மகாகவி பாரதியார் கவிதைகள்

மகாகவி பாரதியார் கவிதைகள், ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. மகாகவி பாரதியார் கவிதைகள், வசன கவிதைகள் அடங்கிய முழுத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. 664 பக்கங்கள் கொண்ட புத்தகத்தின் விலை 300ரூ. மகாகவி பாரதியார் எழுதிய கட்டுரைகள் கொண்ட நூலும் வெளிவந்துள்ளது. 440 பக்கங்கள் கொண்ட புத்தகம். விலை 275ரூ. பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் என்ற நூலும் வெளியிடப்பட்டுள்ளது. 480 பக்கங்கள். விலை 275ரூ. மேற்கண்ட புத்தகங்களின் பதிப்பாசிரியர் டி. சுப்புலட்சுமி. 3 நூல்களையும் வெளியிட்டோர் ஜீவா பதிப்பகம். நன்றி: தினத்தந்தி, 31/12/2014.   […]

Read more

குருவிக்கூடு

குருவிக்கூடு, முகிலை ராசபாண்டியன், கோவன் பதிப்பகம், சென்னை, பக். 158, விலை 120ரூ. பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், கதை வாசிப்பிலும் பயன்படுத்தப்பட்ட கதைகள் இவை. மனதில் சிந்தனை அலைகளை வெகுவாகத் தூண்டிவிடும் ஆற்றல் பெற்றவை. மனிதநேயம் பாதுகாக்கப்பட வேண்டும், மதங்கள் பாலங்களாக இருக்க வேண்டுமே தவிர, வேலிகளாக இருக்கக்கூடாது என வலியுறுத்தும் கதைகள். மதங்களைக் கடந்து மற்றும் சப்பரம் எடுப்பு, ஒரு சிறிய குழந்தையின் பெரிய மனதைச் சொல்வது, பொய் என்ற கதை. பாத்திரம் பார்த்து என்ற கதையும் மனிதம் பெரிதா, மதநேசம் பெரிதா என்ற […]

Read more

மாணவனே உன்னை உலகம் கவனிக்க

மாணவனே உன்னை உலகம் கவனிக்க, சுவிர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பக். 124, விலை 45ரூ. பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் இந்த நேரத்தில், வெளிவந்திருக்கும் இந்த நூல் கவனம் பெறுகிறது. இந்த நூலில், மாணவர்களுக்கு அடிக்கடி வரும் சந்தேகங்கள், கேள்விகள் என்னென்ன என்பதையும், அதற்கான தெளிவான பதில்களையும், ஆசிரியர் கூறியுள்ளார். பதில்கள், ஓர் ஆசிரியர் கூறுவது போல் அல்லாமல், ஓர் அண்ணன் தன் தம்பி, தங்கைகளுக்கு சொல்வதுபோல அளிக்கப்பட்டுள்ளன. பயம் இல்லாமல் பரீட்சை எழுதுவது எப்படி, எப்படி படித்தால் நிறைய மதிப்பெண் பெறலாம், […]

Read more

ஜீவா பார்வையில் கலை இலக்கியம்

ஜீவா பார்வையில் கலை இலக்கியம், கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, பக். 240, விலை 150ரூ. கலை இலக்கியம் குறித்து, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ப. ஜீவானந்தம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். சங்க இலக்கியம் முதல், தற்கால இலக்கியம் வரையிலும் வெளியாகியுள்ள அத்தனை படைப்புகள் பற்றிய தன் எண்ண ஓட்டங்களை, எழுத்தாக வடித்துள்ளார் ஜீவா. மனிதத்தை மேம்படுத்தும் இலக்கியங்களை நல்ல இலக்கியங்களாகவும், சமுதாய மேம்பாட்டிற்கு துணைபுரியாத இலக்கியங்களை, நசிவு இலக்கியங்களாகவும், ஜீவா இனங்காட்டியுள்ளார். உலகத்தின் இலக்கிய முன்னோடிகளையும், அவர்களின் படைப்புகளையும், […]

Read more

இரட்சணிய யாத்திரகம்

இரட்சணிய யாத்திரகம், பாரி நிலையம், சென்னை, விலை 500ரூ. கிறிஸ்தவ கம்பர் என்று அழைக்கப்படுகிற சிறப்பை பெற்றவர் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்த எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை. பிறப்பிலே வைணவராக இருந்து கிறிஸ்தவத்துக்கு மாறிய இவர் படைத்த இட்சணிய யாத்திரம் கிறிஸ்தவ இலக்கியங்களில் உன்னதமான இடத்தில் வைத்துப் போற்றப்படுகிறது. 3766 பாடல்களை கொண்டு, ஜான் பனியன் எழுதிய திருப்பயணிகள் முன்னேற்றம், சாமுவேல் பவுல் ஐயரின் மோட்சப் பிரயாணம், பைபிள் ஆகிய 3 நூல்களின் வழி நூலாக அழகு தமிழ் காப்பியமாக, இயேசு பிரானுக்கு மணி மகுடமாக […]

Read more

சவீதா நாவல்கள்

சவீதா நாவல்கள், நூல் கிடைக்கும் இடம் கண்மணி கிரியேடிவ் வேவ்ஸ், சென்னை, தனிப் பிரதி 225ரூ, ஐந்து தொகுதிகளுக்கும் விலை 800ரூ. எழுத்தாளர் சவீதா எழுதிய 18 நாவல்கள், 5 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. காதல், கிரைம், குடும்பம் என்று எதை மையமாக வைத்து எழுதினாலும் கதைப்போக்கிலும், எழுத்து நடையிலும் வித்தியாசங்களை விதைப்பதால், கூறியது கூறல் என்ற குறைபாடு எழவில்லை. ஒவ்வொரு நாவலிலும் காணப்படும் நகைச்சுவை, நவீன உவமைகள், நடையில் வேகம், எழுத்தில் லாவகம் வாசகர்களை வசியப்படுத்தும். துள்ளலும், துடிப்பு மிகுந்த நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்த […]

Read more

பெண்ணுக்குத்தான் எத்தனை மனம்

பெண்ணுக்குத்தான் எத்தனை மனம்(சமூக நாவல்), தஞ்சை செல்வன், திருவரசு புத்தக நிலையம், சென்னை, விலை 150ரூ. ஒரு முழுமையான திரைப்படத்திற்கு தேவைப்படும் குடும்ப நிகழ்வுகள், காதல், வீரம், தியாகம், சோகம், அரசியல் செல்வாக்கும், பணபலமும் நிறைந்த ஆதிக்க சக்தி, இறுதியாக சுப நிகழ்வுகள் என்று அத்தனை அம்சங்களும் நிறைந்துள்ள ஒரு சமூக நாவல். கதாநாயகி பூவரசி ஒரு டாக்டர். தன்னையும், உடன்பிறப்புகளையும் தவிக்க விட்டுவிட்டு பெற்றோர் மறைந்து விடுவதால் அவர்களை ஆளாக்க தன்னை தியாகம் செய்கிறாள். அவளை தன் வலையில் சிக்க வைக்க முயற்சிக்கிறான் […]

Read more

வெல்லுங்கள் இந்த வழிச் செல்லுங்கள்

வெல்லுங்கள் இந்த வழிச் செல்லுங்கள், மனிதவள மேம்பாடுட நிபுணர் மல்லியம் வெ. ராமன், புத்தகச் சோலை, மயிலாடுதுறை, விலை 80ரூ. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று துடிப்பவர்கள் படிக்க வேண்டிய நூல் இது. மனிதவள மேம்பாட்டு நிபுணரான மல்லியம் வெ. ராமன் வெற்றியின் ரகசியத்தை எளிய தமிழில் சுவைபட எழுதியுள்ளார். வெற்றியடைய வேண்டுமானால் முதலில் தேவை வெற்றி மனப்பான்மை. நிதானமாக, பொறுமையாக, அதே சமயம் விடாப்பிடியாகத் தொடர்ந்து லட்சியத்தை நோக்கி நடந்தால், ஒருநாள் வெற்றி சாத்தியமாகும் என்கிறார் ஆசிரியர். இது இவருடைய முதல் நூல் […]

Read more

அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள், கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ. அரசியல், வரலாறு, சமூகம், கலை, இலக்கியம் அனைத்திலும் அறிஞர் அண்ணாவின் உரை முழக்கத்தைக் கேட்டு மக்கள் போற்றினர், புகழ்ந்தனர், வியந்தனர், பாராட்டினர். தனக்கு சரியென்று தோன்றுவதைக் கூறவோ, எழுதவோ தந்தை பெரியார் எப்போதும் தயங்கியதில்லை.மூதறிஞர் ராஜாஜி சுயமான சிந்தனையாளர். இந்த மூவரும் உதிர்த்த முத்துக்களை ஒருங்கே தொகுத்து ஒரு கருத்துக் களஞ்சியமாக தொகுத்தளித்திருக்கிறார் பி.எல். முத்தையா. நன்றி: தினத்தந்தி, 28/1/2015.   —- விநய பத்திரிகா, முனைவர் மா. கோவிந்தராசன், வானதி பதிப்பகம், […]

Read more

நான் கண்ட ஜப்பான்

நான் கண்ட ஜப்பான், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 90ரூ. இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பான் மீது 2 குண்டுகளை அமெரிக்கா வீசியது. அதனால் 2 நகரங்கள் அடியோடு அழிந்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டனர். லட்சக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர். இப்படி பலத்த சேதம் அடைந்த ஜப்பான் கடுமையாக உழைத்து, இன்று பொருளாதாரத்தில் உலகில் மிக முன்னேறிய நாடாக விளங்குகிறது. இந்த நூலின் ஆசிரியரான தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் எத்திராஜன் ராதாகிருஷ்ணன், 23 முறை ஜப்பான் சென்று திரும்பியவர். ஜப்பானின் சிறப்புகளை இந்நூலில் அழகிய […]

Read more
1 136 137 138 139 140 223