன், 844, இ3, எல்.எம். ஆர். தெரு, கோட்டை, கோயம்புத்தூர் 641001, விலை 80ரூ. குழந்தைகள் வாழ்வில் கண்டிப்பாக அறிய வேண்டிய அடிப்படை விஷயங்களை பாலபாடமாக்கி தந்திருக்கிறார் நூலாசிரியர் அப்துல் ரஹிமான். நல்லவற்றைக் கூட்டிக்கொள். தீயவற்றைக் கழித்துக்கொள் என்று பயனுள்ளவற்றையும், ஆபத்துக்கு உதவாப் பிள்ளை, குரு மொழி கொள்ளா சீடன், கோபத்தை அடக்காத வேந்தன் ஆகியோர் பயனற்றவர்கள் என்று பயனற்ற நடத்தைகளையும் இலக்கிய உதாரணங்களுடன் விளக்குகிறார். அன்றாட நிகழ்வுகளின் வழியே நமது பண்பாட்டையும் கற்பிக்கிறது இந்த பாலபாடம்.   […]

Read more

திருமந்திர நெறி

திருமந்திர நெறி, ஜி. வரதராஜன், பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக்கங்கள் 176, விலை 75ரூ நெறி என்றால் சமயக் கொள்கைக்காகவோ, தனிமனித ஒழுக்கத்துக்காகவோ ஏற்படுத்தப்பட்ட விதி அல்லது முறை எனப்படும். திருமூலர் தாம் அருளிய திருமந்திரம் வாயிலாக இத்தகைய வழிமுறைகளை அருளிச் செய்துள்ளார். பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக உள்ளது திருமூலரின் திருமந்திரம்- திருமூலர் அருளிச்செய்த திருமந்திரம் தோத்திர நூலாகவும் சாத்திர நூலாகவும் திகழ்கிறது. எல்லா சமயங்களும் மதங்களும் இறைவனை அடைவதற்குரிய வழியாக அன்பையே வலியுறுத்திக் […]

Read more
1 808 809 810 811 812 841