இந்திய சிம்மாசனத்தை அலங்கரித்த இஸ்லாமிய மன்னர்கள்

இந்திய சிம்மாசனத்தை அலங்கரித்த இஸ்லாமிய மன்னர்கள், ஜெகாதா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 75ரூ. இந்திய சிம்மாசனத்தில் கம்பீரமாக ஏறி அமர்ந்து ஆட்சி புரிந்த குத்புத்தீன் ஐபக் முதல் முகலாய அவுரங்கசீப் வரையிலான இஸ்லாமிய மன்னர்களைப் பற்றி எழுதப்பட்ட நூலாகும். குறிப்பாக இந்தியா வரலாற்றில் இடம் பெற்றுள்ள அரசியல் சாணக்கியர் முகம்மது பின் துக்ளக், தாஜ்மகால் நாயகன் ஷாஜகான், முகலாய ராஜதந்திரி அக்பர் உள்ளிட்ட 25 இஸ்லாமிய மன்னர்கள் குறித்த செய்திகளை அனைவரும் […]

Read more

இதயம் இதயமாய் இயங்க

இதயம் இதயமாய் இயங்க, வாலண்டினா பப்ளிகேஷன்ஸ், 21-10, லோகநாதன் நகர், 2ம் தெரு, சூளைமேடு, சென்னை 94, விலை 200ரூ. இதயம் எப்படி நம் உடம்பில் செயல்படுகிறது என்பதை விரிவாக தெளிவாக விளக்குகிறது இந்த நூல். இதய அமைப்பு, இதய செயல் திறன், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், அறிகுறிகள், காரணங்கள், தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள், பராமரிப்பிற்கான வழிவகைகள், கருவுற்ற நிலையில் நச்சுத்தன்மை, மாரடைப்பு என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது? மாரடைப்பிற்கு எளிதில் யார் இலக்காகிறார்கள்? முன்னெச்சரிக்கை அறிகுறிகள், சிகிச்சை […]

Read more

காற்றின் குரல்

காற்றின் குரல், திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை 92, பக். 264, விலை 250ரூ. ராமாயண காவியத்தின் நாயகனான ஸ்ரீராமன், ஒரு மாதக் குழந்தையாகத் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருக்க, அன்னை கௌசல்யை தன் குழந்தையை ரசித்து மகிழ்வதில் தொடங்கி ஸ்ரீ ராமர் சரயூ நதியில் கலந்து விண்ணுலகம் செல்வது வரை உள்ள ராமாயணக் கதையிலுள்ள முக்கிய நிகழ்வுகள் 44 அத்தியாயங்களாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் வால்மீகி ராமாயணத்திலிருந்தும், ஒரு சில சம்பவங்கள் வேறு சில ராமாயணங்களிலிருந்தும் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள் […]

Read more

இடிந்தகரை-சிறைபடாத போராட்டம்

இடிந்தகரை-சிறைபடாத போராட்டம், சுந்தரி, ஐந்திணை வெளியீட்டகம், 4ஏ, 29, முகமதியர் தெரு, மந்தக்கரை, விழுப்புரம் 2, பக். 200, விலை 160ரூ. இடிந்தகரையில் நடைபெற்று வரும் கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டக் களத்தில் பங்கேற்று, 98 நாள்கள் திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் நூலாசிரியர் சுந்தரி. அவர் மீது 12 வழக்குகள். 8ஆம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் சுந்தரிக்கு இப்போது அணுஉலை குறித்து சர்வதேச அளவிலான அறிவும் வளர்ந்திருக்கிறது. சிறையிலிருந்து பிணையில் விடுக்கப்பட்ட பிறகு, மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த 50 […]

Read more

தொடர்ச்சியான, முழுமையான மதிப்பீடு (சிசிஇ)-ஓர் அறிமுகம்

தொடர்ச்சியான, முழுமையான மதிப்பீடு (சிசிஇ)-ஓர் அறிமுகம், பத்மா ஸ்ரீநாத், வேதா டி.ஸ்ரீதரன், வேத ப்ரசகாசனம் வெளியீடு, சென்னை 28, பக். 220, விலை 250ரூ. மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிக்கும் வழக்கமான பாணியை வேறுவகையில் மாற்றி, அமைத்துள்ளது சி.சி.இ. என்ற தொடர்ச்சியான, முழுமையான மதிப்பீட்டுமுறை. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சி.பி.எஸ்.இ. இந்தத் திட்டத்தை தமிழக அரசும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய மதிப்பீட்டு முறையில் தமிழக ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு வினாக்களுக்கு விளக்கமாக விடை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெற்றோருக்கும் தனது குழந்தை கற்கும் […]

Read more

வெ. இறையன்புவின் வியர்வையின் வெகுமதி

வெ. இறையன்புவின் வியர்வையின் வெகுமதி, குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 176, விலை ரூ.115. உழைப்பவர்களுக்கே இந்த உலகம் சொந்தம் என்பதுதான் இறையன்புவின் பேச்சும் மூச்சும். அதற்கான உத்தரவாதத்தைத்தான் இந்நூலில் தந்துள்ளார். குமுதம் ரிப்போட்டரில் தொடராக வந்தபோது அதன் தலைப்பே கவனத்திற்குரியதாகி பலரைப் படிக்கத் தூண்டியது. இன்றைய மனிதனின் ஒவ்வொரு நொடி உழைப்பும் அடுத்த பல தலைமுறையினரின் உயர்வாக அமையும் என்பதை நூல் முழுதும் பதியன் போட்டுள்ளார். விலங்கிடமிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டும் வியர்வை, உழைப்பிற்காகச் சிந்தியதாக […]

Read more

சுவாமி விவேகானந்தர் வரலாறு

சுவாமி விவேகானந்தர் வரலாறு, அ.லெ. நடராஜன், பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 655, விலை 360ரூ. சுவாமி விவேகானந்தரின் தெய்வீக வலாற்றைக் கூறும் இந்நூலைத் தொடர்ந்து படிக்கும்போது சாதாரண மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய பசி, பட்டினி, வறுமை, குடும்ப சொத்து தொடர்பான நீதிமன்ற வழக்கு, ஏளனம், பரிகாசம், அவமதிப்பு அத்தனையையும் சுவாமி விவேகானந்தர் சந்தித்தார் என்பது தெரிகிறது. அதேபோல் 11/9/1983இல் சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற உரையை ஆற்றுவது வரையிலும் கூட […]

Read more

ஓவியமாய் ஒரு பெண்

ஓவியமாய் ஒரு பெண், யோகா, யோக சாவித் பப்ளிகேஷன்ஸ், 15/90, பாண்டி பஜார், தி.நகர், சென்னை 17, விலை 75ரூ. பிரபல புகைப்படக் கலைஞர் கலைமாமணி யோகா எழுதிய 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே ஓவியமாய் ஒரு பெண். 11 கதைகளில் முதல் கதையாக அமைந்து நூலின் தலைப்புக்கு பெருமை சேர்த்திருக்கிறது ஓவியமாய் ஒரு பெண் சிறுகதை. அவரவர் துறையில் பிரபலமாயிருக்கிற தம்பதிகளின் அன்பின் நேசத்தை ஆழமாகவே பதிவு செய்திருக்கிறது. கணவர் குடும்பத்தில் அவரது சகோதர வட்டம் எல்லாரும், 58 வயதுக்குள் இறைவனடி சேர்ந்துவிட, […]

Read more

தமிழர் வரலாறு

தமிழர் வரலாறு, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 250ரூ. தமிழர்களின் வரலாற்றை நம்முடைய தமிழ் அறிஞர்கள் பலர் விரிவாக ஆய்வு செய்து வெளியிட்டுள்ளனர். இருந்தபோதிலும் பி.டி.சீனிவாச அய்யங்கார் ஆங்கிலத்தில் எழுதிய தமிழர் வரலாறு பல சிறப்புகளைக் கொண்டது. இதை புலவர் கா. கோவிந்தன் மொழிபெயர்த்துள்ளார். கி.பி. 600 வரையிலான தமிழ், தமிழர், தமிழ்நாடு பற்றிய வரலாற்றை விளக்குகின்ற அருமையான நூல். பி.டி.சீனிவாச அய்யங்காரின் சில தவறான முடிவுகளை தக்க சான்றுகளோடு மறுத்து அந்தந்த அதிகாரங்களின் […]

Read more

டாலர் தேசத்து அனுபவங்கள்

டாலர் தேசத்து அனுபவங்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ, இண்டஸ்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை ரூ.100. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினருமான ஆர். நல்லக்கண்ணு, தனது அமெரிக்க 20 நாள் சுற்றுப்பயண அனுபவத்தை வெளிப்படுத்தி உள்ளார். அங்கு வாழும் தமிழ் பற்றாளர்களின் சந்திப்பு, வரலாற்று தலங்கள், தலைவர்களின் சிலைகள், அவர்களின் சிறப்புகளையும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஏகாதிபத்திய போக்கையைம் வெளிப்படுத்த தவறவில்லை.   —-   தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில், குடவாயில் பால […]

Read more
1 178 179 180 181 182 223