தமிழ் இலக்கியங்களில் மனமும் மருந்தும்

தமிழ் இலக்கியங்களில் மனமும் மருந்தும், ப. குப்புசாமி, மணி வாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 125ரூ. மனம் பற்றி தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு இலக்கியங்கள் கூறிய கருத்துக்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. இக்காலத்தில் அதிகமாக பேசப்படும் மன உளைச்சல் பற்றி தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு பேசப்பட்டுள்ளது என்பது விளக்கமாகவும், விரிவாகவும் கூறப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள மருத்துவ குறிப்புகளையும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, 8/1/2014.   —-   சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள், சு. […]

Read more

அட்டவீரட்டத் தலங்கள்

அட்டவீரட்டத் தலங்கள், அ. அறிவொளி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108, பக். 152, விலை 45ரூ. சிவபெருமான் திருவிற்குடி, திருவதிகை, திருப்பறியலூர், திருக்கண்டியூர், திருக்குறுக்கை, திருவழுவூர், திக்கடவூர், திருக்கோவிலூர் ஆகிய எட்டுத் திருத்தலங்களில் நிகழ்த்திய வீரச் செயல்களை விளக்குவதால் இவ்வெட்டுத் தலங்களும் அட்டவீரட்டத் தலங்கள் எனப்படும். அட்டவீரட்ட திருத்தலங்களின் காரணங்களாக படைப்பு முழுவதற்கும் எட்டு ஆதாரங்கள் சொல்லப்பெற்றுள்ளன. அவை அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் ஒத்துவரும். இந்த எட்டிலும் இறைவனின் சக்திரகள் கலந்து நிறைந்துள்ளன. இவையே இந்தப் படைப்பைக் காத்து வருகின்றன. இப்படிப்படைப்பு முழுவதிலும் விரவிக்கிடக்கும் ஆதாரப் […]

Read more

தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு, சி. பாலசுப்பிரமணியன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 280, விலை 99ரூ. கால வகையில் பகுக்கப்பட்ட, தமிழ் இலக்கிய வரலாற்று நூல் இது. சங்க காலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம், இக்காலம் என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளது. அந்தந்தக் காலங்களில், தோன்றிய இலக்கியங்களின் வரலாறு எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் வினாத்தாள் அமைக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு எழுதுவோருக்கு உதவும் வகையில், இதுவரை சாகித்ய அகாடமி விருது பெற்ற […]

Read more

நதியின் பிழையன்று

நதியின் பிழையன்று, வெ. இன்சுவை, பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 90ரூ. காலம் மாறிப்போய்விட்டான். அவனுடைய வாழ்க்கை நெறிமுறைகளும் மாறிப்போய்விட்டன. சரிந்து போய்க் கொண்டிருக்கும் பண்பாட்டு சீரழிவை எப்படி சரிசெய்யப் போகிறோம்? விதவிதமான மனிதர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு மனம் கொதித்து தனது கோபத்தையும், ஆற்றாமையையும் அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியை வெ.இன்சுவை.   —-   வளம் தரும் பரிகார ஸ்தலங்கள், ஏ. ஜெயப்பிரகாஷ், ஸ்ரீ அலமு பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை 5, […]

Read more

படக்கதையாக எம்.எஸ். சுப்புலட்சுமி வரலாறு

படக்கதையாக எம்.எஸ். சுப்புலட்சுமி வரலாறு, ஹெரிடேஜ் பப்ளிஷிங் ஹவுஸ், 69/1, சாமியர்ஸ் ரோடு, சென்னை 28, விலை 72ரூ. தமிழ் இசையில் சிகரத்தைத் தொட்டவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. பாரதரத்னா பட்டம் பெற்றவர். அவருடைய வாழ்க்கை வரலாறு படக்கதை ரூபத்தில் வெளிவந்துள்ளது. கர்நாடக சங்கீத ஆராய்ச்சியாளரும், அதுகுறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதியவருமான லட்சுமி தேவ்நாத் முயற்சியால் இந்த நூல் வெளிவந்துள்ளது. அவர்க தையை ஆங்கிலத்தில் எழுத, அதை அழகிய தமிழில் பத்மா நாராயணன் மொழி பெயர்ததுள்ளார். படங்களை அழகாக வரைந்துள்ளவர் ஜி. சேகர்.   —-   […]

Read more

வெண்ணிற இரவுகள்

வெண்ணிற இரவுகள், சபரீஷ் பாரதி, எஸ் 17, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 150ரூ. தினத்தந்தி குடும்ப மலரில் தொடராக வெளிவந்து வாசகர்களின் பெருவாரியான வரவேற்பை பெற்றது சுப்ரஜா எழுதிய வெண்ணிற இரவுகள். ஒரு மர்ம பங்களா. அதை காலம் காலமாக அனுபவத்து அதே நேரம் அதன் ரகசியத்தை மூடி மறைக்கும் ஒரு செல்வாக்குள்ள குடும்பம். அந்தக் குடும்பத்தில் ஒருத்தியான நிலா கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பங்களா வீட்டுக்கு வருவதில் தொடங்குகிறது. விறுவிறு கதைக்களம். […]

Read more

பொது அறிவுக்கு 1000 கேள்வி பதில்கள்

பொது அறிவுக்கு 1000 கேள்வி பதில்கள், டி.எஸ். ரோகிணி, நற்பவி பிரசுரம், 57பி, பசுல்லா சாலை, தி.நகர், சென்னை 17, பக். 368, விலை ரூ. 150. எவ்வளவுதான் உயர் கல்வி கற்றிருந்தாலும், ஒருவரிடமுள்ள பொது அறிவுத் திறன்தான் அவரது ஆற்றலை உயர்த்தி காட்டுகிறது. அதனால் அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகளில் பொது அறிவுத் தேர்வுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. தவிர, படிக்காதவர்களும் கூடத் தங்களது பொது அறிவை வளர்த்துக் கொள்வது சமுதாயத்தில் மதிப்பு பெற அவசியமாகிறது. இந்நூலின் அறிவியல், வரலாறு, ஆன்மிகம், […]

Read more

ஊர்புறத்தே ஓர் ஓலைக் குடிசையில்

ஊர்புறத்தே ஓர் ஓலைக் குடிசையில், செ.மு. குபேந்திரன், கவிநிலவன் பதிப்பகம், தருமபுரி, பக். 80, விலை 40ரூ. கவிதைகளுக்குள் ஒரு புன்னகையை, ஒரு பூவை, ஒரு காதலை, ஒரு நட்பை, ஒரு கிராமத்தை, ஒரு பூகம்பத்தை ஒளித்து வைக்க முடியும் என்பதை உணர்த்தும் ஓர் எளிய கவிதைத் தொகுப்பு. தன் கிராமத்தின் சொர்க்கத்தைச் சொல்லி பட்டணத்தின் பவிசைச் சாடுவதும், தாய்மையின் அருமையை மனதில் பதித்துவிட்டுப் போவதும், சாதிக்கப் பிறந்தவனிடம் சாதியைக் கேட்டு தடைக்கல்லாய் இருக்கும் சமூக அவலத்திற்கு சவுக்கடி கொடுப்பதும் ஊர் புறத்தே உள்ள […]

Read more

சாதனையாளர்களுடன் ஒரு சந்திப்பு

சாதனையாளர்களுடன் ஒரு சந்திப்பு, எம்.எஸ். கோவிந்தராஜன், தென்றல் நிலையம், 12பி, மேலசன்னதி, சிதம்பரம் 608001, விலை 75ரூ. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 38 சாதனையாளர்களின் நேர்காணல்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, எழுத்தாளர் வல்லிக்கண்ணன், கவிஞர் மு.மேத்தா, என்.சி. மோகன்தாஸ், மெர்வின் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். புதுக்கோட்டையில் இருந்து குழந்தைப் பத்திரிகைகள் ஏராளமாக வெளிவந்த காலக்கட்டம் பற்றி பலர் விவரித்துள்ளனர். மாணவராக இருந்தபோதே பி. வெங்கட்ராமன் (வடமலை அழகன்) டிங்டாங் பத்திரிகையின் பொறுப்பாசிரியராக பணியாற்றியது சுவையான தகவல். சாதனையாளர்களின் அனுபவங்களை அறிவது, சாதனைகள் […]

Read more

ஒரு சாமானியனின் நினைவுகள்

ஒரு சாமானியனின் நினைவுகள், க. இராசாராம், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 250ரூ. தமிழ்நாட்டின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் க. இராசாராம். சட்டசபை சபாநாயகராகவும், அமைச்சராகவும் இருந்தவர். தி.மு.க.வில் இருந்தாலும், அ.தி.மு.க.வில் இருந்தாலும் காங்கிரஸ் உள்பட எல்லா கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு. தமது அனுபவங்கள் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள், ஒரு சாமானியனின் நினைவுகள் என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது இதில், பல முக்கியமான அரசியல் நிகழ்ச்சிகள் மூடி மறைக்கப்படாமல் பதிவு […]

Read more
1 177 178 179 180 181 223