ஆதித்தனார் போராட்ட வாழ்க்கை

ஆதித்தனார் போராட்ட வாழ்க்கை, அ.மா. சாமி, நவமணி பதிப்பகம், சென்னை, விலை 240ரூ. பாமரர்களையும் படிக்க வைத்த பத்திரிகை உலக முடிசூடா மன்னர். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பல போராட்டங்களை நடத்தி சிறை சென்றவர். உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்ற லட்சியத்துடன் வாழ்ந்தவர். போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைவிலங்கு போடப்பட்ட ஒரே அரசியல் தலைவர். இவ்வாறு வாழ்க்கை முழுவதும் தமிழர் நலனுக்காக பல போராட்டங்களை சந்தித்த தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் வாழ்க்கை வரலாற்றை உணர்ச்சிமிக்க நடையில் எழுதியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் அ.மா.சாமி. ஆதித்னாருடன் […]

Read more

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள், உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 135ரூ. பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு வார இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. இதில் 25 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. மொழியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கும் உணர்வுகளின் சிக்கல்களுக்கு வடிகால் இல்லாமல் பெரும்பாலோர் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களது உணர்வுகளுக்கு வடிகாலாக, யூகிக்க முடியாத திருப்பங்களுடன் கதையோடு ஒன்றச் செய்யும்வகையில், சுவாரஸ்யமான சம்பவங்களுடன் விறுவிறுப்பான நடையில் சிறுகதைகளை படைத்திருக்கிறார் நூலாசிரியர் தமிழ்மகன். நன்றி: தினத்தந்தி, 28/1/2015.   —- ஸ்புட்னிக் முதல் மங்கள்யான்வரை, ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், […]

Read more

மருந்தில்லா மருத்துவம்

மருந்தில்லா மருத்துவம், டாக்டர் பி.எஸ். லலிதா, மயிலை முத்துக்கள் வெளியீடு, சென்னை, விலை 150ரூ. டாக்டர் பி.எஸ். லலிதா கால்நடை மருத்துவத் துறைப் பேராசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பின் மருந்தில்லா மருத்துவம் என்ற சிகிச்சை முறையில் நோய்களை எளிதாக குணப்படுத்த முடியும் என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார். ரெய்கி, அக்குபஞ்சர், அக்குபிரஷர் ஆகிய சிகிச்சை முறைகளைக் கடைப்பிடித்து சிகிச்சை அளிப்பவர் இவர். சர்வதேச அளவில் புகழ்பெற்றவரான இவர் எழுதியிருக்கும் இந்நூல் மருந்தில்லா மருத்துவம். ரெய்கி சிகிச்சையின் அடிப்படை அம்சங்களை இந்நூலில் விளக்குகிறார். அத்துடன் தன்னிடம் […]

Read more

நல்ல நிலம்

நல்ல நிலம், கண்மணி கிரியேட்டிங் வேவ்ஸ், சென்னை, விலை 600ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-377-2.html வாழ்ந்த மண்ணில் மேல் ஒரு மனிதன் வைக்கிற பற்றும் பாசமும் வார்த்தைக்கு அடங்காதவை. சொந்த பூமியை மனிதன் இழந்து, வெறும் நினைவுகளோடு மட்டும் நிற்பதுதான் இன்றைய வாழ்க்கை நிர்பந்தம். சந்தர்ப்பமும், சூழ்நிலையும் ஒரு மனிதனை அவனது சொந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கியெடுத்து, இன்னொரு மண்ணில் வீசி எறிந்து விடுகின்றன. ஆனால் மனிதன் ஜடமல்ல. வீசியெறிந்த இடத்தில் வேரூன்றி அவன் நிலை கொள்ள முயல்கிற […]

Read more

கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள்

கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. கல்வியை கடல் என்பார்கள். ஆனால் நூலாசிரியர் கல்வியை பூங்கா என்று புதிய சிந்தனையுடன் அணுகியுள்ளார். கல்வி களஞ்சியமாக திகழும் இந்த நூலில், சுமையான கருத்துக்களுக்கும், நீதிக்கதைகள் மூலம் விளக்கப்பட்டுள்ளன. நூலில் உள்ள கல்விச்சிந்தனை, குரு வணக்கம், இளைஞர்கள், பெண்கள், கல்வித் தத்துவங்கள் ஆகிய தலைப்புகள் வாசிப்பவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது. நாட்டை வல்லரசாக்கும் வலிமையும், புத்திக் கூர்மையும் இளைஞர்களுக்கு அவசியம் வேண்டும் என்று நூலாசிரியர் முனைவர் மு.ராசாராம் ஐ.ஏ.எஸ். வலியுறுத்துகிறார். […]

Read more

ஆசைக்கிளியே அழகிய ராணி

ஆசைக்கிளியே அழகிய ராணி, அனுராதாரமணன், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. 480க்கு மேற்பட்ட சிறுகதைகளையும், 365க்கு மேற்பட்ட நாவல்களையும் எழுதியவர் அனுராதா ரமணன். கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, கதையை வேகமாகக் கொண்டு செல்வதில் வல்லவர். அதனால்தான் இவருடைய 4 நாவல்கள் தமிழிலும், ஒரு கதை தெலுங்கிலும், ஒரு கதை கன்னடத்திலும் திரைப்படங்களாக வெளிவந்து வெற்றிவாகை சூடின. ஆசைக்கிளியே அழகியராணி, உனக்காக உமா, குயில் வேட்டை ஆகிய மூன்று நாவல்கள் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன. மூன்று கதைகளையும், முக்கனிகளுடன் ஒப்பிடலாம். வழக்கமான முத்திரையை இக்கதைகளில் ஆழமாகப் […]

Read more

யாருடைய எலிகள் நாம்?

யாருடைய எலிகள் நாம்?, துளி வெளியீடு, சென்னை, விலை 300ரூ. பல்வேறு பத்திரிகைகளில், பல்வேறு காலகட்டத்தில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல். பத்திரிகைகளில் எழுதப்படும் எல்லாக் கட்டுரைகளும் கால ஓட்டத்தில் அர்த்தமற்றவையாகவோ, தேவையற்றவையாகவோ ஆகிவிடுவதில்லை என்பதை இந்த நூல் உணர்த்துகிறது. தமிழக அரசியல், ஈழப்பிரச்சினை, சாதியம், ஜனநாயகம், சுதந்திரம், வேளாண்மை, பொருளாதாரம், சுற்றுச்சூழல், ஊடக நெறிகள், மருத்துவம், பாலினம், பாலியல் என வீச்சும் விரிவுமிக்க களங்களில் இறங்கி, நூலாசிரியர் சமஸ் எழுதியுள்ள சூழலியல் கட்டுரைகள் ஒரு சமகால வரலாற்றுக் களஞ்சியத்தைப் படிக்கும் உணர்வை ஊட்டுகிறது. […]

Read more

பாரதியார் ஆய்வுக்கோவை

பாரதியார் ஆய்வுக்கோவை, கங்கை புத்தகநிலையம், சென்னை, விலை 250ரூ. நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் என்ற கொள்கையோடு உய்வகை காட்டும் உயர் தமிழுக்குப் புதுநெறி காட்டிய இருபதாம் நூற்றாண்டின் ஈடிணையற்ற தமிழ்க்கவிஞர் மகாகவி பாரதியார். அவரது 125வது பிறந்த நாள் விழாவையொட்டிச் சிறப்பு வெளியீடாக வந்தது இந்த நூல். இதில் 80 அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. பாரதியாருடைய படைப்புகளைப்பற்றி மதிப்பீடாகக் கட்டுரைகள் அமைந்துள்ளன. அவரது கவித்திறம், உரைத்திறம், உவமைநலம், கற்பனை வளம், அணிநயம், பாரதியாரின் வரலாறு, வாழ்வியல் அனுபவங்கள், அவரது அரசியல், ஆன்மிக, […]

Read more

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா, நிழல் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. தமிழ் சினிமா உலகில் வரலாறு படைத்த சிறந்த நடிகர் டி.எஸ். பாலையா. தொடக்கத்தில் வில்லனாக நடித்து வந்த பாலையா, பின்னர் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் புகழ்பெற்றார். அவ்வளவு ஏன்? சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். ஒரு படத்தில் அவருக்கு ஜோடி பத்மினி. சொந்தக் குரலிலும் பாடி இருக்கிறார் பாலையா. எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் உள்பட பிரபல நடிகர்களுடன் நடித்துள்ள பாலையா இளைய தலைமுறையுடனும் நடித்துள்ளார். 100 படங்களுக்கு […]

Read more

புதையல் ரகசியம்

புதையல் ரகசியம், தந்தி பதிப்பகம், சென்னை, விலை 165ரூ. 5000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தை ஆட்சி செய்த மன்னர்களும், ராணிகளும் தலைநகர் கெய்ரோவுக்கு 500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லக்சார் என்ற இடத்தில் புதைக்கப்பட்டனர். அவர்கள் மரணத்திற்குப் பிறகும் சொர்க்கத்தில் வாழ்வார்கள் என்று எண்ணி அவர்கள் உடலோடு விலை மதிப்பில்லாத புதையல்களும் புதைக்கப்பட்டன. இத்தகைய கல்லறைகளை உள்ளடக்கிய பிரமிப்பை தரும் பிரமிடுகள் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் இளம் வயதில் அரியணை ஏறிய மன்னர் டூடங்காமுன் […]

Read more
1 137 138 139 140 141 223