ஈழக்கனவும் எழுச்சியும்

ஈழக்கனவும் எழுச்சியும், ஜெகாதா, நக்கீரன், சென்னை, விலை 300ரூ. தனி ஈழம் கோரி, இலங்கையில் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தி கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடத்திய போராட்டம் முடிவடைந்து, ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. விடுதலைப்புலிகளின் வீரப்போரை விரிவாகக் கூறுகிறது இந்நூல். சம்பவங்களை ஆதாரங்களுடனும், தெளிவாகவும் விவரிக்கிறார் ஆசிரியர் ஜெகாதா. பிரபாகரனுக்கும் மாத்தையா செய்த துரோகத்தைப் படிக்கும்போது, நெஞ்சம் பதைபதைக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட மாத்தையா, கடைசி முறையாக மனைவியைப் பார்க்க விரும்பியபோது, அந்த துரோகியைக் காண நான் விரும்பவில்லை என்று கூறிவிடுகிறார் அந்த வீரப்பெண். […]

Read more

வீரக்கதைப் பாடல்கள்

வீரக்கதைப் பாடல்கள், எம்.எம்.மீறான் பிள்ளை, சேகர் பதிப்பகம், பக். 152, விலை 110ரூ. போர்க்களத்தில் வீர முழக்கமிடும் ஒன்போது நாடோடிப் பாடல்களை ஆய்கிறது நூல். இரவிக்குட்டிப் பிள்ளைப் போர், கான் சாகிபு சண்டை, தம்பிமார் கதை, இராமப்பய்யன் அம்மானை ஆகிய நான்கும், தமிழகத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னால் எழுந்த வீர நிகழ்ச்சி போர் பாடல்கள். காசீம் படைப்போர், அலியார் படைப்போர், சைத்தூன் கிஸ்ஸா, சக்கூன் படைபபோர், மலுக்கு மலுக்கு ராஜன் கதை ஆகிய ஐந்தும் முஸ்லிம் பெயர் பூண்ட போர் பாடல்கள். வீரச்சுவை எல்லாவற்றிலும் […]

Read more

கிளைக்குத் திரும்பும் இலைகள்

கிளைக்குத் திரும்பும் இலைகள், கவிஞர் பாரியன்பன், அகநி வெளியீடு, வந்தவாசி, பக். 64, விலை 30ரூ. பட்டுப்போயின மரங்கள்! பாட்டெடுக்கும் குயில்கள்! மரம் பட்டுப்போனதற்கு குயில் எழுப்பும் பாட்டு, நம்மையும் அந்த சோகவலிக்குள் இழுத்துப் போட்டுக்கொள்கிறது. இதுதான் கவிதை. இதுதான் கவிதையின் உயிர். பாரியன்பனின் ஹைக்கூ கவிதைகளுக்கு எளிதில் நம்மை ஆட்கொள்ளும் சக்தி உண்டு என்பதற்கு இஃதோர் உதாரணம். அவர் கையாளும் குறியீடுகள், படிமங்கள், காட்சிப் புனைவுகள் நம்மை கவிதைகளிடம் நெருக்கமாகக் கொண்டு செல்கின்றன. பாசங்கற்ற, போலிகளற்ற பரவசம் நிறைந்த கவிதைகளின் தொகுப்பு. நன்றி: […]

Read more

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா, திருநின்றவூர் தி. சந்தானகிருஷ்ணன், நிழல் வெளியீடு, சென்னை, பக். 140, விலை 150ரூ. தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தந்தவர் டி.எஸ். பாலையா. கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர் என பன்முகத்திறன் கொண்ட டி.எஸ். பாலையாவுக்கு இதுவரை ஒரு நிறைவான நூல் இல்லை. அந்தக் குறையை தீர்த்துவைத்திருக்கிறது இந்நூல். பாலையா நடித்திருக்கும் அனைத்துப் படங்களையும் கால வரிசைப்படுத்தித் தந்திருப்பது சினிமா ஆய்வாளர்களுக்கு உதவும் பணி. பாலையாவின் ஆரம்பகால படங்களின் பிரதி எதுவும் கிட்டாத […]

Read more

தமிழ் சினிமா 100 சில குறிப்புகள்

தமிழ் சினிமா 100 சில குறிப்புகள், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 285ரூ. தமிழ் சினிமாவுக்கு தனி சிறப்பு உண்டு. தலை சிறந்த நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், பட அதிபர்கள், கதை-வசன ஆசிரியர்கள், இசை அமைப்பாளர்கள் ஏராளமானவர்கள் தமிழ் சினிமாவின் பெருமையை வளர்த்திருக்கிறார்கள். அவர்களில் 99 கலைஞர்களின் வரலாற்றை இதில் சுவைபட எழுதியுள்ளார் எழுத்தாளர் பி.எல். ராஜேந்திரன். கலைஞர்களுடைய வரலாற்றைப் படிக்கும்போது, திரை உலகத்தின் வளர்ச்சியையும் அறிந்துகொள்கிறோம். நிறைய படங்களும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 4/2/2015.   —-   வேங்கையின் சபதம், ந. […]

Read more

உலகக் காப்பியங்கள்

உலகக் காப்பியங்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 360ரூ. பழங்கால இலக்கிய வகையில் காப்பியம் தனிச் சிறப்பு பெற்றது. இவை அக்கால மக்களின் நாகரிக, பண்பாட்டுக் கருவூலமாக இன்றும் கருதப்பட்டு வருகின்றன. கற்பனை வளமும், இலக்கிய நயமும், சுவை உணர்வும், சிந்தனைத் திறனும் கொண்ட உன்னதப் படைப்பே காப்பியங்களாகும். இத்தகைய சிறப்பு மிகுந்த உலகக் காப்பியங்களை இந்த நூலில் எழுத்தாளர் இரா. காசிராசன் தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நூலில் முதல் மூன்று தலைப்புகளில் காப்பியத்தின் தன்மை, தோற்றம், வளர்ச்சி, வகை முதலானவை […]

Read more

சாதனையாளர்களின் சரித்திரம்

சாதனையாளர்களின் சரித்திரம், வானதி பதிப்பகம், சென்னை, விலை 65ரூ. விஞ்ஞானிகள், சரித்திர சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை புதுவிதமாக எழுதியுள்ளார் புதிய தலைமுறையின் கல்வி இதழின் மூத்த துணை ஆசிரியரான ஜி. மீனாட்சி. மாணவ மாணவிகளுக்கு ஏற்ற முறையில் ஒவ்வொருவர் வாழ்க்கையையும் சிறுகதைபோல் எழுதியிருக்கிறார். தெளிவான விறுவிறுப்பான நடை. அணுசக்தி விஞ்ஞான ஹோமி பாபா, விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா, கணிதமேதை ராமானுஜம், விவசாய விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உள்பட 9 பேர்களின் வாழ்க்கை வரலாறுகள் நீ உன்னை அறிந்தால் என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளன. […]

Read more

மகிழ்ச்சியான வாழ்வுக்கு மகத்தான மந்திரங்கள்

மகிழ்ச்சியான வாழ்வுக்கு மகத்தான மந்திரங்கள், தந்தி பதிப்பகம், சென்னை, விலை 165ரூ. வளமுடன் நலமுடன் வாழ்க என்பதே ஒருவொருக்கொருவர் பரிமாறுகின்ற வாழ்த்துச் சொல்லாகும். அந்த வகையில் செல்வவளம் பெருகச் செய்யும் மந்திரங்கள், திருமணத் தடை விலகச் செய்யும் மந்திரங்கள், கடன் தொல்லை தீர்க்கும் மந்திரங்கள், கல்விச் செல்வம் வழங்கும் மந்திரங்கள், சொந்த வீடு அமைய வழிகாட்டும் மந்திரங்கள், சந்தான பாக்கியம் தரும் மந்திரங்கள், உடல் நலம் காக்கும் உன்னத மந்திரங்கள் என்று 25 தலைப்புகளில் மகிழ்ச்சியான வாழ்வுக்குரிய இந்து மந்திரங்களை ஸ்ரீ ஜானகிராம் இந்த […]

Read more

இந்த விநாடி

இந்த விநாடி, நாகூர் ரூமி, சிக்ஸ்த்சென்ஸ், சென்னை, பக். 200, விலை 150ரூ. கவிஞர் நாகூர் ரூமியின் இந்தப் புத்தகம், சுய முன்னேற்றம் வகை புத்தகம் அல்ல, சுயத்தை மீட்டெடுக்கும் புத்தகம். எட்டு அத்தியாயத்திலும் எட்டு எளிய விஷயத்தை நமக்கு அவர் அறிமுகப்படுத்துகிறார். அவை நமக்கு வெளியே இருப்பவை அல்ல. நமக்கு உள்ளே இருப்பவை. நம் உடலையும், மனதையும் சீரமைத்துக் கொள்வதற்கான எளிய வழி முறைகள். நம் பழக்க வழக்கங்களால், நம்பிக்கைகளால் விலகிச் சென்ற பாதையிலிருந்து, வழி தவறிய பாதையிலிருந்து அழைத்து சரியான பாதை […]

Read more

பாரதியும் தேசியத் தலைவர்களும்,

பாரதியும் தேசியத் தலைவர்களும், சு. சுப்புராமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், சென்னை, பக். 74, விலை 65ரூ. மகாகவி பாரதிக்கு காந்தியடிகைள், வ.உ.சி., அரவிந்தர், திலகர், நெல்லையப்பர், பாரதிதாசன், வ.வே.சு. அய்யர் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களுடன் இருந்த உறவுகளையும், வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்களையும் தனித்தனி கட்டுரைகளாக விரிவாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர். சுவாமி விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதாவை சந்தித்த பிறகு பாரதி வாழ்வில் ஏற்பட்ட மனமாற்றம், இந்தியா பத்திரிகையை நடத்துவதற்காக பாரதியார் பட்ட துயரங்கள் மற்றும் பாரதியாரின் தந்தை சின்னச்சாமி […]

Read more
1 138 139 140 141 142 223