வம்புக்கு நான் அடிமை

வம்புக்கு நான் அடிமை, மாவடு ராமுடு, சுண்டல் செல்லப்பா, கண்ணா மேங்கோ தின்ன ஆசையா, கே.எஸ்.ராகவன், அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை 4, விலை 90ரூ. இந்த நூல்களின் ஆசிரியர், அறிவில் சிறந்தவர்களை சிரிக்க வைப்பது கடினம் என்ற கோட்பாடு உடையவர். ஆகவே, நடைமுறை யதார்த்தங்களுடன் நகைச்சுவை உணர்வுடன் படைத்த இப்படைப்புகளை பலரும் விரும்புவர். நன்றி: தினமலர் 21/4/2013.   —-   பழமையான ஞானம், புதுமையான உலகம், எச்.எச். தலாய் லாமா, தமிழில்-டி. வெங்கடகிருஷ்ணன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக்.272, விலை 125ரூ. […]

Read more

செந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம்

செந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம், முனைவர் க. முருகேசன், பக். 170, விலை 80ரூ, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 98. பாரதியின் பார்வையில் பிரபஞ்சம், கம்பனில் விழுமிய வாழ்வியல், கட்டடக்கலையைத் தொட்டிடும் சிலம்பு, மணிமேகலையில் அறம், இலக்கியங்களில் கொடியசைதல், குறுந்தொகையில் இலக்கிய நயங்கள், நற்றிணையில் பண்பாட்டுப் பதிவுகள், புறப்பாடல்களில் புரவலர், புலவர் மரபு, ஐந்தெழுத்து மந்திரச் சிறப்பும் திருநீற்று, மகிமையும், மணிவாசகரின் அறிவியல் சிந்தனைகள், ஆண்டாள் பாசுரங்களின் அகப்பொருள் கூறுகள் ஆகிய 11 கட்டுரைகளும் உண்மையாக செந்தமிழ் கோயிலுக்குச் சிற்பங்களாக அமைந்துள்ளன. […]

Read more

இலக்கிய உலா

இலக்கிய உலா, முகில் தமிழ்ச் செல்வன், சேகர் பதிப்பகம், சென்னை 78, பக். 208,விலை 135ரூ. அகமும் புறமும் சேர்ந்ததே வாழ்வு. இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றின்றி மற்றொன்று இல்லை. இரண்டும் ஒன்றியதே சங்கச் சால்பு. பண்டைத் தமிழர் மறமாண்பும் மறத்திலும் அறம் கருதும் மாட்சியும், வீரத்தோடு ஈரமும் மிகுந்த மாண்பும், பீடும் பெருமிதமும் அளிப்பன. இந்த அரிய சேர்ப்பு – வீரமும், ஈரமும், மறமும் அறமும் அருங்கலவை ஆகும். இந்த வீரம் செறிந்த பனுவல்களைப் பயிலும்போது, வீரம் விளைகிறது. மறம் […]

Read more

ஸ்ரீவால்மீகி ராமாயணம் ஸுந்தர காண்டம் (2 பாகம்)

ஸ்ரீவால்மீகி ராமாயணம் ஸுந்தர காண்டம் (2 பாகம்), சாரநாத கோபாலன், ஸ்ரீ விக்னேஸவரா வேங்கடேஸ்வரா டிரஸ்ட், சென்னை18, பக்,1316, விலை 500ரூ. ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டத்துக்கு சிறப்புகள் பல உண்டு. மனதில் நினைத்ததை முடித்த அனுமன் கதை பேசப்படுவதால், சுந்தரகாண்டத்தைப பரிகாரப் பாராயணத்துக்கும் சிலர் பரிந்துரைப்பதுண்டு. ஆனால் வால்மீகி என்ற கவிஞரின் சிறப்பை உணர்ந்துகொள்ள சுந்தரகாண்டம் பெரிதும் கைகொடுக்கிறது. 68 அத்தியாயங்கள், அனைத்துக்கும் வடமொழி எழுத்துகளில் மூலம், தமிழில் மூலம் மற்றும் மொழிபெயர்ப்பு, வடமொழி எழுத்துக்களுக்கானப் பதவுரை ஆகியவை கவியினைத் தெளிவாக […]

Read more

கவிஞர் இரா. இளங்குமரனின் இலக்கியப்பணிகள்

கவிஞர் இரா. இளங்குமரனின் இலக்கியப்பணிகள், முனைவர் ப. சிவாஜி, இலக்கியா பதிப்பகம், 176, இராமநாயக்கன் பேட்டை, அம்பலூர், வாணிம்பாடி 636801.பக். 282, விலை 120ரூ- எளிமையான தோற்றம், பண்போடு பழகும் குணம், வள்ளுவத்தை வாழ்வியலாக்க அரும்பாடுபடும் அன்பர். தொல்காப்பியர், வள்ளுவர், வள்ளலார் போன்றோரின் கருத்துக்களை நம் செவிகளில் கொண்டு வந்து சேர்க்கச் செய்யும் தமிழ்க் கடல் என்றெல்லாம் போற்றப்படும் வாழும் தமிழறிஞரான இளங்கமரனாரின் இலக்கிய இலக்கணப் பணிகளை பல்வேறு வகையாகப் பகுத்துப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். அகல உழுதாலும் ஆழ உழு என்ற முதுமொழீக்கு […]

Read more

ஈ.வே.கி. சம்பந்தும் திராவிட இயக்கமும்

ஈ.வே.கி. சம்பந்தும் திராவிட இயக்கமும், விவேகானந்தன், இனியன், சம்பத், கல்பனாதாசன், இனியன் சம்பத் பதிப்பகம், சென்னை 90, பக். 842, விலை 500ரூ.  திராவிட இயக்க மேடைகளில் நெருப்பாற்றில் நீந்தியவர்கள் நாங்கள் என்று ஒரு சொற்றொடர் அடிக்கடி இடம் பெறும். அதைச் சொல்லும் தகுதி உள்ள மிகச் சிலரில் ஈ.வெ.கி.சம்பந்த் ஒருவர் என்பதை இந்தப் புத்தகம் உணர வைக்கிறது. தினமணி கதிரில் 33 வாரங்கள் வெளிவந்த தொடரின் நூல் வடிவம் இது. பெரியாரின் ரத்த உறவும், அண்ணாவின் நட்புறவும் இருந்தும்கூட திராவிட இயக்கத்தில் சம்பத் […]

Read more

வட்டியும் முதலும்

வட்டியும் முதலும், ராஜுமுருகன், விகடன் பதிப்பகம், சென்னை, பக். 504, விலை 215ரூ. விகடனில் தொடராக வந்தது. அதில் 70 வாரத் தொடர்கள் மட்டும் புத்தக வடிவம் பெற்றுள்ளது. ஒரு திரைப்பட இயக்குநரின் நட்பும், வாழ்க்கையை அவதானிப்பதுதான். அதை எழுத்திலும் காட்டுகிறார் ராஜுமுருகன். வண்ணதாசன் எப்படி அவரது ரத்த உறவுகளுடன் நம்மையும் சேர்த்துக் கொண்டு நடத்திச் செல்வாரோ, அத்தகைய ஈரத் தமிழ்நடை ராஜுமுருகன் எழுதில் எல்லாப் பக்கங்களிலும். புத்தகத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். வாழ்க்கையை அவரது ஜன்னலில் அவரோடு நாமும் பார்த்துக் கொண்டிருப்போம். கட்டித் […]

Read more

மருதநாயகம் கான் சாகிப்

மருதநாயகம் கான் சாகிப், செ. திவான், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 160, விலை 80ரூ.  To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-009-0.html மருதநாயகம் கான் சாகிப்பின் வீர வாழ்க்கையைக் கூறும் நூல். மருதநாயகம் கான் சாகிப் பிறவியிலேயே முகம்மது யூசுப் என்னும் இஸ்லாமியரா? இல்லை வேளாளர் குலத்தில் பிறந்த மருதநாயகமா? என்பன போன்ற சர்ச்சைகளை விவரிக்கும் நூலாசிரியர் முடிவை வாசகர்களிடமே விட்டுவிடுகிறார். பிரெஞ்ச் படையில் போர் வீரனாகச் சேர்ந்த மருதநாயகம் கான் சாகிப் ஆற்காட்டுப் போரில் ஈடுபட்டதையும், துரோகத்தால் […]

Read more

ஓஷோ 1000 (ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்)

ஓஷோ 1000 (ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்), தொகுப்பு – மு. அப்பாஸ் மந்திரி, நர்மதா பதிப்பகம், தி.நகர், சென்னை 17, பக். 272, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-009-5.html ஓஷோ ரஜனீஷ் என்னும் தத்துவ ஞானி தன் சீடர்களுக்கு மத்தியில் ஆற்றிய சொற்பொழிவுகளின் இடையிடையே கூறப்பட்ட தத்துவ முத்துக்கள் மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. தேடுவதை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் என்பதில் தொடங்கி உங்களது சொந்த வெற்றியில் ஆர்வமாக இருப்பது போன்று மற்றவர்களது வெற்றியிலும் ஆர்வமாக இருக்கங்கள். […]

Read more

சல்மா எழுதிய சாபம்( சிறுகதைகளின் தொகுப்பு )

சாபம், சல்மா, காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில்1, பக். 142, விலை 110ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-801-2.html சல்மா எழுதிய 11 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். எழுத்திற்கு ஆண் பெண் பேதமில்லை என்ற போதிலும் இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளை பெண் ஒருவராலேயே எழுத முடியும் என்பதே உண்மை. கதாப்பாத்திரங்கள் நிறைய மௌனங்களைச் சுமந்து கொஞ்சமாகவே வார்த்தைகளை பிரசவிக்கிறார்கள். பெண்கள் பல துறைகளில் கால் ஊன்றி ஆண்களுக்கு நிகராகப் பரிணமித்தாலும், நடைமுறை வாழ்வில் அவர்கள் மிகுந்த வலியையும் வேதனையையும் […]

Read more
1 173 174 175 176 177 180