ஸ்பெயின் முஸ்லிம்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்

ஸ்பெயின் முஸ்லிம்களின் எழுச்சியும் வீழ்ச்சியும், மவுலவி எஸ்.ஏ.காஜா நிஜா மூத்தின்யூசுபி, நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ், பக். 152, விலை 80ரூ. கி.பி. 712லிருந்து கி.பி. 1492வரை, 780 ஆண்டகள் ஸ்பெயின் நாட்டில் முஸ்லிம்களின் ஆட்சி, மிகச் சிறப்பாக நடைபெற்றது. இஸ்லாம் வகுத்து வழங்கிய சமூகப் பாதுகாப்புத் திட்டம், பொருளாதாரப் பாதுகாப்புத் திட்டம் போன்றவை, ஸ்பெயின் நாட்டு மக்களுக்கு பேருதவி புரிந்தது. அத்தோடு மட்டுமல்ல. அந்த இணையற்ற திட்டங்கள், ஐரோப்பாவின் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்புத் திட்டத்திலும் ஊடுருவி, அவர்களுக்கும் நன்மை விளைவித்தது. கி.பி. 1442ல் ஸ்பெயினில் முஸ்லிம்களின் […]

Read more

அரசு பயங்கரவாதமும் மக்கள் போராட்டமும்,

அரசு பயங்கரவாதமும் மக்கள் போராட்டமும், கண்மணி, மானுட நம்பிக்கை, பக். 385, விலை 170ரூ. இணையத்தில் வெளிவந்த அறுபத்தெட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமகால அரசியல் நிகழ்வுகள் ஒவ்வொன்று குறித்தும், நூலாசிரியர் கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. அந்தக் கட்சி அரசியல், இந்தக் கட்சி அரசியல் என்றில்லாமல், எல்லாக் கட்சியினரையும் இன உணர்வுடன் விமர்சனம் செய்திருக்கிறார் ஆசிரியர். ஒரு காலத்தில் சாராயம் விற்பவர்களை, ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பர். இன்று, பட்டதாரிகள் அயல்நாடு மது விற்பவர்களாக இருக்கின்றனர் என்ற உண்மையைக் குடி குடியைக் கெடுக்கும் என்னும் கட்டுரை தெளிவாக்குகிறது. […]

Read more

சாலப்பரிந்து

சாலப்பரிந்து, நாஞ்சில் நாடன், காலச்சுவடு, பக். 240, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-3.html நாஞ்சில் நாடனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், சிலவற்றைத் தொகுத்துள்ளார். க. மோகன ரங்கன் 25 சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன. வடிவம், செறிவு, துல்லியம், முடிவை நோக்கிய விரைந்த நடை என்பது போன்ற, அளவீடுகளைத் தாண்டி, கதாபாத்திரங்களின் குண இயல்புகளைத் தாண்டி, கதாபாத்திரங்களின் குண இயல்புகளுக்கு ஏற்ற மொழி நடையில், பண்பாட்டின் சாரம் உள்பொதிய எழுதப் பெற்று உயரிய கதைகள். கதைகளின் ஊடே அவர் வெளிப்படுத்தும், […]

Read more

பால்பண்ணைத் தொழில்கள்

பால்பண்ணைத் தொழில்கள், முனைவர் ஓ.ஹென்றி பிரான்சிஸ், வாடிவாசல் பதிப்பகம், எண்-100, லாடிஸ் பிரிட்ஜ் ரோடு, சென்னை 20, விலை 120ரூ. கிராம மக்களின் வாழ்வின் ஆதாரமாக இருக்கும் தொழில்களில், பால் பண்ணைத் தொழில் முக்கியமானது. இத்தொழில் சிறக்க வங்கிக் கடன் உதவி, அரசு மானியங்கள், அவற்றை பெறும் வழிகள் ஆகியவற்றை ஆசிரியர் விளக்கி இருக்கிறார். பாலைக் கறக்க இயந்திரம் வசதியானது ஏன், பாலைப் பாதுகாக்க குளிரூட்டி அமைக்க ஆகும் செலவு, அதற்கான வழிமுறைகள் என்று, இத்தொழில் குறித்த பல்வேறு தகவல்கள் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.   […]

Read more

நெஞ்சில் ஒளிரும் சுடர்

நெஞ்சில் ஒளிரும் சுடர், கமலா ராமசாமி, காலச்சுவடு. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-188-1.html தமிழ் இலக்கிய சூழலில் செல்லம்மா பாரதியின் நூலுக்கு பிறகு, இலக்கியவாதியான கணவரை பற்றி மனைவி எழுதிய நூல், அனேகமாக இந்த நூலாகதான் இருக்க முடியும் என தோன்றுகிறது. வாசகர்களுக்கு சு.ரா. ஓர் எழுத்தாளர், ஓர் ஆளுமை, நண்பர்களுக்கு மதிப்பிற்குரிய மனிதர் என்ற பல தோற்றங்களையும், உருவங்களையும் தாண்டி, கணவர் என்ற தகுதியில் அவருக்கு மட்டுமே, தெரிந்த சு.ரா.வை இதில் காணலாம். தன் கணவர் மீது பேரன்பையும், […]

Read more

அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்

அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள், லதா ரஜினிகாந்த், பூம்புகார் பதிப்பகம், சென்னை 108, பக். 224, விலை 270ரூ. ஒரு மனிதனின் வாழ்வுக்கு அடித்தளமாக அமைவது அவனுடைய குழந்தைப் பருவமே. அத்தகைய குழந்தைப் பருவத்திலுள்ள சின்னஞ்சிறு மனிதர்களிடம் நாம் எப்படிப் பழக வேண்டும்? அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? அவர்களுக்கு சிறந்த கல்வியையும் ஒழுக்கத்தையும் பயிற்றுவிப்பது எப்படி? அவர்களின் வளர்ச்சிக்கு நாம் உறுதுணையாக இருப்பது எப்படி? என்பன போன்ற பல விஷயங்களை எளிமையாகவும் தெளிவாகவும் இந்நூலில் விளக்கியுள்ளார் ஆசிரியர். குழந்தைகளிடம் அதிகாரத்தைவிட அன்பையும், கண்டிப்பைவிட கவனிப்பையும், கடுமையைவிட […]

Read more

சைவமும் தமிழும்

சைவமும் தமிழும், முனைவர் ரா. செல்வகணபதி, ஓம் நமச்சிவாய பிராத்தனைக் கோபுரம், பள்ளிக்கரணை, சென்னை 100, விலை 60ரூ. சைவ சமயத்தின் உயர்வையும், தமிழ் மொழியின் சிறப்பையும் நன்கு எடுத்துக்காட்டும் வகையிலும், அதே நேரம் மற்ற சமயங்களிலும் மொழிகளிலும் காணப்படாத அளவிற்கு, பல்வகை சிறப்புகளை சைவ சமயமும், தமிழ் மொழியும் பெற்றிருப்பதையும், அந்த சிறப்புகளின் அருமையையும், முனைவர் ரா.செல்வகணபதி எளிய, இனிய நடையில் உருவாக்கித் தந்திருக்கிறார். இதில் எக்காலத்திலும் பொலிவு குறையாத தமிழ் மொழியின் சிறப்புகளையும் என்றும் உயர்வளிக்கும் சைவ சமயத்தின் அளப்பிலா உயர்வுகளையும், […]

Read more

புனித பூமியில் மனித தெய்வங்கள்

புனித பூமியில் மனித தெய்வங்கள், பதஞ்சலி, விடகன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, பக். 152, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-832-8.html நல்லது, கெட்டது எதுவென சரியாகத் தெரியாமல் தடுமாறி வாழும் மனிதகுலத்தார், நன்னெறியில் செல்ல, இறைவனே மனித வடிவில் தோன்றி, தான் வாழும் முறையாலும், உபதேசங்களாலும் நெறிப்படுத்தினான் என்று பெரியோர்கள் கூறுவர். இறை தத்துவத்தையும், ஆன்மிகத்தின் அவசியத்தையும், பக்தி இலக்கியங்கள் வாயிலாகவும், பாடல்கள் மூலமாகவும் பரப்பிய பல மகான்களின் வாழ்க்கையே நமக்கு சிறந்த வழிகாட்டியாகும். […]

Read more

குண்டூசி பி.ஆர்.எஸ்.கோபால் சரித்திரமும் ஏடுகளும்

குண்டூசி பி.ஆர்.எஸ்.கோபால் சரித்திரமும் ஏடுகளும், வாமணன், மணிசாகர் பதிப்பகம், சென்னை 108, பக். 448, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-161-1.html சினிமா என்பது வெறும் பொழுதுபோக்குச் சாதனம் அல்ல. சங்கீதம், நாட்டியம் போல அதுவும் ஒரு சிறந்த கலை வடிவமே என்ற கொள்கையுடையவர் குண்டூசி கோபால். சினிமா நிருபராகவும், சினிமா விமர்சகராகவும், சினிமா இதழாசிரியராகவும் அவர் தமிழ் சினிமா உலகுக்குப் பங்காற்றியவர். குறிப்பாக இந்திப்பட, வெளிநாட்டுப் பட மோகம் அதிகமிருந்த காலகட்டத்தில் தமிழ்ப் படங்களைப் பற்றிய செய்திகளை […]

Read more

என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்

என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை 5, பக். 184, விலை 150ரூ. ஆண்டாள் அளித்த வாசகம் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என்பது. ஆன்மரீதியாக இறைவனுடன் கட்டுண்ட அடியார்களுக்கு நேரும் சிலிர்க்கும் அனுபவங்களை உணர்பவர்கள் இப்படியே கூறுவர். இநத் நூலில் அப்படிப்பட்ட சிலிர்க்கும் ஆன்ம அனுபவக்கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆன்மிக மாத இதழில் எழுதப்பட்ட 20 கட்டுரைகளின் தொகுப்பு நூலான இதில், ஆண்டாளைப் பற்றிய கட்டுரையுடன் துவங்குகிறது. குரு ராகவேந்திரர் வாழ்க்கை, திருக்கச்சி நம்பிகளும் வரதராஜப் பெருமாளும், ஸ்ரீகிருஷ்ணர், ஜாம்பவானின் […]

Read more
1 221 222 223 224 225 240