சிவகுமார் எனும் மானுடன்

சிவகுமார் எனும் மானுடன், தொகுப்பு அமுதவன், அல்லயன்ஸ் கம்பெனி, பக். 432, விலை 400ரூ. நல்லொழுக்கம், நற்பண்புகளுக்கு சினிமாத்துறையில் எடுத்துக்காட்டாக விளங்குபவர் நடிகர் சிவகுமார். கோவை மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த இவர், பிழைப்பு தேடி 1950 – களில் சென்னை வந்து, சுமார் 7 ஆண்டுகள் ஓவியம் பயின்று, 40 ஆண்டுகள் திரைப்படங்களிலும், நாடகங்களிலும், சின்னத்திரையிலும் பல வகையான பாத்திரங்களில் பரிணமித்து, கலையுலக மார்க்கண்டேயனாகப் பாராட்டப்படுபவர். அது மட்டுமின்றி புராண, இதிகாசங்களில் தேர்ச்சி பெற்ற பேச்சாளராக, எழுத்தாளராக, தமிழறிஞராக, தன்னை உயர்த்திக் கொண்டு, […]

Read more

கழிந்தன கடவுள் நாளெல்லாம்

கழிந்தன கடவுள் நாளெல்லாம், தென்னம்பட்டு ஏகாம்பரம், பக். 136, விலை 125ரூ. ‘ஆலயம் சென்று ஆண்டவனை வழிபடுவதெல்லாம், விளையாட்டுப் பருவத்தில் ஆன்மிகம் முளைவிடுமறும் வழி என்று கூறும் இந்நூலாசிரியர், ஆரம்பத்தில் இறை மறுப்பு சிந்தனைக்கு ஆட்பட்டு 1972-74 வரை ‘முரசொலி’ நாளேட்டில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். அதன் பிறகு ஹிந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்றி, உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றவர். ‘அழிவற்ற பரம்பொருளே பிரம்மம். அதன் இயல்பை அறிதலே ஆத்மஞானம்’ என்கிறது பகவத்கீதை. ஆனால், நாமே ஆத்ம ஞானத்தை […]

Read more

புது வீடு கட்டலாமா

புது வீடு கட்டலாமா, சி.எச். கோபிநாத ராவ், பிராம்ப்ட் பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. கட்டடக் கலை நிபுணரான இந்நூலாசிரியர், இத்துறை தொடர்பாக 45-க்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலும், 5 நூல்களை அழகுத் தமிழிலும் எழுதியுள்ளார். அதில் ஒன்றுதான் இந்நூல். வீடு கட்டி, பிறர் மதிக்க நல்ல முறையில் வாழ வேண்டும் என்ற கனவு அனைவருக்குமே உண்டு என்றாலும், ஓரளவு பொருளாதார வசதி பெற்றவர்களுக்கே இது சாத்தியமாகும். ஆனால் அதற்கான வழிமுறைகள் தெரியாமல், யாரிடம் சென்று விசாரிக்கலாம் என்பதும் புரியாமல் திணறும் நிலை […]

Read more

புத்தம் புது பூமி வேண்டும்

புத்தம் புது பூமி வேண்டும், சு. ராஜு, உரத்தசிந்தனை பதிப்பகம், பக். 120, விலை 150ரூ. ஹைதராபாத்திலுள்ள தேசிய புவி இயற்பியல் ஆய்வுக்கூட முதன்மை விஞ்ஞானியான இந்நூலாசிரியர், நில அதிர்வு ஆய்வுகள் குறித்து இந்தியா முழுவதும் சென்று அரிய தகவல்களைத் திரட்டி வருபவர். இவரது பல ஆய்வு அறிக்கைகள் இத்துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயன்தரத்தக்கவையாக உள்ளன. விஞ்ஞானியாக இருந்தாலும், எளிய தமிழ் நடையில் எழுதும் ஆற்றல் மிக்கவர். உரத்த சிந்தனை என்ற மாத இதழில் இவர் எழுதிய புவி அறிவியல் குறித்த கட்டுரைகளின் தொகுப்பே […]

Read more

கனவோடு நில்லாமல்

கனவோடு நில்லாமல், முனைவர் ஜெ. சதக்கத்துல்லாஹ், வானதி பதிப்பகம், பக். 204, விலை 150ரூ. உச்ச நீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.இப்ராஹிம் கலிஃபுல்லா, தமிழ்நாடு வேள்ண்மைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் கே.கே.கிருண்ணமூர்த்தி, கவிக்கோ அப்துல் ரகுமான்.. போன்றோர் இந்நூலுக்கு அளித்துள்ள அணிந்துரைகளே இந்நூலின் தகுதிக்குச் சான்றுகள். சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்து, ஏழ்மையில் உழன்று, தனது ஏழைத்தாயின் தினக் கூலியில் கல்வி கற்று, தன் சீரிய முயற்சியால் ஒவ்வொரு தடையையும் தாண்டி, இன்று ரிசர்வ் வங்கியின் தென் மண்டல (தமிழ்நாடு – பாண்டிச்சேரி) […]

Read more

இலக்கியத்தில் மேலாண்மை

இலக்கியத்தில் மேலாண்மை, வெ.  இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 574, விலை 1300ரூ. தன்னம்பிக்கையும், நுண்ணறிவும் மிக்க ஒரு புதிய சமுதாயம் உருவாக வேண்டும் என்ற நோக்கில், இலக்கியப் பணியும் ஆற்றி வரும் இந்நூலாசிரியர், தமிழகம் அறிந்த சிறப்பான ஐ.ஏ.எஸ். அதிகாரி. மனித வாழ்க்கைக்கு சீரிய ஒழுக்கமும், நெறிகளும் மட்டுமின்றி நிர்வாகமும், மேலாண்மையும் அவசியம். இவற்றை பண்டைய இலக்கியங்களும், இன்றைய இலக்கியங்களும் எப்படி எடுத்துரைக்கின்றன என்பதை இந்நூலாசிரியர் சிறப்பான ஆய்வுத் திறனோடு, பாமரனுக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் […]

Read more

வீழ்வதற்கல்ல வாழ்க்கை

வீழ்வதற்கல்ல வாழ்க்கை, லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், பக். 168, விலை 100ரூ. Master of all subjects – என்று பாராட்டப் பெற்ற எழுத்தாளர் தமிழ்வாணனின் வாரிசுதான் இந்நூலாசிரியர். இவரும் தன் தந்தையைப்போல தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள எழுத்தாளர். இதுவரை 85 நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகளை ஆராய்ந்து, எம்.ஃ.பில்., பி.எச்.டி. பட்டங்களைப் பெற்றவர்களும் உண்டு. அண்டார்டிகாவைத் தவிர, அனைத்து உலக நாடுகளையும் சுற்றி வந்தரும்கூட. தினமலர் வார மலரின் முன்னேற்றமான வாழ்க்கைக்கு உரிய விஷயங்களைக் குறித்து, […]

Read more

இஸ்லாம் ஒரு பார்வை

இஸ்லாம் ஒரு பார்வை, டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, கிழக்குப் பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. மனிதன் சீரிய ஒழுக்கத்துடனும், நெறிகளுடனும், பண்புகளுடனும், அமைதியாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அன்று உருவானதுதான் மதங்கள். ஆனால், இன்று உலகில் நடக்கும் சில தீங்குகளுக்கு இந்த மதங்களும் ஒரு காரணம் என்ற விபரீதமான கருத்து சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த விமர்சனத்திற்கு இஸ்லாம் தற்போது பலிகடாவாகி உள்ளது. பன்முகத் தன்மையும், மதச்சார்பற்ற கொள்கையும் கொண்டு உலகின் சிறப்புக்குரிய நாடாக விளங்கும் இந்தியாவில், […]

Read more

காஷ்மீர் இந்தியாவுக்கே

காஷ்மீர் இந்தியாவுக்கே, கேப்டன் எஸ்.பி. குட்டி, கிழக்கு பதிப்பகம், பக். 304, விலை 250ரூ. இந்திய பாகிஸ்தான் பகைக்கு முக்கிய காரணமே காஷ்மீர் பிரச்னைதான். இதை வைத்துத்தான் இந்தியா மீது நேரடியான மற்றும் மறைமுகமான போர்களை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. இந்த காஷ்மீர் பிரச்னை எப்படி உருவானது, இது தொடர்பான இந்திய தரப்பு நியாயங்கள் என்ன, இதில் பாகிஸ்தானின் சதித்திட்டங்கள், அத்துமீறல்கள், ஆக்ரமிப்புகள், போர்கள், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், இந்திய அரசியல்வாதிகளின் தவறுகள், பிரிட்டிஷாரின் தந்திரங்கள், ஐ.நா.சபை விவாதங்கள், அதன் தீர்மானங்கள், ஆர்ட்டிகிள் 370… […]

Read more

அப்துல் கலாம் சாதிக்கலாம்

அப்துல் கலாம் சாதிக்கலாம், ச. உமாதேவி, நந்தினி பதிப்பகம், பக். 176, விலை 140ரூ. ‘பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’ என்ற தனது கூற்றுக்கு, தானே முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம். படகோட்டியின் மகனாகப் பிறந்து பாரதத்தின் முதல் குடிமகனாக உயர்ந்த இந்த மாபெரும் தலைவர், தன் நலன் கருதாது தேச நலனையே உயிர் மூச்சாகக் கருதி வாழ்ந்தவர். தனது மறைவால் தமிழகத்தை மட்டுமன்றி, பாரதத்தின் குக்கிராமம் வரை பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தி […]

Read more
1 5 6 7 8 9 21