கேன்டர்பரிக் கதைகள்

கேன்டர்பரிக் கதைகள், தமிழில் வான்முகில், மீனா கோபால் பதிப்பகம், பக். 175, விலை 200ரூ. ஆங்கிலக் கவிதையின் தந்தை என்று போற்றப்படுகிற சியாஃபிரே சாசர் என்பவரின் படைப்புகளுள் தலைசிறந்தது கேன்டர்பரிக் கதைகள். 14ம் நூற்றாண்டில் ஆங்கிலம் என்று ஒரு தனி மொழியே இல்லை. இங்கிலாந்தின் வட்டார வழக்குகளை ஒன்று திரட்டி அதனை ஒரு மொழியாக மாற்றி, இங்கிலாந்துக்கு ஒரு தேசிய மொழியை அளித்தவர் சாசர். கேன்டர்பரிக்குப் புனிதப் பயணமாகச் செல்லும் பயணிகள், வழியில் தபார்டு என்ற சத்திரத்தில் தங்கிச் செல்வது வழக்கம். பயணக் களைப்புத் […]

Read more

எந்நாளும் எங்கள் நெஞ்சில்

எந்நாளும் எங்கள் நெஞ்சில், மேதகு ஆ.ப.ஜெ. அப்துல்கலாம், பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம், பக். 192, விலை 225ரூ. மாணவர்களின் இதயமாக விளங்கிய அப்துல்கலாம் ஒரு சிறந்த கவிஞரும்கூட. அந்த வகையில் அவரது பிறந்த நாளை மாணவர் தினமாகக் கொண்டாடுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், மாணவர்களிடையே உள்ள படைப்புத் திறனை வெளிக்கொணரும் வகையில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் மாணவர்களின் கவிதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டு அப்துல்கலாமுக்கு பெருமை சேர்க்கும் முயற்சி இது. மாணவர்கள், ஆசிரியர்கள் அலுவலர்கள் என அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பெறப்பட்ட அப்துல்கலாம் பற்றிய கவிதைத் […]

Read more

திடீர் இடியோசை

திடீர் இடியோசை, ஓஷோ, தமிழில் சுவாமி சியாமானந்த், கண்ணதாசன் பதிப்பகம், பக். 416, விலை 260ரூ. தூங்கிக் கொண்டிருப்பவர்களின் மனக் கதவுகளைத் திடீரென்று திறக்க, இந்த இடியோசை தேவைப்படுகிறது. உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது கிடையாது. நீங்கள் விழிப்புணர்வு அடைந்தவர்களாக ஆகிவிட்டாலே போதும். ஏனெனில் உண்மை என்பது இங்கே ஏற்கெனவே இருக்கிறது. ஓஷோவைப் பொறுத்தவரையில் எல்லா மாற்றங்களுமே தனி மனிதனிடம் ஏற்படுவதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஓஷோவின் இந்த நூல் வார்த்தைகளுக்கு அப்பால், உள்ளத்திற்கு அப்பால், எல்லா புரிதர்களுக்கும் அப்பால் […]

Read more

பாசங்கள் பலவிதம்

பாசங்கள் பலவிதம், சூடாமணி சடகோபன், ருக்மணி பதிப்பகம், பக். 144, விலை 80ரூ. பாசத்தை மையக்கருவாகக்கொண்டு, பலவிதமான பாசங்களை சிறுகதைகளாக வரைந்துகாட்டியிருக்கிறார் நூலாசிரியர். ஒரு சராசரி மனிதனுக்குள் இருக்கும் ஆசாபாசங்களின் பின்னணியில் இக்கதைகள் புனையப்பட்டுள்ளன. அதனால் படிப்போருக்கு கதையின் நெருக்கதை உணரும்படி உள்ளது. மனதிற்குள் பல காலங்களாக காரணமின்றி புதைக்கப்பட்டு கிடக்கும் பாசத்தை, வெளியில் கொண்டு வராததால் அல்லது கொண்டுவரத் தெரியாததால், அவன் அடையும் மன உளைச்சலையும் பரிதவிப்பையும் யதார்த்த கண் கொண்டு பார்த்துள்ளார் ஆசிரியர். மகனிடம் அன்பு காட்டத்தவறிய சொக்கலிங்கம் முதல், நோய் […]

Read more

நாடாளுமன்றத்தின் கதை

நாடாளுமன்றத்தின் கதை, அருணகிரி, குமுதம் பு(து)த்தகம், பக். 408, விலை 240ரூ. உலகின் பல நாட்டு நாடாளுமன்றங்களுக்கும் சென்று அவற்றின் செயல்பாடுகளைக் கண்டறிந்த இந்நூலாசிரியர், நமது நாடாளுமன்றத்தை பற்றி ஏ டு இசட் வரையிலான அனைத்து தகவல்களையும் இந்நூலில் எளிய தமிழ் நடையில் பதிவு செய்துள்ளார். இவற்றில் பெரும்பாலானவை நாடாளுமன்றம் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களில் இருந்து திரட்டியவை. இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இந்தியர்கள் படிப்பறிவு அற்றவர்கள், அவர்களுக்கு தேர்தல், ஓட்டு, ஜனநாயகம் பற்றியெல்லாம் என்ன தெரியும்? என்று ஐரோப்பியர்களால் கேலி […]

Read more

தேர்விலும் வெல்வோம்

தேர்விலும் வெல்வோம், கவி முருகபாரதி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பக். 64, விலை 30ரூ. மாணவர்கள் வெற்றி என்ற இலக்குநோக்கி பயணம் செய்வது எப்படி என்று எளிய நடையில் பல உதாரணங்களுடன் சொல்லித்தரும் நூல். தேர்வில் நூற்றுக்கு நூறு எடுப்பதன் அவசியத்தைக் கூறி, நூற்றுக்கு நூறு எடுப்பதற்கான பத்து வழிகளையும் தருவது சிறப்பு. மாணவர்கள் தேர்வில் மட்டுமல்ல வாழ்விலும் வெல்வது எப்படி என்பதை பளிச்சென விளக்கி, மாணவர் சமூகத்தை வல்லமைப்படுத்த முனைந்துள்ளார் ஆசிரியர் கவி. முருகபாரதி. மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் இந்நூலைப் படித்தால் அவர்கள் […]

Read more

இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்

இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம், நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், விலை 50ரூ. தலைச்சிறந்த விஞ்ஞானி, எளிமையும் புகழும் மிக்க குடியரசுத் தலைவர், இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம், தமிழில் அறிவியல் பயின்று உலக சாதனை படைத்தவர், சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு எல்லோராலும் விரும்பப்படும் தலைவர், உயர்ந்த பண்பாளர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, வாழ்க்கைப் பாடங்களை, அவரது உயர்ந்த சிந்தனைகளை, அவர் பிறந்த ராமேசுவரம் மண்ணில் தொடங்கி, அக்னிச் சிறகுகளாய் விண்ணில் சாதித்தது வரையான வரலாற்றை எளியமுறையில் தந்துள்ளார் ஆசிரியர். நன்றி: குமுதம், […]

Read more

செங்கிஸ்கான் பேரர்கள்

செங்கிஸ்கான் பேரர்கள், தாழை மதியவன், தோணித்துறை வெளியீடு, தாழையான் பதிப்பகம், பக். 96, விலை 50ரூ. இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்களில் சிலரைப் பற்றிய வரலாற்றை சிறுகதையாகத் தந்துள்ளார் நூலாசிரியர். முகம்மது பின் காசிம், கியாசுதீன் பல்பன், முகம்மதுபின் துக்ளக், ஜகாங்கீர், ஷாஜகான் போன்ற மன்னர்களின் அகம் புறம் பற்றி பேசும் கதைகள். படிக்கப் படிக்க புத்துணர்ச்சி. தாஜ்மகால், குதுப்மினார், செங்கோட்டை என கோட்டைக் கொத்தளங்களைக் கட்டியவர்கள், நல்லதோர் வலுவான சமூகத்தைக் கட்ட முடியாதுபோனதைப் பற்றிய கவலை உண்டாக்கும் கதைகள். முகலாய மன்னர்களின் வரலாறு […]

Read more

வானம்பாடி

வானம்பாடி, த. கோவேந்தன், கலைஞன் பதிப்பகம், பக். 420, விலை 350ரூ. கோவையிலிருந்து வானம்பாடி புதுக்கவிதை இதழ் வெளிவருவதற்கு 13 ஆண்டுகளுக்கு முன்னரே வேலூரிலிருந்து புலவர் த.கோவேந்தன் வானம்பாடி என்ற பெயரில் கவிதை இதழை வெளியிட்டு, ஒரு பெரும் மரபுக்கவிதை பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளார். அந்த கவிதை இதழில் வந்த கவிதைகளின் தொகுப்பே இந்நூல். தமிழறிஞர்கள் மு.வ., அ.அப்பாதுரை, அண்ணா, வேங்கடபதி, அ.இ.பரந்தாமனார், புலவர் குழந்தை, டாக்டர் பூவண்ணன், பெருஞ்சித்திரனார், ம.இலெ. தங்கப்பா, சுப்பு ஆறுமுகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கவிஞர்களின் கவிதைக்கானத்தை இதில் பதிவு […]

Read more

சொலவடைகளும் சொன்னவர்களும்

சொலவடைகளும் சொன்னவர்களும், சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. உணர்வுகளை வெளிப்படுத்த, யோசனை சொல்ல, ஆறுதல் தர, அறிவுரை தந்து நெறிப்படுத்த, விமர்சனம் செய்து எச்சரிக்க, பிரச்சினையான நேரத்தில் தீர்வுகள் தேடித்தர, சொலவடைகளைப் போலப் பயன் தருகிற எளிய இலக்கியம் எதுவும் இல்லை. கோபம், குமுறல், ஆற்றாமை, கழிவிரக்கம், வலி, சலிப்பு என அத்தனை மனச்சுமைகளையும் இந்தச் சொலவடைகளில் இறக்கி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அவர்களின் மனக்கண்ணாடி வழியே இந்த வாழ்க்கையை நாம் புரிந்து கொள்ள இந்த நூல் உதவும். நன்றி: தினத்தந்தி, 19/8/2015. […]

Read more
1 31 32 33 34 35 57